தென்றல் (Thendral)

Tuesday, August 25, 2015

சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: துயில் நீங்குமா? துயர் தீருமா?தொலைந்து போகுமா தமி...

சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: துயில் நீங்குமா? துயர் தீருமா?
தொலைந்து போகுமா தமி...
: துயில் நீங்குமா? துயர் தீருமா? தொலைந்து போகுமா தமிழனம்? தமிழனின் சிறப்பையும் சீர்குலைந்த நிலைமையையும் எண்ணிப் பார்க்கும் போது அளவிலா மக...

இரும்பு முள்வேளி - குண்டுவின் மென்நூல்கள்

இரும்பு முள்வேளி - குண்டுவின் மென்நூல்கள்

சுடுமூஞ்சி - குண்டுவின் மென்நூல்கள்

சுடுமூஞ்சி - குண்டுவின் மென்நூல்கள்

Sunday, August 23, 2015

Umar Chennai: நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – உமர்

Umar Chennai: நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – உமர்: மே 17 இயக்கத்தின் தோழர்களுக்கு, வணக்கம். நான் உமர். ஜூன் 2011 முதல் ஆகஸ்ட் 25, 2014 வரை தங்கள் இயக்கத்தில் உறுப்பினராய் இருந்தவன். ஒருங்...

கருத்துகள் - views: கணினியில் தமிழ்த் தட்டச்சு

கருத்துகள் - views: கணினியில் தமிழ்த் தட்டச்சு: கணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...

இப்படிக்கு இஆரா...: ஹெல்மெட்(helmet)

இப்படிக்கு இஆரா...: ஹெல்மெட்(helmet):   சின்ன டிப்ஸ்:-  ஹெல்மெட்அதிக நேரம் அணியும் பொழுது தலையில் கர்சிப் கட்டிக்கொண்டு அணிந்தால் வியர்வையால் தலையில் ஏற்படும் பாதிப்பை தவி...

சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: காதலர் தினம்

சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: காதலர் தினம்: காதலர் தினம் காலையில் தொலைக்காட்சியை இயக்கினால் கண்ணில் படும் காட்சியும்,செய்தியும் காதலர் தினத்தன்று கலவரம் செய்திட ஆயுதங்களுக்கு பூசை போட...

என் சிந்தையின் கண்: கொசு

என் சிந்தையின் கண்: கொசு: உயங்ங்... உயங்ங்.... என்ற மந்திரம் சொல்வாயோ! மனிதனை போர்வைக்குள் ஒழிந்திட செய்வாயோ! சுகாதார சீர்கேட்டின் குழந்தை நீயோ ! ம...

என் சிந்தையின் கண்: சொர்கவாசல்

என் சிந்தையின் கண்: சொர்கவாசல்: வாசலாம் வாசல் சொர்கவாசல் ஒதுங்க இடம் இல்லாத மக்கள் நடுத்தெருவில் ஊசல் நடை திறக்க கண்டவரெல்லாம் அடைவா ரா சொர்கம் நடை ...

இந்து மதம் எங்கே போகிறது?: 3.அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்

இந்து மதம் எங்கே போகிறது?: 3.அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்: இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3 அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள். பகுதி - 3 வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண...

இந்து மதம் எங்கே போகிறது?: கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம ...

இந்து மதம் எங்கே போகிறது?: கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம ...: கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!” இந்துக்களின் தெய்வ காவியமா...

சுபவீ வலைப்பூ: சாதியும் சாராயமும்

சுபவீ வலைப்பூ: சாதியும் சாராயமும்

சுபவீ வலைப்பூ: எதிரி யார், மதுவா, கலைஞரா?

சுபவீ வலைப்பூ: எதிரி யார், மதுவா, கலைஞரா?: " குடி குடியைக்    கெடுக்கும் குடியை அரசு காக்கும்" என்பதாக நகர்ந்து கொண்டுள்ளது தமிழ்நாட்டின்    இன்றைய அரசியல். ' நாங்...

சுபவீ வலைப்பூ: சேஷ சமுத்திரம் சாதிக் கலவரம் எதனால்?

சுபவீ வலைப்பூ: சேஷ சமுத்திரம் சாதிக் கலவரம் எதனால்?: 17-08-2015 அன்று நியூஸ் 7 தொலைக்காட்சி கேள்வி நேரம் நிகழ்ச்சியில் " சேஷ சமுத்திரம் சாதிக் கலவரம் எதனால்?  மதம், சாதிக் கலவரங்கள் தொடர...

சுபவீ வலைப்பூ: சாதியும் சாராயமும்

சுபவீ வலைப்பூ: சாதியும் சாராயமும்

Thursday, August 20, 2015

வலிப்போக்கன் : அவர்கள் ஒன்று சேர்ந்தால் .......என்ன நடக்கும்...

வலிப்போக்கன் : அவர்கள் ஒன்று சேர்ந்தால் .......என்ன நடக்கும்...: படம்-- ammanastrology.blogspot.com/.. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தால்.. என்ன நடக்கும்...?? ஏய்... அய்யா...  ஐம்பது நிமிடம...

வலிப்போக்கன் : என்னப்பா...நடக்குது...நாட்டுல......

வலிப்போக்கன் : என்னப்பா...நடக்குது...நாட்டுல......: படம்- ஒன் இந்தீ...யா என்னப்பா......நடக்குது நாட்டுல.... வெளிநாட்டுலேயா....... உள்நாட்டுலயா....... அது என்னப்பா...உள்நாடு....

கருத்துகள் - views: ஆரியர் மணமுறைகளுள் பெரும்பான்மையான, மணமெனும் பெயர்...

கருத்துகள் - views: ஆரியர் மணமுறைகளுள் பெரும்பான்மையான, மணமெனும் பெயர்...: இலக்குவனார் திருவள்ளுவன்      16 August 2015       No Comment தமிழர் திருமண முறை சென்ற 1500 ஆண்டுகளாக ஊறி...

கருத்துகள் - views: பிய்த்து எறிய சாதி என்ன புல்லா பூண்டா? – கோ.திருநா...

கருத்துகள் - views: பிய்த்து எறிய சாதி என்ன புல்லா பூண்டா? – கோ.திருநா...: இலக்குவனார் திருவள்ளுவன்      17 August 2015       No Comment ஆயிரம் ஆண்டுகளாக ஆரியன் செதுக்கிய சிறைக்கூடம் தம...

பார்ப்பன நாயகமும் பணக்கார நாயகமும்-பெரியார்


பார்ப்பன நாயகமும் பணக்கார நாயகமும்-பெரியார்

பார்ப்பன நாயகமே!

திராவிடர் கழகம் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டது. பகுத்தறிவுக்கு முதன்மையான மதிப்புக் கொடுத்து, எதையும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகும்.

இப்படிப்பட்ட முறையில் வேறு எந்தக் கட்சிக்காரர்களும் சொல்வது கிடையாது. இந்நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தபோதிலும் அவை அத்தனையும் மக்களிடம் நயமாகப் பேசியும் மக்களின் மனம் கோணாமல் எப்படி எப்படி தந்திரமாகப் பேசவேண்டுமோ அப்படிப்பட்ட பொய்யும் புரட்டும் கொண்ட முறைகளிலும் பேசுவதுமாக இருக்கின்றன.

இப்படிப்பட்ட சுயநலவாதிகள்தான் இதுவரை தோன்றி, உண்மையான அத்தனையையும் மறைத்துப் பேசி, சாஸ்திரம், புராணம் சம்பந்தப்பட்ட புரட்டுகளை வெளியிடாமல் மக்களைப் பழைமையிலேயே ஆழ்த்தி பகுத்தறிவு அற்றவர்களாகச் செய்து விட்டனர். இதன் காரணமாகவே நம் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காட்டுமிராண்டிகளாகவும், இழிஜாதிகளாகவும், பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... இப்படிப்பட்ட இழிநிலை  நீங்கவேண்டும் என்பதற்கே திராவிடர் கழகம் பாடுபடுகிறது.

எத்தனையோ சித்தர்களும், மகான்களும், மகாத்மாக்களும் தோன்றி இருந்த போதிலும் அவர்கள் அத்தனை பேரும் ஜாதியைப் பற்றிய கவலை கொள்ளவில்லை. அவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் அடிமைகளாகவும் மேலும் தாங்களும் கீழ்ஜாதிகளாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

நாயன்மார்களில் எத்தனையோ ஜாதியர்கள் இருந்திருந்த போதிலும் அவர்களில் ஒருவர் கூட, தான் ஏன் பறையன், சக்கிலியன், குயவன் என்று சிந்தித்ததே இல்லை. சமீபத்தில் தோன்றிய மகான் என்றும், மகான் என்றும் மகாத்மா என்றும் போற்றிப் புகழப்படும் காந்தியார் கூட ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறியதில்லை.

இன்றைக்குள்ள ஜனநாயக ஆட்சித் தலைவர்கள் என்பவர்கள் கூட ஜாதியைப் பற்றி கவலை கொண்டவர்கள் இல்லை. இன்னமும் சொல்லுவோமானால் ஜனநாயக ஆட்சியே ஜாதியை நிலை நாட்ட உண்டாக்கப்பட்டதுதான் என்று சமுதாய சம்பந்தப்பட்டவற்றைக் குறிப்பிட்டார்கள்.

மேலும் பேசுகையில், ஜனநாயக ஆட்சியின் ஊழல்கள் பற்றிப் பேசுகையில்இன்றைக்கு நமக்குள்ள ஆட்சி உண்மையில் ஜனநாயகம் கொண்ட ஆட்சி இல்லை. பார்ப்பன நாயகமும் பணக்கார நாயகமும் கொண்ட ஆட்சிக்கு ஜனநாயக ஆட்சி என்று மெருகிட்ட மாற்றுப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறி மேலும் தேர்தல் முறைகளில் நடைபெறும் ஊழல்களைப்பற்றியும் விளக்கினார்கள்.

இறுதியில், வால்மீகி இராமாயண ஆராய்ச்சியுரை ஆற்றுகையில், வால்மீகி இராமாயணம் பொய்யும் புரட்டும் கொண்ட பார்ப்பனக் கட்டுக்கதை. பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றது. ஏரியில் தீப்பற்றிக் கொண்டது என்று ஒருவன் கூற, அதைக் கேட்ட முடடாள் ஒருவன் கிணற்றுத் தண்ணீரை எடுத்து அணையுங்கள் என்று சொன்னால், அதைப் போன்று பொருத்தமற்ற முறையில் முட்டாள்தனமாகப் புளுகப்பட்டது தான் வால்மீகி இராமாயணம் என்பதாக குறிப்பிட்டார்கள்.

