Friday, December 14, 2018

Periyar Kuthu - Official Video Song | STR | Madhan Karky | Ramesh Thami...

Periyar Kuthu - Official Video Song | STR | Madhan Karky | Ramesh Thami...

Periyar Kuthu - Official Video Song | STR | Madhan Karky | Ramesh Thami...

Periyar Kuthu - Official Video Song | STR | Madhan Karky | Ramesh Thami...

Monday, October 1, 2018

பெரியார் பேச்சும் எழுத்தும்: காந்தி ஜெயந்தி புரட்டு - 06.10.1929

பெரியார் பேச்சும் எழுத்தும்: காந்தி ஜெயந்தி புரட்டு - 06.10.1929: காந்தி ஜெயந்தி புரட்டு  இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும...

Saturday, April 28, 2018

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: ஆரிய பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு ஆதார...

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: ஆரிய பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு ஆதார...: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 75ஆவது பிறந்த நாள் நிகழ்வுக்காக அவரது வாழ்விணையர் மோகனாவுடன் சேர்ந்து எடுத்துக்க...

Wednesday, April 25, 2018

பெரியார்: சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட ம...

சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது-பெரியார்

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?

30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.
(27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953)பெரியார்: சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட ம...: ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந...

Friday, March 23, 2018

https://www.facebook.com/gilli.inba.1/videos/2102946869939093/?t=0

Saturday, February 10, 2018

”இந்து மதக்”காரருக்கு மனம் புண்படுகிறதாம்! - தந்தை பெரியார்

”இந்து மதக்”காரருக்கு மனம் புண்படுகிறதாம்! - தந்தை பெரியார் இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இந்து மத ஆதாரம் என்பதாக நம்மைப் பயன்படுத்தும்படி செய்யப் பட்டிருப்பவை புராண இதிகாசங்களும், புராண இதிகாசக் கடவுள்களும்தாமே ஒழிய வேறில்லை. இந்து மதத்தின் பெயரால் நம்மை நடந்து கொள்ளும்படி செய்திருப்பதெல்லாம் ஜாதிப் பிரிவுகளும், அப்பிரிவுகளில் நாம் கீழ் ஜாதியாய், பார்ப்பானின் தாசி-அடிமைப் பெண்ணின் மகனாக ஆக்கப்பட்டும், நம்மை அதை ஏற்கும்படியும் செய்திருப்பதுதான். இந்த நிலையில்தான், நாம் இந்தப் புராண நடப்புகளுக்கும், கடவுள்களுக்கும் விரோதமாய் நடக்கிறோம் என்றும், கண்டிக்கிறோம் என்றும், வெறுக்கிறோம் என்றும், இந்நடத்தைகளுக்காக நம்மை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் பார்ப்பனர்கள் பாடுபடுகிறார்கள். புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் பார்ப்பனர்களால் 2000, 3000 ஆண்டுக் காலத்திற்குள் எழுதப்பட்டவைகளேயாகும். அவற்றில் வரும் கடவுள்கள், அவற்றின் செய்கைகள் எல்லாம் அது போலவே, பார்ப்பனர் தங்கள் நலனுக்கேற்றபடி அவைகளுக்கு அமைத்து உருவாக்கி யவைகளே ஆகும். எந்தப் புராண, இதிகாச நடப்பும், கடவுள் செய்கையும் இன்றைய நிலைக்கு ஏற்றவை அல்லவே அல்ல. ஏனெனில், 2000, 3000 ஆண்டு களுக்கு முற்பட்டதென்றால், அந்தக் காலம் எப்படிப்பட்ட காலமாய், எவ்வளவு காட்டுமிராண்டி, முட்டாள்தனமான காலமாய் இருந் திருக்கும்! எனவே, அவை இன்றைய புதுமை, விஞ்ஞான, பகுத்தறிவு உணர்ச்சி கருத்துக் காலத்திற்கு ஏற்குமா? இவை ஏற்படுத்தப்பட்ட வெகு காலத்திற்குப் பிறகுதான் வேறுமதஸ்தர் களால் ஒரு கடவுள் என்பதும், ஒழுக்கம், நேர்மை என்பனவாகிய நல்ல குணங்கள் என்பவைகளும் கற்பிக்கப்பட்டனவாகும். இந்தக் கற்பனைகளுக்கு முன்பு கடவுள்கள் தன்மை, அவற்றின் நடப்புகள் எவ்வளவு அசிங்கமும், ஆபாசமும் அயோக்கியத் தனமுமானவை என்பதற்கு ஆதாரம் வேண்டு மென்றால், அவற்றின் யோக்கியதைகளை அவர்கள் எழுதி இருக்கிறபடி அவற்றில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொன்னாலே, தங்களுக்கு மன நோவையும், மானக் கேட்டையும் உண்டாக்கி விட்டதாகப் பதறித் துடித்து