தென்றல் (Thendral)

Sunday, December 22, 2013

vel aroharaa: "ஈழத்தாயும்" ஈனப்பிறவிகளும்! விடுதலைப்புலிகள் அ...

vel aroharaa: "ஈழத்தாயும்" ஈனப்பிறவிகளும்!

விடுதலைப்புலிகள் அ...
: "ஈழத்தாயும்" ஈனப்பிறவிகளும்! விடுதலைப்புலிகள் அமைப்பும், அவர்களின் ஆதரவாளர்களும் பல விஷயங்களில் ஒரே நேர்கோட்டில் சிந்திப்பார...

Monday, November 4, 2013

வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன்-டான் அசோக்

விஷயம்: தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார்.

அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்:

1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால் font!

2) ஆங்கில எழுத்துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன் வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம்.

என் எதிர்வினை:

1) இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்டும்!!! ஒரே ப்ரஸ்சில் வேலையை முடிக்கலாமே” என எண்ணியிருக்குமோ என்னவோ! ஜெயமோகனின் இந்த ஏழறிவு கட்டுரையை அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு பிரசுரித்திருக்கலாம்! ஒரே ஒரு வாரம் மட்டும் இந்து-தமிழை ஆங்கில எழுத்துருவில் (லத்தீன் வரிவடத்தில்) அச்சடித்து இந்து வெளியிட்டுப் பார்க்கட்டும்! பிறகு ஜெயமோகனை வாசல் பக்கமே சேர்க்க மாட்டார்கள்!

2) தமிழை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் உள்ள வில்லேஜ் விஞ்ஞானி அந்த ஆசையை தெரிவிக்கும் கட்டுரையை தங்கிலீஸில் எழுதியிருந்தால் அவர் வருங்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்போகும் தமிழ் நாவல்களுக்கு நல்ல முன்னோட்டமாக இருந்திருக்கும்!

3) இந்தக் கட்டுரையை எவனேனும் லத்தீனை தாய்மொழியாகக் கொண்டவன் பார்த்தால் “எவன் வரி வடிவத்தை எவன் எவனுக்குடா தாரை வார்க்குறது?” என சண்டைக்கு வர வாய்ப்புள்ளது. இந்திய அறிவுச் சூழலில் இது போன்ற factual errors (லத்தீன் வரிவடிவத்தை ஆங்கில வரி வடிவம் என தவறாகச் சொல்வது) ஜெயமோகன் போன்ற ’பெரிய’ பவர் ஸ்டார் எழுத்தாளர்களுக்கு சர்வசாதரணம் தான் என்றாலும்... ஆங்கிலம் போல் அல்லாது, சொந்தமாக பல்லாயிரம் ஆண்டுகளாக அழியாத, கடன் வாங்காத வரிவடிவத்தைக் கொண்ட தமிழ் மொழியை கொலை செய்ய ஜெயமோகனின் இந்தக் கட்டுரை முயல்வதால்... தனக்கு சோறு போட்டு அன்பாக கவனித்துக் கொண்ட முதலாளியை கொல்லத் துணிந்த வெறிபிடித்த செல்லப் பிராணியாகவே ஜெயமோகனைப் பார்க்க வேண்டும்!

4) வரி வடிவத்துக்கும், எழுத்துருக்குமே வித்தியாசம் தெரியாத பல்மொழிப் பவர் ஸ்டார் எழுத்தாளர் எப்படி காந்தி, பூந்தி, இடியாப்பம் என்றெல்லாம் கட்டுரை கட்டுரையாக அடித்து விடுகிறார்?????! படிக்கிறவன் எல்லாம் கேனைப்பயல் என்ற ஒரே நம்பிக்கை தான்!

5) கட்டுரையை எழுதியவுடனேயே அதற்கு எதிர்வினைகள் எப்படி வரும் என்பதையும் முடிவு செய்து அதைப் பற்றியும் எழுதியிருக்கும் ஜெயமோகனின் ஆற்றலைப் பார்க்கும் போது எங்கள் ஊர் ஜோசியர் ஒருவர் நினைவுக்கு வருகிறார். 40வயதில் அவர் ’கொடூரமாக’ மரணமடைவார் என அவர் ஜாகத்தில் இருந்ததால் 39வயதில் தனக்கு பிடித்த வகையில் தற்கொலை செய்துகொண்டு ‘வசதி’ யாக செத்துப் போனார்! அப்படிப்பட்ட புத்திசாலிதான் ஜெயமோகன்!

முடிவு:

ஜெயமோகன் நல்ல எழுத்து நடை உள்ளவர். நல்ல புனைவுகளுக்கு சொந்தக்காரர். அதனாலேயே அவரை அறிவுஜீவி என்றும், அவர் ’சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணனைப் போல் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவார், எது உண்மை என்பது அவருக்கு தானாகவே தெரியும் என்றெல்லாம் நம்புவது அபத்தம்! வர வர அவர் திரைக்கதை எழுதும் படங்களை விட அவர் கட்டுரைகள் மொக்கையாக இருப்பதை அவர் கவனிக்க வேண்டும். புனைவுகளோடு தன் அறிவின் ‘வீச்சை’ நிறுத்திக் கொள்ள வேண்டும்! இந்த மொழி அந்த மொழி என்றில்லாமல் அனைத்து மொழிகளின் மேலும் மரியாதை கொண்ட, மொழிகளின் தனித்தன்மைகளின் மேல் அலாதி விருப்பம் கொண்ட, மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் ஜெயமோகனின் சக-பிழைப்புவாதி என்ற முறையில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.... விட்ருங்க சார்.. தமிழ் பிழைத்துப் போகட்டும்!

-டான் அசோக்

Saturday, October 12, 2013

நிஜாம் பக்கம்...: விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]

நிஜாம் பக்கம்...: விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]: விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை! கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்க...

கூர்வாள்: கற்றது கைம் மண்ணளவு

கூர்வாள்: கற்றது கைம் மண்ணளவு: "கல்லாய் மரமாய் காடுமே டாக  மாறா திருக்கயான் வனவிலங் கல்ல! மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்." ...

தமிழில்: அந்த நான்கு குணங்கள்.....

தமிழில்: அந்த நான்கு குணங்கள்.....

தமிழில்: கைக்கார மனிதன்

தமிழில்: கைக்கார மனிதன்

தமிழில்: முதல் பெண்ணியவாதி

தமிழில்: முதல் பெண்ணியவாதி

தமிழில்: வேட்டுவ மூளை!

தமிழில்: வேட்டுவ மூளை!

Saturday, September 28, 2013

தேவாசுரப்போராட்டம் அல்லது கலகத்தின் சில துளிகள்:

தேவாசுரப்போராட்டம் அல்லது கலகத்தின் சில துளிகள்:

மூடநம்பிக்கைகளும் வழிபாட்டுணர்வை எதிர்பார்க்கும் பிம்பங்களும் போலிப்பெருமிதங்களும் நிறைந்த தமிழ்த்திரைப்பரப்பில் தனித்ததொரு தீவாய் மிதந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ஒளிவட்டங்களின் சூட்டில் பொசுங்கிய பெருவெளியில் கோபம் கொண்ட ஒரு காட்டுவிலங்கைப்போல ராதா என்னும் கலைஞன் அலைபாய்ந்ததைப் புரிந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தையும் இடதுகாலால் உதைத்தெறிந்த ராதா, மதிப்பீடுகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப்பார்த்துப் பகடிசெய்தார். போர்க்குணங்களும் அரசியலுணர்வும் மரத்துப்போன காலகட்டத்தில் வாழும் நாம் அந்த கலகக்கலைஞனின் நூற்றாண்டில் அவரை நினைவுகொள்வது நமது வரலாற்றுப் பிரக்ஞையை மீட்டெடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் ஞாபகப்படுத்திக்கொள்ளவோ உதவும்.

ராதாவின் பிறப்பு ஒரு குண்டுவெடிப்போடு தொடங்கியதொன்றும் அதிசயமானதல்ல. எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னை சூளையில் முதன்முதலில் எம்டன்குண்டு வீசப்பட்ட தினத்தில் பிறந்தார். மதராஸ் ராஜகோபால் (நாயுடு)வின் மகன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். இவ்வாறாகத் தொடங்கிய ராதாவின் நாடகவாழ்க்கை சினிமா உலகில் இணைந்தும் விலகியும் ஊடாடியபடியே தொடர்ந்தது

ரிட்டயர்டு லைப் :

ராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து 'ராஜசேகரன்' என்னும் படத்தைத் தயாரித்தார். முதல்படத்திலேயே படத்தை இயக்கிய பிரகாஷ் என்பவருக்கும் ராதாவிற்கும் மோதல் ஆரம்பித்தது. இயக்குனர் என்ற தோரணையில் அவரின் திமிர்த்தனமான நடவடிக்கைகள் ராதாவிற்கு ஒத்துவரவில்லை. 1937ல் ராஜசேகரன் வெளியானது. அதன்பிறகு 1942 வரை அய்ந்தாண்டுகள் அய்ந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.

நாடகத்திலிருந்து அனைவரும் சினிமாவிற்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சினிமாவிலிருந்து நாடகத்திற்குத் திரும்பியவர் ராதா மட்டுமே. பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் 'ரத்தக்கண்ணீர்' படத்தின் மூலம் சினிமாவிற்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார்.

125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். சினிமா வாழ்க்கையைக் குறிப்பிடும்போது 'ரிட்டயர்டு லைப்' என்றே குறிப்பிட்டார். படங்களின் வெற்றிவிழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. காரணம் கேட்டால் ' வியாபாரரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே' என்றார்

1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.

ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது. சமயங்களில் அப்பாத்திரத்தில் வேறு பல நடிகர்கள் நடித்தபோது மக்கள் அதை ஏற்கவில்லை. ராதாதான் நடிக்கவேண்டுமென்று கலகம் கூட செய்திருக்கின்றனர். அந்நாடகத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படமாகத் தயாரிக்க எண்னி ஜெகதீஷ் வேடத்தில் கே.பி.காமாட்சி என்னும் நடிகரை நடிக்க ஒப்பந்தம் செய்தார். இதைக் கேள்விப்பட்டு கோபப்பட்ட ராதா 'என்.எஸ்.கே¬வைச் சுட்டேதீருவேன்' என்று துப்பாக்கியுடன் அலைந்திருக்கிறார். என்.எஸ்.கேவே ராதாவை நேரில் சந்தித்து 'உன்னை வைத்து நான் வேலை வாங்கமுடியுமா? காமாட்சி என்றால் நான் விருப்பப்படி வேலைவாங்குவேன்' என்று சமாதானம் சொல்லவும்தான் சமாதானமானாரம் ராதா.

பாகப்பிரிவினை திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது சுனில்தத் 'சிவாஜியின் பாத்திரத்தில் திலீப்குமார் நடிக்கிறார். அவரால் சிவாஜியை விடவும் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் ராதாவின் பாத்திரத்தில்தான் ராதாவை விட வேறுயாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது" என்றார். தெலுங்கில் அப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டபோதும் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர். ஆனால் பாகப்பிரிவினை படத்தை இந்திய அளவில் மூன்றாவது சிறந்த படமாக தேர்ந்தெடுத்த இந்திய அரசு விருது வழங்கும் விழாவிற்கு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது. ராதா மட்டும் அழைக்கப்படவில்லை. அதை அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்.கே.டி.கே.தங்கமணி கண்டித்திருக்கிறார்.

சினிமாவில் நடித்தபோதும் 'சினிமா பார்க்காதீர்கள்' என்றே பிரச்சாரம் செய்தவர் ராதா. ஆனால் சாகும்வரை நாடகங்கள் நடத்திவந்தார். எதிர்ப்பையும் வரவேற்பையும் நேரடியாக அனுபவிக்கும் ஊடகம் என்பதாலோ என்னவோ நாடகம் அவருக்குப் பிடித்துப்போனது. 125 படங்கள் நடித்த ராதா எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு நடிக்க ஒத்துக்கொண்ட படங்கள் ஆறு. அவற்றில் இரண்டு படங்களின் பெயரைக் கேட்டால் நம் புருவங்கள் உயரும். அவை 'சுட்டான் சுட்டாள் சுட்டேன்', 'நான்தான் சுட்டேன்'.

தூக்குமேடையில் தனித்திருந்த போர்வாள்

நாடகத்தின் காதலரான ராதா சிறுவயதில் நாடகக்கம்பெனியில் பார்ப்பன ஆதிக்கத்தையும் வைதீக மூடத்தனங்களையும் சந்தித்திருக்கிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எதிர்த்துக் கலகமும் செய்திருக்கிறார். நாடகக்கம்பெனிகளில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவும் காபியும் தயாரிக்கப்பட்டபோது முடிந்தபோதெல்லாம் அதை எச்சில் படுத்தியிருக்கிறார்.

ஜெகந்நாதய்யர் என்னும் பார்ப்பனரின் நாடகக்குழுவில் நடித்துவந்த ராதா அவரைப் பெரிதும் மதித்திருக்கிறார். அவர் பெரும்பாலும் இந்த சாதிபேதத்திற்கு அப்பாற்பட்டே வாழ்ந்துவந்திருக்கிறார். 'சங்கரதாஸ் சுவாமிகள் நல்ல நாடகக்கலைஞர். ஆனால் அவர் வேறு கலைஞர்களை உருவாக்கியதில்லை. எனவே அவரை நாடக உலகின் தந்தை என்று அழைப்பது தவறு. ஜெகந்நாதய்யரைத்தான் அப்படி அழைக்கவேண்டும்' என்பது ராதாவின் கருத்து.

ஒருமுறை 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் ராதா சிறப்பாக நடித்திருந்தும் நாடகத்திற்குத் தலைமைதாங்கிய சத்தியமூர்த்தி(அய்யர்) அவரைப் புறக்கணித்துவிட்டு அதே நாடகத்தில் நடித்த டி.ஆர்.மகாலிங்கத்தை மட்டும் புகழ்ந்திருக்கிறார். அப்போதே இந்தப் பார்ப்பனப் புறக்கணிப்பு கண்டு மனம் வெதும்பியிருக்கிறார் ராதா.

பெரியாரின் இயக்கத்திற்கு வருமுன்பே இடதுசாரிச் சிந்தனையாளராகவே வாழ்ந்திருக்கிறார். பகத்சிங்கின் பார்வர்டு கட்சியின் அனுதாபியாக இருந்த அவர் முதன்முதல் நாடகசபாவை ஆரம்பித்து நாடகத்தை நடத்தும்போது நாடகத்திரைச்சீலைகளில் 'உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்னும் வாசகம் இடம்பெற்றிருந்தது. பிறகு பெரியாரின் இயக்கத்தில் இணைந்தபிறகு 'திராவிடப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்று அந்த வாசகம் மாறியது.

முதன்முதலில் ராதாவிற்குப் பெரியார் யாரென்றே தெரியாது. நாடகக்கலைஞர்கள் பலரும் பச்சை அட்டை போட்ட குடியரசு புத்தகத்தை ரகசியமாகப் படிப்பதைப் பார்த்து நாடகக்கலைஞரான எதார்த்தம்பொன்னுச்சாமி(பிள்ளை)யிடம் 'பெரியார் என்பவர் யார்?' என்று விசாரித்திருக்கிறார். ராவணன் போல அவரும் ஒரு அரக்கன் என்று கூறிய பொன்னுச்சாமி அவரைப் பெரியாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன்பிறகு ராதாவின் 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நாடகத்திற்கு பெரியாரும் அண்ணாவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக்கொண்டு நாடகம் பார்த்தார்களாம். நாடகம் முடிந்ததும் இருவரும் மேடை ஏறினர். அண்ணா "நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் ராதா ஒரு நாடகம் நடத்துவதும் சமம்" என்று புகழ்ந்தார். அன்றிலிருந்து பெரியார் பற்றாளராக மாறிய ராதா சாகும்வரை பெரியாரின் மீது காதல் கொண்ட கிறுக்கனாய் வாழ்ந்தார். பெரியாரின் போர்ப்படைத்தளபதியாய் வாழ்ந்த சுயமரியாதை வீரன் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவிற்கு 'நடிகவேள்' பட்டம் அளித்தவர். இன்று உலகமெங்கும் புகழ்பெற்று பெயர்போலவே மாறிவிட்ட 'கலைஞர்' என்னும் பட்டத்தைக் மு.கருணாநிதிக்கு வழங்கியவர் ராதாதான்.

ராதாவின் நாடகங்கள் இறுகி நிலைபெற்றுவிட்ட பிரதிகள் இல்லை. அவை ஒரே கதையைக் கொண்டிருக்கலாம். ஆனால் திரைக்கதையும் வசனமும் நாடகம் நடத்தப்படும் இடங்கள், அரசியல் சூழல்கள், எதிர்ப்பின் வலு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். படப்பிடிப்பின்போது கூட சமயங்களில் ராதா ஸ்கிரிப்டில் இல்லாத வசனங்களைப் பேசி அயல்பாத்திரங்களைத் திக்குமுக்காடச் செய்வார். ஆனால் ராதாவைத் திணறடிக்கும் நுட்பம் மட்டும் எந்தக் கலைஞனுக்கும் வாய்க்கப்பெறவில்லை. ஒருவகையில் ராதாவின் பிரதிகள் மாறிக்கொண்டேயிருந்ததால் அது 'நிலைத்ததன்மை' என்னும் இயங்காதன்மையை மறுத்ததெனினும் இன்னொருவகையில் ராதாவின் நாடகங்கள் எழுத்துப்பிரதிகளாக உருமாறி ஆவணப்படாமல் போனதற்கும் இத்தன்மையே தடையாய் இருந்ததையும் உணரலாம்.

தேவாசுரப்போராட்டம் அல்லது கலகத்தின் சில துளிகள்:

ராதா தன் நாடகங்களில் செய்த கலகங்களும் அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அதனை அவர் எதிர்கொண்ட முறைகளும் சொல்லிமாளாதவை. இந்திய வரலாற்றிலேயே இத்தகைய துணிச்சல்மிக்க ஒரு நாடகக் கலைஞனைக் காண்பது அரிது. சினிமாவின் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நாடகம் நடத்துவதற்கும் இயக்கப் பணிகளுக்கும் செலவிட்டார்.

ராதா வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் 'ராமாயணம்' நாடகத்தை நடத்தினார். நாடகத்தின் முதல் காட்சியிலேயே ஒரு புத்தக அலமாரி காட்டப்படும். அதில் ராமாயண ஆராய்ச்சி நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலனவை பார்ப்பன வரலாற்றாய்வாளர்கள் எழுதியவைதான். அதன்படி ராமனைக் குடிகாரனாகவும் புலால் உண்ணுபவனாகவும் சித்தரித்து நாடகம் நடத்தப்படும்.

தொடர்ந்து பார்ப்பனர்களும் வைதீகர்களும் காங்கிரசுக்காரர்களும் கலாட்டா செய்வர். அரசு தடை விதிக்கும். போலீசு கைதுசெய்யும். எத்தனைமுறை தடைவிதிக்கப்பட்டாலும் கைதாகி நாடகங்களை தொடர்ந்து நடத்துவார் அல்லது அதேநாடகங்களை வேறுபெயரில் நடத்துவார்.

