தென்றல் (Thendral)

Tuesday, March 25, 2014

**கடவுள் இல்லை பாகம் 2**


கடவுள் எப்படி வந்தான் ?
அவரை யார் படைத்தது?

மதவாதிகளின் பதில்; கடவுள்
என்பவன் எதுவுமற்றவன்,
அவனை யாரும் படைக்க
முடியாது அவன் தான்
படைப்பாளி அவனுக்கு பிறப்பும்
இல்லை இறப்பும் இல்லை அவன்
உருவமற்றவன்
முதலில் இந்த பதில் இவர்களின்
மதத்திற்கு பொருந்துகிறதா என்று
பார்ப்போம்

இந்து மதம்

இது மதமா வாழ்க்கை முறையா
அதற்குள் எல்லாம் போக
வேண்டாம் , இந்து மதத்தின்
அடிப்படையான ரிக் வேதம் இதில்
இருந்து சில
வசனங்களை பார்ப்போம்

உண்மையில் யாரறிவார்? யார்
அதைச் சொல்ல முடியும் ?
எங்கிருந்து தோன்றியது சிரு
எங்கிருந்து ?
தேவர்களோ படைப்பிற்குப் பின்
வந்தவர்கள் அப்படியானால்
அது எப்படி உருவாயிற்று?
யாரறிவார்? (ரிக்:
பத்தாவது மண்டலம் 129
வது சூக்தம், பாடல் 6)

இந்த சிருஷ்டியின் தோற்றம் யார்
அதை உண்டு பண்ணவில்லை?
அப்பாலான ஆகாயமாக இதைக்
கண்காணிக்கும் அவனே அறிவான்
அல்லது அவனும் அறியான்.
(பாடல் 7)

தனிப்பட்ட ரீதியாக நான்
இதை ஆதாரிக்கிறேன்
இது நேர்மையான கருத்து (இந்த
கருத்தை மட்டும் தான்) ,
இப்போது பிரச்சனைக்கு வருவோம்
உண்மையில் இந்து மதம்
என்பது கடவுளை கற்பிக்கவில்லை
என்பது இந்த வசனங்கள்
நமக்கு தெளிவுபடுத்துகிறது
அதனால் இந்துக்களுக்கு இந்த
எதுவுமற்ற கடவுள்
கொள்கை ஒற்று போவதில்லை
இருந்தாலும்
ஒரு முரண்பாடு உள்ளது அது
என்ன என்பதை பார்க்கலாம்

சில இஸ்லாமிய அமைப்புகள்
கடவுள் என்பதை எல்லாம் மதமும்
ஒரே மாறி தான்
கற்பிக்கிறது இஸ்லாம் மனிதன்
தோன்றியதில்
இருந்து இருக்கிறது என்று தங்கள்
மதத்தை விற்க
முகம்மது ஏற்படுத்திய
ஒரு கோட்பாட்டை உண்மை என்று
நிரூபிக்க இந்துக்களும்
அடிப்படையில் இஸ்லாமியர்கள்
தான் என்று சில
வசனங்களை காட்டுகிறார்கள்

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி"
அவனை உருவகிக்க முடியாது,
அவன் தான் தோன்றி. நமது வணக்க
வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன்
.
உருவமற்ற அவனின்
கீர்த்தி மிகப்பெரிது. வானில்
உள்ள
அத்தனை கோள்களின்
இயக்கங்களையும்
தன்னகத்தே வைத்துள்ளவன்.
(தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம்
377)

இந்த வசனம் அவன் தான்
தோன்றி என்று சொல்கிறது
அதாவது அவன் தானாக
தோன்றினாம் , அவன் தோன்றினான்
என்றால் அதற்கு முன்பு என்ற
கேள்வி வருகிறது அதனால் இந்த
வசனமும் பிறப்பும் இறப்பும்
இல்லாத கடவுள் கொள்கையாக
இல்லை (அது மட்டும்
இல்லை அடிப்படையில் ரிக்
வேதம் தான் முதன்மை வேதம் அதன்
கருத்துடன் இந்த வசனம்
முரண்படுகிறது )
இந்த வசன ஆதாரங்கள் மூலம்
இந்து மதத்திற்கும் மேலே உள்ள
எதுவுமற்ற கடவுள் கொள்கைக்கும்
சம்மந்தம் இல்லை அதனால்
இந்து மத ஆர்வளர்கள் கடவுள்
இருக்கு என்று நிரூபிக்க அந்த
கருத்தை பயன்படுத்த
முடியாது (முதலில் தேவர்கள்
இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன்
நிரூபிக்க முயற்சி செய்யுங்கள் )

இஸ்லாம் மதம்

இது மதமா மார்கமா என்பதற்குள்
நாம் போக வேண்டாம் சில
வசனங்களை பார்க்கலாம்

குரான் 75:22-23
அந்நாளில் சில முகங்கள்
மலர்ந்து இருக்கும்
தமது இறைவனை பார்த்து கொண்டு
இருக்கும்

இந்த வசனங்கள் என்ன
சொல்கின்றது என்றால் சொர்கத்தில்
இறைவனை நாம் பார்க்கலாம்
என்று சொல்கிறது , இதில்
கேள்வி என்னவென்றால்
அவனுக்கு தான்
உருவமே இல்லையே அவனை
எப்படி பார்க்க முடியும் ,
அப்போது இந்த வசனம்
அல்லாவுக்கு உருவம்
இருக்கிறது என்பதை
தெளிவுபடுத்துகிறது (சில பேர்
வேண்டுமென்றால் மனிதன் இறந்த
பிறகு அவனும்
ஒன்றுமற்றவனாகிறான் அதனால்
பார்க்க முடியும் என்று சொல்லாம்
அப்படி சொன்னால்
பிறகு மனிதனுக்கும்
அல்லாவுக்கும் வித்தியாசம்
இல்லாமல் போய்
விடுகிறது அதுவும் இல்லாமல்
இது அர்த்தமற்ற விதன்டாவாதம்
ஆகிறது )

குரான் 69:17
இன்னும் மலக்குகள் (angles)
அதன் கோடியிலிருப்பார்கள்,
அன்றியும் , அந்நாளில்
உம்முடைய இறைவனின்
அர்ஷை (சிம்மாசனத்தை) எட்டு பேர்
(வானவர்கள்) தம் மேல்
சுமந்திருப்பார்கள்.

இந்த வசனம் என்ன
சொல்கிறது என்றால்
அல்லா இருக்கையில் உட்கார
கூடியவன் அப்படி என்றால் அவன்
ஒரு பொருள் ஆகிறான் ,
அவனை எட்டு பேர் சுமக்கிறார்கள்
அப்படி என்றால் அவன்
எடை உள்ளவன்
அப்போது அவனுக்கு கை கால்
எல்லாம் உள்ளது அப்போது தானே
இருக்கையில் அமர முடியும் ,
இந்த வசனம் மூலம் அல்லா உருவம்
உள்ளவன் என்று தெரிய
வருகிறது அதனால் இஸ்லாமிய
மதத்திற்கும் எதுவுமற்ற கடவுள்
கருத்து ஒற்று வரவில்லை (பெரு
வெடிப்புக்கு முன்பு என்ன
இருந்தது அதை யார்
நிகழ்த்தியது என்று கேட்க
உங்களுக்கு தகுதியே இல்லை )
மற்றும் வாழும்
நபி பிஜே போன்றவர்கள்
அல்லாவிற்கு உருவம்
இருப்பது உண்மை தான்
என்று ஒற்று கொண்டார்கள்

கிருஸ்துவ மதம்

இது ஒரே மதமா இல்லை பல
கிளைகளா என்பதற்குள் நாம் போக
வேண்டாம் தலைப்புக்கு செல்வோம்
இஸ்லாம் மதத்தை ஒரு விடயம்
பாதிக்கிறது என்றால்
அது கிருஸ்துவ
மதத்தை பெரியதாக பாதிக்கும்
காரணம் இஸ்லாமின் முதல் பாகம்
தான் கிருஸ்த்துவம்

