என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்
நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை
சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுதலை - ஆகா எவ்வளவுப் பவ்ய மான வார்த்தைத் துண்டங்கள்.
அப்படி என்ன காரியம் செய்து விட்டு விடுதலை பெற்று வீராதி வீரராக வெளி வருகிறார்?
ஒரு கோயிலில் பட்டப்பகலில் நடைபெற்ற படுகொலை வழக்கில் சிக்கியவர்தான் திருவாளர் சோ எழுதும் (துக்ளக் 11.12.2013) அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள்.
ஒரு காரணமும் இல்லாமலா சங்கரராமன் படு கொலையில் அந்த சங்கராச் சாரியார் ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டார்?
கைது செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
அல்லவே! அப்படி அவர் ஆட்சியில் அந்த ஸ்வாமிகள் கைது செய்யப்பட்டு
இருந்தால், அடேயப்பா, செவ்வாய்க் கிரகத்துக்குப் போய் கல்லெடுத்து வந்து
கலைஞர் அவர்களின் மண்டையைக் குறி பார்த்து வீசி இருக்க மாட்டார்களா?
கைது செய்தது -_ அக்ரகாரத்து அம்மை
யாராயிற்றே! உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்திபோல் அல்லவா அக்ரகாரம்
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பரிதவித்தது.
இப்பொழுது கூட என்ன நிலைமை? துக்ளக்கில்
சோ. ராமசாமி அய்யராக இருக்கட்டும் தினமணியில் (28.11.2013) முழுப் பக்கம்
கட்டுரையை எழுதித் தள்ளியுள்ளாரே திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யராக
இருக்கட் டும், ஓரிடத்தில்கூட சங்கராச்சாரியார் ஸ்வாமிகளைக் கைது செய்த
ஆட்சி, செல்வி ஜெயலலிதா ஆட்சி என்று எந்த ஓர் இடத்திலாவது ஜாடையாகக் கூடக்
குறிப்பிடாத சாமர்த்தியத்தை என்ன சொல்ல! என்ன சொல்ல!!
அதை விட்டு விட்டார்கள்.. பின் எதைப் பிடித்துக் கொண்டார்கள் தெரியுமா?
சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன
விமர்சனங்கள் எழுதப்பட்டன? எப்படிப்பட்ட கிண்டலும், கேலியும் செய்யப்பட்டன
என்பதையும், திராவிடக் கொள்கை யாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை
மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப்
பிரமுகர்களாலும் காஞ்சி மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்திச்
சித்தரிக்கப்பட்டனர் என் பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க
வைக்கின்றன என்று புலம்பித் தள்ளி இருக்கிறார். கோயங்கா வீட்டுக்
கணக்கப்பிள்ளை என்று அறிமுகமாகியுள்ள திருவாளர் எஸ். குருமூர்த்தி
அய்யர்வாள்.
குருமூர்த்தி அய்யர்வாளுக்குச் சளைத்தவரா திருவாளர் சோ ராமசாமி அய்யர்?
அவர் பங்குக்கு எதையாவது எழுதி ஆசுவாசப்பட வேண்டாமா?
இதோ சோ: சங்கராச்சாரியார் கொலையாளி
மட்டுமல்ல; மற்ற பல குற்றங்களைப் புரிந்தவர் என்று இங்கே பத்திரிகைகள்
ஒருபுறம் தீர்ப் பளித்து விட்டன. தீர்ப்பளித்தது மட்டு மல்ல, கடுமையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பல கட்சிகளும், அரசியல்வாதிகளும்,
கோருகிற ஒரே வழக்கு இது. இவை போதாது என்று கூட்டம் கூட்டமாக வக்கீல்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜாமீனை மறுக்க வேண்டும் என்கிறார்கள், கோர்ட்
டுக்குப் போவதற்கு முன்பாக அவரை எப்படி வக்கீல்கள் அறையில் உட்கார
வைக்கலாம்? என்று கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த 70 வயதானவர்
உட்கார்ந்ததற்குக்கூட வக்கீல்களால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது -_ என்று
புலம்பித் தள்ளியுள்ளார்.