------------------------- 13.02.1956-இல் பட்டுக்கோட்டை - வடசேரி பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 18.02.1956)

கருத்துகள் - views: காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – ச...

கருத்துகள் - views: காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – ச...: இலக்குவனார் திருவள்ளுவன்      16 August 2015       No Comment காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் த...

Tuesday, August 18, 2015

இதயநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் || stop heart problem

இதயநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் || stop heart problem

U Love It All: மாரடைப்பின் அறிகுறிகள்

U Love It All: மாரடைப்பின் அறிகுறிகள்:                                                                                                               மனிதனின் உயிர் ரத்தத்தில் தா...

அதிரடி ஹாஜா: மாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா?எப்படி கண்டுபிட...

அதிரடி ஹாஜா: மாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா?எப்படி கண்டுபிட...: சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம். வலியின் தன்மையைப்...

KSR Blog: இந்தியா ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இணைய இன்னுமா...

KSR Blog: இந்தியா ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இணைய இன்னுமா...: நீண்டகாலமாக ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை எழுப்பி வருகின்றது. உலகில் சீனாவுக்கு அடு...

தமிழ் இதழியலின் அரிய களம்! - தி இந்து

தமிழ் இதழியலின் அரிய களம்! - தி இந்து

Saturday, August 15, 2015

AdiraiPost: மோடி அணியும் மூடி! கவிஞர் கலி.பூங்குன்றன்

AdiraiPost: மோடி அணியும் மூடி! கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் - views: என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திர...

கருத்துகள் - views: என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? – இலக்குவனார் திர...: இலக்குவனார் திருவள்ளுவன்      09 August 2015       No Comment என்று கொண்டாடுவோம் விடுதலை நாளை? இலக்குவன...

மார்க்ஸ் வழியோ,லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது!-பெரியார்


மார்க்ஸ் வழியோ,லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது!-பெரியார்

ஜாதி காரணமாகவே ஒருவன் உழைக்காதிருக்கவும் மறற்றொருவன் உழைக்கவும் ஏற்படுகிறது


ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அவர்களுக்கு  இந்த வார்த்தை வாயில் நுழைய மாட்டேன் என்கிறது. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப்போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.

இங்கத்திய மகன் அறிவு பெற்றவனாக இல்லை; கிணற்றுத் தவளைகளாகத்தான் அவன் வளருகிறான். இந்த நாட்டு மக்களிலே 100-க்கு 85-பேர்கள் கல்வியறிவில்லாத தற்குறி மக்கள் இந்த நிலைமைகள் எல்லாம் மாற்றம் அடையும்படியாக ஏதாவது முயற்சி எடுத்துக் கொண்டால் தான் முடியுமே தவிர, அதை விட்டுவிட்டு இதெல்லாம் பிற்போக்கு சக்தி என்ற பல்லவி பாடிக்கொண்டு திரிவதில் எந்தவித பலனும் இல்லை; ஏற்படவும் ஏற்படாது. 

மார்க்ஸ், லெனின், ஏஞ்செல்ஸ் முதலியவர்கள் இந்தப்படி தான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் வாதம் நம்முடைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கசல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், இருக்கிற சமுதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது தெரியாது. அவர்கள் தங்களுடைய நாட்டிலே இருக்கிற என்பது தெரியாது. அவர்கள் தங்களுடைய நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்புகளுக்கும் அவற்றின் குறைகளுக்குப் பரிகாரம் ஏற்படுகிற மாதிரியில் கொள்கைகள், திட்டங்கள் ஏற்படுத்தினார்களே தவிர, இந்த நாட்டைப் பற்றி அவர்கள் நினைக்கவுமில்லை தெரியவும் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம். 

ஸ்டாலின் இறப்பதற்குக் கொஞ்ச நாளைக்கு முன் ஒருமுறை சொன்னார். அதாவது, "நாம் நினைக்க முடியாத, அறிந்திருக்க முடியாத  சமுதாயக் கஷ்டங்கள் இந்தியாவிலே இருக்கின்றன. எனவே  அந்தச் சமுதாயக் கஷ்டங்களை ஒழிக்காமல் வெறும் பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் முன்னிறுத்திப் போராடுவதால் இந்தியாவில் கம்யூனிசத்தைக் கொண்டுவந்துவிட முடியாது" என்பதாகச் சொல்லியிருக்கிறார். இது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. அப்படி அவர்களுக்கு இந்த நாட்டின் நிலைமை, கஷ்டம், அமைப்புகள் தெரியாது. அவர்களுக்கு இந்த மாதிரியான ஒரு அமைப்பு ஒரு நாட்டிலே இருக்கும் என்பதே அதிசயமாக இருக்கிறது. அறிந்த பிற்பாடுதான் அவர்களும் சொல்லுகிறார்கள் நம்மைப்போலவே. 

உண்மையாக இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும். அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறியவேண்டும். முதன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரசாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான் என்பதை. 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள் பொருளாதாரத்துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான். ஆனால் சமுதாயத்துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத்துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால் சமுதாயத்துறை பேத ஒழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை. இதைப் பற்றிப் பேசுவதே பாபம் என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று கருதுகிறார்கள். பிற்போக்குச் சக்தி என்று சொல்லுகிறார்கள்.

மற்றும் சொல்லுகிறேன் தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்குச் சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும் ஆனால் சமுதாயப் புரட்சியைச் சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும், மக்கள் உள்ளத்திலே இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும் இன்றைய சமுதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி பிரத்தியட்ச நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமுதாய அமைப்பை, இன்றைய அமைப்பு சர்க்கார் இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படி செய்வதன் மூலமாக. 30-வருடங்களுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம் திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவமும் திமிரும்? 30- வருடங்களுக்கு முன் எவ்வளவு தேர் திருவிழா நடைபெறும்! சாமிக்கு எவ்வளவு கூட்டம் சேரும்! இன்றைய தினம் சாமி ஊர்வலத்தின் போது பார்ப்பான், தூக்குகிறவர்கள், தீவட்டி பிடிப்போரைத் தவிர வேறு யாரும் காணுவதில்லையே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. எதற்குச் சொல்லுகிறேன், சர்க்காரைக் கவிழ்க்காமலேயே ஒழிக்காமலேயே மக்கள் உள்ளத்திலே உணர்ச்சியை அறிவை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த சமுதாயப் புரட்சியைச் செய்ய முடியும் என்பதற்கு ஆகவே சொல்லுகிறேன்.

முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம்; பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும் பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன். 

இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே (மாவட்டத்தையே) எடுத்துக் கொள்ளுங்களேன்; யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் - பார்ப்பான் , அதற்கடுத்தபடியாக பணக்காரன் நிலமுடையோன் - சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கும் ஒன்றும் இல்லை யென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமேயில்லை. இப்போது சொல்லுங்கள்; பணக்காரன் - ஏழை என்கிற பாகுபாடு உயர்ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு சார்ந்து இருக்கிறதா? இல்லையா? என்று

இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி இந்த அமைப்பின் மூலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000-வருடங்களாக இப்படியே இருக்கிறோம்.

இன்னமும் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவு கூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாக கூறுவேன்.

------------------------------------ மன்னார் குடியை அடுத்த வல்லூரில் 27.04.1953-ல் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 05.05.1953

Friday, August 14, 2015

துய்த்தல் : கண்ணதாசன் கவிதை

துய்த்தல் : கண்ணதாசன் கவிதை: கூடி வந்த மேகம் என்று கூந்தலை தொட்டான் குவளை மலர் பூத்தது என்று கண்களை தொட்டான் ஓடி வந்த கனிகள் என்று இதழ்க்களை தொட்டான் ஒடியும் என...

துய்த்தல் : தமிழ் பெயர்கள்

துய்த்தல் : தமிழ் பெயர்கள்

விவேகானந்தர் - இங்கர்சாலிடம் கூறியது என்ன? திரிபுவாதங்களுக்குப் பதிலடி!


விவேகானந்தர் - இங்கர்சாலிடம் கூறியது என்ன? திரிபுவாதங்களுக்குப் பதிலடி!

அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம் வெளியீட்டு விழா:
அறிவுலக மேதை இங்கர்சால் நூலை 
1933 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார்
இங்கர்சாலின் ஆங்கில நூல்களும் வெளியிடப்படும் - நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை




சென்னை, ஆக.14- இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பகுத்தறிவாளர்களின் நூலைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், இங்கர்சாலின் ஆங்கில நூல் தொகுப்பும் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டார்.

11.8.2015 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இங்கர்சால் நூல் வெளியிட்டு விழாவில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

மிக எழுச்சியோடு நடைபெறக்கூடிய கர்னல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் என்ற அமெரிக்கா தந்த அற் புதமான அறிவுலக மேதையான இங்கர்சால் அவர்களு டைய பகுத்தறிவு களஞ்சியம் வெளியிட்டு விழா என்ற இந்தச் சிறப்பான நிகழ்விற்கு வந்து,

சிறப்பாக உரைகளை நிகழ்த்தியுள்ள பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய அருமைப் பேராசிரியர் அருமைத் தோழர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீ. என்று அன்போடு உலகமெங்கும் அழைக்கக்கூடிய சுப.வீரபாண்டியன் அவர்களே,

82 ஆண்டுகளுக்கு முன்பே...

இந்த நிகழ்வில் சிறப்பாக சிறப்புரையாற்றிய பெருமை தந்தை பெரியார் அவர்களால் அந்த உணர்வுக்கு ஆட் பட்டு, குழந்தையாக இருக்கும்பொழுதே, ஆணாக  இங்கர் சால் அங்கே இருந்தாலும், அறிவுலகம் இதற்குப் பால் வேறுபாடின்றி பயன்படுத்தப்படவேண்டும் என்ற இன்னும் புரட்சிகரமான ஒரு சிந்தனையை,

82 ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருக்கிறார் என்று சொன்னால், இது ஒரு பெயர் புரட்சி அந்தக்காலத்தில். சாதாரணமான செய்தி யல்ல என்பதுதான் மிக முக்கியம்.

