தென்றல் (Thendral)

Friday, December 30, 2016

அறிவோம் சில: சீவக சிந்தாமணி

அறிவோம் சில: சீவக சிந்தாமணி: சீவக சிந்தாமணி   சோழர்களுடைய ஆட்சிக்   காலத்தில்   இயற்றப்   பெற்ற   காப்பியம்   சீவக சிந்தாமணி .   இது கி . பி .   ஒன்பது ...

Saturday, December 24, 2016

கருத்துகள் - views: தமிழரின் பெருமை – அறிஞர் கால்டுவெல்

கருத்துகள் - views: தமிழரின் பெருமை – அறிஞர் கால்டுவெல்: அகரமுதல 165,   மார்கழி 03, 2047 /   திசம்பர் 18, 2016   இலக்குவனார் திருவள்ளுவன்      18 திசம்பர் 2016       கருத்திற்காக.. ...

Saturday, December 17, 2016

கயவர்களுக்கு சவுக்கடி.

தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் 30 mins · Sholinganallur · கலைஞர் தி கிரேட் *பொறுமையாக படிக்கவும்* முத்தமிழறிர் தலைவர் டாக்டர். கலைஞர் அவர்களை பற்றி "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"* என்று கூறும் கயவர்களுக்கு சவுக்கடி. *... இது எப்டி இருக்கு???* கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான். அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில்,ஆதாரம் என்ன என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர் என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார். அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா? அவர் அரசங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன? சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்) இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. இதோ இன்று தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக கலைஞர் திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் ஒரு 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி பின்னர் "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டு கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு) வழங்கப்பட்டது. நூலின் விலை 20 ரூபாய் மட்டுமே. கிடைக்குமிடம் "அகநாழிகை பதிப்ப்கம்", 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின்: 603 306 , போன்: 999 4541010. மிக்க நன்றி திரு. டி வி.இராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும், அகநாழிகை பதிப்பக உரிமையாளர் திரு அகநழிகை வாசுதேவன் அவர்களுக்கும்! இதோ அந்த நூலில் இருக்கும் கலைஞர் அவர்களின் திரையுலக பங்களிப்பை விரிவாக காணுங்கள். ********************************************************** கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார். .1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம். ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார். 1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி. 1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது.. 1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி 1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் வரும் ஒரு வசனம் "பெரியம்மா குத்துவிளக்கு , சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு" இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார். 1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர். 1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது. 'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று' அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது. மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது. 52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்' என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி 53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்' மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட் 'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர். படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம். பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி. திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன். 1953 ல் வந்த படம் 'நாம்' ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம். இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர். 1954ல் வந்த படங்கள் மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம். அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் "மலைக்கள்ளன்".கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம். அடுத்து "அம்மையப்பன்.".எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங் 1956ல் வந்த படங்கள் "ராஜாராணி"..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம். "ரங்கோன் ராதா"...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகள் \\ திண்ணை தூங்கி பண்டாரம் திருவோடு ஏந்தும் பரதேசி தெருவில உருளும் திருப்பதி கோவிந்தா..கோவிந்தா இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம் என்றும் எதிலும் பொதுநலம் \\ 1957ல் புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம் புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா 1960ல் வந்த படம் குறவஞ்சி.. இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை. 1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி 1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர். 1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு. 1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம். 1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. 1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம். 1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம். 1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர். 1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல். 1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் 1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர் 1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட். 1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன். இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார். 1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார். அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு. ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம். பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் "பூக்காரி "வந்தது. கலைஞர் கதை மட்டும் எழுத "அணையா விளக்கு" வந்தது பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை. 1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம். 1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு 1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம் 1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன் 1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு. 1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை 1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு. 1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம். 1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம். 1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு 1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு. 1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது. 1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது. 1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம் 1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை எஸ்.ஏ. ராஜ்குமார். 1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர் 1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம். 1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை. 1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை எஸ்.ஏ. ராஜ்குமார். 1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது. 1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை. 1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர். 1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம் 1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை 1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை 1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை 1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன் 1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம் 1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம் 2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை அதன் பின்னர் மீரா ஜஸ்மின் நடித்த பெண் சிங்கம்,பின்னர் பிரசாந்த் நடிக்க பொன்னர் சங்கர் வந்தது. தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது 1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது. இடைவிடாமல் 90 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது. இதே கலைஞர் அவர்கள் திரைத்துறையில் மட்டுமா ஜொலித்தார். நெஞ்சுக்கு நீதி 5ம் பாகம் வெளியீடு ஜூன் 2, 2013 ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி (5 பாகம்) இனியவை இருபது, சங்கத்தமிழ், குறளோவியம், பொன்னர் -சங்கர், தொல்காப்பியப்பூங்கா போன்ற பொக்கிஷங்களை கொடுத்துள்ளார். இதை தவிர ஏராளமான சிறுகதைகள், எண்ணிலடங்கா கவிதைகள், மற்றும் நாடகங்களான மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், உதயசூரியன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, சிலப்பதிகாரம் ஆகியவை முக்கியமானதாகும். தூக்கு மேடை, காகிதப்பூ இவற்றில் அவரே நடித்துள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதியுள்ளார். அது தான் பின்னர் கவிஞர் பா.விஜய் நடிக்க "இளைஞன்" என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆக தமிழக சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் எல்லீஸ் ஆர் டங்கன் . டி ஆர். சுந்தரம் என்னும் ஜாம்பவான்களுடன் திரைத்துறையில் பணியாற்றிய கலைஞர் அவர்கள் தமிழக திரைப்பட வரலாற்று நூற்றாண்டின் இறுதியில் இப்போது ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் போன்றவர்களுடன் கூட வேலை செய்து செம்மொழி நூற்றாண்டு பாடலை கூட எழுதி வரும் கலைஞர் மஞ்சள் பை நிறைய பணம் எடுத்து வந்து தான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்னும் நிலையில் இல்லை. ஒரே ஒரு பேனாவும் அவரது மூளையும் மூலதனமாக போதும். இனியாவது கலைஞரை மஞ்சள் பையுடன் வந்தார் இன்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் என புலம்பும் பொறாமை கொண்டவர்களிடம் இதை நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம். ஊரான் சொத்துகளை எல்லாம் கலைஞரின் சொத்து என பொய்ப்பிரச்சாரம் செய்யும் புண்ணியாத்மாக்களிடம் புரியும் படி இதை நாம் சொல்லலாம். வாழ்க கலைஞர்!