திராவிட இயக்கத்தவர்களையும், பத்திரிகையாளர்களையும், வக்கீல் களையும் சும்மா பொரிந்து தள்ளி யுள்ளனரே.
ஒரு கேள்விக்கு இந்தப் பூணூல் திருமேனிகள் முடிந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.
கொலை செய்யப்பட்டவர் யார்? காஞ்சி
சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் காஞ்சி
வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர்.
உத்தமப்புத்திரன் என்று உச்சிமேல் வைத்து
மாறி மாறி முத்தமழை பொழிகிறார்களே -_ அந்த பரிசுத்த யோவான் பற்றி கத்தை
கத்தையாக வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றியவர் அல்லவா -_ அந்த
சங்கரராமன். அவர் என்ன திராவிட இயக்கத்தவரா? அனுராதா ரமணன், பெண்
எழுத்தாளர் யார்? பார்ப்பனப் பெண்தானே.
பத்திரிகை நடத்துவது தொடர்பாக தன்னை சங்கர
மடத்துக்கு வரச் சொல்லி, பட்டப் பகலில் என் கையைப் பிடித்து இழுத்தார்
என்று தொலைக்காட்சியிலேயே கண்ணீரும், கம்பலையுமாகக் கதறினாரே.
என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன்
உறவு கொண்டார் என்று போட்டு உடைத்தாரே. இதற்குப் பிறகுமா பெரியவாள்?
சங்கராச்சாரியார் ஸ்வாமிகள்?
குண்டூர் காமாட்சி, குருவாயூர் வனஜா,
தாம்பரம் பேபி, திருவிடைமருதூர் சந்திரா என்று ஒரு நீண்ட பட்டியலைத்
தந்தவர் வேறு யாருமல்ல-ர் _ பிற்காலத்தில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன்
(புனைப் பெயர் சோமசேகர கனபாடிகள்).
ஒவ்வொரு நாளும், பிரம்ம முகூர்த்த
நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு சிறீரங்கத்திலிருந்து உஷா என்ற பெண்
ஜெயேந்திரரோடு பேசிய கைப்பேசி உரையாடல் பிரசித்தி பெற்றதில்லையா?
இவற்றை ஒரு பக்கம் ஒதுக் கினாலும், மடத்து
சாமியார் என்ற லட்சணம் எந்தத் தரத்தில்? ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை
மடத்தில் விட்டு தலைமறைவான ரகசியம் என்ன?
அதனைத் தொடர்ந்து எப்போ தண்டத்தை
விட்டுவிட்டு, மடத்தை விட்டுவிட்டு ஓடி விட்டாரோ, அந்த க்ஷணமே
மடத்துக்கும், அவாளுக்கும் சம்பந்தம் இல்லை. உறவு அறுந்துபோய் விட்டது என்ற
மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி திருவாய் மலர்ந்தாரே -_
அதன் பொருள் என்ன? மூத்த மடாதிபதியே ஜெயேந்திரரை தார்மீக ரீதியாக ஒழுக்கப்
பிசகானவர் என்று சொன்ன பிறகு சோ குருமூர்த்தி வகையறாக்களால் மகாஸ்வாமிகள்
என்று அழைப்பது எந்த வகையில் ஒழுக்கமானது. பண்பாடானது?
நீதிமன்றத்தில் விடு தலை ஆகிவிட்டதா லேயே அவர் குற்றமற்ற வர் என்று பொருளா?
காந்தியார் படுகொலை யில் முக்கிய
சூத்திரதாரியாரான சாவர்க்கார்கூட விடுதலை செய்யப் பட்டவர்தான். அதற்காக
அவரை நிரபராதி என்று கருத முடியுமா? தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அவர்
தப்பியது எப்படி என்ற ரகசியத்தை வெளியிடவில்லையா?