பெரியாருக்காகவே அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டதும் முதன்முதலில் தேசியச்சின்னங்கள் அவமதிப்புத்தடைச் சட்டம் அவருக்காகவே கொண்டுவரப்பட்டதும் வரலாற்றின் பக்கங்களில் எஞ்சிப்போன உண்மைகள். கிளர்ச்சியையும் அதிகார எதிர்ப்பையும் தாங்கவியலாத ஆளும்வர்க்கங்கள் புதிதுபுதிதாய்ச் சட்டங்களை உருவாக்குவதும் இருக்கும் சட்டங்களை இல்லாதழித்தொழிப்பதும் புதிதல்லவே. அதேபோலத்தான் ராதாவை ஒடுக்குவதற்காகவே தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தைத் தயாரித்தது. முதன்முதலாக நாடகத்தடை சட்டம் கொண்டுவரப்பட்டது ராதாவிற்காகத்தான். 1954ல் நாடகங்களின் திரைக்கதையை அரசின் அனுமதிபெற்றே நாடகம் நடத்தப்படவேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கெதிராக சட்டமன்ற வளாகத்திலேயே போய் வாதாடினார் ராதா. ராமாயண நாடக நோட்டீசில் 'உள்ளேவராதே' என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன்கீழ் 'இந்துக்கள் தங்கள் மனம் புண்படுகிறது என்று கருதினால் நாடகத்திற்கு வரவேண்டாம். அப்படி மீறிவந்து மனம் புண்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல' என்னும் வாசகமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

ராமாயண நாடகம் மட்டுமல்ல ராதாவின் பெரும்பாலான நாடகங்கள் தடை செய்யப்படவே செய்தன. கூட்டங்களில் புகுந்து கலகம் செய்யப்படவே செய்தன.ஆனால் இதையெல்லாம் மீறி ராதாவின் நாடகங்கள் பலமுறை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. (ரத்தக்கண்ணீர் நாடகம் மட்டும் 3021 நாட்கள் நடத்தப்பட்டிருக்கிறது.)

ஒருமுறை ராதா நாடகம் நடத்தும்போது அவருக்குத் தீராத வயிற்றுப்போக்கு. அவரால் நடிக்க முடியாத நிலை. எனவே தனக்குப் பதிலாகத் தன்மகன் வாசு நடிப்பார் என்று அறிவித்த ராதா, "விருப்பமிருப்பவர்கள் நாடகம் பார்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் கவுண்டரில் சென்று டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்" என்று அறிவித்தார்.
இன்னொருமுறை நாடகத்தினிடையில் பெரியார் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதாக அறிவிக்கப்பட்டபோது முன்வரிசையிலிருந்த சில பார்ப்பனர்களும் காங்கிரசுக்காரர்களும் எழுந்து 'ராதா, உன் நாடகம் பார்க்கத்தான் காசுகொடுத்து வந்தோம். அந்தாள் (பெரியார்) பேச்சைக் கேட்க இல்லை" என்று கலாட்டா செய்தனர். உடனே ஒலிபெருக்கி முன் வந்த ராதா, "நாடகம் பார்க்கத்தானே வந்தாய். நான் சொல்றேன். நாடகம் முடிஞ்சுபோச்சு. இனிமே நாடகம் இல்லை. இனிமேல் பெரியார் மட்டும்தான் பேசுவார்" என்று அறிவித்தார்.

அதேபோல பொதுவாகவே எல்லா நிகழ்ச்சிகளிலுமே வி.அய்.பி. இருக்கை என்று தனியாக இருப்பது இன்றுவரை வழக்கத்திலுள்ள நடைமுறையே. இந்த வி.அய்.பிக்கள் எப்போதுமே இலவச அழைப்பாளர்கள்தான். ஒருமுறை காசுகொடுத்து தரை டிக்கெட் வாங்கிய கூட்டம் அலைமோதியது. இன்னொருபக்கம் வி.அய்.பிக்கள் வரிசையும் நிரம்பிவழிந்தது. அப்போது மேடையில் தோன்றிய ராதா, "காசுகொடுத்தவன்லாம் தரையிலே உக்காரமுடியாம தவிக்கிறான். ஆனால் ஓசியிலே வந்தவன்லாம் சேர்லே உட்கார்ந்திருக்கான்" என்று அவரது பாணியிலேயே முகத்திற்கு நேராக விமர்சித்திருக்கிறார். இத்தகைய தைரியமும் துணிச்சலும் ராதாவைத் தவிர வேறு எவனுக்கு வரும்?

பொதுவாக ராதாவைக் கைதுசெய்ய வரும் போலீஸ் அதிகாரிகள் நாடகம் முடிந்தபிறகே கைது செய்வது வழக்கம். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி நாடகம் தொடங்குவதற்கு முன்பே கைது செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்திருக்கிறார். நாடகக்குழுவினர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ராதாவிடம் போய்ச் சொல்லியிருக்கிறார்கள். ராதா நாடகத்தைத் தொடங்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். நாடகத்தின் முதல்காட்சியில் ராதா பேசிய முதல் வசனம், "யாருடா அங்கே நாயை அவிழ்த்துவிட்டது,? அதுபாட்டுக்குக் குலைச்சுக்கிட்டிருக்கு". அந்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் ஈ ஆடவில்லை.

ஒருமுறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்.ஏ.பி.அய்யர் தலைமை தாங்கியிருந்தார். அப்போது ஒரு பாத்திரம் ராதாவிடம் பேசுவதுபோல ஒரு வசனம். "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?". அதற்கு ராதா சொன்ன பதில், "பார்ப்பான் பார்ப்பான்". ராதா யாருடைய முகத்திற்காகவும் தயங்குபவரோ அஞ்சுபவரோ அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.

மேலும் அவர் வெறுமனே வசனவீரர் மட்டுமில்லை, செயல்வீரரும் கூட. நாடகத்திலும் மேடைகளிலும் கலகம் செய்பவர்களைக் களத்திலே இறங்கிச் சந்திப்பவர். சிலம்புச்சண்டை, துப்பாக்கிசுடுதல், குதிரையேற்றம் போன்ற பலகலைகளைத் தெரிந்துவைத்திருந்தார். எலெக்ட்ரிக்கல் வேலைகள் பார்ப்பதிலும் நிபுணர். ஆரம்பகாலகட்டங்களில் நாடகங்களில் தந்திரக்காட்சிகள் அமைப்பதற்கும் ராதாவின் உதவியே தேவைப்பட்டது. (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு திருப்பதிக்கு ஏழுமலையானைத் தரிசிக்க சென்றிருக்கிறார் ராதா. மாலைவரை காத்திருந்தும் தரிசனம் பார்ப்பதற்குத் தாமதமாகவே ஆத்திரங்கொண்ட ராதா திருப்பதிமலையைத் தகர்ப்பதற்குத் டைனமைட் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்.)

ராதாவின் மேடையில் எப்போதும் கலைஞர்களும் எதிர் வன்முறைக்குத் தயாராக இருப்பார்கள், ஆயுதங்களும் தயாராக இருக்கும். யாரேனும் எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் நாடகக்குழுவினரும் பதில் தாக்குதலைத் தொடுப்பார்கள். ஒருமுறை நாடகக்குழுவினர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து பார்ப்பனக்கூலிகள் தாக்குதலைத் தொடுக்க அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமிருந்த நாடகக்குழுவினரின் தாக்குதல் தாங்கமுடியாது ஓடிவிட்டனர். மறுநாள் எப்படியும் இன்னும் அதிக ஆட்களை அழைத்துவருவார்கள் என்று எதிர்பார்த்த ராதா கதவின் கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சியிருந்தார். தாக்கவந்தவர்கள் மின்சார அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள்.

விலையுயர்ந்த இம்பாலா காரைப் பலரும் பொத்திப்பொத்திப் பாதுகாத்து வந்த சூழலில் தினமும் படப்பிடிப்பிற்கு வைக்கோல் ஏற்றிவந்து பார்ப்பவர்களை ராதா அதிரச்செய்த சம்பவம் பலரும் அறிந்தவொன்று. ஒருமுறை அப்போதைய குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனை வரவேற்பதற்காக சில அதிகாரிகள் ராதாவிடம் இம்பாலா காரைக் கேட்டிருக்கின்றனர். 'நான் அந்த ராதாகிருஷ்ணனுக்காக (ஜனாதிபதி) கார் வாங்கலை, இந்த ராதாகிருஷ்ணனுக்காகத்தான் கார் வாங்கியிருக்கிறேன்' என்று மறுத்திருக்கிறார்.

இப்படிக் கலகபூர்வமாக வாழ்ந்த ராதாவின் இன்னொருபக்கம் நெகிழ்ச்சியால் நிரம்பியது. பேரன்பும் பெருங்கருணையும் விரிந்து பரந்த நேசமும் ததும்பிவழியும் மனம்தானே தார்மீக ஆவேசமும் அறவுணர்வும் நிரம்பப்பெற்றதாயிருக்கும். அப்படியான கலைஞன்தான் ராதா. வறுமையில் வாடிய எத்தனையோ இயக்கத்தோழர்கள் மற்றும் நாடகக்கலைஞர்களுக்கு விளம்பரங்களை எதிர்பாராது உதவிய ராதா, அவர்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இலவசமாக நாடகங்களும் நடத்திக்கொடுத்திருக்கிறார்.

புகழ்பெற்ற நாதசுவரக்கலைஞர் ராஜரத்தினம்(பிள்ளை) தனது இறுதிக்காலத்தில் வறுமையில் வாடினார். அவரது குடும்பநலத்திற்காக பல்வேறு நடிகர்களிடமும் நிதிதிரட்டினார் ராதா. ஆனால் பெரிய நடிகர்கள் வழக்கம்போல கைவிரித்துவிட சிறிய கலைஞர்கள் மட்டுமே தங்களால் இயன்ற நிதியை அளித்திருக்கிறார்கள். சொற்பத்தொகையே சேர மனம் நொந்துபோனார். அந்த சிறிய தொகையையும் தன்மானத்தின் காரணமாக வாங்கமறுத்துவிட்டார் ராஜரத்தினம். கடைசியில் வறுமையிலேயே அந்தக் கலைஞன் மாண்டுபோக தனது சொந்த செலவிலேயே அவரை அடக்கம் செய்த ராதா அவரது நினைவகத்தில் 48 அடி உயரத்தில் நாதசுவர நினைவுச்சின்னம் அமைத்தார்.