Saturday, December 10, 2016

களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 405

களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 405: திருக்குறள் – சிறப்புரை : 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். – 405 கல்வியறிவு இல்லாத ஒருவன் தனக்கு எல்லாம் த...

Monday, November 28, 2016

தென்திசை: ”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி /...

தென்திசை: ”ஜோக்கர்” – அதிகாரத்திற்கு எதிரான கோமாளி முகமூடி /...: “Every nation gets the government it deserves.” -     Joseph de Maistre விளிம்பு நிலையிலிருக்கும் ஒரு சாதாரண குடிமகன், அதிகார ...

தென்திசை: மரணத்தின் மொழி

தென்திசை: மரணத்தின் மொழி: எஸ்.அர்ஷியா எழுதிய “மரணத்தில் மிதக்கும் சொற்கள்” குறித்து பாலகுமார் விஜயராமன் “மரணத்தின் கிளர்ச்சி உண்மையை வெளிக்கொணர்ந்து விட...

Willswords Tamil Twinkles: சங்கத்தமிழன் அய்ந்தாய் பிய்ந்து... திராவிடன் ஆகிட்...

Willswords Tamil Twinkles: சங்கத்தமிழன் அய்ந்தாய் பிய்ந்து... திராவிடன் ஆகிட்...: KRS | கரச   @ kryes 21h ஒங்க காப்பியம்= எங்க காவ்யா ஒங்க அகத்தியன்= எங்க அகஸ்தியா ஒங்க சிலப்பதிகாரம்= எங்க அதிகார்! ஒங்க ஆதிPaக...