இந்தப் பெயர் புரட்சிக்கு ஆளான அருமை சகோத ரியார் திருமதி.டாக்டர் இங்கர்சால் அவர்களே, திருவாளர் டாக்டர் இங்கர்சால் அவர்களே,

தனி அடையாளமே பெண்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான் அதனுடைய தத்துவமே

நம் நாட்டில் வழக்கமாக என்ன செய்வார்கள் என்று சொன்னால்,  பெண்கள் அவர்களுடைய வாழ்விணையர் பெயரைச் சொல்கிறபொழுது, அவர்களுடைய சொந்தப் பெயரைச் சொல்வதேயில்லை. அவ்வை நடராஜன் அவர்கள் ஓரிடத்தில் உரையாற்றுகிறார் என்றால், அங்கே அம்மையாரும் சென்றிருந்தார் என்றால், அவர்களை எப்படி சொல்வார்கள் என்றால், திருமதி அவ்வை நடராஜன் அவர்களே என்றுதான் சொல்வது அவர் களுடைய வழக்கம். தனி அடையாளமே பெண்களுக்கு இருக்கக்கூடாது என்பதுதான் அதனுடைய தத்துவமே.

ஒரு பெரிய பெயர் புரட்சி செய்தார் தந்தை பெரியார்

மனுதர்மத்தினுடைய தத்துவமே என்னவென்றால், குழந்தையாக இருக்கும்பொழுது, தந்தையின் கண்காணிப் பில், திருமணமானால் கணவனுடைய அடிமையாக, அவர்களுடைய கண்காணிப்பில், மகன் வளர்ந்தால், புத்தென்ற  நரகத்திற்குப் போகாமல் தடுப்பதற்காக புத்திரன் இருந்தால், அதற்காகப் புத்திரன்களுடைய கண்காணிப்பு என்ற ஒரு மனுதர்ம மனப்பான்மை இந்த நாட்டில் வித்தூன்றி, வேரூன்றி,

அது மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்துவிட்ட காரணத்தினால், ஆண்களை மட்டுமே அடையாளப்படுத்தி, பெண்களை சொல்லுகின்ற ஒரு சமுதாயத்தில், பகுத்தறிவு மேதை தந்தை பெரியார் அவர்கள், புது உலகம் என்று அழைக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அந்தப் புது உலகத்தில் இருக்கின்ற பழைய உலகத்தை மாற்றுவதற்காக, நம்முடைய இங்கர்சால் அவர்கள் செய்த பணியை, இந்த நாட்டில் அறிமுகப்படுத் திய காரணத்தினால், ஆண்கள்,

பெண்கள் என்பவர் களுக்கெல்லாம் இங்கர்சால் என்ற பெயர் வைத்து, ஒரு பெரிய பெயர் புரட்சி செய்தார் தந்தை பெரியார் அவர்கள்.

அந்த வகையிலேதான், மேனாள் துணைவேந்தர், சீரிய தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களுடைய வாழ்விணையர் என்றுதான் வழக்கமாக எல்லோரும் அவர்களை அழைப்பார்கள்.

இந்த மேடைதான் இன் றைக்கு ஒரு புதுமைப் புரட்சி செய்திருக்கிறது. திருமதி டாக்டர் இங்கர்சால் அவர்களே, திருவாளர் டாக்டர் இங்கர்சால் அவர்களே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய அடையாளத்தை வைத்து அதற்குப் பிறகு இவர் அறியப்படவேண்டும் என்று.



ஒரு துளி ரத்தம்கூட சிந்தாதப் புரட்சியில் இது ஒரு முக்கியமான மாற்றம்

ஏனென்றால், மேடையில் அம்மா உட்கார்ந்திருக் கிறார்கள்; எதிரே அவ்வை நடராஜன் அவர்கள் அமர்ந் திருக்கிறார். இதுதான் மிகச் சிறப்பான காட்சி. பெரியார் அவர்கள் செய்த அமைதிப் புரட்சி, அறிவுப்புரட்சி ஒரு துளி ரத்தம்கூட சிந்தாதப் புரட்சியில் இது ஒரு முக்கியமான மாற்றம். புரட்சி என்றால், புரட்டிப் போடுதல் என்பதுதானே தவிர வேறொன்றும் கிடையாது.

நடுத்தர வயதுடைய இன்னொரு இங்கர்சால் இருக்கிறார்.  காரைக்குடி நமது இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். (அவர் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்).

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக அறிமுக உரையாற்றிய, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களே, முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அருமைத் தோழர் ஒளிவண்ணன் அவர்களே, நிகழ்ச்சியில் வரவேற் புரையாற்றிய குமரேசன் அவர்களே,

நன்றியுரை கூறவிருக் கக்கூடிய தமிழச்செல்வன் அவர்களே, எதிரில் அமர்ந்தி ருக்கின்ற ஆன்றோர்களே, சான்றோர்களே, தோழர்களே, புத்தகங்களை வாங்கிப் பெருமைப்படுத்தி யிருக்கின்ற அருமையான புத்தகத் தேனீக்களே உங்கள் எல்லோருக் கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சில புத்தகங்களை எடுத்து, சில குறிப்புகளை சொல்லவேண்டும் என்பதற்காக, அங்கே நின்று கொண்டு புரட்டுவதினால், நேரம் அதிகமாகும். எனவே, எளிமையாக சில செய்திகளை சொல்லி முடிக்கவேண்டும் என்பதற் காகத்தான், உங்களின் அனுமதியோடு இங்கே அமர்ந்து உரையாற்றுகிறேன்.

நண்பர்களே, 8.30 மணிக்கு இந்த நிகழ்வு முடியும் என்றுதான் அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். அந்த மணித்துளிகளைத் தாண்டித்தான் எனக்கு இப்பொழுது ஒலிபெருக்கியைக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தை நான் எடுத்துக்கொண்டு, 9 மணிக்கு என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.

இரண்டு செய்திகளை இங்கே சொல்லவேண்டும். இங்கர்சால் அவர்களைப்பற்றி இன்றைக்கு ஆங்கில நூல்கள், உங்களுக்குத் தெரியும் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் எழுதிய, அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட தி காட் டெல்யூஷன் - ‘‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ என்று சொல்லக்கூடிய ஒரு புத்தகத்தை மொழி பெயர்ப்பதற்கு அதற்கு அனுமதி வாங்குவதற்கு நாங்கள் பட்டபாடு பெரிய பாடாகும். இப்பொழுதெல்லாம் அவ் வளவு சிக்கல்கள் இருக்கின்றன.

1933 ஆம் ஆண்டு முதல் பதிப்பு

வியப்பான ஒரு செய்தி- முதல் செய்தி என்ன வென்றால், அய்யா அவர்கள், எங்களைப் போன்றவர்கள் எல்லாம் பிறக்காத காலத்தில், 1933 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிட்டு, தமிழாக்கம் செய்திருக்கிறார். சோமசுந்தர பாரதியாருடைய அருமை மகன் சோ.லட்சு மிரதன் பாரதி அவர்கள்,

கடவுள் என்கிற பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நாளைய விடுதலை ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை அவர்கள் ஒரு நூலை மொழி பெயர்த்திருக்கிறார். அதேபோல, கே.எம். பாலசுப்பிரமணி யம் அவர்கள், திருவாசகம் மணி என்று பின்னாளில் அறியப்பட்டவர். அவர் இன்னொரு நூலை மொழி பெயர்த்திருக்கிறார்.

அதுபோல, மேனாள் விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் ஒரு நூலை மொழி யாக்கம் செய்துள்ளார். இப்படி பல பேரும் மொழியாக்கம் செய்து, அய்யா அவர்கள் பச்சை அட்டைக் குடியரசில் இங்கு சொன்னதைப்போல, அந்தக் காலத்தில் செய்திருக் கிறார்கள்;

அத்தனை மேல்நாட்டு அறிஞர்களையும், இங்கே நமக்கு எடுத்துச் சொல்லி, சுயமரியாதை இயக்கம் மட்டும் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை, உலகம் முழுவதும் இருக்கின்ற மேல்நாட்டு அறிஞர்களும் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்து களையும் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் என்று, தன்னுடைய கொள்கைக்கு அரண் சேர்ப்பதைப்போல, அவர்களை யெல்லாம் அழைத்து வந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதிலேகூட ஒரு தனித்தன்மை தந்தை பெரியார் அவர்களிடத்தில் உண்டு. அவர்கள் சொல்லியிருக் கிறார்கள், ஆகவே, நான் சொல்லியிருக்கிறேன் என்று அவர் சொல்லியது கிடையாது.

இங்கர்சால் சொல்லியிருக்கிறார், பெர்னாட்ஷா சொல்லியிருக்கிறார், வால்டர் சொல்லியிருக்கிறார், லெனின் சொல்லியிருக்கிறார், மார்க்ஸ் சொல்லியிருக் கிறார், ஆகவே, நான் இந்தக் கருத்தை சொல்லுகிறேன் என்று தந்தை பெரியார் அவர்களுக்குச் சொல்லுகின்ற பழக்கமே கிடையாது.

கட்டணம் கட்டித்தான் அவருடைய உரையைக் கேட்டார்கள்

பெரியார் ஒரு ஒப்பற்ற சுயசிந்தனையாளர். ஆகவே, அவர்கள் தன்னுடைய கருத்து, தான் மட்டும் சொல்ல வில்லை; உலகம் முழுவதும் இப்படிப்பட்ட கருத்துகளுக்கு வரவேற்பு இருக்கிறது; இந்தக் கருத்துகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. பணம் கொடுத்து, உரைகளைக் கேட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டிலேயே ஒரு நாத்திக வாதி, ஒரு பகுத்தறிவாதி, அக்நாஸ்டிக் என்ற கடவுள் கவலையற்ற ஒரு சிந்தனையாளர் - மிகப்பெரிய மனித நேய சிந்தனையாளர் - அவருடைய பேச்சை கேட்பதற்குப் பணம் கொடுத்து அப்பொழுது திரண்டிருந்தார்கள். கட் டணம் கட்டித்தான் அவருடைய உரையைக் கேட்டார்கள் என்பதிருக்கிறதே, அது மிகப்பெரிய வாய்ப்பாகும். இப்படி பல்வேறு செய்திகளை இந்நூலில் நீங்கள் பார்க்கலாம்.

காலம் அதிகமாக இல்லாத காரணத்தினால், அற்புத மாக இங்கே உரைகள் நிகழ்த்திப்பட்டிருக்கின்றன. நம் முடைய பெரியார் நூலக வாசகர் வட்டத்தில், இந்த நூலைப் பற்றி விரிவான சொற்பொழிவுகள் நடத்தப்படுவது மிகமிக அவசியமாகும்.

அமெரிக்காவில் ஆங்கிலத்தில் நடத்தக்கூடிய  ஒரு பகுத்தறிவு மாத ஏடு

இங்கர்சால் அவர்களுடைய கொள்ளு பெயரன் பால்கர்ட்சு அவர்கள், இங்கர்சால் பிறந்த நாள் விழாவை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவில் அறிவித்திருக் கின்றவர்களுடைய அந்த அமைப்பு  ‘‘Centre For Enquiry’’ - என்று சொல்லக்கூடிய ஆய்வகம் - அதன் சார்பாக, ‘‘Free Enquiry’’ என்று அவர்கள் ஆங்கிலத்தில் நடத்தக்கூடிய  ஒரு பகுத்தறிவு மாத ஏடாகும்.