Revelation 22:4
And they shall see his face; and
his name shall be in their fore
heads

இந்த வசனமும் புதுசாக ஒன்றும்
சொல்லவில்லை அதே தான்
அதாவது சொர்க்கத்தில் கடவுளின்
முகத்தை நீங்கள் பார்க்கலாம்
அதனால் இவர்களும் அந்த
பொதுவான கடவுள்
கொள்கையை தூக்கி பிடிக்க
முடியாது (இது மட்டும்
இல்லை ஏசு கடவுளா இல்லை அவர்
தந்தை கடவுளா இல்லை ஏசு தான்
எல்லாமா இல்லை ஏசு தெய்வ
தூதரா என்று பைபிள்
வசனங்களிலேயே ஒன்றுக்கொன்று
ஏகப்பட்ட முரண்பாடு )

உண்மையில் அந்த எதுவுமற்ற கடவுள் கொள்கை யாருக்கு சொந்தம் , அது வெற்றி பெற்றதா? பெறுமா? என்பதை முழு கட்டுரை படித்து தெரிந்து கொள்ளவும்

http://nathigamm.blogspot.in/2014/03/blog-post_23.html?m=1

குறிப்பு :கருத்தை பதிவு செய்பவர்கள் மாற்று கருத்தை ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள் தலைப்பை மாற்ற வேண்டாம்
— with நானே ராசா and 14 others.

Thursday, March 20, 2014

தோழர் பெ.மணியரசனாாின் மணியான கருத்துகள்..

