தென்றல் (Thendral)

Saturday, August 31, 2013

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்...

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்...

சாதியற்ற சமுதாயம் சாத்தியமே என்ற ஒரு கட்டுரையைத் தீட்டியுள்ளார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன்.

கட்டுரையின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் களித்தோம். உள்ளுக்குள் சென்றால் இவர் எப்படி அறவாணன் அய்யங்கார் ஆனார் என்று எண்ணித் திகைத்தோம்.

இடஒதுக்கீடு என்பது பிரிட்டிஷார் கொண்டு வந்தது என்றும், மக்களைப் பிரிக்க முடியாதவாறு அந்தந்த சாதிக்குள்ளேயே நிரந்தரமாக நிலைப்படுத்த பிரிட்டிஷார் இந்த ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். முன்பிருந்த சாதிப் பிரிவினையை இது மேலும் வலுப்படுத்தியது.

###

கல்வி நிறுவன நுழைவு, அரசு நியமனங்கள் இன்ன பிற எந்த இடத்திலும் சாதிப் பிரிவிற்கு இடமே இருக்கக் கூடாது. இம்முறை தொடருமானால் நாம் பரம்பரை பரம்பரையாக சாதிகளைக் காக்கவே கவனம் செலுத்திடுவோம்! என்று எழுதித் தள்ளி விட்டார்.

ஆரியர் --_ திராவிடர் என்பது வெள்ளைக்காரன் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் சொல்லுவதில்லையா -_ அதே பாணியில் நமது பேராசிரியரும் பேனாவை ஓட்டியுள்ளார்.
முதலில் ஜாதியை தமிழில் சாதியாக்கியதே அடிப்படை குற்றமாகும். இதன் மூலம் ஜாதியைத் தமிழர்க்குரிய மூலமாக மாற்றிக் காட்டப் பார்க்கிறார் நமது பேராசிரியர்.

ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு - _ அந்த ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான உளவியல், அறிவியல் காரணத்தை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.. இன்னும் சொல்லப் போனால் அம்மை நோயைப் போக்க அம்மைக் கிருமிகளிலிருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒக்கும். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைக்கப்பட்ட வருண சமூக அமைப்பில், அந்த சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்க அந்தச் சூத்திரத் தன்மையைப் பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது? மருந்தில்கூட விஷம் உண்டே! அதை ஏன் பருகுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக சென்னை மாநிலத்திற்கு வந்தாரே -_ அந்த இரண்டு முறையும் அவர் செய்தது எதனை? ஏற்கெனவே இருந்த பள்ளிகளை மூடியதுதான் அவர் செய்த உயர்ந்தபட்ச சாதனை.

ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில், குறிப்பாக 1914இல் நம் நாட்டின் நிலை என்ன?

சென்னை சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குன்சிராமன் நாயர் கேட்ட கேள்விக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பார்ப்பனர்கள் 452, பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 12 பேர்; பிற இனத்தவர் 74 பேர் என்று கூறப்பட்டதே _ அந்த நிலை இப்பொழுது மாறியுள்ளதற்குக் காரணம் இட ஒதுக்கீடுதானே?

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இப்பொழுது படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் 1,45,450 - _ சதவீத கணக்கில் 89 ஆகும்.

(சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற நீதிக் கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருவாசகம் அளித்த புள்ளி விவரம் இது. 20-_11-_2010).

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண் டும் என்ற நிபந்தனை இருந்ததைப் பேராசிரியர் அறவாணன் அறியாதவரா? பனகல் அரசர் பிரதமராக இருந்த போதுதானே அது தூக்கி எறியப் பட்டது. அந்தத் தடை மட்டும் இருந்திருந்தால் தமிழர்களில் மருத்துவர்களைக் கண்டிருக்க முடியுமா?
2013_2014 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பற்றிய புள்ளி விவரம் என்ன தெரியுமா?

மொத்தம் 2172 இடங்கள் இதில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 673.

இந்தத் திறந்த போட்டியில் உயர் ஜாதிக்காரர்கள் 50, பிற்படுத்தப்பட்டோர் 442, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 140, பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) 18, தாழ்த்தப்பட்டவர் 21, தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) 1, மலைவாழ் மக்கள் -1

இடஒதுக்கீடு அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள்: பிற்படுத்தப்பட் டோர் 576, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 434, பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 76, தாழ்த்தப்பட்டோர் 328 தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 63, மலைவாழ் மக்கள் 22.

இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன? இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தானே! இந்த வளர்ச்சி எல்லாம் கூடாது என்பதுதான் அறவாணரின் ஆசையா?

நம்முடைய அரசர்கள் காலத்தில் எல்லாம்கூட கல்வி பார்ப்பனர்களுக்குத் தானே! - அந்த வரலாற்றையெல்லாமா நினைவூட்ட வேண்டும்?

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப் பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன தெரியுமா? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும் மீமாம்சம் வேதாந்த தத்துவங்களே! (ஆர். சத்தியநாதய்யர் -_ இந்திய வரலாறு)

இந்த வேதங்களும் மீமாம்சத் தத்துவங்களும் யாருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன? படித்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே தான் என் பதை முனைவர் பட்டம் பெற்ற பேரா சிரியர் அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா?

ஜாதியை ஒழிக்கக் கல்வி தேவையில்லை என்பது அவரது வாதமா? ஜாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டதால் தான் அந்த ஜாதி அடிப் படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது _ இதற்குப் பெயர்தான் சமூகநீதி என்பது!
கல்வி கற்றவர்களிடத்தில் தான் பெரும்பாலும் ஜாதி மறுப்பையும், ஜாதி மறுப்புத் திருமணத்தையும் எதிர் பார்க்கவும் முடியும்; - அது நடந்து கொண்டும் தானிருக்கிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால்தான் ஏதோ ஜாதி உயிரோடு இருப்பது போலவும், இந்த இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் ஜாதியே இல்லாதது போலவும் எழுது வது மெத்த படித்த பேராசிரியருக்கு அழகல்ல.

தந்தை பெரியாரும், நீதிக்கட்சித் தலைவர்களும் ஒரு நூற்றாண்டு பாடுபட்டு, சட்டரீதியாக இடஒதுக் கீட்டை நிலை நிறுத்துவதற்குப் பாடு பட்ட தன்மையைப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டோ, அல்லது அவர்களுக்குக் கைத்தடியாக இருந்து கொண்டோ கல்லெறிவது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்!

ஜாதி அடிப்படையில் இடஒதுக் கீடுக்காகப் பாடுபடும் கழகம்தான் ஜாதி ஒழிப்புக்காகவும் பாடுபடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்; ஒரு சிறு துரும்பைக் கூட ஜாதி ஒழிப்புக்காகக் கிள்ளிப் போடாமல் சமூகப் பொறுப்பு ஏதுமில்லாமல் பேனா பிடிப்பதுதான் சமுதாயத்துக்குச் செய்யும் தொண்டா?

பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று முன்பொரு முறை எழுதி இப்படித் தான் சிக்கிக் கொண்டார்.

படித்த தமிழர்கள் அருள்கூர்ந்து தந்தை பெரியார் அவர்களை மேலும் படிக்க வேண்டும் _ ஆழமாக படிக்க வேண்டும் _ என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் -_ என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கு தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப் போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து, மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனரிடமும் மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்

_- தந்தை பெரியார், விடுதலை 1.1.1962

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், மகாத்மா பாபுலே போன்ற சமூகச் சிந்தனை யாளர்கள் எல்லாம் ஏன் ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு கேட்டார்கள்? அவர்களைவிட இந்தச் சமுதாயத் தைப்பற்றி மிக ஆழமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்து விட்டதாக வெறும் பட்டப் படிப்பு மேதைகள் நினைக் கிறார்களா? என்று தெரியவில்லை.

கைதட்டி வரவேற்போம்!

கைதட்டி வரவேற்போம்!


ஒரு பெண் விவாகரத்துப் பெற்றுவிட்டாலும் அந்தப் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருமண சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (26.8.2013) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை 50 விழுக்காடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துகளில் பெண்களுக்கு உரிமை உடையது வெறும் இரண்டே இரண்டு விழுக்காடுதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணை, ஒரு சொத்தாகப் பாவிக்கும் மனப்பான்மை நம் நாட்டு மக்களுக்கு உண்டு. பெண்களை உயிருள்ள ஜீவன் என்று நினைப்ப தில்லை. அதனால்தான் வரதட்சணை என்ற ஆரியக் கலாச்சாரமே இங்கு புகுந்தது.

பெண்களைப் பெற்றவர்கள் ஏன் பெற்றோம் என்று கண்ணீர் விடும் கொடுமை இந்தப் பாரத புண்ணிய பூமியில்! தான்

பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படு வதும் இந்தச் சுமையால்தான்! மணமகன் டாக்டராக இருந்தால் அதற்கொரு தொகை, வெறும் ஆசிரியராக இருந்தால் தொகையில் கொஞ்சம் சலுகை.. - இத்தியாதி இத்தியாதி விலைவாசிப் பட்டியலை (மார்க்கெட் நிலவரம்) ஆண் ஆதிக்க உலகம் கையில் வைத்துள்ளது - வெட்கக்கேடு!

பெண் என்றால் திருமணம் செய்து கொடுத்து விட்டாலே போதும்.. அவருக்கு ஏன் சொத்து பத்துகள் என்று நினைக்கிற இந்துத்துவ மனப்பான்மை உள்ளவரை பெண்ணுலகம் தலை நிமிர்ந்திட முடியவே முடியாது.

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை கல்வியே! இந்த உரிமையை ஈட்டித் தருவதற்காக - இந்தப் பிரச்சினைகளை மய்யமாக கொண்டு - அதனை ஓர் இயக்கமாகவே நடத் தினார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமைபற்றி, 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமையில், நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குக் கல்வி உரிமை; இராணுவத்தில் கூட பெண்களுக்குப் பணிகள், என்று 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மா னத்தை, நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முதல், பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, மேற்கொண்டது திராவிடர் இயக்கமே.

சமூகத்தில் உண்டாக்கப்பட்ட விழிப்புணர்வே, பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைக்கான சட் டங்கள், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணம்.

பெண்கள் சொத்துரிமைப் பற்றிய மசோதாவை, மய்யப்படுத்தியே சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய நேர்ந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கும் சொத்துரிமைக்கு வழி வகுக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, நடைமுறையில் எந்த அளவுக்கு, அது செயல்பாட்டில் இருக்கிறது, என்பது கேள்விக்குறியே!

இந்தச் சூழலில் விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மகளிர் முன்னேற்றத் திசையில் சிறப்பானதோர் மைல் கல்லே!

சட்டம் வந்தால் மட்டும் போதாது - நடை முறையில் எந்த அளவுக்குச் செயற்பாட்டில் இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம்தான் மிக மிக முக்கியமாகும்.

சட்டத்தைத் திராவிடர் கழகம் கை தட்டி வரவேற்கிறது.
Nandri : Kavignar Kali.Poongundran

Wednesday, August 28, 2013

சபாஷ், மகாராஷ்டிர அரசு !!!!

 சபாஷ், மகாராஷ்டிர அரசு !!!!

பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்

மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய் ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளன.

மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர் முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர் புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா தபோல் கர் கூறினார்.

Wednesday, August 21, 2013

உழைப்பை திருடும் இந்து பார்ப்பன மதம்


அடுத்தவன் உழைப்பை திருடும் இந்து பார்ப்பன மதம்

தரிசன நுழைவு கட்டணம்
முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
இலவச நுழைவு

அர்ச்சனை சீட்டு {கட்டணம்}

மொட்டை சீட்டு{கட்டணம்}

திருவிளக்கு பூஜை கட்டணம்

அபிஷேக கட்டணம்

இது போதாதுக்கு உண்டியல்

அதும் போதாது என தர்ச்சனை தட்டு வருமானம்

இன்னும் விலையேற்றமாம்

கடவுள் பொதுவானது என்று யாரோ சொன்னதாக
நினைவுக்கு இருக்கின்றது

பொதுவானவருக்கு வருமானம் ஏன்?


பழநி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ராமேஸ்வரம் கோதண்டராமசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் அர்ச்சனை கட்டணம் ஐந்து ரூபாய் என்பது 10ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, திருமஞ்சன அலங்காரம், முத்தங்கி சாத்துபடி என சிறப்பு பூஜைகளின் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணம் 250 ரூபாய் என்பது 500 ரூபாயாகவும், 500 ரூபாய் என்பது ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்க, வெள்ளி தேர்களை இழுப்பதற்கான குறைந்த பட்ச கட்டணம் 1,500 ரூபாய் என்பது 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து அதற்கான ரசீது புத்தகங்கள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில்களுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலும் ஊழியர்கள் பயன் அடையும் வகையில், கோவில்களில் பூஜை கட்டணம் அனைத்தும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனை கட்டணத்தை உயர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிற கட்டணங்களை ஏரியாவுக்கு தக்கபடி கோவில் நிர்வாகமே உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதில் சில கோவில்களில், நிர்வாக காரணங்களுக்காக கட்டண உயர்வு டிசம்பர் 1 முதல் அமல் படுத்தப்படுகிறது. தற்போதைய அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயில் பூஜாரிகளுக்கு 60 பைசா வழங்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வுக்கு பின் பூஜாரிகளின் பங்கு 1.60 ரூபாய் வழங்கப்படும். சிறப்பு நிலை கோவில்களில் பூஜாரிகளுக்கு நான்கு ரூபாய் வரை பெறுவர்.