அந்த இடத்திற்கு நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்த்தேன். இப்பொழுது பால்கர்ட்சு அவர்கள் இல்லை. அவர்களுடைய தொண்டை மாற்றவர்கள் தொடருகிறார்கள். இங்கேயும் வந்தார்கள், நம்முடைய நூலகத்தையும் பார்த்திருக்கிறார்கள்.

பெரியார் அவர்கள் மிகப்பெரிய பணியை செய்திருக்கிறார்கள்

1933 ஆம் ஆண்டு இப்படி பெரியார் அவர்கள் நூல் வெளியிட்டிருக்கிறார். அதுவும் இரண்டணா, மூன்றணா விலையில் மக்கள் மத்தியில் ஆங்கிலத்திலே Pam-phiet-eer என்று சொல்வார்கள். அதாவது துண்டுப் பிரசுரங்கள் மாதிரி சின்ன சின்ன வெளியீடுகளைப் போட்டு, மக்கள் மத்தியில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக் கில் பரப்புவதன் மூலமாக இந்தக் கொள்கைகள் பரவ வேண்டும்.

அந்தக் கொள்கையினுடைய சிந்தனைகளினு டைய சிறப்புகளை ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்துப் பயன்பெறவேண்டும் என்பதற்காக அய்யா அவர்கள் மிகப்பெரிய பணியை செய்திருக்கிறார்கள்.

எனவே, பெரியார் அவர்களுடைய அந்த சிந்தனை எப்படிப்பட்டது, அவர்களுடைய முயற்சி எவ்வளவு சிறப்பானது - தமிழ்நாட்டு அறிஞர்களையெல்லாம் குடிஅரசின்மூலம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பச்சை அட்டைக் குடிஅரசில் எழுதி, பிரபலமாகாத அறிஞர்களே இல்லை - தமிழ்நாட்டில் - பிற்காலத்தில் வந்த பேராசிரியப் பெருமக்கள், சிந்தனையாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதேபோல, மேலைநாட்டில் இருக்கக்கூடிய அத்துணை பேரையுமே அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

கடவுளிலேயே மிகவும் யோக்கியமான கடவுளைத் தேடவேண்டும்

இங்கர்சாலினுடைய ஒவ்வொரு கேள்வியும் சாதாரணமானதல்ல. காலம் சுருங்கியிருக்கின்ற காரணத் தினால், ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். கடவுளைப்பற்றி சொல்கிறபொழுது, நல்ல நகைச்சுவை சிந்தனையோடு அவர்கள் பேசக்கூடியவர்கள்.  An Honest God is the Noblest Work of Man என்று சொன்னார். அதாவது கடவு ளிலேயே மிகவும் யோக்கியமான கடவுளைத் தேடவேண் டும்.

அந்த யோக்கியமான கடவுள் எப்படி வந்தார் என்று சொன்னால், சிறந்த மனிதனுடைய உருவாக்கம். மனிதர் களிலேயே யார் சிறந்த மனிதனோ, அவன்தான் நாணய மான கடவுளை உண்டாக்கியிருக்கிறான். நாணயமான கடவுளை நம் நாட்டில் தேடினால், அவ்வளவு சீக்கிரத்தில் தேட முடியாது.

Lectures and Essays: 
A Selection by Robert G. Ingersoll

ஆகவே, இவ்வளவு பெரிய மிக அற்புதமான பல்வேறு செய்திகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், ஆங்கிலத்தில் அவருடைய Lectures and Essays: A Selection by Robert G. Ingersoll ...  என்பது Collected works  அது ஒரு சிறந்த தொகுப்பு.

அந்த நூலும் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது என்பதை மகிழ்ச்சி யோடு தெரிவித்துக் கொள்கிறோம். அது பல ஆண்டு களுக்கு முன்பாக வந்தது. இப்பொழுது அது பலருக்குக் கிடைப்பதில்லை. அதையெல்லாம் நாங்கள் திரட்டியி ருக்கிறோம்.

எல்லாப் பகுதிகளையும் விடாமல், அவைகளை யெல்லாம் இணைத்து, மூன்று பாகங்களாக அவற்றை வெளியிடுவதாக உள்ளோம். ஏன் அதனை ஆங்கிலத்தில் வெளியிடுகிறோம் என்று சொன்னால், நம்முடைய பிள்ளைகள் இப்பொழுது தமிழில் படிப்பதைவிட, எங்களுக்கு ஆங்கிலத்தில் இருந்தால் படிப்பதற்கு சிறப்பாக இருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது.

இது வேதனைக்குரியதுதான்; வெட்கப்படக்கூடியதுதான். ஆனாலும், அவர்களுக்கும் இந்தக் கருத்துப் போய்ச்சேரவேண்டும் என்பது ஒன்று.

இரண்டாவது, இன்னொரு செய்தி, இளைஞர்களுக் காக நான் சொல்கிறேன், மாணவர்களுக்கு நான் சொல்ல விழைவது என்னவென்று சொன்னால், அந்த ஆங்கில நடை இருக்கிறது அல்லவா, அந்த ஆங்கில நடைக்காகவே இங்கர்சாலை நீங்கள் படிக்கவேண்டும். ஒரு ஆரேசன், மிகப்பெரிய ஒரு ஆய்வுரை;

ஒரு பெரிய தெளிவுரை எப் பேர்ப்பட்ட அளவில் இருக்கும் என்பதை எடுத்துச்சொல் லுகிறபோது, பகுத்தறிவு விளக்கம், தர்க்கவாதம் என்பது எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.

Superstition  என்ற மூட நம்பிக்கை பகுதி

ஓரிடத்தில் சொல்கிறார், Superstition  என்ற மூட நம்பிக்கை பகுதி இருக்கிறது. அதிலே அவர் சொல்கிற நேரத்தில், அவர் ஒரு கேள்வி கேட்கிறார். 13 என்பது மிகவும் கெட்ட எண்;  நம் நாட்டிலும் இது நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் அந்த மூட நம்பிக்கை எந்த அளவிற்கு வந்தது என்பதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.

குரோவர் என்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கொடுத்த தீர்ப்பினால், பாதிக்கப்பட்டவன் ஒருவன், அந்த நீதிபதியை அவன் கத்தியால் குத்தி விட்டான்; ஆத்திரத்தினால், வெறியால்.

இவரை அவசர அவசரமாகக் கொண்டு வந்து டில்லி யிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள். உயிருக்கு ஆபத்தொன்றும் ஏற்படவில்லை. காப்பாற்றி விட்டார்கள். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அறைக்குக் கொண்டு வந்து போட்டவுடன், அவருக்கு நினைவு திரும்பியவுடன், நான் எங்கே இருக்கிறேன்? என்று கேட்டார்.

நீங்கள் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து அறையில் இருக்கிறீர்கள் என்று கூறியவுடன், அந்த நீதிபதி எதேச்சை யாக  அந்த அறை எண்ணைப் பார்த்துவிட்டு, நான் எந்த அறையில் இருக்கிறேன் என்று கேட்கிறார்.

நீங்கள் 13 ஆம் எண் அறையில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

உடனே அந்த நீதிபதி, அய்யய்யோ, 13 எண் அறையா? நான் உயிர் பிழைக்கவே மாட்டேன். முதலில் இந்த அறையை மாற்றுங்கள் என்றார்.

அப்படி யார் கேட்டது என்றால், சாதாரண வீதியில் செல்கிற குப்பனோ, சுப்பனோ அல்ல; எழுதத் தெரியாத தற்குறியல்ல. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதுகிறார்கள் என்றால், Under the Sun  அதாவது உலகத்தில் அவர்கள் எதைபற்றி வேண்டுமானாலும் எழுதுவார்கள்; அது தெரிந்த விஷயமோ, தெரியாத விஷயமோ - எல்லா விஷயத் தைப்பற்றியும் தீர்ப்பு எழுதுவார்கள். தந்தை பெரியார் அவர்கள் சொல்லியதுபோல, அந்தத் தீர்ப்பிற்குமேலே ஒன்றும் கிடையாது.

ஏனென்றால், அறிவினுடைய கடைசி கட்டம் அங்கே தான் இருக்கிறது என்பதற்காக அல்ல; மேல்முறையீட்டுக்கு அதற்குப் பிறகு நீதிமன்றம் இல்லை என்பதால் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.

அந்த நீதிபதி அறை எண்ணைப் பார்த்து அலறுகிறார். அதிகாரியை அழைத்து அறையை மாற்றுங்கள் என்று சொல்கிறார்.

அந்த அதிகாரியும் மருத்துவமனை அலுவலர்களை அழைத்து, அறையை மாற்றவேண்டும் என்று சொல்லு கிறார், அவர்கள் எல்லா அறைகளிலும் நோயாளிகள் இருக் கிறார்கள். எந்த அறையும் காலியாக இல்லை. ஆகவே, என்ன செய்வது என்று நினைத்து, ஒரு பெயிண் டரை அழைத்து, 12-ஏ என்று அறை எண்ணை மாற்றி விட்டனர்.

அந்த நீதிபதி கண் விழித்து, இப்பொழுது எந்த அறையில் இருக்கிறோம் என்று கேட்டவுடன், 12-ஏ அறையில் இருக்கிறோம் என்றவுடன்,

அப்படியா, சரி என்றார் அந்த நீதிபதி!

அவர்களுக்கு 13 என்பது, ஏசு நாதரைக் காட்டிக் கொடுத்தார்கள்; 13 ஆவது சீடன் என்பதாகத்தான், இந்த 13-அய் வெறுக்கிறோம் என்று சொல்லக்கூடிய ஒரு பயம் வந்தது என்று ஒரு சூழல் இருக்கிறது.

13 என்பது பயப்படக்கூடிய எண்ணாக இருந்தால் 26 எவ்வளவு பெரிய ஆபத்தானது

Superstition   என்ற மூடநம்பிக்கை ஒரு பகுதியில் If thirteen is a dangerous number, twenty-six ought to be twice as dangerous, and fifty-two four times as terrible.

13 என்பது பயப்படக்கூடிய எண்ணாக இருந்தால், அப்புறம் இரண்டு மடங்கான 26 எவ்வளவு பெரிய ஆபத்து; நான்கு மடங்கான 52 எப்படிப்பட்டது?