=======================================
தமிழ்நாட்டில் ஒரு தெலுங்கானா உருவாக
மருத்துவர் இராமதாசு கால் கோள் நடத்தியுள்ளார்
=======================================
“தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி’’ என்ற புதிய அமைப்பைத் தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தொடங்கியுள்ளார்கள். இக் கட்சியை 3.3.2014 அன்று கோவையில் தொடங்கி வைத்து, அதன் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் மருத்துவர் இராமதாசு. அக்கட்சியின் கொடி தெலுங்கு எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாதித் தீவிரவாதத்தை உருவாக்கித் தமிழ்மக்களை சாதியால் கூறு போட்டு - சாதிக் கூட்டணி அமைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அடுத்த கட்டமாக தெலுங்கு பேசும் மக்கள், கன்னடம் பேசும் மக்கள் முதலியவர்களைத் தமிழ்மக்களிடமிருந்து பிரிப்பதற்காக சிறுபான்மை இனத் தீவிரவாதத்தைக் கையிலெடுத்துள்ளார்.
தமக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்வதற்காகக் குறுக்கு வழியில் பயணம் செய்து, சாதி, சிறுபான்மை இனம் என்ற சிக்கல்களைக் கிளப்புகிறார் மருத்துவர்.
உழைப்பாளித் தமிழர்களாக உள்ள வன்னிய மக்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களையும் நிரந்தரப் பகைவர்களாக்கும் திட்டத்துடன் “நாடகக் காதல்’’ என்ற போலி முழக்க மொன்றைச் சொல்லி - மோத விட்டார். இதன் விளைவாக வீடுகள் எரிந்தன தர்மபுரி மாவட்டத்தில்! கிழக்குக் கடற்கரைச் சாலையில் மனித உயிர்கள் பலியாயின.
மருத்துவர் இராமதாசு அவர்களோ அல்லது அவர் குடும்பத்தினரோ தமிழக அரசியலில் ஆதிக்கம் பெற ஆசைப்படுவதை அதற்காகக் கட்சி நடத்துவதை மட்டும் தனிப் படுத்திக் குற்றமாக நாம் கருதவில்லை. பற்பல தன்னல ஆற்றல்கள் தமிழின் பெயரால், இன்னும் பல காரணங்களின் பெயரால் தமிழகத்தில் குடும்ப அரசியல் நடத்திக் கொண்டுள்ள சூழ்நிலையில் மருத்துவர் இராமதாசும் அப்பாதையில் செல்வதை மட்டும் நாம் எதிர்ப்பதில் பொருள் இல்லை.
ஆனால் குடும்ப அரசியல் ஆதிக்கத்திற்காக இராமதாசு செயல்படுத்தும் உத்திகள் கொடூரமானவை. தமிழ்ச் சமூகத்தை நிரந்தரப்பகை முகாம் களாக ஆக்கி, தமிழ் மண்ணை சாதிகளின் சண்டைக்களமாக மாற்றக் கூடிய உத்திகள் அவை.
ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட மக்களையும், தீண்டாமைக் கெதிரான வன்கொடுமைச் சட்டத்தையும் பூச்சாண்டியாகக் காட்டி அவர்களை எதிர்ப்பதற்காக பார்ப்பனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சாதிச் சங்கங்களை ஒருங்கிணைத் துள்ளார் மருத்துவர் இராமதாசு. பார்ப்பனர்களைப் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளாது என்று 1990 களில் மருத்துவர் அறிவித்தார். இப்போது பார்ப்பன சங்கத்தை இணைத்து சாதிக் கூட்டணி உருவாக்கியுள்ளார்.
அடுத்து, தெலுங்கு பேசும் மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கும் தமிழ்மொழிக்கும் எதிராகத் திருப்பிவிடும் திருப்பணியில் இறங்கியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக் கெதிரான மேல்சாதி உணர்வைத் தூண்டிவிடுவதன் மூலம் மற்ற சாதிகளின் மக்கள் தம்மை பொதுத்தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்று மருத்துவர் இராமதாசு கருதுகிறார். அதேபோல் தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆதிக்கம்-- தமிழ் மொழி ஆதிக்கம் இருக்கிறது. தெலுங்கு பேசும் மக்களும் தெலுங்கு மொழியும் உரிமை இழந்துள்ளனர் என்று இட்டுக் கட்டுவதன் மூலம், தெலுங்கு பேசும் மக்கள் தம்மைப் பொதுத் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்று அவர் கருதுகிறார்.
மருத்துவர் இராமதாசு செயல் படுத்தும் இந்தப் புதிய உத்தி தமிழ் பேசும் சாதிகளுக்கும் தெலுங்கு பேசும் சாதிகளுக்கும் இடையே முரண்பாட்டைத் தீவிரப்படுத்தவே உதவும். இந்த முரண்பாடு தீவிரப்படும் போது, இராமதாசைத் தமிழ் பேசும் சாதிகளும் தெலுங்கு பேசும் சாதிகளும் கைவிடும் நிலையே உருவாகும். அவர் எதிர் பார்க்கும் பலன் அவருக்குக் கிடைக்காது.
தெலுங்கு பேசும் மக்கள் அயலரா?
வரலாற்றின் போக்கில் முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் குடியேறித் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, தமிழ் மொழியைத் தங்களின் கல்வி மொழியாக, அலுவல் மொழியாக ஏற்று, தமிழர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டு, சமஉரிமையோடு வாழ்ந்து கொண்டுள்ளார்கள் தெலுங்கு பேசும் மக்கள். (1956 -க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளியாரை இந்த வரிசையில் நாம் ஏற்கவில்லை)
அரசியல், பொருளியல் துறைகளில் தெலுங்கு பேசும் மக்கள் எந்த வகை ஒதுக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளாகவில்லை. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கு அரசியல், பொருளியல் துறைகளில் என்னென்ன பாதிப்புண்டோ அப்பா திப்புகள் தெலுங்கு பேசும் மக்களுக்கும் இருக்கின்றன.
தெலுங்கு பேசும் மக்கள் என்பதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை.
தமிழக அரசியலில் அமைச்சர்களாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, கட்சிகளின் தலைவர்களாக, தெலுங்கு பேசுவோர் பலர் செல்வாக்கோடு இருக் கிறார்கள்.
இவர்களின் தலைமையைத் தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தொழில், வணிகத்துறையில் முதலாளிகளாக - பெரு வணிகர்களாகத் தெலுங்கு பேசுவோர் பலர் உள்ளனர். அதே போல் நிலவுடைமையாளர்களாகவும் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களாகவும் இருக்கிறார்கள்.
“தெலுங்கு மக்களுக்கு சமூகப் பொருளாதார, அரசியல் அங்கீகாரத்தை இந்தக் கட்சி (தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி) பெற்றுக் கொடுக்கும் என்று அதன் தொடக்க விழாவில் மருத்துவர் இராமதாசு பேசியிருக்கிறார். (தினதந்தி 4.3.2014) அவர்களுக்கு இதுவரை இல்லாத எந்த அங்கீகாரத்தை இந்தக் கட்சி பெற்றுத் தரப்போகிறது?
”தமிழ்நாட்டில் தெலுங்கு மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும். தெலுங்கு அகடாமியைத் தொடங்க வேண்டும்’’ என்று அந்தப் புதிய கட்சி தீர்மானம் போட்டுள்ளது.
வீட்டில் தெலுங்கு பேசி, வெளியில் தமிழைத் தாய் மொழி போல் காலங்காலமாகக் கற்றுவரும் மக்கள் அவர்கள்.
அவர்களில் ஏராளமாகத் தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், தமிழ்க் கவிஞர்கள், தமிழ்ச் சிறுகதை தமிழ்ப் புதினம் போன்றவற்றை உருவாக்கும் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் ஆற்றலையும் வளர்த்து, தமிழையும் வளர்த்து வருகிறார்கள். அவர்களில் ஏராள மானோர் தமிழ்ப் பற்றாளர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் தெலுங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக வர வேண்டிய தேவை என்ன?
எல்லையோரங்களைத் தவிர்த்த உள்நாட்டுப் பகுதியில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியாது. தெலுங்கில் பேசுவார்கள் அவ்வளவே! எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாகத் தமிழ் நாட்டில் செயல் படுத்த வேண்டிய தேவை என்ன?
தெலுங்கு பேசும் மக்கள் வேறு இனம்; தமிழ் பேசும் மக்கள் வேறு இனம்; தமிழ் அவர்களுக்கு அயல் மொழி என்ற கருத்துகளை தமிழ் நாடு தெலுங்கு மக்கள் கட்சி முன்வைத்தால் அதற்கு எதிர்வினை தமிழ்பேசும் மக்களிடம் எழும்.
தமிழகம், தமிழர்களின் தாயகம்; தெலுங்கு பேசுவோர் வெளியிலிருந்து வந்த அயலார்; தமிழ் மொழி தமிழக மண்ணின் மொழி; தெலுங்கு அயல் மொழி; அதற்கு இங்கு அரியணை தரமுடியாது என்பார்கள். இந்த வாத எதிர் வாதங்கள் தேவையற்றைவை. எப் பொழுதும் போல் தமிழ் பேசும் மக்களும் தெலுங்கு பேசும் மக்களும் “நாம் அனைவரும் தமிழ் மக்கள்” என்ற உணர்வில் ஒற்றுமையாக வாழ வேண்டும்; இயங்க வேண்டும்.
தமிழக எல்லையோரங்களில் தெலுங்கு உள்ளிட்ட அண்டைத் தேசிய இனமொழிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதும் அண்டைத் தேசிய இனங்களின் தாயக எல்லையோரங்களில் தமிழ் கற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதும் தேவை. அது வேறு.
ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆட்சி மொழியாக்கிடக் கோருவது தவறு.
இரண்டாவது ஆட்சி மொழியாக்கும் கோரிக்கை தமிழர் தாயகத்தைச் சிதைக்கும் செயல்; தமிழ் மொழியை அதன் சொந்த மண்ணிலேயே இரண்டாந்தர நிலைக்குப் பின்னுக்குத் தள்ளும் முயற்சி.
மருத்துவர் இராமதாசு இப் பொழுது தூண்டிவிட்டுள்ள தெலுங்குத் தீவிரவாதம், எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு தெலுங்கானா உருவாகக் காரணமாய் அமைந்து விடும் ஆபத்துள்ளது.
தமிழ் - தெலுங்கு என்று வேறுபாடு பார்க்காமல் “தமிழ் மக்கள்” என்ற உளவியல் உருவாக்கத்துடன் வாழும் தெலுங்கு பேசும் மக்கள், மருத்துவர் இராமதாசின் தன்னல அரசியலுக்குப் பலியாக வேண்டாம். தெலுங்கு பேசும் மக்களைத் திரட்டித் தாங்கள் தலைவர்கள் ஆகலாம், பதவிகள் பெறலாம் என்று தெலுங்கு பேசும் தன்னலவாதிகள் சிலர் விரிக்கும் வலையிலும் தெலுங்கு பேசும் மக்கள் விழ வேண்டாம்.
தமிழ் பேசும் மக்கள் - தெலுங்கு பேசும் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்கும் பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது; பகை மொழியாக இந்தி மொழி இருக்கிறது. அவற்றின் ஆதிக்கத்தை வீழ்த்தித் தமிழ்மக்கள் அனைவரும் சமத்துவத்துடன் இறையாண்மை பெற்று வாழும் அரசுரிமைக்குப் போராடுவதே இன்றையத் தேவை.
மருத்துவர் இராமதாசு அவர் களுக்கு..
பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிச் செயல்பட்ட 1990 களில் “சமூக நீதிக் காவலர்’’ “தமிழினக் காவலர்” என்ற சிறந்த பட்டங்கள் உங்களுக்குச் சூட்டப் பட்டன. அவற்றை ஒவ்வொன்றாகக் கிழித்து எறிந்து விட்டு “சாதியக் காவலர், தெலுங்குக் காவலர்’’ என்று புதுப்புதுப் பட்டங்களை நீங்களே சூட்டிக் கொள்கிறீர்கள். உங்களின் இந்தப் போக்கு, தமிழ் நாட்டில் உங்களுக்கிருந்த பொது அங்கீகாரத்தை, - செல்வாக்கைச் சிதைத்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியும் தனது பழைய வலிமையை இழந்து விட்டது.
குடும்ப அரசியல் ஆதாயங்களுக்காக குறுக்கு வழிகளைத் தேடாதீர்கள். அவை தமிழ் மக்களைப் பகை முகாம்களாகப் பிரித்து விடுகின்றன. அந்தக் குறுக்கு வழிகள் நீங்கள் விரும்பும் பலன் களையும் உங்களுக்குத்தராது. பாட்டாளி மக்களுக்கும் பயன் பட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் பயன்படும் அரசியல் வழி காட்டியாய்ச் செயல்படுங்கள்.
=============================================
இக்கட்டுரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2014 மார்ச் 16-31 இதழில் வெளிவந்தது. கட்டுரையாளர் தோழர் பெ.மணியரசன் இதழின் ஆசிரியர் மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.

Monday, March 17, 2014

ஓலைகளின் வகைகள்

எழுத்தோலை.. அதன் வகைகள்
************************************
பாறைகளில் கிறுக்கி, பின்னர் கல்வெட்டுகளில் பொறித்து அதன் பின்னர் ஓலைகளில் தமிழர்கள் எழுதி வந்தனர். மேலும் செப்புப் பட்டயங்களிலும் பொறித்து வந்தனர்.
பின்னர் அச்சுருவில் வந்தது தமிழ். முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத் ஆவார்.
ஓலை வகைகள்..
***************
எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டனவாம்.
1) அமைப்பு ஓலைகளின் வகைகள்
********************************
நீட்டோலை:- திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.
மூல ஓலை:- ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.
சுருள் ஓலை:-ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன.
குற்றமற்ற ஓலை:-மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.
2) செய்தி ஓலைகளின் வகைகள்
******************************
நாளோலை:-தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.
திருமந்திர ஓலை:-அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார்.
மணவினை ஓலை:-திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது.
சாவோலை:-இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?


இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் போன்ற முட்டாள் தனம் முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வருகிறது. இதை மாற்றக் கூடாதது என்று சொல்கின்றோமே தவிர, உணவை, உடையை, மற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னோர்கள் பழமையைக் கடைபிடிப்பது கிடையாது.
விளக்கெண்ணெய் அகல் விளக்கைத் தூக்கிக் குப்பையிலெறிந்துவிட்டு மனிதன் மின்சார விளக்கைப் பயன்படுத்துகின் றானே தவிர, முன்னோர்கள் காலத்தி லிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!
இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோ தம் என்று சொல்லி மனிதனின் சிந் தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழையும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.
உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின்தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத்தறி விருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன்னோர் - பெரியோர் என்கிற காரியங்களில் பயன்படுத் தாததே என்பது புலப்படுகிறது.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவதாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவுவாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என்கின்றேன்.
குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக் கின்றனர். எதற்காக ஒருவன் மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் என்கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலை யெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனிதனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட் டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென் கிறோம்.
நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய் தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்பதால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக்கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானு மில்லை, பறையனுமில்லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!
இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை. இவற்றிலிருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.
சிந்திக்காததனாலே எவன் அதை உப யோகப்படுத்திக் கொண்டு வாழ்கின் றானோ, அவன்தான் நம்மையெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக்கின்றான். மற்ற வற்றில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத் திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.
நாம் கடவுள் இல்லை என்று சொன் னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.
பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்பவில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்றவனையெல்லாம் கொலை செய்திருக்கிறார்களே!
சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தனர்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல வேண் டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்றுதானே? துலுக் கன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?
1920இல் மலையாளத்தில் மாப்பிள்ளா கலகம் ஏற்பட்டதே மதத்தைப் பரப்புவ தற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டு களுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள் தான் உண்டு என்று சொன்னார். அதற் காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கை யற்றவர்களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக் கின்றார்கள்.
நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக் கிடையே இருக்கிற மடமை, முட்டாள் தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர் களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள் வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதேயாகும் என எடுத்துரைத்தார்.
10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971).
Like · ·

Wednesday, March 12, 2014

வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை: தமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர...

வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை: தமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர...: 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி துவங்கிய 15வது மக்களவை, 2012 டிசம்பர் 20ம் தேதிவரை, 12 கூட்டத்தொடரையும், 282 அமர்வுகளை நடத்தியுள்ளது. ...

கடல் நுரைகளும் என் கவிதையும் ...: ஆஸ்பித்திரி

கடல் நுரைகளும் என் கவிதையும் ...: ஆஸ்பித்திரி

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? - பெரியார்

உலக மகளிர் நாள் சிந்தனை
பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? - தந்தை பெரியார்
தற்போதுதான் நம் மக்களிடத்தில் நல்ல மன மாற்றமும், துடிப்பும் வருகிறது. இதுவரை நம் நாட்டுப் பெண்கள் எப்படி இருந்தனர் என்றால், அவர்கள் ஒரு ஜடப் பொருள் என்கின்ற அளவிற்குத்தான் வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் என்றால் அடிமை _- ஆண் சொல்கிறபடி கேட்க வேண்டியவள் - அப்படி நடந்து கொள்பவள்தான் உண்மையான பதிவிரதை என்று கூறப்பட்டார்கள்.
`பதிவிரதை என்ற சொல்லானது மிகவும் அயோக்கியத்தனத்தில் உருவான சொல்லாகும். ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து எவருக்கும் விட்டுக் கொடுக்கலாம். அதற்கு அந்தப் பெண் சம்மதிக்க வேண்டும். இதுதான் தர்மம் என்று எழுத்தில் மட்டுமல்ல, நடப்பிலும் இருந்து வந்தது.
******************************************
மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் _- என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.
அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும். `விடுதலை, 23.7.1971
********************************
நண்பர் தர்மலிங்கம் _- நிர்மலா ஆகியோர்களின் குழந்தைகளான அன்புமணி _- இராமச்சந்திரன் ஆகியோருக்குக் காதணி விழா. இவ்விழாவானது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்காதணி விழாவானது ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அழகு, அலங்காரம் என்கிற பெயரால் செய்யப்படுகிறது. இவ்விழாவானது மத சம்பந்தமானது. மத விழாவாகும்.
மற்றும் சொல்லவேண்டுமானால், ஜாதி சம்பந்த மானது. மத, ஜாதி சம்பந்தமுள்ளது. இது மதத்திற்கு ஒரு விதமாக, ஜாதிக்கு ஒருவிதமாக இருக்கிறது.
இது எதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தென்றால், எனக்குத் தெரிந்தவரை, பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதேயாகும். சாதாரணமாக எப்படி மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போட்டு அடக்குகின்றோமோ அதுபோன்று, பெண்களின் மூக்கிலே, காதிலே நகைகளைப் போட்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக ஆண்கள் அடிப்பதற்குக் கை தூக்கியதும், பெண்கள் கைகளைக் கொண்டு காதையும், மூக்கையும் மறைத்துக் கொண்டு முதுகைக் காட்டவேண்டும் என்பதற்காகவேயாகும். நகைகள் போடுவதும், அவர்களை அடிமையாக்குவதற்காகவேயாகும்.
நம் நாட்டைத் தவிர வெளிநாடுகளில் நகைகளே கிடையாது. மற்ற நாட்டுப் பெண்கள் மூக்கு, காதுகளில் ஓட்டை போட்டுக் கொள்வது கிடையாது.
நம் நாட்டில் சிலர் காதில் சிறிய ஓட்டை போட்டுக் கொள்வார்கள். அதில் வளையங்களைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த நகைகள் மார்பில் வந்து விழும். காது ஓட்டையையும், அணிகிற நகைகளையும் கொண்டு அவர்கள் ஜாதி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இப்படி ஜாதி, மதத்திற்காகவும், பெண்களை அடிமையாக்கவும் ஏற்படுத்தப்பட்ட இம்முறை யானது பின், பெண்கள் அழகிற்காக தாங்களாகவே விரும்பிச் செய்து கொள்ளும்படியாக ஆயிற்று. அவர்களிடையே பகுத்தறிவை எடுத்துச் சொல்லி மற்ற நாட்டு மக்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இம்முறையானது துலுக்கன் ஆட்சி இருந்தபோது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்தது என்று சொல்வார்கள்.
7-ஆம் தேதி நடைபெற்ற ஒரு மந்திரி வீட்டுத் திருமணத்தில் பெண்களின் அடிமைத்தனம் போவதற்காக நாம் இவ்வளவு தூரம் பாடுபட்டும் இன்னும் மந்திரிகளே திருத்தம் அடையவில்லை என்றும் குறிப்பிட்டேன். அந்த மந்திரி நமக்கு வேண்டியவர். பெண்களுக்குத் தாலி கட்டுவது, நாய்களுக்கு முனிசிபாலிட்டி லைசன்ஸ் கட்டுவது போன்றது. அவர்களது சிங்காரம், அலங்காரம் எல்லாம் அவர்கள் அடிமையை நிலைநிறுத்துவதற்காகவேயாகும்.
பெண்கள் முடியை வளர்க்காமல் கழுத்தோடு கத்தரித்துக் கொள்ளவேண்டும். விலையுயர்ந்த சேலைகள் கட்டாமல் லுங்கி கட்டவேண்டும். ஆண்களுக்கும், அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத வகையில் உடைகளிருக்க வேண்டும்.
----------------------------------(10.5.1971 லால்குடி வட்டம் பாய்ச்சூர் கடுக்காத் துறையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) - விடுதலை, 30.7.1971
*****************************
பெண்களை 20 வயதுவரை படிக்க வைக்கவேண்டும். பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக் கொள்ளவேண்டும். உலகில் மனித சமுதாயத்தைப் பற்றி எவனுமே சிந்திக்கவில்லை. வந்த பெரியவர்கள், இலக்கியங்கள் எல்லாம் பெண்களை அடிமையாக இருக்கவேண்டும். ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்று தான் சொல்கின்றன. பொது இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற திருக்குறள் கூட, பெண்களை இழிவுபடுத்துவதாக, அடிமைப்படுத்துவதாகவே இருக்கின்றது. மனித சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமானால், பெண்கள் அறிவுபெற வேண்டும். மனிதன் சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் பார்த்து நடக்காமல் தங்களின் அறிவைப் பார்த்து அதன்படி நடக்கவேண்டும்.
ஆண்களும், பெண்களும் பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவேண்டும். அரசாங்கம் இதற்கு ஏற்பாடு செய்ய ஏனோ தயங்குகின்றது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகினால்தான் அவர்கள் அனுபவம் பெற முடியும்.
வாழ்க்கையில் நாம் பிறருக்கு நம்மாலியன்ற உதவியைச் செய்யவேண்டும். வரவிற்கு அடங்கி வரவிற்குள் செலவிட்டுச் சிறிதாவது மிச்சம் செய்யவேண்டும். கடன் வாங்குவதால் மனிதன் தன்மானத்தையும், சுதந்திரத்தையும் இழக்க நேரிடுகிறது. பெண்கள் ஆடம்பரமாக வாழக் கூடாது. நிறைய நகை போட்டுக் கொள்வது உயர்ந்த விலையுள்ள உடைகள் அணிவது, சிங்காரம் செய்துகொள்வது கூடாது. சாதாரணமாக வாழவேண்டும்.
அரசாங்கத்திற்கு இன்னும் துணிவு வரவில்லை. துணிவு வந்தால் ஒரு பெண் மீது இத்தனை கிராம் தங்கத்திற்கு மேலிருக்கக் கூடாது என்று தடை செய்யவேண்டும். குழந்தை பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்று, தப்பினால் இரண்டு அதோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும். அரசாங்கம் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும். இரண்டிற்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் பிரமோசன் கொடுக்கக் கூடாது.
--------------------------------(22.8.1971 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) - `விடுதலை, 28.9.1971
*****************************
பெண்கள் 20 வயதுவரைப் படிக்கவேண்டும். கோவில்களுக்குச் செல்லக் கூடாது. உத்தியோகங்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது ஏதாவது தொழில் செய்ய வேண்டும். மேல்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். உத்தியோகத்திற்குச் செல்பவர்களைத் தவிர மற்றப் பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது கைத்தொழில் செய்து அதன்மூலம் தங்கள் வாழ்விற்குரிய வருவாயைத் தேடிக் கொள்கிறார்கள்.
நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு உள்ள பெண்கள் சிங்காரித்துக் கொள்வது கிடையாது. லுங்கி கட்டிக் கொள்கிறார்கள். மேலே சட்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் யாவருடனும் கலந்து பழகுகிறார்கள். தன் கணவனைப் பிடிக்கவில்லையென்றால், வேறு பிடித்த ஆணோடு சென்று விடுவார்கள். அங்கு அது குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வதால் அவர்களுக்கு உலக அறிவு வளர முடியாமல் போய்விட்டது.
---------------------------------------------------- `விடுதலை, 10.6.1971