ஆடி வெள்ளி

ஆவணி ஞாயிறு

புரட்டாசி சனி

கார்த்திகை திங்கள்

ஐப்பசி புதன்

மார்கழி திங்கள் முழுவதும்

தை மாசி பங்குனி சித்திரை வைகாசி என
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாளை
விசேஷ நாளாக வைத்து
தமிழனின் பணத்தை சுரண்டுகின்றான் பார்ப்பான்
பார்பன இந்து மதம்

மாதம் முழுக்க உழைத்து சம்பாதிக்கும் பணம்
வாரம் வாரம் ஒரு பண்டிகையை காரணம்காட்டி அவனின் உழைப்பில் வந்த பணத்தை திருடும் திருடந்தான் பார்ப்பான் பார்ப்பன இந்து மதம்


திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.

செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம்.

வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம்.

வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம்

சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம்.

முன்னேற்ற பாதையை கூட மூட நம்பிக்கையால் தமிழன் பின்பற்றுகின்றான் என்றால் அவன் சரியான வழியில் செல்லவில்லை என்றுதான் அர்த்தம்

வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி விரதங்கள் எனவும்

ராகுகாலம் என்று

ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை. தமிழனை முடக்கியும்

எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ…

கிழமை பகல் நேரம்இரவு நேரம்

ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00


கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாதம் தேதிகள்

சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19

மணி,
கிழமை,
தேதி,
மாதம்,
திசை

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா முடியவில்லை
இதையும் தாண்டி தமிழன் முன்னேறிவருகையில்
படிப்பில் அவனுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது

தன் மானம் உள்ள தமிழர்களே சிந்தியுங்கள்
உங்கள் உழைப்பு வேறு வழியில் மதம் கடவுள் என்னும் போதையால் இன்னொருத்தவனால் சுரன்டப்படுகின்றது எச்சரிக்கை

-ஈரோட்டு பூகம்பம்-
237

Tuesday, August 20, 2013

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை.

குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை.

 
சென்னை: குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. யாராவது நெருப்பை வைத்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கர்ணனின் குழந்தை ராகுல். குழந்தையின் உடல் தானாக தீப்பற்றி எரிவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இரண்டரை மாத குழந்தையின் உடலில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அதன் பெற்றோர்கள் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் குழந்தை காணப்பட்டது. இதனையடுத்து குழந்தை ராகுலுக்கு விழுப்புரம், புதுச்சேரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தானாக தீப்பிடித்து எரியவில்லை... யாரோ எரித்துள்ளனர்... டாக்டர்கள் தகவலால் பரபரப்பு அரிய நோயால் பாதிப்பு குழந்தையின் சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நலப்பிரிவு தலைவரும், மருத்துவமனை துணை கண்காணிப்பாளருமான டாக்டர் நாராயணபாபு முதலில் குழந்தையை பரிசோதித்து குழந்தைக்கு ‘ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்' என்ற உடலில் தானாக தீப்பற்றிக்கொள்ளும் அதிசய நோய் இருப்பதாக கூறி இருந்தார். 30 வகை டெஸ்ட் இதனையடுத்து குழந்தையின் உடலில் இருந்து ரத்தம், சிறுநீர், மற்றும் தோல் ஆகியவற்றில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வு முடிவுகள் ஆய்வு முடிவுகள் குறித்தும், குழந்தையின் தற்போதைய நிலை குறித்தும் டாக்டர் நாராயணபாபு கூறுகையில், "குழந்தை கடந்த 12 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதுவரை குழந்தையின் உடலில் தீப்பற்றி எரியவில்லை. குழந்தையின் தோல் ஆராய்ச்சி முடிவு உள்பட அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்து விட்டன. எல்லா முடிவுகளுமே சாதாரணமாகத்தான் உள்ளன. அசாதாரண அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்று கூறினார். தானக தீப்பிடிக்க வாய்ப்பில்லை எனவே முன்பு கூறியது போல "ஸ்பொன்டேனியஸ் யூமன் கம்பஸ்டன்" என்ற உடலில் தானாக தீப்பற்றிக் கொள்ளும் அதிசய நோய் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவர் கூறினார். தீப்புண்களுக்கு சிகிச்சை குழந்தை எங்களிடம் சிகிச்சைக்கு வரும்போது, தீப்புண் காயங்களுடன் வந்தது. அதற்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குழந்தையின் ஆய்வு முடிவுகளில் எந்த வித பிரச்னைகளும் இல்லை. தீ பற்ற வாய்ப்பில்லை குழந்தையின் பெற்றோர் தான் அதன் உடலில் தானாக தீப்பற்றி எரிந்ததாக கூறி உள்ளனர். ஆனால் இங்கு இதுவரை அது போன்ற சம்பவம் நிகழவில்லை. எனவே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று மருத்துவமனை டீன் டாக்டர் ராமகிருஷ்ணனுடன் பேசி முடிவு செய்வோம். 24 மணி நேர கண்காணிப்பு குழந்தை வீடு திரும்பிய பிறகு, அங்குள்ள தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் மூலம் குழந்தையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்வோம். மேலும் மாதம் ஒரு முறை குழந்தையை இங்கு கொண்டுவந்து பரிசோதனை செய்வோம்" என்றார். நீடிக்கும் மர்மம் குழந்தையின் உடலில் தானாக தீப்பிடித்து எரிவதற்கு வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சாகவே உள்ளது. எனவே குழந்தையின் உடலில் தீப்பிடித்தது சூனியத்தினாலா? அல்லது சதியினாலா? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குடும்ப வன்முறையா? குழந்தையின் உடலில் வேண்டுமென்றே யாராவது தீவைத்து கொடுமைத்தியுள்ளனரா என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டால் தான் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டு உண்மை வெளியே தெரியவரும்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/20/tamilnadu-tn-s-self-combusting-baby-actually-a-victim-of-domestic-abuse-181633.html

Sunday, August 18, 2013

குளியலறையில் ஒரு பூரான்........!

