நேற்று
ஒரு நண்பர்/நண்பி தன் கமெண்டில், பிராமணர்கள் வாழ வசதியில்லாத இந்தியா
அதனால் வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
என்றும்,இந்தியா போன்ற ஜாதி வித்தியாசம் காட்டி உயர்ஜாதியினரை ஒதுக்கும்
நாட்டில் வாழ தனக்கு அயர்ச்சியாக இருப்பதாகவும் ரொம்ப சலித்துக்
கொண்டிருந்தார்.
எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.
இத்தனைக்கும் அவர் ஒரு துறையில் நிபுணர் என்று சொல்லிக் கொள்பவர்.
இடஒதுக்கீடு டாப்பிக்கை கொஞ்சம் ஆராய்ந்தாலே அவருக்கு விடை கிடைக்கும்.ஆனால் ஆராய மாட்டார்.ஏனென்றால் அதுதான் உயர்ஜாதி புத்தி.உள்ளுக்குள்ளே அடைந்து கிடக்கும் அருவருப்பான வெறி.
அடுத்து இன்னொரு நண்பர்(இன்னொரு போஸ்டில்) கமெண்டில் “பிராமணர்கள் எந்த சலுகையும் இல்லாமலேயே 40 சதவிகிதம் ஐ.ஏ.எஸ் தேர்வில் முன்னிலை வகிப்பதாக சிலாகித்திருந்தார்.
எல்லோரும் மனிதர்கள்தானே.அப்புறம் எப்படி ஒரு இனத்துக்கு மட்டும் அறிவு வரும்.
அறிவியல் கூற்றுப்படி அது தவறான நிலைதானே.எப்படிதான் அவர்கள் அந்த அறிவை அடைந்தார்கள்.
மற்ற எல்லா இனங்களையும் அடக்கி ஆண்டுதானே.பல நூற்றாண்டுகளாக கல்வி அறிவை சூழ்ச்சியால் தனக்கு மட்டும் என்று சொந்தம் கொண்டதால்தானே அது சாத்தியப்பட்டது.இப்படியெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை.
இன்றும் நம் சமூகத்தில் பிராமணர்கள் பிறவியிலேயே அறிவாளிகள் என்ற முட்டாள்தனமான கிறுக்குத்தனமான நம்பிக்கை படித்த பிறபடுத்தப் பட்ட ஜாதியினரிடம் கூட அவர்களை அறியாமல் விரவிக் கிடக்கும் போது,இரண்டாயிரம் வருசம் முன்னர் எப்படி இருந்திருக்கும்.
இந்திராபார்த்தசாரதி எழுதிய ’நந்தன் கதை’ என்ற நாடகத்தில் ஒரு பகுதி
// பெண் 1:மாட்டுக்கு வேண்டியது புல்லு
பெண் 2 :மனிசனுக்கு வேண்டியது வவுறு
பெண் 3:வவுத்துக்கு சாமி சோறு
நந்தன்:வவுத்துக்கு சாமி சோறு,மனசுக்கு?
ஆண் 1: பறையனுக்கு வவுறுதான் மனசு,வேறென்ன?
நந்தன்:மாட்டுக்குச் சரி,வவுறுதான் மனசு;மனிசண்டா நீ?
ஆண் 2 :மாடும் பறையனும் ஒண்ணு
நந்தன் :பறையனை விட ஒசத்தி மாடு
ஆண் 3: எப்படி?
நந்தன் : கோயிலுக்குள்ளாற போகலாம் மாடு...நீ?
ஆண் 4:மாட்டுக்கு ஏதுடா சாதி?
நந்தன்:யோசிக்க!மாட்டைவிட தாள்த்தியா மனிசன்//
நிறைய நண்பர்கள் “ஏன் இந்துமதத்தை எல்லோரும் எதிர்க்கிறார்கள்.ஏன் மற்ற மதங்களை கிண்டல் செய்வதில்லை” என்று அடிக்கடி கருத்துக் கூறி வருகிறார்கள்.
ஐயா நண்பர்களே விக்கிபீடியாவை ஒபன் செய்து பாருங்கள் இந்தியாவில் எத்தனை இந்துக்கள்.எத்தனை மற்ற மதங்கள் என்று,80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள்.
அவர்கள் பின்பற்றும் இந்துமதத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் யார்?
பிராமணர்கள்.
அந்த மதத்தை வைத்தே பிராமணர்கள் மற்ற எல்லா ஜாதியையும் அடிமையாக்கினர்.ராஜ ராஜ சோழன் முதலாக எல்லோரும், பிராமணர்கள் சொன்னதை கேட்கும் படியான தந்திரத்தை இந்து மதத்தின் துணை கொண்டே செய்தனர் என்பதை கொஞ்சம் அறிவு கொண்டு யோசித்தால், தெரிந்து கொள்ளமுடியும்.
ஆக இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இந்து மத விமர்சனம்,இந்து மதத்தின் மீதான சாடல் முக்கியம்.
இதைத்தான் பெரியாரிலிருந்து எல்லோரும் செய்து கொண்டு வருகின்றனர்.
மாட்டை கோவிலுக்குள் விட்டான்,மனிதனை விட வில்லை.சரி. எப்படி மனிதன் கோயிலுக்குள் மறுபடி போனான்.பெரியார் போன்றவர்கள் இந்து மதத்தின் அசிங்கத்தை விளக்கி போராடின பின்புதானே.
பத்தாயிரம் ஃபாலோவர்களையும். ஐந்தாயிரம் நண்பர்களையும்,450 லைக்கர்களையும்,பெரிய பதவியிலும்,கண்ணியமான தோற்றத்திலும் நிறைய “உயர் ஜாதி வெறி” பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.