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இதே ஜெயேந்திரர்மீது இருக்கிறதே! ஆடிட்டர் பார்ப்பனர்தானே?
சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக
புதுச்சேரி நீதிபதியின் உதவியாளரிடம் ஜெயேந்திரர் தொலைபேசியில் நடத்திய உரை
யாடல் ஊர் சிரிக்கவில்லையா? (அந்தப் பிரச்சினை கமுக்கமாகி விட்டதே!)
சம்பந்தப்பட்ட நீதிபதி வேறு இடத்திற்கு
ஏன் மாற்றப்பட்டார்? அதன் பின்னணி என்ன? விளக்கு வார்களா திருவாளர் சோவும்,
குரு மூர்த்தியும்?
படுகொலை செய்யப்பட்ட சங்கர ராமன்
மனைவியும், குடும்பத்தினரும், சங்கர மடத்தால் எப்படியெல்லாம்
அச்சுறுத்தப்பட்டனர்? (பெட்டிச் செய்தி காண்க)
குற்றமற்றவர் என்பது உண்மை யானால் ஜெயேந்திரருக்கு ஏன் இந்தக் குறுக்குப் புத்தி?
ஒரு வழக்கில் 83 பேர் பிறழ் சாட்சி, இந்த வழக்கைத் தவிர வேறு ஒன்று உண்டா?
பிறழ்சாட்சி சொன்னார்களா? சொல்ல வைக்கப்பட்டார்களா? அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டின் தொகைகள் என்ன?
வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்து
விடுவார்கள் என்பதற்காகத் தானே ஜாமீன் மறுக்கப்படுகிறது? இவர் விடயத்தில்
என்ன செய்திருக்க வேண்டும்? ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் மீண்டும்
தள்ளி இருக்க வேண்டாமா?
இத்தனை சாட்சிகளைக் கலைப் பதுவரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது?
நியாயமாக இந்த வழக்கின்மீது தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்; சட்டத்தின்முன் சங்கராச்சாரியாராக இருந்தாலும் சரி, சப்பாணியாக இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்றே!
இந்த வழக்கில் அப்பீல் செய்யக் கூடாது என்று திருவாளர் சோ பாவம் கெஞ்சுகிறார்.
வேறு எந்த வழக்கிலாவது இப்படி செய்தார்களா?
பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் நடந்த அநீதிபற்றி வாய் திறந்துள்ளனரா?
பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா? பூணூல்
பாசம் பூண்டற்றுப் போய் விட்டதா? புத்தியைக் கொஞ்சம் செல விடுங்கள் - புரியும் புரிநூலோரின் புன்மைச் செயல்கள்!
ஜெயேந்திரர் பேரம் பேசினார்
உங்கள் கணவரை ஜெயேந்திரர்தான் கொலை செய்திருப்பார் என்று நம்புகிறீர்களா?
என் ஆத்துக்காரர் இறந்தப்போ பலரும்
அதுபற்றிப் பேசினா. வீட்ல அவர் எதையும் சொல்லாததால் எனக்கும் எதுவும்
தெரியலை. பெரியவா, சகல அதிகாரமும் படைச்சவா. அவாளப்பத்தி எப்படிச் சொல்ல
முடியும்? அந்தச் சமயத்துல போலீஸ் காட்டின கெடுபிடியைப் பார்த்து நாங்களே
மிரண்டு போயிட்டோம். போலீஸெல்லாம் அவாளோட ஆளோன்னுகூட சந்தேகப்பட்டோம்.
அவரோட பதிமூனாவது நாள் விசேஷத்தப்போ,
மகாப் பெரியவா அடக்கம் பண்ணின இடத்துக்குப் போனப்போ, என் மகனை பெரியவா
கூப்பிட்டுப் பேசினா. நீங்க எல்லாரும் குடும்பத்தோட சென்னைக்குப்
போயிடுங்க. இங்க இருந்தா போலீஸும், பத்திரிகைக்காரர்களும்
தொல்லைப்படுத்துவா. உனக்கு மாதவப் பெருமாள் கோயில்ல வேலை போட்டு தர்றேன்.