குளியலறையில் ஒரு பூரான்........!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
புகை வண்டி ஊர்ந்து வருதலைக் கவனித்ததுண்டா? மனது நிறைந்த கவிதை நிகழ்வு அது. குறிப்பாக வளைவில் காணும் நிகழ்வு....ஒரு பருவப்பெண், நாணம் அவள் உடல் முழுவதையும் கபளீகரம் செய்ய, ஒவ்வொரு அங்கமும், கோணி நடந்து வருவாளே ......அது போல ஓர் வெட்க உணர்வை நானும் உணர்ந்திருக்கிறேன். மரங்களிலும், பறவைகளிலும், பூச்சியினங்களிலும் அழகுணர்வை நான் மட்டும் காணவில்லை. ஆழ்வார்கள் கண்டார்கள், சித்தர்கள், நாயன்மார்கள் என பட்டியல் நீண்டு, சலீம் அலி, வண்ணதாசன், தியோடர் பாஸ்கரன் என போய்கொண்டேயிருக்கிறது. பாம்புகள், பூரான்கள் போன்றவை ஊர்ந்து வருதல் கவனத்திற்குரிய நிகழ்வு .அவைகளின் உடல் மொழி, அது அடுத்து செயல்படயிருக்கிற செயலை குறிக்கும்.
அந்தோணி சாரின் இருமகள்களும் அடுத்தடுத்த நாள் பூரான் கடிக்கு இலக்கானார்கள். முதல் நாள் மேரி அக்கா, இரண்டாம் நாள் சரண்யா. ஒருவர் தொடையிலும் மற்றவர் முதுகிலும் தாக்குண்டார்கள். மிக்கடுமையான வலியும், வீக்கமும் இருப்பதாய் அவர்கள் அழுது கொண்டே கூற, வீட்டில் உள்ள ஆடவர்கள் பூரான் வேட்டையில் ஈடுபட்டார்கள். தாமஸ் சார் அவர்களுடைய அண்ணன். எனக்கு கணிதம் மற்றும் வரலாறு-புவியியல் ஆசிரியர். அவருடைய அந்தரங்க சிஷ்யனான எனக்கு, பலவித சலுகைகள் உண்டு. அவருடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிப்பழகலாம், அவ்வப்போது அவர் கொணரும் தின்பண்டங்களை பகிர்ந்துண்ண அனுமதி ,நான் விரும்பும் செடிகளை தாராளமாக பிடுங்கித் தருவார். அதைவிட முக்கியமாக பரீட்சைக்கு முதல் நாளே சில கேள்விகளை தந்து, என்னை படிக்க வைத்து மறுநாள் தேர்வில் உறுதியான பாஸை வழங்கி கௌரவிப்பார். என் அண்ணனின் கிரிக்கெட் டீமில் பிரதான துல்லிய ஃபாஸ்ட் பவுலரும் அவரே. அன்று அவரது தம்பி என்னை அண்ணன் அழைப்பதாய் கூறி அழைத்துப் போய் அவர்களோடு தேடுதல் வேட்டையில் ஈடுபட பணித்தார். மேரி அக்காவின் பாட்டி, சேசுவே எந்தப் பாவமும்  அறியாத எங்குடும்பத்துக்கு எதுக்கய்யா இந்த சோதனை என ஒரு புகைப்படத்திற்கு முன் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தார். தன் இரு உள்ளங்கைகளும் நமக்கு தெரியும் படி காண்பித்து, தனது இருதயத்தை முள்ளாள் வளைத்துக் கட்டியும், அழாமல் நம்மை சோகமோடு பார்க்கும் ஏசு கிறிஸ்து அப்படத்தில் வரையப்பட்டிருந்தார். 
அடுப்பறையின் கழிவுப்பாதையில், இறுதியில் கண்டறியப்பட்டது அந்த பழுப்பு நிறப் பெரும் பூரான். அதன் ஊர்ந்து செல்லும்அழகும், தான் கொல்லப்படப்போகிறோம் என முன்னமே உணர்ந்தது போன்று பதட்டப்படாத செய்கையும் என்னை ,அதனை கவனிக்கத் தூண்டியது. பொட்டப்புள்ளையாடா அது...உத்துப்பாக்குற ...ஓங்கி அட்றா... என சார் உத்தரவிட்ட மறு வினாடி என் செருப்பால் தாக்குண்டு மாண்டு போனது. உண்மையில் கடித்தது அதுதானா என்ற சந்தேகம் இன்று வரை தீரவில்லை. 
கணுக்காலிகள் குடும்பத்தை சேர்ந்த பூரான்கள் 8000 வகை உள்ளதாய் கணக்கிடப்பட்டாலும் 3000 மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ,இந்தியாவில் உள்ளவற்றில்  4 வகை மட்டுமே மிகத் தீவிர விஷம் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் காலிகள் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் 32 கால்கள் மட்டுமே கொண்டவை. இதன் உடலமைப்பு மிகுந்த விசேஷம் கொண்டவை. 7 முதல் 11 அடுக்குகளாய் பிரிக்கப்பட்டிருக்கும் உடலில் முதல் கட்டில் கால்கள் கிடையாது. மாறாக உணர்வுக் கொம்புகள் போன்ற இரு கவ்வையாக குழாய் அமைப்பு இருக்கும். இதுவே விஷத்தை உட்செலுத்தும் உறுப்பு. இரையையோ அல்லது தனது இலக்கையோ கண்டறிந்த பின் இந்த இரு கவ்வையால் கவ்வி, அது கொண்டே தோலை துளைத்து, விஷத்தை உட்செலுத்தும். தாக்குதலுக்கு உள்ளான இரை, சிறிது நேரத்தில் மயக்கமுற்று, தன் செயல்பாட்டை இழக்கிறது. அப்போது, இவை அவற்றின் உடலை நார்நாராக கிழித்து உண்ணத் துவங்குகின்றன. விஷம் ஏற்றி.... புலால் மட்டுமே உண்ணும், ஊர்ந்து செல்லும் உயிரிகளில் பூரானும் ஒன்று என்கிறார் ஃபார் கெயின்ஸ்டீன். இவர் கணுக்காலிகள் குறித்த ஆய்வில் ஈடுபடும் கனடா நாட்டு விஞ்ஞானி. மனிதனுக்கு, இதன் கடி மிகுந்த வலியை மட்டுமே ஏற்படுத்தும். 
பூரான்கள் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றன. மர இலைகளின் அடிப்பாகம், மக்கிய பொருட்கள், செடி ,தழைகள் போன்றவை இதன் வசிப்பிடம். என் மாடித் தோட்டத்தில் ஏராளமான பூரான்கள் உண்டு. செடிகளைத் தாக்கும் சிறு பூச்சிகளை இவை உண்பதால் ,உழவர்களின் நண்பனாக இது கருதப்படுகிறது. குறிப்பாக மண்புழுவின் குட்டிகளை தாக்க வரும் சிவப்பு எறும்புகளை உண்டு, மண்புழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது. 
அமேசான் காட்டில் காணப்படுபவை 30 செ.மீ நீளம் கொண்டதாகவும், பாம்பு, எலி, அணில், சிறு பறவைகளை வேட்டையாடி உண்பதாகவும் உள்ளன. 1875களில் அமெரிக்காவில் இது அறிமுகப்படுத்தப்பட்டதாய் ஒருகுறிப்பு கூறுகிறது. ஆனால் இது குறைந்தது 400 ஆண்டு பழமையான தாக இருக்கலாம் என்கிறார் டாக்டர். ஸ்டீவ். இந்திய கிராமங்களில்  , பாலூட்டும் தாய்மார்கள் உள்ள வீட்டில் அழுக்கு வாடை நிறைந்த இடங்களில், அவ்வாசனையை நுகர்ந்து  பூரான்கள் வரும் என்ற நம்பிக்கை உண்டு. இதன் வருகையை தவிர்க்க பூண்டு, பெருங்காயக் கலவையை ஆங்காங்கே தெளிப்பதை பார்த்திருக்கிறேன். தற்போதைய ஓர் ஆய்வில் அது நீல நிறம் கொண்ட துணிகளை ஒட்டி வருவதாக கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்த ஆண்களும், ஆஸ்திரேலியாவில் நீல நிற உடை அணிந்த பெண்களும் வீட்டில் அதிக பூரான் தாக்குதலுக்கு ஆளானார்கள். அந்த நாடுகளில் இவைகளை அழிக்க பெரும் கம்பெனிகளே உள்ளன. அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை தந்து தாங்கள் உதவ தயாராக இருப்பதாய் விளம்பரம் செய்கிறார்கள். 
பூரான்கள் கும்பலாக வாழ்பவை. அங்கு தலைவன், தலைவி போன்ற அதிக பகிர்வுகள் கிடையாது. ஏனெனில் இங்கு காதலோ, காமமோ கிடையாது. எனவே உடலுறவு என்ற நிகழ்ச்சியே நடைபெறுவதில்லை. குறைந்தது 5 ஆண்டுகள் வரை வாழும், பூரான்கள் இரண்டு ஆண்டுகளில் பருவமெய்கிறது. ஆண் தனது உமிழ்நீராலும் சிறு குப்பைகளை கொண்டும் கூடமைக்கிறது. இது தரைகளில் வாழும் சிலந்திகள் கட்டும் கூடு போன்ற தோற்றமளிக்கும். இந்தக் கூட்டில் தனது விந்துத் துளிகளை தெளித்து விட்டுச் செல்லும். தனது நுகர்வு குழாய் மூலம் உணர்ந்த பெண் அங்கு வந்து  பின்புறம் அமையப் பெற்ற கொடுக்குகளின் உதவியோடு விந்துக் குவியலை கூண்டோடு அள்ளிச் சென்று தனது இருப்பிடம் சேர்க்கும். பின் கருமுட்டைகளை அதன் மீது பீய்ச்சி, சில தினங்கள் காவல் இருக்கும். லார்வாக்கள் போல குட்டி பூரான்கள் உருவாகி வரும் வரை பெண் பூரானும், சமயம் ஏற்படின் ஆணும் காவல் காக்கும். சுமார் 40 குட்டிகள் பிறந்தாலும், மிஞ்சுவது பத்திற்குள் மட்டுமே . குட்டிப் பூரானும் தாயைப்போலவே விஷம் கொண்டவை.
இவைகள் கூட்டுக் கண் அமைப்பு கொண்டவை. குறைந்தது 10 என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே பார்வைத்திறன் கொண்டிருக்கும். அவையும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இரையையோ, எதிரிகளையோ தன் பார்வையால் அறிந்து கொள்வதை விட தன் உணர்வுக்குழல்கள் மூலமே அதிகம் அறிகிறது. துவக்கத்தில் இரு கால்களோடு பிறக்கும் இவை வளர வளர இவற்றின் அடுக்குகள்  ஒவ்வொன்றாக கூடும் ,கால்களும் கூடும். நன்கு வளர்ந்தவை 16 அல்லது 17 அடுக்குகளோடு காணப்படும். அசம்பாவித்தின் போது கால்கள் உடைந்தாலும், மீண்டும் வளரும் இயல்பு கொண்டவை. அதிக கால்களைக் கொண்டதால் இவைகளால் மிக விரைவாக ஓடி ஒளிய முடிகிறது. கால்களும் ,கொடுக்கும் பார்வைக்கு ஒன்று போல் இருப்பதும், முன்புற, பின் புற வேற்றுமை குறைபாடும், இரைகளை திக்குமுக்காடச் செய்கிறது. 
உடலில் ஏற்படும் அதிக வேர்வையும், வளர்ச்சிக்கு உதவும் மெழுகு போன்ற தோல் உரித்தலும், அதிக தண்ணீர் தேவையை உண்டாக்கும் எனவே இவை வெப்பம் நிறைந்த பகுதிகளை, பருவ காலம் தவிர பிற காலங்களில் விரும்புவதில்லை. ஆப்பிரிக்க பழங்குடிகள் இதனை சாத்தானின் சேவகர்கள் என்கிறார்கள். பூரான் கடியிலிருந்து காப்பாற்ற கந்த சஷ்டி கவசத்தின் மூலம் முருகன் உத்திரவாதம் அளிக்கிறான். சீனர்கள், வழக்கம் போல், மூட்டுவலி மருந்தை இதன் உடலிலிருந்து தயார் செய்கிறோம்  என கொன்று குவிக்கிறார்கள். இன்றும் மனித குலத்தால் வெறுக்கப்படும் இச்சிறிய ஜீவன் உண்மையில் புறந்தள்ள வேண்டிய உயிரினமே அன்று. 
kannan233@gmail.com