கலை - அரசியல் வெளிகளில் பாவிப்பரந்த கருப்புநிழல் (அல்லது) சிறைச்சாலையை விளையாட்டுமைதானமாக்கிக்கொண்ட கதை

பெரியாரின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ராதா இறுதிவரை பெரியாரைப் பின்பற்றுபவராகவே வாழ்ந்தார். பெரியாரிடம் கருத்துமாறுபாடு கொண்டு பலர் அவரை விட்டுப் பிரிந்தபோதும் இறுதிவரை அவரது தலைமையை ஏற்றுக்கொண்டவராகவே வாழ்ந்தார்.

அண்ணா பெரியாரிடம் கருத்துமாறுபாடு கொண்டு அவரை விட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று நூலை எழுதி அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறார். அதேபோல் குத்தூசிகுருசாமி திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்தபோதும் பெரியாருக்கு ஆதரவாக நின்றார்.

கம்யூனிசத் தத்துவத்தில் ஈர்ப்பு கொண்ட ராதா கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆதரித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது ஜீவாவிற்கு அடைக்கலம் தந்தார். அவரை மொட்டையடிக்க வைத்து பட்டை அணிவித்து சாமியார் என்று போலீஸை ஏமாற்றியிருக்கிறார். அப்போது ஜீவா தரும் கடிதங்களை ஒரு இடத்தில் ரகசியமாகக் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார். அந்தக் கடிதங்கள் புரட்சிகரத் தகவல் அடங்கிய ரகசியக் கடிதங்களென்றே ராதா கருதிவந்தார். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்திருக்கிறது, அவை ஜீவா தன் காதலி பத்மாவதிக்கு எழுதிய கடிதங்கள் என்று.

காமராசரின் மீதும் கலைஞர் கருணாநிதியின் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனால் பெருமளவு அண்னாதுரையை ராதாவிற்குப் பிடிக்காது என்றே தெரிகிறது. அண்ணாவின் சாத்வீகக் குணங்கள் ராதாவின் கலக மனோநிலைக்கு ஒத்துப்போகாமல் இருந்திருக்கலாம்.

திராவிடர்கழகத்தில் அண்ணாவைத் தளபதி என்றே அழைப்பது வழக்கம். ஒருமுறை நாடக ஒத்திகையில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று பதட்டத்துடன் வந்து சேதிசொல்லியிருக்கிறார்கள். ராதா நக்கலாகக் கேட்டாராம், 'தளபதி குதிரையை எங்கே நிறுத்தியிருக்கிறார்?' என்று.

இதேபோல் இன்னொரு சம்பவம். தூக்குமேடை நாடகத்தில் உடன் நடித்த கருணாநிதியிடம், 'தளபதி தளபதி என்கிறீர்களே, எத்தனை போர்க்களங்களைச் சந்தித்திருப்பார் உங்கள் தளபதி?' என்று கேட்டிருக்கிறார். அது நாடகத்திலேயே இல்லாத வசனம். ஒருகணம் தடுமாறினாலும் 'போருக்குப் போகாவிட்டாலும் உறையிலிருக்கும் வாளுக்கும் வாள் என்றுதான் பெயர்' என்று வசனம் பேசிச் சமாளித்திருக்கிறார் ராதாவால் கலைஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட கருணாநிதி.

பெரியார் முன்னின்று நடத்திய பலபோராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார் ராதா. பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், வடநாட்டு ஆதிக்க எதிர்ப்புக் கிளர்ச்சி, பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களில் தான் கலந்துகொண்டது மட்டுமில்லாது தனது நாடகக்குழுவினரையும் ஈடுபடுத்தினார். சாதி ஒழிப்பிற்காக அரசியல் சட்டத்தை எரித்து சிறைபுகுந்த தோழர்கள் பலருக்கும் பலவகையில் உதவினார். இயக்கத்திற்கும் இயக்கத்தோழர்களுக்கும் நிதிதிரட்டுவதற்காகப் பலமுறை இலவசமாக நாடகம் நடத்தினார். நெருக்கடிநிலைகாலகட்டத்தின்போது மிசாவில் கைதான ஒரே நடிகர் ராதா மட்டுமே. அவரது இரண்டு சிறைச்சாலைச் சம்பவங்கள் சுவாரசியமானவை.

எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கில் ராதாவிற்கு ஏழரையாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. ஆனால் நாலரை ஆண்டுகளிலேயே அவரை விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்துவிட்டது. இது தெரியாத ராதா, அன்று காலையில் வழக்கம்போல குளிப்பதற்காக துண்டு, வாளி சகிதம் கிளம்பியிருக்கிறார். சிறை அதிகாரி வந்து , "உங்களை விடுதலை செய்தாச்சு, கிளம்பலாம்' என்றிருக்கிறார். ஆனால் ராதாவோ, கொஞ்சமும் பதட்டப்படாமல் 'குளித்துவிட்டுத்தான் கிளம்புவேன்' என்று பதிலளித்திருக்கிறார்.

மிசாகாலத்தின்போது யாரை எதற்குக் கைது செய்கிறோம் என்று தெரிவிக்கவேண்டிய அவசியமில்லாத சூழல் நிலவியது. அப்படித்தான் ராதாவையும் கைதுசெய்திருந்தார்கள். சிறையிலே நேர்காணலுக்கு உறவினர்கள் வரும்போது பின்னாலிருந்து அதிகாரிகள் குறிப்பெடுப்பது வழக்கம். ராதாவின் மனைவி அவரைக் காணவந்திருக்கிறார். 'என்ன மாமா, நிறையபேர் விடுதலையாகி வெளியே வர்றாங்க. நீங்களும் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியே வரலாமே' என்றிருக்கிறார்.

உடனே ராதா, 'என்ன எழுதிக்கொடுப்பது?' என்று கேட்டிருக்கிறார்.

'இனிமேல் அந்தத் தப்பைச் செய்யமாட்டேன் என்று எழுதிக்கொடுக்க வேண்டியதுதானே' என்று மனைவியும் பதிலளிக்க.

உடனே ராதா, 'இதோ பாரம்மா. என்னையேன் கைது செய்திருக்காங்கன்னு எனக்கும் தெரியாது. இங்க இருக்கிறவங்களுக்கும் தெரியாது. கைதுசெய்தவங்களுக்கும் தெரியாது. அதுதான் மிசா. நான்பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருந்தேன். பிடிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நான் செய்த ஒரே தப்பு அதுதான். அப்ப நான் இனிமே வாழ்நாள் முழுதும் தூங்காமலே இருக்கணுமா?' என்றிருக்கிறார். குறிப்பெடுத்துக்கொண்டிருந்த அதிகாரியும் சிரித்துவிட்டாராம்.

வாக்குமூலம்

ராதாவின் உணர்வுகளையும் இயல்பையும் வாழ்முறையையும் புரிந்துகொள்ள வேறெதையும் விட அவரது வார்த்தைகளே துணைசெய்யும் என்பதால் அவரது நேர்காணலிலிருந்து சிலபகுதிகள்...

ஒருமுறை ராதாவிடம் பேட்டி எடுக்கவந்த பத்திரிகையாளர் மாடியிலிருந்து இறங்கிய அவரின் மனைவியைப் புகைப்படமெடுக்க முயன்றிருக்கிறார். உடனே ராதா, 'நான்தான் சினிமாக்காரன், பப்ளிக் புராபர்ட்டி. என் பொண்டாட்டியை ஏன் படமெடுக்கிறே' என்று மறுத்துவிட்டாராம்.

இனி அவரது சில நேர்காணல்களிலிருந்து...

கேள்வி : இப்போது நடிகர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் வழக்கம் அதிகமாகிவிட்டதே. இதுபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?

ராதா : பொன்னாடை போர்த்தவேண்டியது பிணத்திற்குத்தான்.

கே : நீங்கள் எதில் அதிகம் இன்பம் காண்கிறீர்கள்?

ராதா : எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை எதிர்த்து ஒரு தோற்றத்தைத் தருவதுதான் என்னுடைய பழக்கம்.

கே : உங்களுக்குப் பாடத்தெரியுமா?

ராதா : நன்றாகத் தெரியும். தியாகராஜர் கீர்த்தனைகளைகளில் 200 பாடல்களுக்கு மெட்டுடன் பாடத்தெரியும். ஆனால் பாடல்களினால்தான் நாடகம் நடக்கும் என்பதை மாற்றவே நான் பாடுவதில்லை.

தென்றல்திரை - 01.02.1956

கே : நீங்கள் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை?

ராதா : நடிகர்கள் தேயிலைத்தோட்டக் கூலிகள் போல நடத்தப்பட்டனர். போதிய சவுகரியங்கள் இல்லை. முடிவாக நான் படவுலகை அடியோடு வெறுக்க மாடர்ன் தியேட்டர்தான் காரணம். ஒரு நடிகன் நடிகையோடு பேசினால் கட்டிவைத்து அடிப்பார்கள். இந்நிலை எனக்கு மிக்க வெறுப்பையும் அவமானத்தையும் அளித்தது.

சினிமா மெயில் 20.01.1957

சில வாசகர் கேள்விகளும் ராதாவின் பதில்களும்

கே : திரையில் தங்களைப் பார்த்தால் பயந்து நடுங்குகிறேன். நேரில் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் என் அச்சம் நீங்குமா, அதிகமாகுமா?