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

▪ நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை 🔹 (அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார். 🔹வாழ்க்கைக் குறிப்பு இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. கவிஞரின் நாட்டுப்பற்று முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார். ’கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார். புகழ்பெற்ற மேற்கோள்கள் 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் 🔹மொழிப்பற்று தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே தரணிக்கே ஓரணி செய்வோமே அமிழிதம் தமிழ் மொழி என்றாரே அப்பெயர் குறைவது நன்றாமோ 🔹நாமக்கல்லாரின் படைப்புகள் இசை நாவல்கள் - 3 கட்டுரைகள் - 12 தன் வரலாறு - 3 புதினங்கள் - 5 இலக்கிய திறனாய்வுகள் - 7 கவிதை தொகுப்புகள் - 10 சிறுகாப்பியங்கள் - 5 மொழிபெயர்ப்புகள் - 4 🔹 எழுதிய நூல்கள் மலைக்கள்ளன் (நாவல்) காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்) பிரார்த்தனை (கவிதை) நாமக்கல் கவிஞர் பாடல்கள் திருக்குறளும் பரிமேலழகரும் திருவள்ளுவர் திடுக்கிடுவார் திருக்குறள் புது உரை கம்பனும் வால்மீகியும் கம்பன் கவிதை இன்பக் குவியல் என்கதை (சுயசரிதம்) அவனும் அவளும் (கவிதை) சங்கொலி (கவிதை) மாமன் மகள் (நாடகம்) அரவணை சுந்தரம் (நாடகம்) 🔹மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

Sunday, November 6, 2016

followme: Kurinji Flower - Nature's Gift to Mankind

followme: Kurinji Flower - Nature's Gift to Mankind: Beautiful sights are a rarity, which we cherish lifelong. The longing for the beautiful sights become more attractive in cases where t...

Saturday, November 5, 2016

எஸ்.சஞ்சய்: சமூகநீதிக் காவலர்

எஸ்.சஞ்சய்: சமூகநீதிக் காவலர்: ப ள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் நமது மூத்த தலைமுறையினர் கண்டிருக்கும்  அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாத...

சுபவீ வலைப்பூ: சுயமரியாதை -36

சுபவீ வலைப்பூ: சுயமரியாதை -36: எது முதல் தேவை? தோழர் ஜீவா அவர்கள் எழுதியுள்ள 'ஈரோட்டுப் பாதை' என்னும் கட்டுரை குறு   நூலாகவே வெளிவந்துள்ளது. பேராசிரியர் ...

Shocking Truth About Tamil Language - Alex Collier in 1995

Sunday, October 30, 2016

செண்பக பூ : தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! Wor...

செண்பக பூ : தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! Wor...: தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குதா..! …..தமிழன்…. டா…! by admin ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள் .. .Toda...

Thursday, October 20, 2016

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு அவசரமோ அவசரம்! - (தினம...

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு அவசரமோ அவசரம்! - (தினம...: அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு அவசரமோ அவசரம்! கருத்துக்கேட்டு காலம் தாழ்த்தாது புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டுமாம்! (‘...