எந்த அக்கிரமமான காரியத்தைச் செய்தாவது என்ன மாய்மாலக் கூப்பாடு போட்டாவது மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடலாம் என்று துடிக்கிறார்கள். உதாரணமாக, இவர்களால் உண்டாக்கப்பட்ட ஆதாரங்களில் உள்ளபடியே நாம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைப் பற்றியோ, இவர்கள் மனைவிகளைப் பற்றியோ, அக்கால தெய்வீக மக்களைப் பற்றியோ, அவதாரங்களைப் பற்றியோ எடுத்துச் சொன்னால் இவர்களுக்கு மானக் கேடும், மனப் புண்ணும் ஏன் ஏற்படவேண்டும்? அந்தப்படி இல்லை, அது பொய், கற்பனை என்று பதில் கூறாமல் ஆத்திரப்படுவதென்றால் அவை மானாபிமானம் அறிவு இல்லாத காலத்தில் செய்யப்பட்டன என்றுதானே பொருள்! இப்படிப்பட்ட முட்டாள் தனமானதும் அயோக்கியத்தனம் என்று சொல்லக் கூடியதுமான காரியங்களை, அவை இன்றைக்குப் பொருந்தா; யாரும் அவற்றை ஏற்க வேண்டிய தில்லை என்று யோக்கியமாய்ச் சொல்லி அவைகளை மறைத்து விட்டால் யாரும் அவற்றைக் குற்றம் சொல்லமாட்டார்கள். அப்படியல்லாமல் அவற்றைப் பண்டிகைகளாக, உற்சவங்களாக, பழி தீர்க்கும் காரியங் களாகக் கொண்டாடுவது என்றால், இதற்குப் பரிகாரம் பதிலுக்குப் பதில் காரியங்கள் செய்யாமல் இருப்பதா? உதாரணமாக, இராவணன் இராமன் மனைவியை எடுத்துப்போய்க் கற்பழித்து விட்டான் என்ற ஆத்திரத்தில் இராவணனைக் கொடியவனாக ஆக்கி மக்களுக்குப் பிரச்சாரம் செய்து அவன் உருவத்தை ஆண்டு தோறும் நெருப்பில் கொளுத்துகிறார்கள். அரசாங்கமே அதில் பங்கு கொள்ளுகிறது. இந்த இராவணன் செய்கையின் உண்மை, ஆதாரப்படி அந்தப்படி இல்லை. சீதை சம்மதித்தே இராவணனுடன் சென்றதாகவும், அவன் வீட்டிலேயே இருந்து வாழ்ந்ததாகவும், அதனால் சீதைக்குக் கர்ப்பம் ஏற்பட்டதாகவும் தான் ஆதாரத்தில் துருவிப் பார்த்தால் தெரிய வருகிறது. மற்றும் தேடிப் பார்த்தால் இராமனே சீதையை இராவணன் அழைத்துப் போகவும் அதற்கு வசதி செய்யவும் ஏற்பாடு செய்தான் என்றும் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மற்றும் இராவணன் ஆரியர்களுக்கு எதிரியாய் இருந்த தானாலேயே அவனைக் கொல்ல இந்த ஏற்பாடு செய்ததாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. இராவணனைப் பார்ப்பனர்கள் எரிக்கிறார்கள். அவமானப் படுத்துகிறார்கள் என்றால், நம்மையெல்லாம் சூத்திரர்கள், நான்காம் ஜாதியார்கள் ஆகவும், நம் பெண்களைப் பார்ப்பனர் அனுபவிக்கும் தாசிகளாகவும் ஆக்கி வைத்து அந்தப் படி சாஸ்திர தர்மங்கள் எழுதி வைத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட இராமாயணத்திலேயே சூத்திரன் பிராமணனை (பார்ப்பானை)க் கடவுளாக வணங்காமல், கடவுளை நேராகக் காண வணங்கினான். அதனால் பிராமணனுக்குக் கேடு வந்தது; ஆகையால் அந்தச் சூத்திரனைத் துண்டு துண்டாக வெட்டி வதைக்கிறேன் என்று சொல்லி சித்திரவதை செய்து இராமன் கொன்றான் என்றால், அந்த ராமனை நெருப்பில் கொளுத்துவதோ அவமானம் செய்வதோ பெரும் குறையா கிவிடுமா? குற்றம் என்று கூறலாமா? என்பதுதான்சிந்திக்க வேண்டியதாகும். பார்ப்பனர் இதைக் குற்றமென்று சொல்வதற்குக் காரணம் தங்கள் உயர் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளவே ஒழிய வேறில்லை. அது போலத்தான் சூத்திரர்கள் (பார்ப்பனர் தாசி மக்கள்) என்று பார்ப்பனரால் சொல்லப் படுகிற நாம் நம் இழிநிலையைப் போக்கிக் கொள்ள மான உணர்ச்சியோடு முயற்சிக்கிறோம். அதற்கு ஏற்றதைச் செய்கிறோம், செய்ய இருக்கிறோம். அதற்கேற்ற விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். இதை மனம் புண்படுகிறவர்கள் உணர வேண்டுகிறோம். ------------------------------- தந்தை பெரியார் “உண்மை”, 14.2.1971 Posted by தமிழ் ஓவியா

Monday, January 29, 2018

முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்...

முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: கணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்...: தகடூர் கோபி அவர்கள் கணிப்பொறித்துறையில் உழைப்பவர்களை இருவகைப்படுத்திப் பார்க்கலாம். தங்கள் குடும்பம், வயிற்றுப்பாட்டுடன் பெங்களூர் அல்...

யுவகிருஷ்ணா: பத்து வயசானா பங்காளி

யுவகிருஷ்ணா: பத்து வயசானா பங்காளி: பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கி...