ஜாதி என்பது சுத்தப் புரட்டு

ஜாதிப் பித்தலாட்டம் 

   ஜாதி என்பது சுத்தப் புரட்டு. அயோக்கியர்களால் கற்பிக்கப்பட்டு, முட்டாள்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, மானமற்ற மக்களால் நடைமுறையில் பின்பற்றச் செய்யப்பட்டு வருகிறது.

    மத சாஸ்திரப்படியாக நான்கு ஜாதிகள் சொல்லப்பட்டாலும், இவற்றுள் மூன்று ஜாதிகள்தான் பிறவியினால் இருப்பதாகச் சொல்லப்படுபவைகளாம். அவை மற்றபடி இரண்டாவது சத்திரிய, மூன்றாவது வைசிய, நான்காவது சூத்திரர்கள் எனப்படுபவையாகும். முதலாவது ஜாதி என்று சொல்லப்படும் பிராமண ஜாதி என்பது பிறவியால் ஏற்பட்டதல்ல என்பதோடு, பிறவியல் பிராமணன் என்பவனும் இல்லை. ஒரு மனிதன் பிராமணன் என்று சொல்லப்படுபவனுக்குப் பிறந்தவன் ஆனாலும் சூத்திரனேயாவான். அந்த சூத்திரன் என்கிற பிள்ளை உபநயனம் என்ற கருமம் செய்யப்பட்டு பூணூல் என்கின்ற முப்புரி நூல் அணியப்பட்ட பின்புதான் பிராமணன் ஆகிறான். அதனால்தான் பார்ப்பனர் தங்களைத் துவிஜர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இரு பிறவியாளர் என்று கூறுகிறார்கள்.

    அந்த அப்படிப்பட்ட இரு பிறப்பாளன் ஆன பிராமணன் என்பவனும், மற்ற ஜாதியார்களைப் போல் பிறவி காரணமாகவே எப்போதும் பிராமணனாய் இருப்பவனல்ல அவன் பிராமணன் செய்ய வேண்டிய சில கருமங்களைச் செய்யாததால், பிராமணத் தன்மையை இழந்து விடுகிறான். மற்றும் சில கருமங்கள்,காரியங்கள் செய்வதினாலும் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான். இதனால் பிராமணன் என்கின்றவன், சில காரியம், கருமம் செய்யாததனாலும், சில காரியங்கள் செய்வதனாலும் பிராமணத்தன்மையை இழந்து விடுகிறான் என்கின்ற தத்துவப்படிப் பார்த்தால் உலகில் பிறவிப் பிராமணன் இல்லை என்பதோடு, சில கருமத்தைச் செய்யாததாலும், சில கருமத்தைச் செய்வதாலும் பிராமணன் அல்லாதவனாக, பிராமணத் தன்மையை இழந்தவன் என்பதாக, ஆகிவிடுவதால் உலகத்தில் பிராமணன் என்பவன், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்பதாக எவனும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அன்றியும், இந்தத் தர்மப்படி உலகில் எவனும் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொண்டாலும், அவன் கண்டிப்பாக பித்தலாட்டக்காரனேயாவான். மக்களை ஏமாற்றி வஞ்சித்துப் பிழைக்கிற அயோக்கியனே ஆவான்.

      ஏன் இதை இவ்வளவு வலியுறுத்திச் சொல்லுகிறேன் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உலகில் நான்கு ஜாதிகள் இருந்தாலும், மத, சாஸ்திர தர்மப்படி இரண்டு ஜாதிகள் தான் இருக்கின்றன. அதாவது, பிராமணன், சூத்திரன் என்பவர்கள் தான் இருக்கிறார்கள். மற்ற இரண்டு ஜாதியான சத்திரியர், வைசியர் என்று சொல்லப்படும் இரண்டு ஜாதிகளும் கலியுகத்தில் அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதோடு மாத்திரமல்லாமல் அவர்கள் சூத்திர மக்களோடேயே சேர்ந்து விட்டார்கள். ஜாதி பிரிவு முறையில் சத்திரிய, வைசிய ஜாதி என்பதற்காக எந்தப் பாகுபாடும் செய்யவில்லை. ஆகவே, நான்கு ஜாதிகளில் இரண்டு ஜாதிகள் ஒழிந்துவிட்டன. அதாவது, பார்ப்பனர்களால் ஒழிக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள இரண்டு ஜாதிகளில், மத, சாஸ்திர தர்மப்படி பிராமணன் என்கிற ஜாதி இல்லாததினால் ஜாதி தத்துவப்படி உலகில் இந்துக்கள் என்பவர்களில் ஒரு ஜாதிதான் இருக்கிறது என்றாலும், அந்த சத்திரிய ஜாதியும், ஜாதி தர்மப்படி நடக்காததனால் அதுவும் (சத்திரிய ஜாதியும்) இல்லாமல் போனது என்றே சொல்ல வேண்டும்.