Monday, October 17, 2016

கலைஞரும் கவிஞரும் by அருள் வாக்கு

Tuesday, January 19, 2016 கலைஞரும் கவிஞரும் “எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும் வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை! நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம் !” கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இப்படி ஒரு அழகான கவிதை வரிகளை யாரை குறித்து எழுதினர் என்பது தெரியுமா? அவரே தொடர்கிறார் அக்கவிதையில் “கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள் மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் ! பன்னி நான் கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் ! சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்” இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும் அந்த கவிதை மேலும் தொடர்கிறது இப்படி “தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள், - மின்னும் அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் - நானும் பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன், - என்ன மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்” .தலைவர் கலைஞர் அவர்களை பெண்ணாக பாவித்து தன் காதலியாக உருவகித்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை இது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? என்ன இது கவிஞர் கலைஞரை வறுத்தெடுத்து ‘வனவாசம்’ புத்தகத்தில் எழுதியதுதானே தெரியும். இதை எப்போது எழுதினர் என்று கேட்கிறீர்களா? வனவாசம் எழுதியதற்கு பிறகு மனமாற்றம் அடைந்த பிறகு எழுதியது. கவியரங்க மேடையில் அவரே பாடியது. கலைஞரைப் பற்றி வனவாசம் புத்தகத்தில் எழுதியதை படித்துவிட்டு அல்லது யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு வனவாசம் வனவாசம் என்று வரட்டுத் தவளைகளாக உளறுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும். கடைசி காலத்தில் கவிஞர் அப்படி எழுதியதற்கு பிராயச்சித்தமாகத்தான் இந்த கவிதையை எழுதினார் என்பதையும் பலவிதத்திலும் கலைஞரை புகழ்ந்தும் பாராட்டியும் இருக்கிறார் என்பதும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் . 1971 ல் ‘கவியரங்கில் கலைஞர்’ என்னும் நூலை கவிஞர்தான் வெளியிட்டார். அந்த விழாமேடையில் கலைஞர் கிடையாது. அப்போது கவிஞர் பேசியது ”நல்லவேளை அவர் இப்போது இங்கே இல்லை. இருந்தால் எனது எல்லை குறுகியதாக இருக்கும். அவரைப் பாராட்ட வேண்டியது எனது கடமைமட்டுமல்ல. அது என் உரிமையுமாகும். முன்னோர்கள் சொல்வார்கள் ‘நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரப் புகழ்தல் வேண்டும்’ என்று. அப்படி இந்த சபையில் பழைய மரபுபடி புகழ்கிறேன்” கவிஞருக்கும் கலைஞருக்கும் அப்படி என்ன நேசம்.? 1949 முதல் இருவருக்கும் நட்பு. திமுகழகத்தில் கவிஞர் சேர்ந்ததே கலைஞரால் தான். முதல்முதல் கவிஞர் என்ற பட்டப் பெயருடன் பொது மேடையில் ஏற்றி பேச வைத்தவரும் கலைஞர் தான். அந்த நிகழ்ச்சியை இருவருமே பதிவு செய்து இருக்கிறார்கள். மந்திரிகுமாரி படத்திற்கு கதைவாசனம் எழுத சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கலைஞர் பணி செய்த காலத்தில் அங்கு வந்த கண்ணதாசனுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக இருந்த சமயம். ஒருமுறை சேலத்திலிருந்து கோவை சென்று அங்கிருந்து பொள்ளாச்சிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த கலைஞர் போய்க்கொண்டிருக்கும் போது அவரை பார்த்த கண்ணதாசன் தானும் பொள்ளாச்சிக்கு வருவதாக சொல்லி கலைஞருடன் அந்த கூட்டத்திற்கு போய் இருக்கிறார். அங்கு போனதும் தானும் அந்த கூட்டத்தில் பேசவேண்டும் என்று சொல்ல கலைஞர் ‘ நெற்றியிலே விபூதிப்பட்டை குங்கமப் போட்டு எல்லாம் வைத்துக் கொண்டு எங்கள் கட்சி