எவ்வளவு அழகான வாதங்கள்; இது ஒரு சிறிய உதா ரணம். இங்கர்சாலை நீங்கள் படிக்கவேண்டும் என்பதற்காக, இந்த சிந்தனையை எடுத்துச் சொல்கிறேன்.

அவர் எத்தனையோ கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

There was a time when the astrologer sought to read in the stars the fate of men and nations. The astrologer has faded from the world, but the astronomer has taken his place. There was a time when the poor alchemist, bent and wrinkled and old, over his crucible endeavored to find some secret by which he could change the baser metals in to purest gold.

The alchemist has gone; the chemist took his place; and, although he finds nothing to change metals into gold, he finds something that covers the earth with wealth. There was a time when the soothsayer and augur flourished. After them came the parson and the priest; and the parson and the priest must go. The preacher must go, and in his place must come the teacher - the real interpreter of Nature.

We are done with the supernatural. We are through with the miraculous and the impossible. There was once the prophet who pretended to read the book of the future. His place has been taken by the philosopher, who reasons from cause to effect -  who finds the facts by which we are surrounded and endeavors to reason from these premises and to tell what in all probability will happen.

The prophet has gone, the philosopher is here. Therse was a time when man sought aid from heaven - when they prayed to the deaf sky. There was a time when everything depended on the supoernaturalist. That time in Christendom is passing away. We now depend upon the naturalist - not upon the believer in ancient falsehoods, but on the discoverer of facts - on the demonstrated of truths. At last we are beginning to build on a solid foundation, and as we progress, the spernatural dies. The leaders of the intellectual world deny the existence of the supernatural. The take from all superstition its foundation.

இதன் தமிழாக்கம் வருமாறு:

ஒரு காலத்தில் சோதிடர்கள் என்பவர்கள் நாடுகள் மற்றும் மக்களின் விதிகள் நட்சத்திரங்களால் நிர்ணயிக் கப்படுகின்றன என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சோதிடர்கள் காலாவதியாகி, தற்பொழுது வானியலாளர்கள் நட்சத்திரங்கள்குறித்து ஆய்ந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் இரசவாதிகள் என்பவர்கள் கூன் வளைந்த, தோல் சுருங்கி முதுமையில் இருந்தனர். அடிப் படையான உலோகங்களை தங்கமாக்குவது என்று அவர்கள் எவரும் அறியாமல் ரகசியமாக  செய்துவந்தார் கள். இரசவாதிகள் போய்ச்சேர்ந்தார்கள். ஆனால், அந்த இடத்தில் வேதியியலாளர்கள் வந்துவிட்டார்கள். எந்த உலோகத்தையும் தங்கமாக்க முடியாது என்பதையும் கண்டுபிடித்து கூறிவிட்டார்கள். பூமிமுழுவதும் வளங்கள் சூழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒரு காலத்தில் குறி சொல்வோர் மக்களிடையே சுரண்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள்தான் மதக் குருக்களாக, பூஜைகள் செய்பவர்களாக ஆனார்கள். ஆனால், அவர்களும் போய்த்தீரத்தான் வேண்டும். போத கர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும் இனி இடமில்லை என்கிற வகையில் அவர்கள் இடத்தில் ஆசிரியர்கள் வந்து விட்டார்கள். ஆசிரியர்தான் இயற்கையாக எடுத்துக்கூறுப வராக இருப்பவர்.

மற்றவர்களால் முடியாதவை மற்றும் அற்புதங்களின் வாயிலாக Ôஇயற்கைக்கு மீறிய சக்திÕ என்பதன் பெயரால் நாம்தான் உருவாக்கினோம். ஒரு காலத்தில் எதிர்காலத்தைக் கூறக்கூடிய புத்தகங்களை வாசிப்பவர்களாக இருந்த தீர்க்கதரிசிகள்  என்று கூறப்பட்டவர்கள் போனார்கள்.

அவர்கள் இடத்திற்கு தத்துவவாதிகள் வந்தார்கள்.  மனிதன் மேல் உலகம் என்று நம்பிய காலத்தில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தான். எதையுமே கேட்கும் திறனற்ற ஆகாயத்தைப் பார்த்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லாம் மேலான சக்தியினால் என்று சார்ந்திருந்த நிலை இருந்தது. கிறித்துவம் போய், இயற்கையாளர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பழைமையான வைகளை நம்பிக்கொண்டிருந்த நிலை இப்போது கிடையாது.

உண்மைகளைக் கண்டறிகின்ற ஆய்வாளர் கள், உண்மைகளை விளக்குபவர்கள் வழியில் இருந்து வருகிறோம். இறுதியாக பலமான அடித்தளத்திலிருந்து கட்டுமானத்தைத் தொடங்கி உள்ளோம். இதை நாம் தொடரும்போது, சக்திவாய்ந்ததாக சொல்லப்பட்டவை (கடவுள்) செத்துப்போகும். அந்த கடவுள் என்கிற அடித் தளத்திலிருந்துவந்துள்ள அனைத்து மூடநம்பிக்கைகளை யும் களைந்திடுவோம்.

இப்படி பல இடங்களில் பல செய்திகளை அவர்கள் சொல்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டவேண்டும்.

நம் இயக்கத்தைப் பார்த்து தொடர்ந்து ஒரு கேள்வி. எந்தப் பேட்டியாக இருந்தாலும், தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்தாலும், மற்ற இடங்களிலும் சரி,

நீங்கள் இந்து மதத்தைப்பற்றியே பேசுகிறீர்கள். மற்ற மதங்களைப்பற்றி பேசுவதில்லை. இந்து மதத்தைத்தானே அதிகமாகத் தாக்குகிறீர்கள். சிறுபான்மைச் சமுதாயத்தைப் பற்றி சொல்வதில்லையே என்று.

87 சதவிகிதம் உள்ள அழுக்கைதான் முதலில் துடைக்கவேண்டும்

இந்தக் கேள்வியை கேட்பவர்களின் நோக்கம், அதில் இருக்கின்ற மூட நம்பிக்கையும் வெளியில் போகவேண்டும்; இதில் இருக்கின்ற மூட நம்பிக்கையும் வெளியில் போகவேண்டும் என்பதல்ல. அவர்களும், நாமும் சண்டை போட்டுக் கொள்ளவேண்டும்; சிண்டு முடிக்கிறானே தவிர, வேறொரு நோக்கம் அல்ல அவர்களுடைய கேள்வியில்.

இருந்தாலும், அவர்களுக்கு நாம் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறோம். 87 சதவிகிதம் உள்ள அழுக்கை தான் முதலில் துடைக்கவேண்டும்; அதுதான் நம்மை நேரிடையாகப் பாதிக்கிறது. மற்றவை 13 சதவிகிதம் உள்ள அழுக்கைப் போக்குவதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் - அதற்கு எவ்வளவு அளவு ஒதுக்கவேண் டுமோ அவ்வளவுதான் ஒதுக்கவேண்டும்.

இங்கர்சாலை மொழி பெயர்த்தார் தந்தை பெரியார் அவர்கள் 1933 ஆம் ஆண்டு என்றால், அது கிறித்துவ மதம்; பைபிளைப்பற்றித்தான் தெளிவாகச் சொல்கிறது. பழைய ஏற்பாட்டுக்காரனுக்கு அமெரிக்கா என்கிற நாடு இருந்ததா என்று கேள்வி கேட்கிறார்;

நம்மூர்க்காரனுக்கு இமயமலைதானே கைலாசம்; அதற்கு மேலே இவனுக்கு ஒன்றுமே தெரியாதே! பனிமலை என்றால், இமயமலைதானே கைலாசம். கீழே ஏழுலோகம்; மேலே ஏழுலோகம், ஈரேழு, பதினாறு லோகம், அண்ட பிண்ட சராசரங்களைப்பற்றி சொல்வானே தவிர, வேறெதுவும் அவனுக்குத் தெரியாதே!

நம் தந்தி டிவியில் உள்ளவர்போல் ஒருவர் இங்கர் சாலிடம் கேள்வி கேட்டார் என்றால், என்ன கேட்பார்?
நீங்க ஏங்க, கீதையைப்பற்றி எழுதவில்லை என்று கேட்டால்,

இங்கர்சால் என்ன சொல்வார், என்னுடைய நாட்டில் கீதையைப் படிக்கின்றவர்கள் கிடையாது; என்னுடைய நாட்டில் பைபிள்தான்; என் நாட்டில் பெரும்பான்மையினர் அவர்கள்தான். அவர்களைத் திருத்தவேண்டும் என்றால், நான் பைபிளைப்பற்றித்தான் பேசவேண்டும் என்பார்.

பெட்ரன்ட் ரசல் Why I am not a Christian? நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல! என்றுதானே எழுதினார். ஏனென்றால், அவர் எதனால் பாதிக்கப்பட்டாரோ; அந்த மதத்தினுடைய மூடநம்பிக்கைகளைப்பற்றி எழுதினார் - பேசினார். எதையும் சிந்திக்காதே, நம்பு என்று சொல்வது தானே மதம். ஆகவே, இங்கர்சால் புத்தகத்தைப் பெரியார் வெளியிட்டார்.

‘‘திராவிட மாயை ஒரு பார்வை’’ - புரட்டு

எந்த மதத்தைப்பற்றியும் எங்களுக்குக் கவலை யில்லை. எல்லா மதங்களையும் நாங்கள் ஒரே மாதிரிதான் நினைக்கிறோம் என்று அந்தக் காலத்திலேயே அதனைத் தெளி வுபடுத்தியிருகிறார் என்பதற்கு, இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். உள்பட கேள்வி கேட்பதற்கும், இதுவே பதில்.

அவர்கள் எவ்வளவு தூரம் பொய் சொல்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.

என் கையில் இருப்பது ‘‘திராவிட மாயை ஒரு பார்வை’’ என்ற புரட்டு நூலாகும். ஏற்கெனவே நம்முடைய இடதுசாரியில் இருக்கக்கூடிய பி.ராமமூர்த்தி அவர்கள், ‘‘ஆரிய மாயையா? திராவிட மாயையா?’’ என்ற நூலை எழுதினார். இதே அரங்கத்தில் மறுப்புரை வழங்கப்பட்டது. பிறகு, அவர்கள் சொல்லியது எல்லாம் தவறு என்பதை, அவர்களுடைய இயக்கத்துக்காரர்களே ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு வந்தார்கள்.

இந்த நிகழ்வை நடத்துவதற்குக் காரணமான தோழர்களுக்கும், வந்திருக்கின்ற உங்களுக்கும், புத்த கத்தை வாங்கி, படித்து மற்றவர்களுக்கும் பரப்புகின்ற உங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
*************************************************************************************
விவேகானந்தர் - இங்கர்சாலிடம் கூறியது என்ன?
திரிபுவாதங்களுக்குப் பதிலடி!