Sunday, August 11, 2013

அட, க(த)வுட்டுப் பூனைகளே!

அட, க(த)வுட்டுப் பூனைகளே!
><>><>><>><>><>><>><>><>

பார்ப்பனர்களுக்கு எப்போதும் பின்புத்தி என்பார் தந்தை பெரியார் அவர்கள். இன்றைய (8.8.2013) பூணூல் மலரான தினமலர் இன ஏடு அதனை, தான் போட்டுள்ள கேலிச் சித்திரம் - கார்ட்டூன் மூலம் நிரூபித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்கை மிரட்டுவதற்காக பூனை முகமூடியை அணிந்து, கலைஞர் என்ற புலி உருவம் கொண்டவர் டெசோ ஆர்ப்பாட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் - இலங்கைக்குப் போகக் கூடாது - இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி மிரட்டு கிறாராம். அதைக் கண்டு இது பூனைதானே என்று அலட்சியம் காட்டுகிறராம் பிரதமர். நான் (கி.வீரமணி) என்ன இப்படிச் சொல்லிட்டாரே என்று கலைஞருக்குப் பின்னால் நின்று கொண்டு கூறுகிறேனாம்!

நான் எப்போதும் கலைஞருக்குப் பின்னால் இருக்கும் உடன் பிறப்பு - (இரட்டைக் குழல் துப்பாக்கி) என்பதை நாட்டோருக்கு அவ்வேடு அறிவித்துள்ளது. எனக்குப் பெருமையே தவிர, சிறுமை அல்ல.

புலி உருவத்தை கார்ட்டூனிஸ்ட் போட்டு காட்டிவிட்டு (கலைஞரை -) பூனை முகமூடியைப் போட்டுக் காட்டலாமா? புலியைப் பூனையாகப் பார்த்தால் - பார்த்தவருக்குத்தான் பார்வைக் கோளாறே தவிர, கேடே தவிர - புலிக்கல்ல என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்குக்கூட விளங்குமே! அதோடு மிரட்டுவதற்காக என்றால் பூனை உருவம் போட்டவர் வேண்டுமானால், புலி முகமூடி போடுவாரே தவிர, பூனை முகமூடியா போடுவார்கள்?