     மத, சாஸ்திர, தர்ம ஆதாரம் இல்லாமல் பிரிவினை செய்யப்பட்ட பஞ்சமர் (சண்டாளர்) என்று பிரிவினை செய்யப்பட்ட அய்ந்தாம் ஜாதியும் இன்று ஆட்சியின் பலனாக அழிக்கப்பட்டு விட்டபடியால், தாழ்த்தப்பட்ட வகுப்பு என்று அந்தக் குறிப்பிட்ட தன்மையும் இல்லாமல் போய் மற்ற ஜாதிகளுடன் சரிசம அந்தஸ்து கொடுக்கப்பட்டு விட்டது என்றாலும், இன்று பார்ப்பனர் என்னும் வகுப்பார் தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்கிறார்களே இது பொருந்துமா? நியாயமா? என்பது சிந்திக்க வேண்டியிருக்கிறது.

       தங்களைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேசத்தில் காட்டிக் கொள்வதன்மூலம்தான் சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அதில் நாணயமோ, யோக்கியமோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

       சங்கராச்சாரி என்பவரும் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொண்டு நம்மை தொட்டால் ஸ்நானம் செய்யவேண்டும், பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்கிறார். வ.வே.சு. அய்யர், சி. விஜயராகவாச்சாரியார் போன்ற பார்ப்பனர் நம்மை தொட்டு விட்டால் நம்ம வீட்டில் சாப்பிட்டு விட்டால் ஸ்நானம் செய்யவேண்டும் பிராயச் சித்தம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லி அந்தப்படி நடந்துகொண்டு வந்தார்கள், வருகிறார்கள். மற்றும் சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி), சதாசிவம் ஆகிய பார்ப்பனர் யார் வீட்டிலும் பஞ்சமர் (சண்டாளர்), ஜாதியார் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். தன் மகளை சூத்திரர்களுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார்கள். தானும் சூத்திர ஜாதிப் பெண், நாடகத்தில் நடித்துக் கொண்டு, பொதுப் பெண்டீர் குலத்தை சார்ந்து இருந்தவரை மணம் செய்து உடல் சம்பந்தம் வைத்துக் கொண்டும் இருந்து, உச்சிக்குடுமி வைத்துக் கொண்டும், பஞ்ச கச்சம் போட்டு உடை உடுத்திக் கொண்டும், தன்னை பிராமணன் என்றே சொல்லிக் கொண்டு மற்ற பிராமணருடன் உண்பன, தின்பன, கொடுத்தல், கொள்ளல் காரியங்களையும் செய்துகொண்டு, தன்னை பிராமணனாக நினைத்துக்கொண்டு மற்ற ஜாதியாருக்கு ஆசீர்வாதம் செய்துகொண்டு இருக்கிறார்கள். இவை மாத்திரம் அல்லாமல், இப்படிப்பட்டவர்கள் செத்துப் போன பின்பும் அவர்கள் இனத் தலைவர்கள் பிராமண பிரேதம் என்பதற்கு என்ன கர்மங்கள் மந்திரங்கள் உண்டோ அந்த சடங்குகளையும், அந்த ஜாதி சாஸ்திரிகளாலேயே செய்கிறார்கள்.

      இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு மனிதன் தன்னை பிராமணன் என்றும், மற்றவர்களைத் தனக்குக் கீழ்ப்பட்ட ஜாதி, கீழான ஜாதி என்றும் சொல்லுவதற்கு பார்ப்பனக் கூட்டத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை இழி ஜாதியான் என்று சொல்லிக் கொண்டு பூணூல் போட்டுக் கொண்டு இருந்தால் மாத்திரமே போதுமானதாக இருந்து வருகிறது.

    இதில் விசேசமான மற்றொரு காரியம் என்னவென்றால், மது அருந்துகிறான், மாமிசம் சாப்பிடுகிறான், கூட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொள்கிறான், பேர் போன விபசாரியை மனைவியாக, போகப் பெண்ணாகக் கொள்கிறான், அனுபவிக்கிறான்; இப்படிப்பட்டவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். பிராமணார்த்தத்திற்குச் சென்று பயன் பெற்று வருகிறான்.

    ஆகவே, நாட்டில் பொது மக்களை அயோக்கியர்கள், ஜாதி என்னும் பெயரால் மனதறிந்து பலர் ஏமாற்றி கீழ்மகனாக ஆக்கி சுயநலம் அனுபவித்து வருகிறார்கள்.
---------------------தந்தைபெரியார்- "உண்மை", 14.1.1973