கூட்டத்தில் பேசுவதா? ‘ என்று சொன்னதும் உடனே கண்ணதாசன் விபூதி குங்குமத்தை அவசரமாக அழித்துவிட்டு ‘ இப்போது பேசட்டுமா ‘ என்று கேட்டு அனுமதி பெற்று அந்த கூட்டத்தில் முதல் முதலாக பேசி இருக்கிறார். அதுவும் எப்படி ‘ வட்டிக்கு வட்டி வாங்கும் செட்டிமார் நாட்டில் பிறந்தவன் நான்’ என்ற முன்னுரையுடன் சுயமரியாதை நாத்திகக் கருத்துகளை அற்புதமாக பேசி இருக்கிறார். அதற்கு வட்டியும் முதலுமாக கலைஞர் இப்படி சொந்த ஊரைப் பற்றி குறையாக பேசக்கூடாது என்றும் அறிவுரைத்து இருக்கிறார் . அந்த கூட்டத்தில்தான் கவிஞர் கண்ணதாசன் என்று கலைஞர் அவரை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சி பற்றி கலைஞர் ஒருமுறை ‘எப்படி அவசரமாக விபூதி குங்குமத்தை அழித்துவிட்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்தாரோ அப்படிதான் பல விஷயங்களில் அவசர முடிவெடுத்து விடும் சுபாவம் உள்ளவர் கண்ணதாசன்’ என்று குறிப்பிட்டார். கண்ணதாசன் திருமணத்திற்கு கலைஞரை அழைத்து இருக்கிறார். கலைஞரும் அரங்கண்ணல் அவர்களும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள காரைக்குடி சென்றபோது கண்ணதாசன் சகோதரர்கள் உறவினர்கள் எல்லாம் இவர்களை கண்டு இவர்கள் ஏன் வந்தார்கள் என்ற தோரணையில் பார்த்து இருக்கிறார்கள். அந்த திருமணம் சீர்திருத்த திருமணம் அல்ல. தாலி கட்டிய உடனே கண்ணதாசன் அவர்கள் ‘என் நண்பர்கள் கருணாநிதியும் அரங்கண்ணலும் மணவாழ்த்து கூறுவார்கள்’ என்று சொல்லி அந்த மணமேடையில் பேச வைத்து இருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அண்ணா காலத்திலேயே திமுகழகத்தை விட்டு திரு சம்பத் அவர்களுடன் விலகி பிற்பாடு காங்கிரசில் இணைந்தவர். அந்த காலகட்டத்தில் வனவாசம் புத்தகம் எழுதி அண்ணா கலைஞர் எல்லோரையும் வசை பாடியவர். 1968 ல் அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது கலைஞர் மீது அவதூறு ஒன்றை சொல்லப்போக கலைஞர் வழக்கு தொடுக்க அந்த வழக்கில் கவிஞருக்கு 3௦௦ ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமும் உண்டு. அவர் தலைவராக ஏற்றுக் கொண்ட எல்லோரையும் ஏதோ ஒரு சமயத்தில் தரக்குறைவாகவே பேசியிருப்பார். அண்ணா, கலைஞர் , எம்ஜிஆர் மட்டும் அல்ல பண்டிதர் நேரு, ராஜாஜி , இந்திராகாந்தி, புரட்சிக்கவிஞர், மபொசி , என்ற பட்டியல் நீண்டு அதில் காமராஜர் அவர்களும் இடம் பெற்றார் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள்தான் பெரிதாக பேசப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.1979 ல் எழுதிய ‘எம்ஜிஆரின் உள்ளும் புறமும்’ என்ற நூலையோ அவர் இந்திரா காங்கிரசில் இருந்தபோது காமராஜர் உயிருடன் இருந்த காலத்திலேயே காமராஜரை பற்றி பேசியதையோ எழுதியதையோ யாரும் நினைவு கொள்வதில்லை. கலைஞர் “கண்ணதாசன் ஒருவரை உயர்த்துவதென்றால் ஆறடி – ஏழடி ஏன் அறுபது அடி கூட உயர்த்துவார். அங்கிருந்து கீழே போடும் போதுதான் வலி தாங்காது . அப்படி வலி தாங்கிக் கொண்டவர்களில் நான் ஒருவன் “ என்று ஒருமுறை சொன்னார். எந்த கவிஞர் வனவாசத்தில் வசை பாடினாரோ அவர்தான் 1971 ல் கலைஞர் பிறந்தநாளை முன்னின்று அவரே நடத்தினார். இந்திரா காங்கிரஸ் தலைவர் திரு சி.சுப்பிரமணியம் அவர்களை அந்த விழாவிற்கு அழைத்து கலைஞரை பாராட்ட செய்தார். அந்த விழாவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. கலைஞரின் அந்த வருட பிறந்தநாள் திட்டமான பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்திற்கு அந்த விழாவில் வசூலான தொகையில் செலவு போக மீதியை அளித்தார். அதே போன்று 1974 ல் கலைஞரின் பொன்விழா பிறந்தநாளின் போது “தூங்காமை கல்வி துணிவுடைமை என்னும் வள்ளுவரின் இலக்கணத்திற்கு தகுதியுள்ள தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார். 