அட அதிபுத்திசாலிகளே, இந்த அடிப்படை உண்மையைக் கூடவா புரிந்து கொள்ளத் தெரியாமல் கார்ட்டூன் வரைகிறீர்கள்? எங்களிடம் அனுப்புங்கள் சொல்லிக் கொடுத்தாவது அனுப்புகிறோம்!

ஆனால் ஒன்று, டெசோ ஆர்ப்பாட்டம் உங்களைப் போன்ற பூணூல்களை வெகுவாக குடைந்துள்ளது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. ஏனெனில் நீங்கள் ராஜபக்சேக்களின் மூதாதையர்கள் அல்லவா? உங்கள் வம்ச பரம்பரை என்பதால்தானே ஈழத் தமிழர்கள் வாழ்வினை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளீர்! திராவிடர்கள் புரிந்து கொண்டுதான் உள்ளார்கள்! எச்சரிக்கை!

- மதுரை டெசோ தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையிலிருந்து - 8.8.2013                                                                                                                                nandri : fb

கலைஞருக்கு அண்ணாவின் கனையாழி

கலைஞருக்கு அண்ணாவின் கனையாழி
----------------------------------------------------------------------
சென்னை மாநகர மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களை பாராட்டி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் "நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகைக் கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி. அந்த கணையாழியை வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்" என்று அண்ணா கலைஞரை பாராட்டி பேசியதை கண்ணதாசன் அவர்கள் தன் "வனவாசம்" என்ற நூலில் நானும் அதில் உழைத்தேன் , எனக்கு தரவில்லை கனையாழி, முதல் நாள் கருணாநிதி வாங்கி கொடுத்த மோதிரத்தை அடுத்த நாள் போட்டு அழகு பார்த்துகொண்டனர் என்று கீழ்த்தரமாக கலைஞரையும் அண்ணாவையும் சாடியிருந்ததை உண்மை என்று வக்காலத்து வாங்கும் தோழர்களுக்கு

கலைஞரின் பரமஎதிரி கூட ஒப்புக்கொள்ளும் விசயம் 'அவரின் கடின உழைப்பு'.
சென்னை மாநகர மன்றத் தேர்தலில் போட்டியிடேவே தயங்கிய தி.மு.கவை, அண்ணாவை சமாதானபடுத்தி கலைஞர் 90 இடங்களில் போட்டியிட வைத்தவர் . கலைஞர் அண்ணாவிடம் வெற்றியை பறித்து தருகிறேன் என சத்தியம் செய்து உழைத்த தேர்தல்.
அது தி.மு.க சந்தித்த முதல் தேர்தல்.தேர்தலில் அண்ணா முழுக்க நம்பியது கலைஞரின் உழைப்பை மட்டுமே. வாழ்வா ? சாவா ?தேர்தல் .
பெரியார் கூட எதிர்ணியில் இருக்கும் நிலை.

கலைஞரின் மூளையின் வீச்சு .சாம ,பேத ,தண்டம் அனைத்தும் உலகிற்கு உணர்த்திய தேர்தல். மாபெரும் காங்கிரஸ் இயக்கைத்தை, திமுக தேர்தலில் ஒன்றும் தேறாது என்று கருதியிருந்த அண்ணா முன்னால் 45 பேரை ஜெயிக்க வைத்து மண்ணைக்கவ்வ வைத்த கலைஞரின் அரசியல் ராஜதந்திரம் படிக்க பொறுமை போதாது.கட்சிக்குள் பிரச்னை வரும்போது, அண்ணாவிடம் சொல்லாமலே சமாளித்துவிட்டு, பிறகு அண்ணாவிடம் சொல்லும் போர்ப்படை தளபதி கலைஞர்.

கலைஞரும் அண்ணாவும் என்ன ஜெ ,சசியா ? அவரை மட்டும் சிறப்பிக்க ? கண்ணதாசன் நல்ல கவி,மனிதன், யாருக்கும் பயப்படாத நல்ல சிந்தனையாளன். ஆனால் மஹாகுடிகாரர் .அவரே ஒத்துக்கொண்டது & பெண் இல்லாமல் .......? உழைக்கவெல்லாம் மாட்டார். சுகவாசி. நான் அனுபவிக்காத போதை இல்லை உலகில் நான் அனுபவிக்காத நாட்டுப்பெண் இல்லை என சொன்ன ஒருவர் எப்படி உழைத்திருப்பார் ? எப்படி அவருக்கு கணையாழி அணிவிக்க முடியும் ? மற்றவன் எப்படி அனுமதிப்பான் ? கலைஞருக்கு அணிவித்ததை எப்படி மற்ற எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் ?கண்ணதாசன் தவிர ?யோசித்தால் புரியும்

#வனவாசம் - போதையில் எழுதப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் தொகுப்பு..!
                                                                                                                                                             nandri : surya born to win (fb)

பாரதிதாசன்

பாரதிதாசன் 
பாரதியாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நான் பணிபுரிந்துகொண்டிருந்த புதுச்சேரி வானொலியின் சார்பில், கவிக்கோமான் பாரதியின் எட்டயபுரம், கடையம், தென்காசி போன்ற ஊர்களுக்கு நேரில் சென்று சில ஒலிப்பதிவுகளைச் செய்யப் புறப்பட்டேன்.

முதலில் எட்டயபுரம். பாரதி வீட்டருகில் சில சிற்றுரைகள். நேர்காணல்கள், பின்னர் கடையம்.

பாரதியின் துணைவியார் செல்லம்மா, பாரதியின் மைத்துனி சொர்ணத்தம்மாவைச் சந்திக்கமுடிந்தது.

வற்றியமேனியும் வறுமையின் கோலமுமாக அவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலில் அவதியுற்றிருந்தார். "சுப்புரத்தினம் மகன்' என்று சொன்னேன்.

வாரியணைத்து ஆரத்தழுவி ஒரு குட்டித்திண்ணையில் அமரச்செய்தார். நோய்ப்படுக்கையில் இருந்தபடி, "சுப்புரத்தினம் மகனா? ரொம்ப சந்தோஷம்!

துஷ்டப் பையனாச்சே சுப்புரத்தினம். பாரதிக்கு அவனெல்லாம் செஞ்ச உபகாரம் கொஞ்சநஞ்சமா? அப்படிப் புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியை நாங்களே சாகடிச்சிட்டோம்னுதான் சொல்லணும்' கண்ணீர் வழிய சில சோக நிகழ்வுகளைச் சொல்லிமுடித்தார். சாதி மதக் கட்டுப்பாடுகளை மீறி பாரதி சமுதாயக் கேடுகளை உடைத்துக்கொண்டு புறப்பட்டதில் தம் குடும்பத்தாருக்கும் உறவினர்க்கும் எதிரியானார். எனவே புறக்கணிக்கப்பட்டார் என்பதை நன்கு உணர முடிந்தது.