திட்டமிட்ட ஒரு பிரச்சாரத்தை - இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் ‘‘திராவிட மாயை ஒரு பார்வை’’ என்ற நூலாகும். இதிலுள்ள ஒரு செய்தியைப் படிக்கிறேன், கேளுங்கள்!
‘‘இங்கர்சால் எழுத்துக்களை இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டு, நாத்திகம் பேசுவது அன்றைய பேஷன். அதைத்தான் கல்வி யாளர் சுந்தரவடிவேலு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
வேதாந்தச் சிங்கமான சுவாமி விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தில் இருந்த போது, இங்கர்சால் அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்ற தகவலை இந்நாட்டு இங்கர்சால்களும், அவருடைய இளவல்களும் அறிவார்களா?’’ என்று எழுதியுள்ளார்.
மேற்படி கூற்றில் இங்கர்சால், விவேகானந்தரை சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக உள்ளது. பின்னர் வரும் விவேகானந்தர் கூற்றில், இங்கர்சாலை விவேகானந்தர் சென்று சந்தித்ததாக உள்ளது. விவேகானந்தரின் கூற்றையே மாற்றிட நினைக்கிறாரா ‘‘திராவிட மாயை’’ நூலை எழுதியவர்.
இந்தப் புளுகு 
கந்தப் புராணத்திலும் இல்லை

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு; ‘‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை’’ என்பார்கள். அப்படி யென்றால், புளுகுக்கே அத்தாரிட்டி கந்த புராணம் என்று தானே அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்?
ஆனால், மேற்கண்ட நூலில் உள்ள செய்தி எவ் வளவு பெரிய புளுகுணித்தனம், பொய்ப் புரட்டு பிரச்சாரம் என்பதற்கு உதாரணம், நான் ஆதாரத்தோடு இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன். இதற்கு எதை ஆதார மாகக் கூறுகிறேன் என்றால்,
இதனை மறுக்கவேண்டுமானால், விவேகானந்த ரையே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அதுதான் மிக முக்கியம்.
தன்னைப்பற்றி ஒரு டைரிக் குறிப்பு எழுதினார் விவேகானந்தர்
Swami Vivekananda On Himself  தன்னைப்பற்றி ஒரு டைரிக் குறிப்பு போன்று அவர் எழுதியிருக்கிறார். அந்த நூலின் 204 ஆம் பக்கத்தில்
Back to the U.S.A.
I have a message to the West as Buddha had a message to the East.
Ingersoll once said to me: ‘‘I believe in making the most out of this world, in squeezing the orange dry, because this world is all we are sure of’’ I replied: ‘‘I know better way to squeeze the orange of this world than you do, and I get more out of it. I know I cannot die, so I am not in a hurry; I know there is no fear, so I enjoy the squeezing. I have no duty, no bondage of wife and children and property; I can love all men and women. Everyone is God to me. Think of the joy of loving man as god! Squeeze your orange this way and get ten thousand fold more out it. Get every single drop.
இதன் தமிழாக்கம் வருமாறு:
இங்கர்சால் ஒரு சமயம் என்னிடம் இவ்வாறு கூறினார்:

‘‘இந்த உலகத்திலிருந்து அதிகமான ஆக்கப் பயன் பாட்டை நம்புகிறேன். ஒரு ஆரஞ்சு பழத்தை, சக்கை யாகப் பிழிவதைப்போல. ஏனென்றால்,  இந்த உலக நிலை என்பது உருவமானது’.’ 

இங்கர்சாலின் கூற்றுக்கு நான் இவ்வாறு பதிலளித் தேன்.

‘‘ஆரஞ்சுப் பழத்தினை நீங்கள் பிழியும் முறை யினைவிட மேலான வழிமுறையினை நான் அறிவேன். அதில் அதிகப் பலன் பெற முடியும். நான் இறந்துவிட மாட்டேன் என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் அவசரப்படவில்லை. எனக்குப் பயமில்லை; அதனால் ஆரஞ்சுப் பழத்தைப் பிழிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்குத் தனிப்பட்ட கடமை என எதுவு மில்லை.
மனைவி, மக்கள் மற்றும் சொத்து என்ற பந்தமும் இல்லை. அனைத்து மனிதரிடமும் அன்பு பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதனும் எனக்குக் கடவுளே. மனிதனைக் கடவுளாகப் பாவித்து அன்பு செலுத்துவதில் உள்ள மகிழ்ச்சியினை நினைத்துப் பாருங்கள். இந்த வழிமுறை யில் ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து பாருங்கள். பத்தாயிரம் மடங்கு கூடுதலாக சாறு இருக்கும். ஒவ்வொரு துளிச்சாறும் பலன் கூட்டும்!’’
அதே நூலின் 330 ஆம் பக்கத்தில்
In America there was a great agnostic, a very noble man, a very good man, and a very fine speaker. He lectured on religion, which he said was no use; why bother our heads about other worlds? He employed this simile; we have an orange here, and we want to squeeze all the juice out of it. I met him once and said, ‘‘I agree with you entirely. I have some fruit, and I too want to squeeze out the juice. Our difference lies in the choice of the fruit. You want an orange, and I prefer a mango.
You think it is enough to live here and eat and drink and have little scientific knowlege; but you have no right to say that that will suit all tastes. Such a conception is nothing to me. If I had only to learn how an apple falls to the ground, or how an electric current shakes my nerves, I would commit suicide.
Your study is the manifestation of life, mine is the life itself. My philosophy says you must know that and drive out from your mind all thoughts of heaven and hell and all other superstitions, even though they exist in the same sense that this world exists. I must know the heart of this life, its very essence, what it is, not only how it works and what are its manifestations. I want the why of everything. I leave the how to children.
இதன் தமிழாக்கம் வருமாறு:
அமெரிக்க நாட்டில் போற்றதல்மிகு கடவுள் கவலையிலார் ஒருவர் இருந்தார். அவர் நல்ல மனிதர். மாமனிதர் மற்றும் சிறப்பான பேச்சாளர். மதங்களைப் பற்றிய உரை வீச்சாளர். ‘மதங்களால் ஒரு பயனும் இல்லை; மறு உலகத்தைப்பற்றி ஏன் அலட்டிக் கொள்ளவேண்டும்’ தமது உரை வீச்சின்பொழுது ஒரு உவமை அணி சார்ந்த விளக்கத்துடன் இப்படி உரையாற்றுவார்.
‘‘நம்மிடம் ஒரு ஆரஞ்சுப் பழம் உள்ளது. அதிலுள்ள சாறு முழுவதையும் பிழிந்திட விரும்புகிறேன்.’’
நான் (விவேகானந்தர்) ஒருமுறை இங்கர்சாலைச் சந்தித்துக் கூறினேன்.

‘‘உங்களுடன் நான் முழுமையாக ஒத்துப் போகி றேன். என்னிடம் சில பழங்கள் இருக்கின்றன. நானும் அவற்றிலிருந்து சாற்றை பிழிந்திட விரும்புகிறேன். நம்மி டையே உள்ள பேதமெல்லாம் எந்தப் பழத்தினைப் பிழி வது என்பதில்தான். நீங்கள் ஆரஞ்சுப் பழத்தினை விரும்பு கிறீர்கள். நான் மாம்பழத்தினை விரும்புகிறேன்.
இங்கு வாழ்ந்து, உண்டு, குடித்து மக்கள் சிந்தனை அறிவியல் கண் ணோட்டத்துடன் இருந்தால் போதும் என நீங்கள் நினைக் கிறீர்கள். ஆனால், அனைவருக்கும் இந்த வாழ்க்கை முறை உகந்தது எனச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை.
அப்படி ஒரு கருத்து உள்வாங்குதல் எனக்கு ஒன்றுமே இல்லை. ஒரு ஆப்பிள் பழம் மரத்திலிருந்து தரைக்கு ஏன் விழுகிறது; ஏன் மின்சாரம் எனது நரம்பு களை அதிர்வடையச் செய்கிறது என்பதை மட்டும் நான் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன். அவர்களது கூற்று மனித வாழ்வின் வெளிப்பாடு.
எனது கூற்றோ வாழ்வுதான். சொர்க்கம், நரகம் மற்றும் இதர மூடநம்பிக்கைகள்பற்றிய எல்லாவித எண்ணங்களையும் உங்களது மனதிலிருந்து விரட்டி அடியுங்கள் என்பதுதான் எனது தத்துவம். இருந்த போதிலும், உலகம் இருப்பதைப்போன்றே அனைத்தும் இருக்கின்றன.
வாழ்வின் உள் உணர்வுகளை நாம் அறிந்திடவேண்டும். அதனுடைய சாரம் எது என்பது உள்பட. அது எவ்வாறெல்லாம் நடைபெறுகிறது. அதனது வெளிப்பாடு என்பது என்ன? நான் விரும்புவதெல்லாம் ஒவ்வொன்றும் ‘ஏன்?’ என்பதில்தான்; அவைகள் ‘எப்படி?’ என்பதை குழந்தைகளுக்கு விட்டு விடுகிறேன்.’’
(மேற்கண்ட விவேகானந்தரின் விளக்கத்தில் ஏதாவது தெளிவு உள்ளதா! குழப்பத்தின்மேல் குழப்பமாக அல்லவா உள்ளது. இதை இங்கர்சால் ஏற்றுக்கொண்டார் என்று எங்கே விவேகானந்தர் கூறுகிறார்? புரட்டர்களான பூணூல்கள் பதில் அளிக்கட்டும்).
--------------------------------இங்கர்சால் களஞ்சியம்  வெளியீட்டு விழாவில்  தமிழர் தலைவர்
**************************************************************************************  
                    ----------------------------------------"விடுதலை”  14-08-2015

Thursday, August 13, 2015

பள்ளிகளில் மாணவர்கள் சேர சாதிச் சான்றிதழ் தேவையா?- சாதியற்றவர்கள் என அடையாளம் கோரும் பெற்றோர் - தி இந்து

பள்ளிகளில் மாணவர்கள் சேர சாதிச் சான்றிதழ் தேவையா?- சாதியற்றவர்கள் என அடையாளம் கோரும் பெற்றோர் - தி இந்து

வேயுறுதோளிபங்கன் : Brahmins were the beneficiaries under Muslim rule!...

வேயுறுதோளிபங்கன் : Brahmins were the beneficiaries under Muslim rule!...: Brahmins were always concerned only about their welfare, whoever had been the ruler. All that they wanted was that they must be given spec...