1977 ஆம் ஆண்டு ஜுலை 23 ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்த பிறகு கலைஞர் ஆட்சி நெருக்கடி காலத்தில் கலைக்கப்பட்ட பிறகு ஜனதா ஆட்சி மத்தியிலும் எம்ஜிஆர் ஆட்சி மாநிலத்திலும் அமைந்த காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை பிரமாண்டமாக நடத்துகிறார். திமுக, ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விழாவை நடத்துகிறார். அதில் சிறப்பு விருந்தினராக கலைஞரை அழைத்து சிறப்பு செய்கிறார். ‘பெரியார் ராஜாஜி காமராஜர் அண்ணா மூவரையும் இழந்துவிட்ட தமிழக அரசியலில் இன்று உன்னத தலைவராக கலைஞர் ஒருவர்தான் மிஞ்சி இருக்கிறார் என்பதால் அவரை இந்த விழாவிற்கு அழைத்தேன்’ என்று முழக்கமிட்டார். ‘அவர்களுக்கு அடுத்து அந்த பாரம்பரியத்தின் வழித் தோன்றலாக கலைஞர் திகழ்கிறார்’ என்று அந்த விழாவிலே பேசினார். அதுமட்டுமல்ல அந்த விழாவில் கவிஞர் சொல்லிய இன்னொரு தகவல்தான் மிக முக்கியமானது. “காமராஜரின் கடைசி காலத்தில் ஆறு ஏழு மாதங்கள் அரசியல் பற்றி தீவிரமாக எண்ணம் கொண்டிருந்தேன். இரண்டு காங்கிரசும் இணைய வேண்டும் என்று காமராஜரிடம் சொல்லி வந்தேன். அவர் சொன்னார் ‘இணைப்பு என்கிறாய் சரி இணைந்த பிறகு தேர்தல் வந்தால் திமுகழகம் பலமாக இருக்கிறது நமது பலம் போறாது அதனால் எம்ஜிஆரிடம் போய் கூட்டு வைத்துக் கொள் என்று டெல்லியிலிருந்து சொன்னால் நான் சத்தியா ஸ்டுடியோ வாசலில்போய் நிற்க வேண்டுமா’ என்று கேட்டார். அவர் சொன்னது போலதான் கூட்டு ஏற்பட்டது. அப்போது தலைவர் காமராஜர் சொன்னார் அப்படி கூட்டு என்றால் அவனோடு என்ன இவனோடு வைத்துக் கொள்ளலாமே என்றார் . தலைவர் அவர்கள் கலைஞரைதான் அப்படி சொன்னார். வயதில் பெரியவர்கள் அப்படி சொல்வதில் தவறில்லை. இவன் அரசியல்வாதி அவன் யார்? என்றார். அந்த அளவுக்கு கலைஞரும் காமராஜரும் ஒருவருக்கு ஒருவர் பாசத்தோடு இருந்தார்கள். இவருக்கு அவர் மீது பாசம். அவருக்கு இவர் மீது பாசம். இரண்டுபேரும் சண்டைக் காதலராக இருந்தார்கள். காமராஜர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் திமுக அரசு டிஸ்மிஸ் ஆகியிருக்காது. நிலைமைகளும் வேறுமாதிரி ஆகியிருக்கும்.” . கவிஞரின் இந்த உரை இன்றைக்கு எவ்வளவு பேருக்குத் தெரியும்? கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட உண்மை சம்பவங்கள் பலவற்றில் இதை முக்கியமாக யாரும் மறக்கக் கூடாது. இப்படிப்பட்ட உண்மை சம்பவங்களின் உள்ளே உறையும் சிந்தனை ஓட்டங்கள்தான் தமிழகத்தின் நலனுக்கும் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும். 1981 கவிஞர் அமெரிக்க பயணத்தின் போது சிக்காகோவில் உடல்நலம் குன்றி அங்கேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது எம்ஜிஆர் முதல்வர். கவிஞரின் வசை என்னும் கசையடிகளைத் தாங்க முடியாத எம்ஜிஆர் அவரை அரசவைக் கவிஞர் என்ற பசையால் அவர் வாயை ஒட்டியிருந்த சமயம். கலைஞர் எதிர் கட்சித் தலைவர். கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய மருத்துவசெலவு முழுதும் அரசே ஏற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அமைச்சர் அரங்கநாயகம் அவர்கள் அரசவைக் கவிஞர் என்ற முறையில் 5௦௦௦௦ ரூபாய் அலாட் ஆகி இருக்கிறது என்று சொல்கிறார். கலைஞர் ‘அது தெரிந்துதான் கேட்கிறேன் ஐம்பதாயிரம் போதாது .இலட்சக்கணக்கில் செலவாகிறதாம். முழு செலவையும் அரசு ஏற்க வேண்டும் “ என்கிறார். அரசு அவர் கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவிக்கிறது. கவிஞர் 6௦ வயது முடியும் முன்பே 1981 அக்டோபர் மாதம் மறைந்து விட்டார். 1988 ல்அவருடைய 6௦ வயது நிறைவில் குடும்பத்தினர் மணிவிழா என்ற பெயரில் கொண்டாட இருந்தனர். கலைஞரை அழைத்தனர். கலைஞர் ‘மணிவிழா என்ற பெயரில் வேண்டாம் 61 வது பிறந்தநாள் விழா என்று கொண்டாடுவதுதான் சரி , மணிவிழா என்றால் அவர் உயிருடன் இருக்கும் போது கொண்டாடி இருக்கவேண்டியது’ என்று பொறுப்புள்ள குடும்ப உறுப்பினரைப் போல் மரபுகாக்கும் மண்ணின் மன்னனாக இருந்து அறிவுரை சொல்லி அதன்படியே அந்த விழா சிறப்பாக நடந்தது. அந்த விழாவில் கலைஞர் பேசும்போது இறுதியாக “என் இனிய நண்பருக்கு அருமை நண்பருக்கு நினைவுச்சின்னம் வேண்டும் என்று கேட்டார்கள். காலம் வரும். கவியரசருக்கு நினைவுச்சின்னம் எழும் என்று கூறி விடை பெறுகிறேன்” என்று சொல்லி முடித்தார் .