ஒலிப்பதிவு முடிந்து ஊர் திரும்பும் வழியில் என்னோடு வந்த எட்டயபுரம் நரசிம்மன் என்கிற இசைவாணர்- நிலையக் கலைஞர் ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார். "உங்கப்பா முரடர்னும் முசுடர்னும் கடுங்கோபக்காரர்னும் சொல்றாங்களே!' என்றார்.

நான் சொன்ன விடை, "எட்டயபுரத்தாரின் மைத்துனி எடுத்த எடுப்பில் என்ன சொன்னார் பார்த்தீரா? "துஷ்டப்பையனாச்சே சுப்புரத்தினம்' என்று தொடங்கி பாரதிக்கு உபகாரம் செய்ததைக் குறிப்பிட்டார்களே! அதன் விளக்கம் என்ன?

நல்லதை ஆதரித்து உதவுதல். அதற்கு இடையூறாக ஏதேனும் எதிர்ப்பட்டால், அதை அடக்குதலின் பெயர் துஷ்டத்தனம்.


துடுக்கு, சினம், சிடுசிடுப்பு, முசுடு என்றெல்லாம் நாம் கருதும் சில முகங்கள் எப்போதெல்லாம் தோன்றுகின்றன என்பதை நான் நேரில் கண்டவன்;  உணர்ந்தவன்.'

இப்படி விளக்கம் அளிக்கத் தொடங்கிய நான் புதுச்சேரி வந்து அடையும்வரை பல நிகழ்ச்சிகளை எடுத்துச் சொன்னேன்.

உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லிக்காட்டவே இந்தத் தொடர்.

படித்து உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

ஆசிரியர் பணி முடித்து மாலை ஐந்தரை மணிக்கு வீடுவந்து சேருகிறார். காலை ஏழரை மணிக்கு பள்ளிக்குச் சென்றவர்; வந்த உடனே, அஞ்சல் ஏதாவது உண்டா என்பதை அறிந்து கொள்கிறார். நடுமுற்றத்தில்- சாய்வு நாற்காலியில் அமர்கிறார். அணிந்திருந்த "கோட்டை' யும் மேற்சட்டையையும் களைந்து சட்டையிடாத மேனியராய்க் காட்சி தருகிறார்.

அருகில், அம்மா வந்துநின்று களைந்துவிட்ட ஆடைகளை ஒரு கையில் பற்றிக்கொண்டு மற்றொரு கையில் சுவை நீர் சுடச்சுட அளிக்கிறார்.

ஆவலாய் அருந்தப் போகையில், "வாத்தியாரே!' குரல் ஒன்று அன்பு இழையோட அழைத்தது. உள்ளே வந்து நிற்கிறார் பச்சை உடையார்.

அருகில் கிடந்த கட்டை பெஞ்சை தரதரவென இழுத்து அப்பாவின் எதிரில் போட்டு, "காப்பி சாப்பிடறியா? சாப்பிடு சாப்பிடு' என்றார்.

அப்பாவுக்கு எரிச்சல்தான். என்ன செய்வது? பாரதி காலத்து  நண்பராச்சே பச்சையப்பர்.

சுவை நீரை அருந்திவிட்டு, "ஊம்?' என்ற கேள்வியை மட்டும் உதிர்க்கவும், பச்சையப்பர்தம் கைப்பையிலிருந்து சில தாள்களை எடுத்துப் படிக்கத் தொடங்கும்முன் நோக்கவுரை ஆற்றுகிறார்:

"காலையில அந்த ராம்பாக்கம் ரெட்டியார் வீட்டுக்குப் போனேனா! வாய்த்துடுக்கா ஒண்ணு கேட்டுட்டான்யா சுப்பு! என்ன பெரிய பாரதி!

அவுரு எழுதினதெல்லாம் பாட்டா? நீயும் அந்தாளுகூட சுத்தித்திரிஞ்சே! உருப்பட்டியா? அப்டின்னு எகத்தாளமாப் பேசிட்டான்.

உட்டுடுவனா? ஒடனே ஒரு கவி எழுதிப் பாடினேன்

பாரு. அசந்து போயிட்டானில்லே. நான் இப்ப படிக்கிறேன் சுப்பு நீ கேட்டு சொல்லுப்பா!'

நோக்கவுரை முடிந்து கவிதை வாசிப்பு!

ராம் பாக்கம் ரெட்டியாரே

ரயிலை நீர் பார்த்ததுண்டா?

யாம் அதில் பயணம் செய்தோம்

யாருக்கும் அது தெரியவில்லை!

பாரதிக்கு சிநேகிதன் நான்

யாருக்கதில் கஷ்டம் உண்டு!

ஊருக்கே சொல்லப்போறேன்

உனக்குமே ஆகட்டுமய்யா!

இந்த விதமான சில வரிகளை எடுத்துவிட்டார் பச்சையப்பர். அப்பாவின் உடலெங்கும் வியர்வை கொட்டிற்று. இவரின் பாட்டால் விளைந்த உணர்ச்சியன்று! சூடான சுவைநீர் அருந்தியதால்.

ஆனால் பச்சையப்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லை! சுப்புரத்தினமே அசந்துபோகும் அளவுக்கு நாம் எழுதிவிட்டோம் என்கிற பூரிப்பு.

இன்னும் அரைமணிநேரத்தில் இலக்கண வகுப்பு மாணவர் வந்துவிடுவார்கள்.  பச்சையப்பரோ ஓயாமழையாய்க் குறுக்கிடுகிறார்.

அப்பாவுக்குள் ஏதோ ஒரு கருத்து மின்னல்

"பழநி"ம்மா!'


அழைத்து நிறுத்துமுன் எதிரில் வந்து நிற்கிறார் அம்மா. அம்மாவுக்கும் புரிகிறது அப்பாவின் திணறல்.

அம்மா சொல்கிறார்."குளிக்கணும்னு வெந்நீர் விளாவிவைச்சிருக்கேன். ஆறிப்போகுதுங்களே!'

திடீர் வெடிகுண்டுதான் இந்தப் பொய். அப்பா வெகுசங்கடமாக எழுந்து, "பச்சையப்பா! உன் பாட்டு நல்லாவே இருக்கு. இன்னொருநாள் கேக்கட்டுமா போய்ட்டு வா!' என்று விடை வீச பச்சையப்பர் எழுந்து சுருள்கிறார்; மிரள்கிறார்; நகர்கிறார்; மெல்ல வெளியிற் செல்ல நழுவுகிறார்.

முரட்டுத்தனமோ மோதலோ நடைபெறாமல் அம்மா, தடுத்தாட் கொண்ட காட்சி இது.