ராதா : தங்கள் மனதின் பலவீனத்தைப் பொறுத்தது.

கே : நேரு, பெரியார், ராஜாஜி, அண்ணாத்துரை இவர்களில் பொதுப்படையான பொருளைக் கருத்தாழத்தோடு பேசுபவர்களை வரிசைப்படுத்தவும்.

ராதா : பெரியார்தான். வரிசை தேவையில்லை.

கே : கட்சிவிட்டுக் கட்சிமாறும் 'பச்சோந்திகள்' பற்றித் தங்கள் கருத்து என்ன?

ராதா : பச்சோந்தி

கே : நான் எங்கள் ஊரில் தங்கள் பெயரில் மன்றம் அமைக்க முயற்சி செய்தேன். ஆனால் எங்கள் ஊர்த் திராவிடர்கழகப் பிரமுகர் ஒருவர் அவர் பெயரில் மன்றம் அமைவதை விரும்பமாட்டார் என்கிறார். இது உண்மைதானா?

ராதா : உண்மைதான்.

கே : எல்லாப் படங்களிலும் வில்லனாகவும் கொடூரமாகவும் காட்சியளிக்கிறீர்களே, இல்லத்தில் மனைவி மக்களோடும் சுற்றத்தோடும் எப்படிப் பழகுவீர்கள் என்பதை அறிய ஆவல்.

ராதா : அது தங்களுக்குத் தேவையில்லை.

கே : அண்ணே, உங்களை எல்லோரும் கஞ்சன்னு சொல்றாங்களே, உண்மையா?

ராதா : திருடன், முடிச்சவிழ்க்கி, அயோக்கியன் ஆகியவர்களுக்கு நான் கஞ்சன்.

கே : தாங்கள் இந்த நாட்டின் முதன்மந்திரியானால்..?

ராதா : இதுமாதிரிக் கேள்விகேட்பவர்களைத் தூக்கில் போட சட்டம் கொண்டுவருவேன்.

- தமிழ்நாடு - ஜனவரி 1961.

----
மேலும் ராதா ஒரு நேர்காணலில் தான் பாய்ஸ் நாடகக்குழுவில் இருந்தபோது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கிறார். தான் ஒரு gay என்று ஒத்துக்கொண்ட தமிழ் ஆளுமை ராதாதான். தமிழ்க்கலைவெளியில் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட எத்தனையோ கலைஞர்கள் உண்டு. ஆனால் நடிப்பாற்றலோடு அர்ப்பணிப்பு மிக்க அரசியல் உணர்வும் 'போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத' துணிச்சலுமிக்க கலைஞனாய் ராதா மட்டுமே ஒற்றைத்தீவாய் வாழ்ந்து மறைந்துபோனார்.

காலம் தொலைத்த மனசாட்சி :

ராதா நம்புதற்கரிய சாத்தியங்களோடு வாழ்ந்தவர். எதிர்ப்பையுண்டு வாழ்ந்த ராஜாளி. அவரது பிறப்பு ஒரு குண்டுவெடிப்போடு தொடங்கியதென்றால் அவரது வாழ்க்கை பல அதிர்வுகளை உண்டுபண்ணியது. அவரது இறப்பும் ஒரு ஆச்சரியம்தான். திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பியதிலும் படத்தில் புகுத்தியதிலும் கலைவாணர் என்.எஸ்.கே, அண்ணா, கலைஞர்.கருணாநிதி போன்ற பலரும் குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ளனர் என்பது மறுக்கத்தக்கதல்ல. ஆனாலும் அவர்களிடத்தில் தமிழ்ப்பெருமிதம், பண்பாடு குறித்த மயக்கங்கள் மலிந்துகிடந்தன. இவை அவர்களது பிரதிகளிலும் கலைவெளிப்பாடுகளிலும் வெளிப்பட்டன. ஆனால் இத்தகைய மயக்கங்களுக்கு அப்பாற்பட்டு பெரியாரின் சிந்தனை வெளிச்சத்தைச் சரியாகப் பிரதிபலித்த கலைஞன் என்று ராதாவைச் சொல்லலாம். பெரியாரை நிழல்போலவே பின்தொடர்ந்த ராதா இறந்தது பெரியார் பிறந்தநாளான செப்டம்பர்17. இறந்த நேரம் பெரியார் இறந்த அதே காலை 7.25 மணி.

உதவியவை :

ராமாயணத்தைத் தடைசெய் - நடிகவேள் எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் - விந்தன்

பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - தஞ்சை.ச.சோமசுந்தரம்

மற்றும்

மூத்த திராவிட இயக்கத்தவர்களின் வாய்மொழித் தரவுகள்.

Tuesday, September 17, 2013

டான் அசோக்.: சாரு! ஜெமோ! இனிமே உசாராத்தான் இருக்கனும்!

டான் அசோக்.: சாரு! ஜெமோ! இனிமே உசாராத்தான் இருக்கனும்!: ஒரு காலத்தில் அஜீத்தும், விஜய்யும் இப்படி மாற்றி மாற்றி பேட்டி கொடுத்து ஃபார்ம் ஆனார்கள். "நான் யார் தெரியுமா? நான் ஏன் சூப்பர் ஸ்டா...

டான் அசோக்.: "நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்"- பெரி...

டான் அசோக்.: "நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்"- பெரி...: பெரியாரின் எந்தப் பேச்சை எடுத்துக் கொண்டாலும் அதிலே அடிவேராய் இருப்பது மனிதநேயம். மனு என்பவனின் கோட்பாட்டால் தங்களைத் தாங்களே 'உயர்ந...

Tuesday, September 3, 2013

#ஆன்மீகம்

#ஆன்மீகம்

 பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிற ஆசாராம் பாபு கூறுகிறார்:

"மதகுருமார்கள் பெண்களிடம் தள்ளியே இருக்க வேண்டும். மேலும், பெண்களிடம் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அது அவர்களது தாய், மகள், அண்ணியாக இருந்தாலும் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும்."

#ஆன்மீகம் என்கிறார்கள்; மனக்கட்டுப்பாடு என்கிறார்கள்; சாமியார்கள் புனிதமானவர்கள் என்கிறார்கள். ஆனால் தாய், தங்கை, அண்ணி போன்ற உறவுமுறைகளிடம் கூட தனித்து இருக்கக் கூடாது என்றால் இவர்களது மத போதனைகள் தரம் அப்படி.

காவியின் சபலத்திற்கும் மனக் கட்டுப்பாட்டுக்கும் இந்துத்துவ மதபோதனைகள் நிறைய தொடர்புகள் இருக்கின்றன.

இதிகாசங்களில் திரவுபதி அண்ணன் தம்பிகளுக்கு மனைவியாக இருந்தாள். சீதை தனது அண்ணன் இராமனை திருமணம் செய்தாள். கணவனின் தம்பி இலட்சுமணன் தன்னை குறுகுறுவென பார்ப்பதாக சீதை புகார் கூறுகிறாள். பின்னாளில், 'சீதை இராவணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள்' என இராமன் சந்தேகப்பட்டான். சிவன் தலைக்குள் வைப்பாட்டி கங்கையை வைத்திருந்தான். கண்ணன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களோடு செக்ஸ் தொடர்பில் இருந்தான். பிரம்மன், மகள் சரஸ்வதியை பலாத்தாரம் செய்ய முயன்றது, அம்மன் கணவன் இல்லாத நேரத்தில் வேறொருவனோடு செக்ஸ் செய்து கொண்டிருந்தபோது மகன் பரசுராமன் பார்த்துவிட்டு தலையை வெட்டினான் என்பது...

இப்படி ஒழுக்கங்கெட்ட சாமிகளை இன்றும் கலாச்சாபம் என்று பக்தி ஆராதணைகளோடு பிரச்சாரம் செய்யும் இந்துத்துவ சாமியார்களின் மனநிலை தாயையும் தங்கையையும் அண்ணியையும் பார்த்தால் வேறு என்ன தோன்றும்?

- தமிழச்சி
03/09/2013

Saturday, August 31, 2013

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்...

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்...

சாதியற்ற சமுதாயம் சாத்தியமே என்ற ஒரு கட்டுரையைத் தீட்டியுள்ளார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன்.

கட்டுரையின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் களித்தோம். உள்ளுக்குள் சென்றால் இவர் எப்படி அறவாணன் அய்யங்கார் ஆனார் என்று எண்ணித் திகைத்தோம்.

இடஒதுக்கீடு என்பது பிரிட்டிஷார் கொண்டு வந்தது என்றும், மக்களைப் பிரிக்க முடியாதவாறு அந்தந்த சாதிக்குள்ளேயே நிரந்தரமாக நிலைப்படுத்த பிரிட்டிஷார் இந்த ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். முன்பிருந்த சாதிப் பிரிவினையை இது மேலும் வலுப்படுத்தியது.

###

கல்வி நிறுவன நுழைவு, அரசு நியமனங்கள் இன்ன பிற எந்த இடத்திலும் சாதிப் பிரிவிற்கு இடமே இருக்கக் கூடாது. இம்முறை தொடருமானால் நாம் பரம்பரை பரம்பரையாக சாதிகளைக் காக்கவே கவனம் செலுத்திடுவோம்! என்று எழுதித் தள்ளி விட்டார்.

ஆரியர் --_ திராவிடர் என்பது வெள்ளைக்காரன் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் சொல்லுவதில்லையா -_ அதே பாணியில் நமது பேராசிரியரும் பேனாவை ஓட்டியுள்ளார்.
முதலில் ஜாதியை தமிழில் சாதியாக்கியதே அடிப்படை குற்றமாகும். இதன் மூலம் ஜாதியைத் தமிழர்க்குரிய மூலமாக மாற்றிக் காட்டப் பார்க்கிறார் நமது பேராசிரியர்.

ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு - _ அந்த ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான உளவியல், அறிவியல் காரணத்தை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.. இன்னும் சொல்லப் போனால் அம்மை நோயைப் போக்க அம்மைக் கிருமிகளிலிருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒக்கும். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைக்கப்பட்ட வருண சமூக அமைப்பில், அந்த சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்க அந்தச் சூத்திரத் தன்மையைப் பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது? மருந்தில்கூட விஷம் உண்டே! அதை ஏன் பருகுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக சென்னை மாநிலத்திற்கு வந்தாரே -_ அந்த இரண்டு முறையும் அவர் செய்தது எதனை? ஏற்கெனவே இருந்த பள்ளிகளை மூடியதுதான் அவர் செய்த உயர்ந்தபட்ச சாதனை.

ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில், குறிப்பாக 1914இல் நம் நாட்டின் நிலை என்ன?

சென்னை சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குன்சிராமன் நாயர் கேட்ட கேள்விக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பார்ப்பனர்கள் 452, பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 12 பேர்; பிற இனத்தவர் 74 பேர் என்று கூறப்பட்டதே _ அந்த நிலை இப்பொழுது மாறியுள்ளதற்குக் காரணம் இட ஒதுக்கீடுதானே?

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இப்பொழுது படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் 1,45,450 - _ சதவீத கணக்கில் 89 ஆகும்.

(சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற நீதிக் கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருவாசகம் அளித்த புள்ளி விவரம் இது. 20-_11-_2010).

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண் டும் என்ற நிபந்தனை இருந்ததைப் பேராசிரியர் அறவாணன் அறியாதவரா? பனகல் அரசர் பிரதமராக இருந்த போதுதானே அது தூக்கி எறியப் பட்டது. அந்தத் தடை மட்டும் இருந்திருந்தால் தமிழர்களில் மருத்துவர்களைக் கண்டிருக்க முடியுமா?
2013_2014 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பற்றிய புள்ளி விவரம் என்ன தெரியுமா?

மொத்தம் 2172 இடங்கள் இதில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 673.

இந்தத் திறந்த போட்டியில் உயர் ஜாதிக்காரர்கள் 50, பிற்படுத்தப்பட்டோர் 442, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 140, பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) 18, தாழ்த்தப்பட்டவர் 21, தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) 1, மலைவாழ் மக்கள் -1

இடஒதுக்கீடு அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள்: பிற்படுத்தப்பட் டோர் 576, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 434, பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 76, தாழ்த்தப்பட்டோர் 328 தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 63, மலைவாழ் மக்கள் 22.

இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன? இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தானே! இந்த வளர்ச்சி எல்லாம் கூடாது என்பதுதான் அறவாணரின் ஆசையா?

நம்முடைய அரசர்கள் காலத்தில் எல்லாம்கூட கல்வி பார்ப்பனர்களுக்குத் தானே! - அந்த வரலாற்றையெல்லாமா நினைவூட்ட வேண்டும்?

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப் பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன தெரியுமா? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும் மீமாம்சம் வேதாந்த தத்துவங்களே! (ஆர். சத்தியநாதய்யர் -_ இந்திய வரலாறு)

இந்த வேதங்களும் மீமாம்சத் தத்துவங்களும் யாருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன? படித்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே தான் என் பதை முனைவர் பட்டம் பெற்ற பேரா சிரியர் அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா?

ஜாதியை ஒழிக்கக் கல்வி தேவையில்லை என்பது அவரது வாதமா? ஜாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டதால் தான் அந்த ஜாதி அடிப் படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது _ இதற்குப் பெயர்தான் சமூகநீதி என்பது!
கல்வி கற்றவர்களிடத்தில் தான் பெரும்பாலும் ஜாதி மறுப்பையும், ஜாதி மறுப்புத் திருமணத்தையும் எதிர் பார்க்கவும் முடியும்; - அது நடந்து கொண்டும் தானிருக்கிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால்தான் ஏதோ ஜாதி உயிரோடு இருப்பது போலவும், இந்த இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் ஜாதியே இல்லாதது போலவும் எழுது வது மெத்த படித்த பேராசிரியருக்கு அழகல்ல.

தந்தை பெரியாரும், நீதிக்கட்சித் தலைவர்களும் ஒரு நூற்றாண்டு பாடுபட்டு, சட்டரீதியாக இடஒதுக் கீட்டை நிலை நிறுத்துவதற்குப் பாடு பட்ட தன்மையைப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டோ, அல்லது அவர்களுக்குக் கைத்தடியாக இருந்து கொண்டோ கல்லெறிவது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்!

ஜாதி அடிப்படையில் இடஒதுக் கீடுக்காகப் பாடுபடும் கழகம்தான் ஜாதி ஒழிப்புக்காகவும் பாடுபடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்; ஒரு சிறு துரும்பைக் கூட ஜாதி ஒழிப்புக்காகக் கிள்ளிப் போடாமல் சமூகப் பொறுப்பு ஏதுமில்லாமல் பேனா பிடிப்பதுதான் சமுதாயத்துக்குச் செய்யும் தொண்டா?

பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று முன்பொரு முறை எழுதி இப்படித் தான் சிக்கிக் கொண்டார்.

படித்த தமிழர்கள் அருள்கூர்ந்து தந்தை பெரியார் அவர்களை மேலும் படிக்க வேண்டும் _ ஆழமாக படிக்க வேண்டும் _ என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் -_ என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கு தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப் போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து, மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனரிடமும் மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்

_- தந்தை பெரியார், விடுதலை 1.1.1962

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், மகாத்மா பாபுலே போன்ற சமூகச் சிந்தனை யாளர்கள் எல்லாம் ஏன் ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு கேட்டார்கள்? அவர்களைவிட இந்தச் சமுதாயத் தைப்பற்றி மிக ஆழமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்து விட்டதாக வெறும் பட்டப் படிப்பு மேதைகள் நினைக் கிறார்களா? என்று தெரியவில்லை.

கைதட்டி வரவேற்போம்!

கைதட்டி வரவேற்போம்!


ஒரு பெண் விவாகரத்துப் பெற்றுவிட்டாலும் அந்தப் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருமண சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (26.8.2013) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை 50 விழுக்காடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துகளில் பெண்களுக்கு உரிமை உடையது வெறும் இரண்டே இரண்டு விழுக்காடுதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணை, ஒரு சொத்தாகப் பாவிக்கும் மனப்பான்மை நம் நாட்டு மக்களுக்கு உண்டு. பெண்களை உயிருள்ள ஜீவன் என்று நினைப்ப தில்லை. அதனால்தான் வரதட்சணை என்ற ஆரியக் கலாச்சாரமே இங்கு புகுந்தது.

பெண்களைப் பெற்றவர்கள் ஏன் பெற்றோம் என்று கண்ணீர் விடும் கொடுமை இந்தப் பாரத புண்ணிய பூமியில்! தான்

பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படு வதும் இந்தச் சுமையால்தான்! மணமகன் டாக்டராக இருந்தால் அதற்கொரு தொகை, வெறும் ஆசிரியராக இருந்தால் தொகையில் கொஞ்சம் சலுகை.. - இத்தியாதி இத்தியாதி விலைவாசிப் பட்டியலை (மார்க்கெட் நிலவரம்) ஆண் ஆதிக்க உலகம் கையில் வைத்துள்ளது - வெட்கக்கேடு!

பெண் என்றால் திருமணம் செய்து கொடுத்து விட்டாலே போதும்.. அவருக்கு ஏன் சொத்து பத்துகள் என்று நினைக்கிற இந்துத்துவ மனப்பான்மை உள்ளவரை பெண்ணுலகம் தலை நிமிர்ந்திட முடியவே முடியாது.

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை கல்வியே! இந்த உரிமையை ஈட்டித் தருவதற்காக - இந்தப் பிரச்சினைகளை மய்யமாக கொண்டு - அதனை ஓர் இயக்கமாகவே நடத் தினார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமைபற்றி, 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமையில், நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குக் கல்வி உரிமை; இராணுவத்தில் கூட பெண்களுக்குப் பணிகள், என்று 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மா னத்தை, நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முதல், பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, மேற்கொண்டது திராவிடர் இயக்கமே.

சமூகத்தில் உண்டாக்கப்பட்ட விழிப்புணர்வே, பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைக்கான சட் டங்கள், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணம்.

பெண்கள் சொத்துரிமைப் பற்றிய மசோதாவை, மய்யப்படுத்தியே சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய நேர்ந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கும் சொத்துரிமைக்கு வழி வகுக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, நடைமுறையில் எந்த அளவுக்கு, அது செயல்பாட்டில் இருக்கிறது, என்பது கேள்விக்குறியே!

இந்தச் சூழலில் விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மகளிர் முன்னேற்றத் திசையில் சிறப்பானதோர் மைல் கல்லே!

சட்டம் வந்தால் மட்டும் போதாது - நடை முறையில் எந்த அளவுக்குச் செயற்பாட்டில் இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம்தான் மிக மிக முக்கியமாகும்.

சட்டத்தைத் திராவிடர் கழகம் கை தட்டி வரவேற்கிறது.
Nandri : Kavignar Kali.Poongundran

Wednesday, August 28, 2013

சபாஷ், மகாராஷ்டிர அரசு !!!!

 சபாஷ், மகாராஷ்டிர அரசு !!!!

பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்

மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய் ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளன.

மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர் முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர் புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா தபோல் கர் கூறினார்.