கொத்துகிறது பார்ப்பனப் பாம்பு


திருவாளர் வைத்தியநாதய்யர் என்ற ‘சோ’ தயாரிப்புப் பானம் ஆர்.எஸ்.எஸ். பேர் வழி “தினமணி”யின் ஆசிரியராக வந்த நிலையில், பார்ப்பனியப் பாம்பு ஆயிரந்தலைகளைக் கடன் வாங்கித் தமிழர்களைக் கொத்தித் தீர்க்கிறது!
27.11.2009 நாளிட்ட “தினமணி”யின் வெள்ளி மணி தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் வெறிமணியாக ஒலிக்கிறது.
“அருமறையின் உட்பொருளே அண்ணாமலை’’ என்ற கட்டுரை ஒரு முழுப்பக்கத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் சமய வழிபாடு மற்றும் தமிழகத்திருமுறைகள் மூலம் வழிபாடு நடத்தும் தமிழர்களுக்கு அக்கட்டுரை பல நாம கரணங்களைச் சூட்டியிருக்கிறது:
நவீன பண்டிதர்
துன்மார்க்கர்
கீழோர்
பொறாமைக்காரர்
குரு துரோகி
மரண தண்டனைபெறுவர்
நரகம் போவார்கள்
கோபமும், சாபமும் கொந்தளிக்கிறது. மரத்துப் போன தோலை உடைய தமிழர்களுக்கும்கூட கொஞ்சம் சொரணையை ஊட்டும் தார்க்குச்சிகள் அவை.
பக்திப் போதை ஏறிக் கிடப்பவர்கள் தானே இந்தச் சூத்திரஆசாமிகள் எப்படி எழுதினால் என்ன? ஏறி மிதித்தால் என்ன ‘ரோஷம்’ பொத்துக் கொண்டா கிளம்பப் போகிறது என்கிற பொல்லா நினைப்பு இந்தப் புரோகிதக் கூட்டத்துக்கு!
அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழ்மீது சாணி வாரி இறைக்கிறார்கள்.
வேதத்தின் இருகண்கள் சைவம், வைணவம் என்று நிலை நிறுத்த வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மூலம் வேதம் என்பதுதான் இவர்கள் நிரூபிக்க முயலும் விவகாரம்.
சிவன்தான் எல்லோருக்கும் மூலக்கடவுள் அந்த வேதக்கடவுள்தான் திருமுறைகள் கூறும் சிவனும் என்று சாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் போன்றவர்கள் கால்களால் இடறித் தள்ளிய குப்பையைக் கும்பத்தில் வைத்துகும்பிடச் சொல்லுகிறது இந்தக் குடுமிகள் கூட்டம்.
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிப் பெண்களின் கற்பைச் சூறையாடினான் சிவன் என்று ஆரியம் கூறும் அந்த வேதியச் சரக்கை, வேதத்தின்மூலத்தை சைவம் ஏற்றுக் கொள்கிறதா?
“நம்முடைய சநாதன தருமத்துக்கு வேதங்களே அடிப்படை. இன்று நவீனப் பண்டிதர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் சிலர், ‘மறைகளே தேவை யில்லை’ என்று கூறிக் கொண்டு, ஆனால் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள சில கிரியை களை சைவத் திருமுறைகளின் மூலம் ஆற்றி, அதன் மூலம் வாழ்ந்து வருகின்றனர். இது சைவ சமயக் குரவர்கள் நால்வரும், ஏனைய சைவப் பெரியோர்களும் காட்டி யருளாததால் துன்மார்க்கம்’’ என்று இவ்வளவு பச்சையாகச் சாடுகின்றது அந்தக் கட்டுரை.
சைவ சமயக் குரவர்களும் சேர்த்துத்தான் சாடப்பட்டுள்ளனர்.
நமது தமிழன்பர்கள், சைவப் பெருமக்கள், சைவப் பக்தர்கள், நமது ஆதீன கர்த்தர்கள் “சிவசிவ’’ என்று கூறி, தீயவற்றைக் கேட்கக் கூடாது என்று கண்களை மூடிக் கொள்ளப் போகிறார்களா என்று தெரியவில்லை.
மூலம் என்று இவர்கள் சொல்லுகிற வேதங்களின் யோக்கியதை என்ன? தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும் அவற்றை நார் நாராகக் கிழித்து எறிந்திருக்கின்றனவே!
சோமபானம் குடித்து கும்மாளம் போடும் தேவர்கள், தேவாதி தேவனான இந்திரன் இவர்களின் யோக்கியதைகளை வேதங்கள் நிர்வாணமாகக் காட்டவில்லையா?
“அக்னியே! ஒரு தேரிலோ அல்லது பல தேர்களிலோ ஏறி எங்கள் முன்னே வரவும், உன் குதிரைகள் மிக்க ஆற்றல் உள்ளவை. வேள்வியில் சமைத்த சமையல் உணவுக்காக முப்பத்து முக்கோடி தேவர்களுடனும், அவர் களுடைய மனைவியர்களுடனும் நேரில் வரவும். சோமபானத்தால் முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களின் மனைவி களையும் போதை ஏற்றவும்’’
_ (ரிக் வேதம்: 2515)
இந்திரனே, குதிரைகளின் தலைவனே!, இதைக் குடி, அன்றும் சரி, இன்றும் சரி, சோமக்குடிக்கு முதன்மையான ஆதர வாளன்தானே! உனது உணவே சோம ரசந்தானே’’
-_ (ரிக் வேதம்: 4737)
வேதத்தின் யோக்கியதைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு தேவை?
எப்படி பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகிறதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்ற ஆண்களையும் சந்தோஷப்படுத்து வார்களாக!
--(யஜுர்வேதம்: 17 _ -3)
ஆடு, மாடு போல உறவுகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல், கலவி விஷயத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டுமாம். தங்கள் கணவன்களை மாத்திரம் அல்ல; எந்த ஆண்களையும் சந்தோஷப்படுத்த வேண்டுமாம். அப்படி சந்தோஷப்பமித்துகிற பெண்கள்தாம் நல்ல பெண்களாம் (ஸ்திரீகள்)
இந்த யோக்கியதையில் உள்ள வேதத்தை அடேயப்பா, ‘தினமணி’ எப்படி எல்லாம் உச்சிமோந்து சப்புக் கொட்டுகிறது.
ஆரிய மொழி தமிழகக் கோயில்களில் குடி புகுந்தது எப்போது? ராஜராஜசோழன் காலத்தில்தானே! அது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்புதானே! அதற்குமுன் தமிழ்நாட்டில் கோயில்கள் இல்லையா? வழிபாடு கிடையாதா? அந்த வழிபாடு தமிழில்தானே நடந்தது? வேதம் வந்துதான் கிழித்தது என்பதெல்லாம் யார் காதில் பூ சுற்ற?
தமிழ்மொழி என்றாலே பார்ப்பனர்களுக்கு ஒரு “இனம் தெரியாத’’ வெறுப்பு. ‘‘தமிழை நீசப் பாஷை’’ என்று சொன்னவர்தானே சங்கராச்சாரியார். பூஜை வேலைகளில் இப்பொழுதுகூட அவர்கள் தமிழில் பேசுவது கிடையாதே!
“சது மறை ஆரியம் வருமுன்
சகம் முழுதும்
நின தாயின்,
முதுமொழி நீ அநாதி என
மொழிவதும் ஓர் வியப்பாமோ!’’
என்று தமிழைப் பற்றிக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார்.
அவரையும் “தினமணி”யின் வெள்ளிமணி துன்மார்க்கர் பட்டியலில் சேர்த்து விட்டதே!
வெள்ளிமணி கட்டுரையில் சிவனைத் தூக்கி வைத்துக் கூத்தாட வேண்டும் என்பதற்காக வைணவத்தையும் வம்புக்கு இழுத்துள்ளது.
பஸ்ம ஜாபால உபநிடதத்தில் காசியின் பெருமையைக் கூறும் சிவபொருளாகிய விசுவநாதர், “இம் மாநகரில் கிழக்கில் கூப்பிய கரங்களோடு அல்லும் பகலும் பிரம்மா என்னைத் தியானிக்கின்றார். மேற்கில் இந்திரன் என்னை வழிபட்டுக் கொண் டிருக்கிறார்! தெற்கில் தலையின்மீது தனது கரங்களைக் கூப்பிய வண்ணம் திருமால் “என்னைத் தியானம் செய்து கொண்டிருக் கிறார்’’ என்று விளக்கியருளியுள்ளார் என்கிறது “தினமணி’’க் கட்டுரை.
இதன் மூலம் பிர்ம்மா, விஷ்ணு இவர்களுக்கு மேலாக உயர்ந்த பீடத்தில் உள்ள கடவுள் சிவபெருமானே என்பதுதான் “தினமணி’யின் கருத்து
ஒரு 17ஆண்டு 8 மாதங்களுக்கு முன் பயணம் செய்வோம். ‘கல்கி’ இதழை (11.4.1982) கொஞ்சம் புரட்டுவோம்.
அகோபில மடத்து ஜீயரின் (இவர்தான் வைஷ்ணவர்களுக்கான மடாதிபதி ஸ்மார்த்தர்களுக்கு சங்கராச்சாரியார்போல) பேட்டி ஒன்று அதில் வெளியாகியிருக்கிறது.
“நான்சிவன் கோயில்களுக்கு உதவி செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா.. ஸ்ரீமத் நாராயணன் தான் (திருமால் என்னும் விஷ்ணுதான்) எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் (விஷ்ணு) தன் நாபியிலிருந்து (தொப்பூழ்) படைத்தான். அந்தப் பிரம்மா சங்கரனைப் (சிவனை) படைத்தான். என்ற கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு (சிவனுக்கு) நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளைஆகணும். அவங்களும் தெய்வம் தான். தபஸ்பண்ணி தெய்வத்தன்மைக்கு உயர்ந்தவர்கள். ஆனால் நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்கு போக வழி செய்து கொண்டவர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். அதனாலே சிவன் கோயில் திருப்பணிக்கு பணம் இருந்தாலும் தர மாட்டோம்’’ என்று ஜீயர் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வெட்டித் தள்ளிவிட்டார்.
“தினமணி’’ வெள்ளிமணி கட்டுரையாளரைவிட அகோபிலமட ஜீயர் தகுதி குறைந்தவராக இருக்க முடியாது.
தலையின்மீது திருமாலாகிய விஷ்ணு கரங்களைக் கூப்பிய வண்ணம் சிவனைத் தியானித்துக் கொண்டு இருப்பதாக தினமணி கூறுகிறது ஜீயரோ, சிவனா? அவன் பொடியன்; எங்கள் விஷ்ணுவுக்குப் பேரன்; அவனைக் கும்பிட்டால் புத்தி கெட்டுப் போகும் என்கிறார்.
‘தினமணி’யார் ‘கல்கி’யாருக்குப் பதில் சொல்லிவிட்டு எங்கள் தமிழர்மீது, தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூறுகிற சைவ அன்பர்கள்மீது ஆக்ரோசமாகப் பாயட்டும்!
அதுசரி, தமிழர்கள் என்ற முறையில் நாத்திகர்களாகிய நாங்கள் தமிழர்கள்மீது விழுந்து பிராண்டும் தினமணிக்குச் சூடு கொடுக்கிறோம்.
சைவ மெய்யன்பர்களே, தமிழ்க் கீர்த்திகளே, சைவ மடாதிபதிகளே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
------------------------மின்சாரம் அவர்கள் 19-12-2009 ”விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Tuesday, March 11, 2014