அந்த விழாவில் கலைஞரின் உரை நட்புக்கு எழுப்பிய பொற்சிலையாய் பளிச்சிட்டது எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கவிஞர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. கவிஞரின் 61 வது பிறந்தநாள் விழாவில் எதிர் கட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதி 199௦ ல் ஜனவரி 3௦ தேதியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக இயக்குனர் இராம நாராயணன் இருந்தபோது கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான நினைவுசின்னம் காரைக்குடி- நெல்லிக்காவூரணியில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது. . அந்த விழாவில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரின் உரை காலத்தால் அழிக்க முடியாத காவியம். கெடுவாய்ப்பாக கலைஞர் அதை திறக்க முடியாமல் போய்விட்டது. 1991 ல் கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டபோது நினைவுசின்னம் முடியும் தருவாயில் இருந்தது. கவர்னர் ஆட்சியில் திறக்கப் பார்த்தார்கள். திட்டப்படி முழுதுமாகக் கட்டிமுடிக்கப்பட்ட பிறகுதான் திறக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியதால் விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது. பிறகு ஜெயா ஆட்சியில் திறக்கப்பட்டு நாங்கள்தான் கட்டினோம் என்று அதிமுக சொல்லிக் கொண்டது போகட்டும் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படலாம். ஆனால் உண்மை என்பது என்றுமே உண்மைதான். கவிஞரின் மறைவுக்கு கலைஞர் எழுதிய கவிதாஞ்சலியைப் படித்தால் கரையாத நெஞ்சும் கரையும். கொள்கைகள் முரண்பட்டாலும் நட்பின் மேன்மை உணர்ந்த உன்னதத் தலைவனின் உச்சம் தெரியும். என் இனிய நண்பா இளவேனிற் கவிதைகளால் இதய சுகம் தந்தவனே உன் இதயத் துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய் தென்றலாக வீசியவன் நீ என் நெஞ்சில் தீயாக சுட்டவனும் நீ அப்போதும் அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததே அன்றி அணைந்த தீபமாக ஆனதே இல்லை நண்பா கண்ணதாசா என் எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா கவிதை மலர் தோட்டம் நீ உன்னை காலம் எனும் பூகம்பம் தகர்த்து தரை மட்டம் ஆக்கிவிட்டதே கைநீட்டி கொஞ்சுவோர் பக்கமெல்லாம் கரம்நீட்டித் தாவும் குழந்தை நீ கல்லறைப் பெட்டி மடியினிலும் அப்படிதான் தாவிவிட்டாயோ ? அமைதிப்பால் அருந்தி தூங்கி விட இயற்கை இசைபாடி களித்த குயில் உன்னை மயக்க மருந்திட்டுப் பிரித்தார் உன்னை தாக்குதல்கள் எத்தனைதான் நீ தொடுத்தாலும் தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் சுவைப் பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை தித்திக்கும் கனித் தமிழா பிரிவு மத்தியிலே ஏன் விட்டு சென்றாய் அடடா அந்த இளமை கழனியில் அன்பெனும் நாற்று நட்டோம் ஆயிரம் காலத்துப் பயிர் நம் தோழமை என ஆயிரம் கோடி கனவுகள் கண்டோம் அறுவடைக்கு யாரோ வந்தார் உன்னைமட்டும் அறுத்து சென்றார் நிலையில்லா மனம் உனக்கு ஆனால் நிலைபெற்ற புகழ் உனக்கு இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால் இனிய தமிழன்னை துணை நின்றாள் என் நண்பா இனிய தோழா எத்தனையோ தாலாட்டு பாடிய உன்னை இயற்கை தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் எத்தனையோ பாராட்டு பெற்ற உனக்கு இயற்கை தாய் சீராட்டுத்தான் இனிக்கின்றதா எனை மறந்தாய் எமை மறந்தாய் உன்னை மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய் Posted by அருள் வாக்கு… at 9:53 PM