வேயுறுதோளிபங்கன் : "பிராமணர்கள்" ஆதிக்கத்தைத் தடுத்த இராஜராஜ சோழன்!

வேயுறுதோளிபங்கன் : "பிராமணர்கள்" ஆதிக்கத்தைத் தடுத்த இராஜராஜ சோழன்!: தேவாரம் மீட்ட இராசராசன்  All the kings of ancient India were under the control and blackmail of the Brahmins,...

வலிப்போக்கன் : "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்...

வலிப்போக்கன் : "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்...: மிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் "கம்யூனிச அறிவு" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்...

வலிப்போக்கன் : “இந்து”தீயரின் கனவு அறிவிப்புகள்.......

வலிப்போக்கன் : “இந்து”தீயரின் கனவு அறிவிப்புகள்.......: படம்- puduvairamji.blogspot.com 2022ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய ஒளி பெற இலக்கு நிர்ணயிப்பு.. நகரத்தில் இரண்...

Wednesday, August 12, 2015

'சுரன்': விண்டோஸ் 10

'சுரன்': விண்டோஸ் 10: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் புதிய பதிப்பாகவும், இதுவே இறுதி பதிப்பு என்றும் கூறப்படும் விண்டோஸ் 10 ஆ...

'சுரன்': சாணக்கியர் காட்டும் டாஸ்மாக் பாதை !

'சுரன்': சாணக்கியர் காட்டும் டாஸ்மாக் பாதை !

VA Shiva Ayyadurai, MIT, Inventor of Email, on Live Dial-In Show on Sun ...

KJELD SLOT: ABSTRAKT INSTALLATIONSKUNST?

KJELD SLOT: ABSTRAKT INSTALLATIONSKUNST?

KJELD SLOT: ABSTRAKT INSTALLATIONSKUNST?

KJELD SLOT: ABSTRAKT INSTALLATIONSKUNST?

Phantom :

Phantom :

தாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்-பெரியார்

தாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்-பெரியார்

தாய்மார்கள் குழந்தைகளை மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்
பெரியோர்களே! தாய்மார்களே! தோழர்களே! நாகரசம்பட்டி, மத்தூர் முதலிய இடங்களில் நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும் புதிய ஒரு மாறுதலான முறையில் நடந்து வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனடிப்படையில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதே இந்நிகழ்ச்சியாகும்.

தாய்மார்களே! பெரியோர்களே! புதிய முறைத் திருமணம் என்கின்ற பெயரால் நடைபெறும் திருமணம் என்றாலும் கூட, இதில் வாழ்த்துக் கூறுவது என்கின்ற மூடநம்பிக்கையை இன்னும் போக்க முடியவில்லை. மக்களுக்கு அறிவு வந்தால் தான் இதனைப் போக்க முடியும். அதுவரை இந்த வாழ்த்து கூறுதல் என்ற முறை இருந்துதான் வரும். என்னைப் பொறுத்த வரை இந்த வாழ்த்துக் கூறுவதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை கிடையாது.

நாங்கள் தோன்றி இம்முறையைக் கொண்டு வரும் வரை, பார்ப்பானைக் கொண்டு வந்து வைக்கணும்; நெருப்பைப் போட்டுக் கொளுத்தணும். பானையை அடுக்கணும்; குளிப்பாட்ட வேண்டும் என்று சரியாக நாள் முழுவதும் வேளை இருக்கும்படியாகக் காரியங்களை அமைத்துக் கொண்டு செய்யப்படுவதையே திருமணம் என்று கருதி வந்தனர். நாங்கள் தோன்றிய பின் அதுவும் இம்முறைகள் எதற்காகத் தேவை? இவை இல்லாவிட்டால் என்னக் கெட்டு விடும் என்று யோசித்து, அதனால் எந்தக் கேடும் இல்லை என்று உணர்ந்து மாற்றிய பின் தான் பழைய முறை சிறிது சிறிதாக மறைந்து வருகின்றது.

பழைய முறைகள் என்பது மூன்று காரியங்களைத் தான் அடிப்படையாகக் கொண்டவை ஆகும். பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்குவது என்பது முதல் காரியமாகும். ஆண்கள் எவ்வளவு கொடுமைகள் செய்தாலும், பெண்கள் அதனைப் பொறுத்துக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள். அடித்தாலும், கொலை செய்தாலும் அவனை எவரும் கேட்க முடியாது. அவன் தன் மனைவியை எதுவும் செய்ய உரிமையுடையவனாவான். ஆண் இறந்து விட்டால் அவன் மனைவியையும், அவனோடு சேர்ந்து சாகடிக்கப்பட வேண்டும். இது "உடன்கட்டை ஏறுதல்" என்ற பெயரால் நடைபெற்று வந்தது. பெண்களுக்குச் சொத்தில் உரிமை கிடையாது. ஆண் இறந்தால் அவன் மனைவி மறுமணம் செய்து கொள்ளக் கூடாது. இப்படிப் பல கொடுமைகளைப் பெண்கள் ஏற்கத் தான் வேண்டும். இது பெண்களை அடிமையாக்குவதற்கும், நிரந்தர வேலைக்காரியாக்குவதற்கும் என்றே ஏற்பாடு செய்யப்படடதாகும்.

இரண்டாவதாக, மக்களிடமிருக்கும் முட்டாள் - மூட நம்பிக்கையினை வலியுறுத்தவும், நம் மக்களிடமிருக்கும் ஜாதி இழிவினைக் காப்பாற்றவும், பார்ப்பானுக்கு நாம் நிரந்தர அடிமை என்பதனை வலியுறுத்துவதுமான மூன்று அடிப்படைக் கொண்டதனால் இவற்றை நாம் மாற்றியமைக்க வேண்டுமென்று கருதினோமே தவிர, வேறில்லை. புதிய முறை என்பதால் இங்கு ஆணுக்கும், ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை. புதிய முறையானாலும் நாம் ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் திருமணம் செய்கின்றோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. செய்யும் முறைகள், சடங்குகளில் தான் மாற்றம் செய்திருக்கிறோம்.

மணமக்கள் வரவிற்குள் செலவிட வேண்டும். வரவிற்கு மேல் செலவிடுவதால் நம் நாணயம், ஒழுக்கம் எல்லாம் கெட்டு விடுவதோடு, பிறரிடம் சென்று கடன் வாங்கும் நிலையினையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்நிலை கூடாது. இரண்டாவது அதிகப்படியான பிள்ளைக் குட்டிகளைப் பெற்று அல்லலும், அசவுகரியமும் அடைவதோடு பொது ஒழுக்கமும் பாழாகும்படிச் செய்யக் கூடாது.

நான் 30 ஆண்டுகளுக்கு முன் சொன்ன - பெண்கள் 20-வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற - கருத்து இன்று அரசாங்கத்தால் சட்டமாக்க இருக்கிறது. நான் மேல் நாட்டெல்லாம் சுற்றி இருக்கிறேன். நான் வெளிநாட்டில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன். அந்த வீட்டில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும், தாயாரும் இருந்தார்கள். அந்தப் பெண் யாரென்று கேட்டேன். (Proposed Wife) மனைவியாக ஏற்றுக் கொள்ள இருக்கிற பெண் என்று அந்த ஆண் கூறினான். இப்படி 5-வருடமாக வாழ்க்கை நடத்தி வருகின்றார்களே என்றேன். எங்கள் அரசாங்க சட்டப்படி பெண்ணிற்கு இன்னும் 20-வயது ஆகவில்லை. 20-வயது ஆன பின் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறினான். இப்படித் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்துவதால் அவர்கள் குழந்தை பெறுவது கிடையாது. சம்பளமும் அதிகம் பெறுகின்றனர். அதனால் அவர்கள் சராசரி 75-வருடம் வாழ்கின்றனர். நம் நாட்டின் சராசரி வயது 32-இல் இருந்து இன்று 50-வருடமாக ஆகி இருக்கிறது. இன்னும் 10-ஆண்டுகள் போனால் நாமும் மேல்நாட்டின் நிலையை அடைவோம்.

மற்றவர்கள் நம் வாழ்வை  குடும்பத்தைப் பார்த்துக் குறை சொல்லாத அளவு நடந்து கொள்ள வேண்டும். இப்போது பார்ப்பான் செய்து வரும் செயல்களால் மக்களின் பொது ஒழுக்கம் மிகவும் குறைந்து விட்டது. நம் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு திரிகின்றனர். இது ஒழிய வேண்டும்.

மூட நம்பிக்கை பெண்களிடம் தான் அதிகம். சாமி கேட்பது, ஜாதகம் பார்ப்பது, குறி கேட்பது முதலிய காரியங்கள் நடைபெறுகின்றன. பெண்கள் வீட்டில் அடைபட்டுக் கிடப்பதால் தான் இவை எல்லாம். நம் நாடு சுதந்திரம் பெற்றது, முன்னேறியுள்ளது என்று சொன்னாலும், எத்தனைக்கெத்தனை மூட நம்பிக்கை வளர வேண்டுமோ, அந்த அளவு வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. தினம் ஒரு கோயிலும், சாமியும் தோன்றிக் கொண்டுதானிருக்கின்றன. பலர் மடையர்களாக இருந்தால் தான் சிலர் வாழ முடியும். அதனால் சிலர் பலரை முட்டாளாக்கும், மூட நம்பிக்கைக்காரர்களாக்கும் காரியங்களைச் செய்து வருகின்றனர். நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாயத்துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில் தான் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். தாய்மார்கள் தான் குழந்தைகளிடம் அதிக நேரம் பழகும் வாய்ப்புள்ளவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை மூட நம்பிக்கையற்றவர்களாக, அறிவுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

நாம் மாற்றம் பெற வேண்டுமானால் நம் நாட்டு மக்களைப் பார்க்கக் கூடாது. மேல் நாடுகளில் உள்ள மக்களைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

----------------------- 21.08.1967 அன்று தர்மபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை' 26.08.1967

Tuesday, August 11, 2015

தமிழா...தமிழா..: குறுந்தொகை-215

தமிழா...தமிழா..: குறுந்தொகை-215: தோழி கூற்று (தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி ...

தமிழா...தமிழா..: குறுந்தொகை-216

தமிழா...தமிழா..: குறுந்தொகை-216: தலைவி கூற்று (தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவர...

தமிழா...தமிழா..: குறுந்தொகை-217

தமிழா...தமிழா..: குறுந்தொகை-217: தோழி கூற்று (‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’ என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிவெய்துயிர்த்தான்; அது ந...

தமிழா...தமிழா..: குறுந்தொகை-218

தமிழா...தமிழா..: குறுந்தொகை-218: தலைவி கூற்று (பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையி...