ஜாதி! - தந்தை பெரியார்


கடவுள் மதம் பற்றி எழுதுவது போலவே ஜாதி பற்றியும் எழுதுகிறேன். ஜாதிகள் பார்ப்பனரால் (ஆரியர்களால்) ஏற்படுத்தப்பட்டவையேயாகும். ஆரியர் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் நம் நாட்டில் ஜாதி என்பதே கிடையாது.
ஜாதி என்ற சொல் தமிழ் அல்ல; ஆரிய மொழிச் சொல்லேயாகும். ஜாதிகளின் பெயர்களான பிராமணன் - க்ஷத்திரியன் - வைசியன் - சூத்திரன் என்ற சொற்களும் தமிழ் அல்ல; ஆரிய மொழிச் சொற்களே யாகும். ஜாதிகள் பற்றி ஏற்படுத்தப்பட்டி ருக்கிற ஆதாரங்களான சாஸ்திரம், மனுதர்மம், புராணம் முதலிய யாவும் ஆரிய மொழியில் ஆரியர்களால் ஏற்படுத் தப்பட்டவையே ஒழிய இவை எவையும் தமிழ் மூலம் அல்ல. ஜாதிக்கேற்ப உரைக்கப்பட்ட கடவுள்கள்யாவும் ஆரிய மொழிப் பெயர்களைக் கொண்டவையே ஒழிய தமிழ்ப் பெயரைக் கொண்ட கடவுள் எதுவுமே இல்லை.
ஜாதி இழிவை நிலைக்க வைக்க ஏற்படுத்திய கர்ப்ப க்ருகம் என்னும் சொல் லும், மூலஸ்தானம் என்னும் சொல்லும், ஆகமம் என்னும் சொல்லும், கும்பாபிஷே கம் என்னும் சொல்லும் யாவுமே ஆரிய மொழிச் சொற்களேயாகும். ஆகவே, ஜாதி சம்பந்தமான எந்தக் காரியம், கருத்தும் யாவும் தமிழனுக்கு தமிழுக்குச் சம்பந்தப்பட்டவை அல்லவே அல்ல. பார்ப்பான் ஆதிக்கத்திற்கு வந்தவு டன் அவன் நலத்திற்கு ஏற்ப எப்படி அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண் டான்!
இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்து ஆதிக்கம் பெற்றவுடன் மனித தர்மம் என்னும் மனுதர்ம நூல் ஏற்படுத்திக் கொண்டு அதை மனித தர்மம் என்று சொல்லாமல் மனு என்கின்ற கடவுள் தன்மை கொண்டவரால் செய்யப்பட்டது என்று கருத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றி மனித தர்மமாக ஆக்கி விட்டான். ஆரியர் இந்தியாவுக்கு வருகிற காலத்தில் அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்திருப்பார்கள்; ஒற்றுமையும் கூட்டு வாழ்வும் இல்லாமல் தனித்தனியாய்த் திரியும் மக்களாய் இருந்திருப்பார்கள்.
இந்த நிலை, யோக்கியமும் நாணய மும் நேர்மையும் அற்ற மற்றொரு காட்டு மிராண்டி மூர்க்கக் கூட்டமான ஆரியர்கள் தங்கள் மேன்மைக்கும் நமது இழிவுக்கும் ஏற்ற எல்லாக் காரியங்களையும் செய்து கொள்ளச் சாதகமாயிருந்தது.
மனுதர்ம சாத்திரத்தைப் படித்துப் பார்த்தாலே இந்த விஷயங்கள் நல்ல வண்ணம் யாருக்கும் புலப்படும். அக்கா லத்தில் நமது அரசர்கள் என்பவர்களும் காட்டுமிராண்டிகளாய்க் கொள்ளைக் கூட்டத்தார்போல் கையில் வலுத்தவன் ஆதிக்கமாய் இருந்தபடியால் அரசர் களைப் பல வழிகளில் அடக்கி ஆண்டு அவர்களைத் தங்களுக்கு அடிமையாக ஆக்கி அவர்களைக் கொண்டே தங்க ளுக்கு வேண்டிய எல்லாக் காரியங்களை யும் செய்து கொண்டார்கள். உதாரணமாக மனுதர்மத்தில் நமது பெண்கள் எல்லோ ருமே தங்களுக்கு போகப் பெண்களாக, வைப்பாட்டிகளாக இருக்கத்தக்கவர்கள் என்றும், நாம் எல்லோரும் அவர்களுக்கு அவர்களது தாசி மக்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்றும் எழுதி அமுல்படுத்தியதோடு நம்மையும் அதை ஒப்புக் கொள்ளும்படிச் செய்து நம்மில் கருதும்படிச் செய்து கொண்டார்கள் என்றால் அன்றைய நமது நிலை எப்படி இருந்தது என்பது தெளிவாய் விளங்கு கிறது. இல்லையா?
இன்றைக்கும் சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் நம்மில் தாசிகள் என்று ஒரு கூட்டமும் அந்தக் கூட்டம் பார்ப்பனருக்கு எப்போதும் தயார் என்பது போன்ற போகப் பொருளாய் இருந்து வந்ததும் அப்பெண்களின் தந்தை சகோ தரர் ஆகியவர்களே அக்காரியத்திற்குத் தரகர்களாயிருந்ததும் நாம் நேரில் கண்ட காரியம் தானே! அது மாத்திரமா! இன் றைக்கும் மலையாள (கேரள) நாட்டில் பெருங்குடி மக்கள் பெரும்பாலோர் தாங்கள் யாரைக் காதலனாகக் கொண்டு போகித்துக் கொண்டு இருந்தாலும் தமது காதலன் பார்ப்பான் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அரசர் குடும்பங்கள் பார்ப்பானைச் சம்பளம் கொடுத்துக் கணவனாகக் கொண்டிருக்கிறார்கள். கேரள அரசர்கள் இன்று வரை பார்ப்ப னனின் மக்களாகத்தாம் இருந்து வந்திருக் கிறார்கள். எனவே, தமிழ் மக்களின் இழி தன்மைக்கு இதைவிட வேறு உதாரணம் என்ன வேண்டும்! இதை ஏன் சொல்லு கிறேன் என்றால் பார்ப்பனரின் அட்டூழி யத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் காட் டவே சொல்லுகிறேன். இவ்வளவு மாத் திரமா! இன்றும் நம்மில் எத்தனை மடை யர்கள் மானமற்றவர்கள் பார்ப்பனர் களைச் சாமி என்றும், பார்ப்பனர் என்றும், கண்டதும் வணங்க வேண்டியவர்கள் என்றும் கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம்.
ஆகவே, ஜாதி என்பது அயோக்கியர் களால் மோசடிக் கருத்துடன் தோற்றுவிக் கப்பட்டது என்றும், அதற்கு விஞ்ஞான முறைப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதைத் தமிழ் மக்கள் ஆண் பெண் எல்லோருமே வெறுக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன். ஜாதியை எந்த உருவில் எந்தக் கருத்தில் எங்குக் கண்டாலும் விஷ ஜந்துக்களை அழித்து ஒழிப்பது போல் ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியமாகும். இனியும் எத்தனை நாட்களுக்கு ஜாதி, ஜாதி முறை ஜாதித் தன்மை என்பவை இந்நாட்டில் இந்த நம் சமுதாயத்தில் இருந்து வருகின் றனவோ அத்தனை நாள்களுக்கும் நம் நாடு காட்டுமிராண்டி நாடு என்பதோடு நம் சமுதாயமும் மானமற்ற காட்டு மிராண்டிச் சமுதாயமேயாகும். எனவே, தோழர்கள் ஒவ்வொருவரும் இதை மனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண் டிக் கொள்ளுகிறேன்.
-------------------------- தந்தை பெரியார் "உண்மை" 14.2.1970

ThirukKuRaL