Wednesday, August 21, 2013

உழைப்பை திருடும் இந்து பார்ப்பன மதம்


அடுத்தவன் உழைப்பை திருடும் இந்து பார்ப்பன மதம்

தரிசன நுழைவு கட்டணம்
முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
இலவச நுழைவு

அர்ச்சனை சீட்டு {கட்டணம்}

மொட்டை சீட்டு{கட்டணம்}

திருவிளக்கு பூஜை கட்டணம்

அபிஷேக கட்டணம்

இது போதாதுக்கு உண்டியல்

அதும் போதாது என தர்ச்சனை தட்டு வருமானம்

இன்னும் விலையேற்றமாம்

கடவுள் பொதுவானது என்று யாரோ சொன்னதாக
நினைவுக்கு இருக்கின்றது

பொதுவானவருக்கு வருமானம் ஏன்?


பழநி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ராமேஸ்வரம் கோதண்டராமசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் அர்ச்சனை கட்டணம் ஐந்து ரூபாய் என்பது 10ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, திருமஞ்சன அலங்காரம், முத்தங்கி சாத்துபடி என சிறப்பு பூஜைகளின் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணம் 250 ரூபாய் என்பது 500 ரூபாயாகவும், 500 ரூபாய் என்பது ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்க, வெள்ளி தேர்களை இழுப்பதற்கான குறைந்த பட்ச கட்டணம் 1,500 ரூபாய் என்பது 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து அதற்கான ரசீது புத்தகங்கள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில்களுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலும் ஊழியர்கள் பயன் அடையும் வகையில், கோவில்களில் பூஜை கட்டணம் அனைத்தும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனை கட்டணத்தை உயர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிற கட்டணங்களை ஏரியாவுக்கு தக்கபடி கோவில் நிர்வாகமே உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதில் சில கோவில்களில், நிர்வாக காரணங்களுக்காக கட்டண உயர்வு டிசம்பர் 1 முதல் அமல் படுத்தப்படுகிறது. தற்போதைய அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயில் பூஜாரிகளுக்கு 60 பைசா வழங்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வுக்கு பின் பூஜாரிகளின் பங்கு 1.60 ரூபாய் வழங்கப்படும். சிறப்பு நிலை கோவில்களில் பூஜாரிகளுக்கு நான்கு ரூபாய் வரை பெறுவர்.


ஆடி வெள்ளி

ஆவணி ஞாயிறு

புரட்டாசி சனி

கார்த்திகை திங்கள்

ஐப்பசி புதன்

மார்கழி திங்கள் முழுவதும்

தை மாசி பங்குனி சித்திரை வைகாசி என
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளை
விசேஷ நாளாக வைத்து
தமிழனின் பணத்தை சுரண்டுகின்றான் பார்ப்பான்
பார்பன இந்து மதம்

மாதம் முழுக்க உழைத்து சம்பாதிக்கும் பணம்
வாரம் வாரம் ஒரு பண்டிகையை காரணம்காட்டி அவனின் உழைப்பில் வந்த பணத்தை திருடும் திருடந்தான் பார்ப்பான் பார்ப்பன இந்து மதம்


திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம்

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.

முன்னேற்ற பாதையை கூட மூட நம்பிக்கையால் தமிழன் பின்பற்றுகின்றான் என்றால் அவன் சரியான வழியில் செல்லவில்லை என்றுதான் அர்த்தம்

வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி விரதங்கள் எனவும்

ராகுகாலம் என்று

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை. தமிழனை முடக்கியும்

எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ…

கிழமை பகல் நேரம்இரவு நேரம்

ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00


கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19

மணி,
கிழமை,
தேதி,
மாதம்,
திசை

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா முடியவில்லை
இதையும் தாண்டி தமிழன் முன்னேறிவருகையில்
படிப்பில் அவனுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது

தன் மானம் உள்ள தமிழர்களே சிந்தியுங்கள்
உங்கள் உழைப்பு வேறு வழியில் மதம் கடவுள் என்னும் போதையால் இன்னொருத்தவனால் சுரன்டப்படுகின்றது எச்சரிக்கை

-ஈரோட்டு பூகம்பம்-
237

Tuesday, August 20, 2013

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை.

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை.

 
சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது. இதனையடுத்து குழந்தை ராகுலுக்கு விழுப்புரம், புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தானாக தீப்பிடித்து எரியவில்லை... யாரோ எரித்துள்ளனர்... டாக்டர்கள் தகவலால் பரபரப்பு அரிய நோயால் பாதிப்பு குழந்தையின் சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நலப்பிரிவு தலைவரும், மருத்துவமனை துணை கண்காணிப்பாளருமான டாக்டர் நாராயணபாபு முதலில் குழந்தையை பரிசோதித்து குழந்தைக்கு ‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்' என்ற உடலில் தானாக தீப்பற்றிக்கொள்ளும் அதிசய நோய் இருப்பதாக கூறி இருந்தார். 30 வகை டெஸ்ட் இதனையடுத்து குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வு முடிவுகள் ஆய்வு முடிவுகள் குறித்தும், குழந்தையின் தற்போதைய நிலை குறித்தும் டாக்டர் நாராயணபாபு கூறுகையில், "குழந்தை கடந்த 12 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதுவரை குழந்தையின் உடலில் தீப்பற்றி எரியவில்லை. குழந்தையின் தோல் ஆராய்ச்சி முடிவு உள்பட அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்து விட்டன. எல்லா முடிவுகளுமே சாதாரணமாகத்தான் உள்ளன. அசாதாரண அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று கூறினார். தானக தீப்பிடிக்க வாய்ப்பில்லை எனவே முன்பு கூறியது போல "ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்" என்ற உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவர் கூறினார். தீப்புண்களுக்கு சிகிச்சை குழந்தை எங்களிடம் சிகிச்சைக்கு வரும்போது, தீப்புண் காயங்களுடன் வந்தது. அதற்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்னைகளும் இல்லை. தீ பற்ற வாய்ப்பில்லை குழந்தையின் பெற்றோர் தான் அதன் உடலில் தானாக தீப்பற்றி எரிந்ததாக கூறி உள்ளனர். ஆனால் இங்கு இதுவரை அது போன்ற சம்பவம் நிகழவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணனுடன் பேசி முடிவு செய்வோம். 24 மணி நேர கண்காணிப்பு குழந்தை வீடு திரும்பிய பிறகு, அங்குள்ள தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் மூலம் குழந்தையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்வோம். மேலும் மாதம் ஒரு முறை குழந்தையை இங்கு கொண்டுவந்து பரிசோதனை செய்வோம்" என்றார். நீடிக்கும் மர்மம் குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிவதற்கு வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது. எனவே குழந்தையின் உடலில் தீப்பிடித்தது சூனியத்தினாலா? அல்லது சதியினாலா? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குடும்ப வன்முறையா? குழந்தையின் உடலில் வேண்டுமென்றே யாராவது தீவைத்து கொடுமைத்தியுள்ளனரா என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தான் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு உண்மை வெளியே தெரியவரும்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/20/tamilnadu-tn-s-self-combusting-baby-actually-a-victim-of-domestic-abuse-181633.html

Sunday, August 18, 2013

குளியலறையில் ஒரு பூரான்........!