தமிழா...தமிழா..: குறுந்தொகை-219

தமிழா...தமிழா..: குறுந்தொகை-219: தலைவி கூற்று (தலைவன் சிறைப்புறத்தில் இருப்பத் தலைவி தோழிக்குக் கூறுவாளாய்த் தன் துயரின் மிகுதி கூறி, “தலைவர் நம் துயர் நீக்க இதுசெவ்வ...

தமிழா...தமிழா..: குறுந்தொகை-220

தமிழா...தமிழா..: குறுந்தொகை-220: தலைவி கூற்று (தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று ...

தமிழா...தமிழா..: குறுந்தொகை-221

தமிழா...தமிழா..: குறுந்தொகை-221: தலைவி கூற்று (தலைவன் கூறிச்சென்ற பருவம் வந்தது கண்டு கவன்ற தலைவியை, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்திய தோழியை நோக்கி, “முல்லை...

99.மூலிகை வகைகள் விளக்கங்கள்(patharthaguna vilakkam): கிரந்தி நாயகம்.(மூலிகை எண்:196.)

99.மூலிகை வகைகள் விளக்கங்கள்(patharthaguna vilakkam): கிரந்தி நாயகம்.(மூலிகை எண்:196.):   கிரந்தி நாயகத்தால் சீதளம். சர்ப்ப விஷம்  கண்நோய்  பைசாசம் சங்கை தோஷம்  விரணம்  சிரங்கு முதலியவை நீங்கும்.

99.மூலிகை வகைகள் விளக்கங்கள்(patharthaguna vilakkam): கீரைத்தண்டு.(மூலிகை எண்:199.)

99.மூலிகை வகைகள் விளக்கங்கள்(patharthaguna vilakkam): கீரைத்தண்டு.(மூலிகை எண்:199.): கீரைத்தண்டால் பித்தக் கிரிச்சரம். பிரமேகச் சூடு  வயிற்று கடுப்பு  இரத்த பேதி  முதலிய நோய்கள் போகும். வெண்கீரைத்தண்டு, செங்கீரை...

99.மூலிகை வகைகள் விளக்கங்கள்(patharthaguna vilakkam): கீழ்வாய்நெல்லி.(மூலிகை எண்:200)

99.மூலிகை வகைகள் விளக்கங்கள்(patharthaguna vilakkam): கீழ்வாய்நெல்லி.(மூலிகை எண்:200): கீழ்வாய்நெல்லிக்கு ஆமக்கட்டு, அக்கினி  கீடவிஷம். நேத்திர ரோகம், பூத முதலிய சங்கைதோஷம்,,  ரத்தாதிசாரம் . மதுப்பிரமேகமூத்திரம். ...

Eye Greetings Scraps Comments Codes - MasterGreetings.com

Eye Greetings Scraps Comments Codes - MasterGreetings.com

சுபவீ வலைப்பூ: வரலாற்றுப் புகழ் மிக்க இரு நேர்காணல்கள்

சுபவீ வலைப்பூ: வரலாற்றுப் புகழ் மிக்க இரு நேர்காணல்கள்: 20.06.2015 ஆம் நாளிட்ட தமிழ் இந்து நாளேட்டில் , அகில இந்திய ( ?) மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் அவர்களின் நேர்காண...

சுபவீ வலைப்பூ: மதுவிலக்கும் மகாத்மாக்களும்!

சுபவீ வலைப்பூ: மதுவிலக்கும் மகாத்மாக்களும்!

சுபவீ வலைப்பூ: இதோ நம் திராவிடக் கவிஞன்

சுபவீ வலைப்பூ: இதோ நம் திராவிடக் கவிஞன்: 29-04-2015 அன்று விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பாரதிதாசனின் 125 வது பிறந்தநாள் விழா நிகழ்வில் சுபவீ ஆ...

நான் கிறுக்கியவை: இன்று உலகை ஆளுது...

நான் கிறுக்கியவை: இன்று உலகை ஆளுது...: நோயும் நொடியும் இல்லமா வாழனுன்னு ஆசைதான்.. கொசுக்களும், கெமிக்கலும் கெட்ட சுற்றுசூழலும் பிணிய(நோய்) வாவான்னு கூப்பிடுது... உடலுல...

Fish

Fish

ARUN: விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை 2

ARUN: விக்கிரமாதித்தன் தலையை பட்டி இரவல் வாங்கின கதை 2

Monday, August 10, 2015

akkni news: மரண அறிவித்தல் கதிரமலை என்று அழைக்கப்படும் திரு வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணன் நெடுந்தீவு

akkni news: மரண அறிவித்தல் கதிரமலை என்று அழைக்கப்படும் திரு வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணன் நெடுந்தீவு

சட்டம் நம் கையில்: சூரிய ஒளி மின்சாரம் - புத்தக வடிவம். பகுதி 4

சட்டம் நம் கையில்: சூரிய ஒளி மின்சாரம் - புத்தக வடிவம். பகுதி 4

மேடைப் பேச்சு குறித்துப் பெரியார்





- தந்தை பெரியார்


சுற்றுப்பயணத்தின் போது சேலம் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் மேடைச் சொற்பொழிவுக் கழகத் துவக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய தந்தை பெரியார், மேடைப் பேச்சுக்கு வகுத்துக் கொடுத்த இலக்கணம் இதில் பேச்சு எப்படி இருக்க வேண்டும். பேச்சாளனுக்கு இருக்க வேண்டிய பண் புகள் குறித்து ஒரு சுவையான விளக்கம் அளித்தார். சுவை மிக்க தந்தை  பெரியாரின் சொற்பொழிவு இலக்கணப் பேச்சு இது:

இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.
பேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந் தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்தனையற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.
பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாக வும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளை ஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்பட வும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாத தாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத்தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.
சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத் திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப் பட்டவர்களை தேர்தல் சமயத்தில் பார்க்க லாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர்களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப் பட்ட காரியத்துக்குப் பயன்படுத்த மாட்டான்.
பொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்து களை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி - உண்மையைக் கூறி - குறைப்பாடுகளைக் கூறி - உண்மை தேவைகளைக் கூறி மக்களைத் தன்வயப் படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.
சிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக் களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங் களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள். தாம் பேச வேண்டும், மக்கள் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள் வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.
எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச் சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட் டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதியாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.
அடுக்கு அடுக்காகப் பேச வேண்டு மென்றும், அலங்காரமாய்ப் பேச வேண்டு மென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்கு கின்றனர்.
இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.
சிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப்பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டினால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
பேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சாளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் பேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும். உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப் பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.

தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.
தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவேஇதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராகவில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.
ஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப்பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.
சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்படுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத்தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள்கைக்கோ அல்லது அக்கொள் கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அதுவரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விடமாட்டார்கள்.
அவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க்கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம். பத்திரிகை ஆபீசில் புரூப் ரீடர் வேலைக் கமர்ந்து ஒருவன் வேலை அங்கு நடந்து வரும் விதத்தையும் பத்திரிகைச் சொந்தக்காரர் பெற்று வரும் லாபத்தையும் பார்த்து தானும் ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து வெளியேறி ஒரு பேப்பரையும் துவக்கி கையில் உள்ள காசையும் எப்படி தொலைப்பானோ. அதுபோல் பைத்தியக்காரத்தனமான செய்கை தான் பேச்சாளிகள் சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் பேச்சு சாமர்த்தியத்தை நம்பி புதுக் கழகம் அமைப்பதும் ஆகும்.
மேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவுடனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத்தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச் சாளியாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை - சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங்கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாள னும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத் துச் சொல்ல வேண்டும். எதிர்ப்பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அதுவாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டி லிருந்து கொண்டே எழுதிக் கொண்டிருப்ப வன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடிய வன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.
ஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வருபவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளையாட்டிற்காகவும், தனக்குக் கெட்டிக் காரப் பட்டம் வரவேண்டும் என்பதற்காகவும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.
அப்படிப் பயன்படுத்தினால் அவரு டைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத் தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதை யும் வெகுவாகக் குறைந்துவிடும்.
பேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்காரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாடகம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச் சாளிக்கு இருக்கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடை யாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.

அப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டியவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண்டும் என்பதற் காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக் காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தரவேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.
விளம்பரத்துக்கு ஆகப் பேசும் குணத்தை விட்டுவிட வேண்டும். ஈரோட்டில் ஒரு காங்கிரஸ் ஜில்லா மாநாடு நடந்தது. அதில் ஒரு விஷயம் பற்றி ஒரு தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு 5, 6 பேர்கள் பேசி விட்டார்கள். ஓட்டுக்கு விடும் சமயத்தில் ஒரு வக்கீல் எழுந்து தான் சிறிது பேச வேண்டும் என்றார். தலைவர் தடுத்து நேரமாகி விட்டது. முடிக்க வேண்டும் என்றார். பேச எழுந்தவர் ஒரே ஒரு பாயிண்டு அதை சொல்லி விடுகிறேன் என்றார். தலைவர் அவரை நோக்கி, நீங்கள் பேசுவது தீர்மானத்துக்கு சாதகமாகவா? எதிர்த்தா? என்று கேட்டார். அதற்கு பேசுபவர் ஆதரித்துப் பேசப் போகிறேன் என்றார். அதற்கு தலைவர் ஆதரித்து 4 பேர் பேசி விட்டார்கள். ஆதலால் இனி ஆதரித் துப் பேச வேண்டியதில்லை. உட்காருங்கள் என்றார். அதைக் கேட்டவுடன் பேச எழுந்தவர் அப்படியானால் நான் எதிர்த்து இரண்டு வார்த்தை சொல்லுகிறேன் என் றார். உடனே தலைவர் சிரித்துக் கொண்டே தயவுசெய்து உட்காருங்கள் என்று சொல்லி, கையையும் அமரும்படி அவர் உட்காரும்வரை ஜாடை காட்டிக் கொண்டே இருந்தார்; பேச எழுந்தவர் சிறிதுகூட வெட்கப்படாமல் வெகு சங்கடத்துடன் மெதுவாய் உட்கார்ந்தார்.
தலைமை வகித்த தலைவர் டாக்டர் நாயர், பேச எழுந்தவர் ஒரு பி.ஏ.,பி.எல்., வக்கீல் அய்யர்.
சிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறிமுகத்தால் உடனே பத்திரிகை ஆரம்பித்துக்கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவு மாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்காவிட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.
ஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழ குங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார். -
                   ----------------------------------- தந்தை பெரியார் - "விடுதலை", 6.11.1949

ThirukKuRaL