ஜாக்கிரதை....
by ;Vijayabhaskar Vijay
எனக்கு ஆச்சர்யமாயிருந்தது.
இத்தனைக்கும் அவர் ஒரு துறையில் நிபுணர் என்று சொல்லிக் கொள்பவர்.
இடஒதுக்கீடு டாப்பிக்கை கொஞ்சம் ஆராய்ந்தாலே அவருக்கு விடை கிடைக்கும்.ஆனால் ஆராய மாட்டார்.ஏனென்றால் அதுதான் உயர்ஜாதி புத்தி.உள்ளுக்குள்ளே அடைந்து கிடக்கும் அருவருப்பான வெறி.
அடுத்து இன்னொரு நண்பர்(இன்னொரு போஸ்டில்) கமெண்டில் “பிராமணர்கள் எந்த சலுகையும் இல்லாமலேயே 40 சதவிகிதம் ஐ.ஏ.எஸ் தேர்வில் முன்னிலை வகிப்பதாக சிலாகித்திருந்தார்.
எல்லோரும் மனிதர்கள்தானே.அப்புறம் எப்படி ஒரு இனத்துக்கு மட்டும் அறிவு வரும்.
அறிவியல் கூற்றுப்படி அது தவறான நிலைதானே.எப்படிதான் அவர்கள் அந்த அறிவை அடைந்தார்கள்.
மற்ற எல்லா இனங்களையும் அடக்கி ஆண்டுதானே.பல நூற்றாண்டுகளாக கல்வி அறிவை சூழ்ச்சியால் தனக்கு மட்டும் என்று சொந்தம் கொண்டதால்தானே அது சாத்தியப்பட்டது.இப்படியெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை.
இன்றும் நம் சமூகத்தில் பிராமணர்கள் பிறவியிலேயே அறிவாளிகள் என்ற முட்டாள்தனமான கிறுக்குத்தனமான நம்பிக்கை படித்த பிறபடுத்தப் பட்ட ஜாதியினரிடம் கூட அவர்களை அறியாமல் விரவிக் கிடக்கும் போது,இரண்டாயிரம் வருசம் முன்னர் எப்படி இருந்திருக்கும்.
இந்திராபார்த்தசாரதி எழுதிய ’நந்தன் கதை’ என்ற நாடகத்தில் ஒரு பகுதி
// பெண் 1:மாட்டுக்கு வேண்டியது புல்லு
பெண் 2 :மனிசனுக்கு வேண்டியது வவுறு
பெண் 3:வவுத்துக்கு சாமி சோறு
நந்தன்:வவுத்துக்கு சாமி சோறு,மனசுக்கு?
ஆண் 1: பறையனுக்கு வவுறுதான் மனசு,வேறென்ன?
நந்தன்:மாட்டுக்குச் சரி,வவுறுதான் மனசு;மனிசண்டா நீ?
ஆண் 2 :மாடும் பறையனும் ஒண்ணு
நந்தன் :பறையனை விட ஒசத்தி மாடு
ஆண் 3: எப்படி?
நந்தன் : கோயிலுக்குள்ளாற போகலாம் மாடு...நீ?
ஆண் 4:மாட்டுக்கு ஏதுடா சாதி?
நந்தன்:யோசிக்க!மாட்டைவிட தாள்த்தியா மனிசன்//
நிறைய நண்பர்கள் “ஏன் இந்துமதத்தை எல்லோரும் எதிர்க்கிறார்கள்.ஏன் மற்ற மதங்களை கிண்டல் செய்வதில்லை” என்று அடிக்கடி கருத்துக் கூறி வருகிறார்கள்.
ஐயா நண்பர்களே விக்கிபீடியாவை ஒபன் செய்து பாருங்கள் இந்தியாவில் எத்தனை இந்துக்கள்.எத்தனை மற்ற மதங்கள் என்று,80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள்.
அவர்கள் பின்பற்றும் இந்துமதத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் யார்?
பிராமணர்கள்.
அந்த மதத்தை வைத்தே பிராமணர்கள் மற்ற எல்லா ஜாதியையும் அடிமையாக்கினர்.ராஜ ராஜ சோழன் முதலாக எல்லோரும், பிராமணர்கள் சொன்னதை கேட்கும் படியான தந்திரத்தை இந்து மதத்தின் துணை கொண்டே செய்தனர் என்பதை கொஞ்சம் அறிவு கொண்டு யோசித்தால், தெரிந்து கொள்ளமுடியும்.
ஆக இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இந்து மத விமர்சனம்,இந்து மதத்தின் மீதான சாடல் முக்கியம்.
இதைத்தான் பெரியாரிலிருந்து எல்லோரும் செய்து கொண்டு வருகின்றனர்.
மாட்டை கோவிலுக்குள் விட்டான்,மனிதனை விட வில்லை.சரி. எப்படி மனிதன் கோயிலுக்குள் மறுபடி போனான்.பெரியார் போன்றவர்கள் இந்து மதத்தின் அசிங்கத்தை விளக்கி போராடின பின்புதானே.
பத்தாயிரம் ஃபாலோவர்களையும். ஐந்தாயிரம் நண்பர்களையும்,450 லைக்கர்களையும்,பெரிய பதவியிலும்,கண்ணியமான தோற்றத்திலும் நிறைய “உயர் ஜாதி வெறி” பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.
ஜாக்கிரதை....
by ;Vijayabhaskar Vijay
No comments:
Post a Comment