அப்பா தப்பாக என்ன செய்து விட்டார்?

இடம், காலம், அறிந்து செயல்பட முடியாத பச்சையப்பர் தமது கவிதை ஆற்றும் திறனை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வந்து இறக்கிய நேரமே பொருத்தமானதில்லை. இவரின் கவிதா மேன்மையும் கைதட்டி வரவேற்குமாறில்லை.

பொறுமைகாட்டி சிக்கலை அவிழ்த்துக்கொண்டுவிட்டார் அப்பா!

அம்மா துணைக்கு வந்திராவிடில், என்னை அழைத்து இடைநிறுத்தி எப்படியாவது சமாளித்துக்கொள்ளுமாறு நிலையைச் சரிக்கட்டிவிடுவார் அப்பா.

பொதுவாகவே இவர்மீது சுமத்தப்படும் பழிக்கு இவர்தான் காரணம் என்று சொல்லிவிட முடிவதில்லை.

புரட்சிக்கவிஞர்- இந்தப் பெயர் தமிழ் இலக்கிய உலகில் பூ வடிவில் தோன்றிய பூகம்பம் என்று கூறப்படும். அணுக்குண்டும் அபயம் கேட்டு நடுங்கும்விதமான தோற்றம். நடையும், நிலநடுக்கம் தரும்விதமான அதிர்வு.

எப்போதும் அது எரிமலை. சூதுமதியினர்மீது தணல்குழம்பை வீசும். ஏதிலார்மீது எல்லையில்லாப்  பரிவுகாட்டும்.

இருபதாம் நூற்றாண்டின் உணர்ச்சிக் கடல். பழகிவிட்டால் பயனுறு இலக் கியப்பனுவல். நகைச்சுவைப் பெட்டகம்.

அவரை எவரும் நெருங்க முடியாது என்பது ஒருபுறக்கருத்து.

இன்னொரு புறம் அய்யோ, எடுப்பார் கைப்பிள்ளையாச்சே என்கிற குழைவும் குலுங்கும்.

இதற்கெல்லாம் அப்பாவா முழுப் பொறுப்பு ஏற்கமுடியும்?

எனக்குள் எழுந்த வினாக்கள் எண் ணற்றவை. ஒருசில காட்சிகளில் உண்மை நிலவரம் தேடுவோம்!

(இன்னும் நடப்போம்)                                                                                              நன்றி : மன்னர்மன்னன் (nakkeeran)

Tuesday, August 6, 2013

ஆணாதிக்கவாதிகள்

 

ஆணாதிக்கவாதிகள்

காதல் + வயது + தீர்மானிக்கும் உரிமை = நடைபெறும் விவாதங்களை முன்வைத்து:

காதல் வருவதற்கான வயது எது என்று சட்டம் ஒரு நாட்டில் அமுல்படுத்த முடியுமா? ராமதாஸ் போன்ற பிற்போக்குவாதி பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதும், சாதி கலப்பு மணத்தை மறுப்பதும், 21 வயதிற்கு உட்பட்டவர்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் பெற்றோர் அனுமதி தேவை என்பதும், பண்ணை / அடிமை முறையின் ஆளுமையே தவிர, மக்களாட்சியில் பேசும் ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கையாக இருக்கவில்லை. தலிபான் மனநிலை வாய்த்த இந்துத்துவ வெறியும், சாதி வெறியும் மிகுந்த ஒருவரால் காதல் என்பதை எப்படி மதிப்பீடு செய்ய முடியும்?

'படிக்கிற வயதில் படுப்பதற்கு அரிப்பெடுக்கும் பொட்டைச்சி' என்பதை தவிர...

காதல், காமம், கிளர்ச்சி ஒரு மனிதனின் தனிப்பட்ட உணர்வு. ஐரோப்பா / அமெரிக்காவில் 13 வயது பெண் தனது சக மாணவனோடு காதல் கொள்வதும் முத்தமிட்டுக் கொள்வதும் அவளது / அவனது தனிப்பட்ட உணர்வுகளாக பார்க்கப்படுகிறது. இதை பள்ளிகளோ அல்லது பெற்றோர்களோ கண்டிப்பதில்லை. கண்டிப்பவர்களுக்கு சிறை தண்டனையை வலியுறுத்துகிறது சட்டம்.

காதலை ஏற்பதா? மறுப்பதா? என்பதையும் தாண்டி ஏன் ஒருவனுக்கு / ஒருத்திக்கு காதல் வருகிறது? காதலின் அடிப்படை காம உணர்ச்சி தூண்டல் எந்த வயதில் வருகிறது? அதை எப்படி அணுகுவது போன்ற விளக்கங்களை ஐரோப்பிய பாட நூல்களில் வருவது போல் செக்ஸ் கல்வியை கொண்டு வரும் முறையே காதல் குறித்த அடிப்படைகளை இளைய சமூகத்தினருக்குள் புரிதலை உருவாக்கும்.

அதுவரை காதல்களை தமிழ் சமூகத்திற்கு சினிமா கற்றுக் கொடுக்கும். அங்கே காதலர்களுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும் நேரத்தில் சாதியம் ஆராயப்பட்டு கோடாரிகள், கத்திகள் பேச ஆரம்பிக்கும். தற்கொலைகள், படுகொலைகள், கெளரவ கொலைகள், கலவரங்கள் உற்பத்தியாகும்.

உற்பத்திக்கான காரணங்களை ஆராயாத சமூகம் எப்படி அதில் இருந்து மீளும்?

- தமிழச்சி
06/08/2013

ஜாதி வெறியன்

 ஜாதி வெறியன்
செய்தி: //"நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும்...படிக்க வேண்டும்...வேலைக்கு போக வேண்டும்...3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ் மட்டும்தான். - ராமதாஸ் //

சென்ற தேர்தலில் வன்னியர்களாலேயே ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாதபடி புறக்கணிக்கப்பட்ட ராமதாஸ், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கான பிரதிநிதியாக பேசுவதே கேவலமான அரசியல்.

உழைக்கும் வன்னிய மக்களிடம் சாதிவெறி இல்லை. ராமதாஸ் போன்ற சுயசாதி தலைவர்களே உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறார்கள். நான் சாதி வெறியன் தான் என்பதில் என்ன பெருமிதம் இருக்கிறது? உன் சாதி வெறி, பொதுசொத்தை சேதப்படுத்தியது. கலவரத்தை ஏற்படுத்தியது. அப்பாவி மக்களை கொன்றது என்பதை தாண்டி என்ன சாதித்தது?

அரசியல் செய்வதற்காக வன்னிய சாதிவெறியை உருவாக்கும் ராமதாசின் வெறி, அரசியலில் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை 3 வேளை கஞ்சிக்கு அல்லோல்படும் உழைக்கும் வன்னியர்களுக்காக கொடுத்ததா? கொடுக்குமா?

ThirukKuRaL