குளியலறையில் ஒரு பூரான்........!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
புகை வண்டி ஊர்ந்து வருதலைக் கவனித்ததுண்டா? மனது நிறைந்த கவிதை நிகழ்வு அது. குறிப்பாக வளைவில் காணும் நிகழ்வு....ஒரு பருவப்பெண், நாணம் அவள் உடல் முழுவதையும் கபளீகரம் செய்ய, ஒவ்வொரு அங்கமும், கோணி நடந்து வருவாளே ......அது போல ஓர் வெட்க உணர்வை நானும் உணர்ந்திருக்கிறேன். மரங்களிலும், பறவைகளிலும், பூச்சியினங்களிலும் அழகுணர்வை நான் மட்டும் காணவில்லை. ஆழ்வார்கள் கண்டார்கள், சித்தர்கள், நாயன்மார்கள் என பட்டியல் நீண்டு, சலீம் அலி, வண்ணதாசன், தியோடர் பாஸ்கரன் என போய்கொண்டேயிருக்கிறது. பாம்புகள், பூரான்கள் போன்றவை ஊர்ந்து வருதல் கவனத்திற்குரிய நிகழ்வு .அவைகளின் உடல் மொழி, அது அடுத்து செயல்படயிருக்கிற செயலை குறிக்கும்.
அந்தோணி சாரின் இருமகள்களும் அடுத்தடுத்த நாள் பூரான் கடிக்கு இலக்கானார்கள். முதல் நாள் மேரி அக்கா, இரண்டாம் நாள் சரண்யா. ஒருவர் தொடையிலும் மற்றவர் முதுகிலும் தாக்குண்டார்கள். மிக்கடுமையான வலியும், வீக்கமும் இருப்பதாய் அவர்கள் அழுது கொண்டே கூற, வீட்டில் உள்ள ஆடவர்கள் பூரான் வேட்டையில் ஈடுபட்டார்கள். தாமஸ் சார் அவர்களுடைய அண்ணன். எனக்கு கணிதம் மற்றும் வரலாறு-புவியியல் ஆசிரியர். அவருடைய அந்தரங்க சிஷ்யனான எனக்கு, பலவித சலுகைகள் உண்டு. அவருடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிப்பழகலாம், அவ்வப்போது அவர் கொணரும் தின்பண்டங்களை பகிர்ந்துண்ண அனுமதி ,நான் விரும்பும் செடிகளை தாராளமாக பிடுங்கித் தருவார். அதைவிட முக்கியமாக பரீட்சைக்கு முதல் நாளே சில கேள்விகளை தந்து, என்னை படிக்க வைத்து மறுநாள் தேர்வில் உறுதியான பாஸை வழங்கி கௌரவிப்பார். என் அண்ணனின் கிரிக்கெட் டீமில் பிரதான துல்லிய ஃபாஸ்ட் பவுலரும் அவரே. அன்று அவரது தம்பி என்னை அண்ணன் அழைப்பதாய் கூறி அழைத்துப் போய் அவர்களோடு தேடுதல் வேட்டையில் ஈடுபட பணித்தார். மேரி அக்காவின் பாட்டி, சேசுவே எந்தப் பாவமும்  அறியாத எங்குடும்பத்துக்கு எதுக்கய்யா இந்த சோதனை என ஒரு புகைப்படத்திற்கு முன் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தார். தன் இரு உள்ளங்கைகளும் நமக்கு தெரியும் படி காண்பித்து, தனது இருதயத்தை முள்ளாள் வளைத்துக் கட்டியும், அழாமல் நம்மை சோகமோடு பார்க்கும் ஏசு கிறிஸ்து அப்படத்தில் வரையப்பட்டிருந்தார். 
அடுப்பறையின் கழிவுப்பாதையில், இறுதியில் கண்டறியப்பட்டது அந்த பழுப்பு நிறப் பெரும் பூரான். அதன் ஊர்ந்து செல்லும்அழகும், தான் கொல்லப்படப்போகிறோம் என முன்னமே உணர்ந்தது போன்று பதட்டப்படாத செய்கையும் என்னை ,அதனை கவனிக்கத் தூண்டியது. பொட்டப்புள்ளையாடா அது...உத்துப்பாக்குற ...ஓங்கி அட்றா... என சார் உத்தரவிட்ட மறு வினாடி என் செருப்பால் தாக்குண்டு மாண்டு போனது. உண்மையில் கடித்தது அதுதானா என்ற சந்தேகம் இன்று வரை தீரவில்லை. 
கணுக்காலிகள் குடும்பத்தை சேர்ந்த பூரான்கள் 8000 வகை உள்ளதாய் கணக்கிடப்பட்டாலும் 3000 மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ,இந்தியாவில் உள்ளவற்றில்  4 வகை மட்டுமே மிகத் தீவிர விஷம் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் காலிகள் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் 32 கால்கள் மட்டுமே கொண்டவை. இதன் உடலமைப்பு மிகுந்த விசேஷம் கொண்டவை. 7 முதல் 11 அடுக்குகளாய் பிரிக்கப்பட்டிருக்கும் உடலில் முதல் கட்டில் கால்கள் கிடையாது. மாறாக உணர்வுக் கொம்புகள் போன்ற இரு கவ்வையாக குழாய் அமைப்பு இருக்கும். இதுவே விஷத்தை உட்செலுத்தும் உறுப்பு. இரையையோ அல்லது தனது இலக்கையோ கண்டறிந்த பின் இந்த இரு கவ்வையால் கவ்வி, அது கொண்டே தோலை துளைத்து, விஷத்தை உட்செலுத்தும். தாக்குதலுக்கு உள்ளான இரை, சிறிது நேரத்தில் மயக்கமுற்று, தன் செயல்பாட்டை இழக்கிறது. அப்போது, இவை அவற்றின் உடலை நார்நாராக கிழித்து உண்ணத் துவங்குகின்றன. விஷம் ஏற்றி.... புலால் மட்டுமே உண்ணும், ஊர்ந்து செல்லும் உயிரிகளில் பூரானும் ஒன்று என்கிறார் ஃபார் கெயின்ஸ்டீன். இவர் கணுக்காலிகள் குறித்த ஆய்வில் ஈடுபடும் கனடா நாட்டு விஞ்ஞானி. மனிதனுக்கு, இதன் கடி மிகுந்த வலியை மட்டுமே ஏற்படுத்தும். 
பூரான்கள் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றன. மர இலைகளின் அடிப்பாகம், மக்கிய பொருட்கள், செடி ,தழைகள் போன்றவை இதன் வசிப்பிடம். என் மாடித் தோட்டத்தில் ஏராளமான பூரான்கள் உண்டு. செடிகளைத் தாக்கும் சிறு பூச்சிகளை இவை உண்பதால் ,உழவர்களின் நண்பனாக இது கருதப்படுகிறது. குறிப்பாக மண்புழுவின் குட்டிகளை தாக்க வரும் சிவப்பு எறும்புகளை உண்டு, மண்புழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது. 
அமேசான் காட்டில் காணப்படுபவை 30 செ.மீ நீளம் கொண்டதாகவும், பாம்பு, எலி, அணில், சிறு பறவைகளை வேட்டையாடி உண்பதாகவும் உள்ளன. 1875களில் அமெரிக்காவில் இது அறிமுகப்படுத்தப்பட்டதாய் ஒருகுறிப்பு கூறுகிறது. ஆனால் இது குறைந்தது 400 ஆண்டு பழமையான தாக இருக்கலாம் என்கிறார் டாக்டர். ஸ்டீவ். இந்திய கிராமங்களில்  , பாலூட்டும் தாய்மார்கள் உள்ள வீட்டில் அழுக்கு வாடை நிறைந்த இடங்களில், அவ்வாசனையை நுகர்ந்து  பூரான்கள் வரும் என்ற நம்பிக்கை உண்டு. இதன் வருகையை தவிர்க்க பூண்டு, பெருங்காயக் கலவையை ஆங்காங்கே தெளிப்பதை பார்த்திருக்கிறேன். தற்போதைய ஓர் ஆய்வில் அது நீல நிறம் கொண்ட துணிகளை ஒட்டி வருவதாக கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்த ஆண்களும், ஆஸ்திரேலியாவில் நீல நிற உடை அணிந்த பெண்களும் வீட்டில் அதிக பூரான் தாக்குதலுக்கு ஆளானார்கள். அந்த நாடுகளில் இவைகளை அழிக்க பெரும் கம்பெனிகளே உள்ளன. அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை தந்து தாங்கள் உதவ தயாராக இருப்பதாய் விளம்பரம் செய்கிறார்கள். 
பூரான்கள் கும்பலாக வாழ்பவை. அங்கு தலைவன், தலைவி போன்ற அதிக பகிர்வுகள் கிடையாது. ஏனெனில் இங்கு காதலோ, காமமோ கிடையாது. எனவே உடலுறவு என்ற நிகழ்ச்சியே நடைபெறுவதில்லை. குறைந்தது 5 ஆண்டுகள் வரை வாழும், பூரான்கள் இரண்டு ஆண்டுகளில் பருவமெய்கிறது. ஆண் தனது உமிழ்நீராலும் சிறு குப்பைகளை கொண்டும் கூடமைக்கிறது. இது தரைகளில் வாழும் சிலந்திகள் கட்டும் கூடு போன்ற தோற்றமளிக்கும். இந்தக் கூட்டில் தனது விந்துத் துளிகளை தெளித்து விட்டுச் செல்லும். தனது நுகர்வு குழாய் மூலம் உணர்ந்த பெண் அங்கு வந்து  பின்புறம் அமையப் பெற்ற கொடுக்குகளின் உதவியோடு விந்துக் குவியலை கூண்டோடு அள்ளிச் சென்று தனது இருப்பிடம் சேர்க்கும். பின் கருமுட்டைகளை அதன் மீது பீய்ச்சி, சில தினங்கள் காவல் இருக்கும். லார்வாக்கள் போல குட்டி பூரான்கள் உருவாகி வரும் வரை பெண் பூரானும், சமயம் ஏற்படின் ஆணும் காவல் காக்கும். சுமார் 40 குட்டிகள் பிறந்தாலும், மிஞ்சுவது பத்திற்குள் மட்டுமே . குட்டிப் பூரானும் தாயைப்போலவே விஷம் கொண்டவை.
இவைகள் கூட்டுக் கண் அமைப்பு கொண்டவை. குறைந்தது 10 என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே பார்வைத்திறன் கொண்டிருக்கும். அவையும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இரையையோ, எதிரிகளையோ தன் பார்வையால் அறிந்து கொள்வதை விட தன் உணர்வுக்குழல்கள் மூலமே அதிகம் அறிகிறது. துவக்கத்தில் இரு கால்களோடு பிறக்கும் இவை வளர வளர இவற்றின் அடுக்குகள்  ஒவ்வொன்றாக கூடும் ,கால்களும் கூடும். நன்கு வளர்ந்தவை 16 அல்லது 17 அடுக்குகளோடு காணப்படும். அசம்பாவித்தின் போது கால்கள் உடைந்தாலும், மீண்டும் வளரும் இயல்பு கொண்டவை. அதிக கால்களைக் கொண்டதால் இவைகளால் மிக விரைவாக ஓடி ஒளிய முடிகிறது. கால்களும் ,கொடுக்கும் பார்வைக்கு ஒன்று போல் இருப்பதும், முன்புற, பின் புற வேற்றுமை குறைபாடும், இரைகளை திக்குமுக்காடச் செய்கிறது. 
உடலில் ஏற்படும் அதிக வேர்வையும், வளர்ச்சிக்கு உதவும் மெழுகு போன்ற தோல் உரித்தலும், அதிக தண்ணீர் தேவையை உண்டாக்கும் எனவே இவை வெப்பம் நிறைந்த பகுதிகளை, பருவ காலம் தவிர பிற காலங்களில் விரும்புவதில்லை. ஆப்பிரிக்க பழங்குடிகள் இதனை சாத்தானின் சேவகர்கள் என்கிறார்கள். பூரான் கடியிலிருந்து காப்பாற்ற கந்த சஷ்டி கவசத்தின் மூலம் முருகன் உத்திரவாதம் அளிக்கிறான். சீனர்கள், வழக்கம் போல், மூட்டுவலி மருந்தை இதன் உடலிலிருந்து தயார் செய்கிறோம்  என கொன்று குவிக்கிறார்கள். இன்றும் மனித குலத்தால் வெறுக்கப்படும் இச்சிறிய ஜீவன் உண்மையில் புறந்தள்ள வேண்டிய உயிரினமே அன்று. 
kannan233@gmail.com

ThirukKuRaL