மாசா மாசம் செலவுக்கு மடத்துலிருந்து பணம் தர்றேன்னு சொல்லியிருக்கார்.
ஆத்துல அம்மா ஒத்துக்க மாட்டான்னு மகன் சொன்னதும். சங்கர்ராமன் அவனை
மாதிரியே புள்ளைய வளர்த்து வச்சிருக்கான்னு பக்கத்தில் நின்னவங்ககிட்ட
சொல்லியிருக்கார்.
ஆரம்பத்துல வந்த கணபதியும் மடத்துல பணம்
கொடுத்திருக்கா இத வாங்கிக்கோ, போலீஸோ, பத்திரிகைக் காரர்களோ வந்தா
மடத்தைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னார். இதையெல்லாம் அவா ஏன்
சொல்லணும்? அவர்தான் இதை செய்திருக்கணுமுன்னு போலீஸ் சொல்லுறத நம்பித்தானே
ஆகணும்!
சங்கரராமனின் மனைவி பத்மா பேட்டியிலிருந்து (குமுதம் ரிப்போர்ட்டர் 16.12.2004)
சங்கர மடத்தில் ஒழுக்கக் கேடுகள்
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கிளிண்டன்
முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அப்போது
உலகமே பார்க்க அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டப்படி உண்மையைக்
கண்டறியும் நடவடிக்கைக்கு நீங்கள் முட்டுக்கட்டை போடப் போகிறீர்களா? உலகம்
போற்றும் நிறுவனங்கள் குற்றங்களின் கூடாரங்களாகி குழப்பத்தில் சிக்கிக்
கிடக்க வேண்டுமா? அவற்றின்மீது சட்டப்படியான நடவடிக்கை கூடாதா? தார்மீக
ரீதியான, சட்டரீதியான, தெய்வீக ரீதியான எந்தச் சட்டமாவது
சங்கராச்சாரியார்கள் கொலை செய்ய உரிமை அளித்துள்ளதா? அதன்பிறகு அவரை
விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்துங்கள். தனது புனிதமான பாதையிலிருந்து
அவர் விலகி விட்டால் சங்கராச்சாரியார் என்ற உரிமையையும் இழந்து விடுகிறார்
விசாரணை நீடிக்கும் வரையில் மேலும் சர்ச்சைகளில் இருந்து மடத்தை காப்பாற்ற
அவர் தனது பதவியை துறக்க வேண்டும். தார்மீக மற்றும் ஆன்மீக சக்தியின்
அடையாளம் என சங்கராச்சாரியார்கள் கூறும் தண்டக்கோலை, அவர் வைததிருக்கவோ,
அதை ஜெயிலுக்கு எடுத்துப் போகவோ எந்த நியாயமும் இல்லை.
கேள்வி: ஜெயேந்திரரின் தவறான செயல்பாடுகள்பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்: ஜெயேந்திரரின் வளர்ச்சியைக்
கவனித்தால் அவரது தனி மனிதப் பண்புகளில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருப்பது
தெரியும். அதுதான் அவரை முரட்டுத் துணிச்சலான முடிவுகளை எடுக்க
நிர்ப்பந்தித்தது. அவர் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர் ராதாகிருஷ்ணனை
கேளுங்கள் அவர் ஒரு முக்கியமான சாட்சி.
கேள்வி: காஞ்சி மடத்தின் வரவு -_ செலவு குறித்து சங்கரராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அதுதான் கொலைக்கான நோக்கமா?
பதில்: மடத்தின் வரவு -_ செலவுக் கணக்குகளை தாண்டியும், அவர் மடத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
கேள்வி:: உதாரணமாக...?
பதில்: அங்கு ஏராளமான ஒழுக்கக்கேடான செயல்கள் நடைபெறுகின்றன.
(அரசு வழக்கறிஞர் துல்சி Rediff.Com பேட்டியில்)
-----------------------மின்சாரம் அவர்கள் 7-12-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை
No comments:
Post a Comment