Thursday, September 29, 2016

Kuru Aravinthan: தமிழர் பண்பாடு

Kuru Aravinthan: தமிழர் பண்பாடு: Dr.E.Balasundram - Kuru Aravinthan - Dr. Chinnappan பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் ...

Monday, September 26, 2016

''மலைத்தேன்''

"படித்தேன்'' ========== ''மலைத்தேன்'' ''குடித்தேன்'' ''களித்தேன்'' கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான். ""நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று. நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை! http://paddathumsuddathum.blogspot.in/

Thursday, September 22, 2016

Hindutva’s science envy

Hindutva’s science envy: Claiming an organic unity between the Vedic world view and modern science has been the agenda of Hindu nationalists from the very start. If modern science is nothing more than a minor tributary flowing into the ocean of Vedic spiritual science known to our rishis, it is Western science and scientists who should feel Veda envy. By MEERA NANDA

Thursday, September 15, 2016

அழகு

அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!

Tuesday, September 13, 2016

திருக்குறள் கதைகள்: 67. அம்மா கணக்கு!

திருக்குறள் கதைகள்: 67. அம்மா கணக்கு!: சுந்தர் பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோது ஏகாம்பரத்திடம் அவர் மனைவி சொன்னாள். "என்னங்க, பத்தாவது வரைக்கும் நம்ம பையனை கவர்ன்மென்ட்...

தமிழ் வாழ்க!!: நல்ல நேரம்..????!!!

தமிழ் வாழ்க!!: நல்ல நேரம்..????!!!: குடிப்பதற்கே நல்ல நேரம் பார்க்கும் நாடாயிற்றே! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத் தில் பக்கம் 130இல்...

Sunday, September 11, 2016

நடுதல் : ‘சாகசக்காரர்கள் எப்போதும் விமசர்னங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்’ -பேராசிரியர் அ.ராமசாமி-இந்தியா.

நடுதல் : ‘சாகசக்காரர்கள் எப்போதும் விமசர்னங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்’ -பேராசிரியர் அ.ராமசாமி-இந்தியா.

வாழ்வியல் கழகம் - Passion Club - Le Club De Passion: மரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?

வாழ்வியல் கழகம் - Passion Club - Le Club De Passion: மரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?

சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: பெரியார் பிறவாதிருந்திருந்தால்?

சங்கீதா கண்ணனின் கடிதங்கள் - கட்டுரைகள்: பெரியார் பிறவாதிருந்திருந்தால்?: பெரியார் பிறவாதிருந்தால் என்ற வினாவிற்கு விடை அளிப்பதென்றால் நீட்டோலைகள் நிறைந்து மலை எனக் குவிந்துவிடும். அவருடையது எல்லாம் இங்கே நிறைந்த ப...

Saturday, September 10, 2016

Sun News Live Channel

Sun News Live Channel

Aadhaar-based biometric authentication—Dark clouds over the PDS

Aadhaar-based biometric authentication—Dark clouds over the PDS: India’s Public Distribution System (PDS) has improved steadily during the last 10 years. The system used to be most ineffective and corruption-ridden, with leakages of around 50 per cent at the natio

Friday, September 9, 2016

தமிழாசிரியர்: Tamil letter A-ஆ-WORKSHEET

தமிழாசிரியர்: Tamil letter A-ஆ-WORKSHEET: worksheet number                                       Date                                                           Name Pls read the E...

Saturday, September 3, 2016

தமிழ்ச் செய்திகள்: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந...

தமிழ்ச் செய்திகள்: விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந...: இந்திய சுதந்திர போராட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்த...

Saturday, August 27, 2016

சுபவீ வலைப்பூ: காவேரிதான் சிங்காரி

சுபவீ வலைப்பூ: காவேரிதான் சிங்காரி: பகுத்தறிவுக்   கருத்துகளைப்    பேசிக்கொண்டிருந்த நண்பர் சீமான், திடீரென்று, முருகன் நம் முப்பாட்டன் என்று சொல்லிப்   பழனிக்கு காவடி ...

Friday, August 26, 2016

துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு.......!. துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன? சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை. அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம். யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.

பட்டதும் சுட்டதும்: கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு,...

பட்டதும் சுட்டதும்: கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு,...: கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்! இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங...

பட்டதும் சுட்டதும்: தமிழின் சிறப்பு!

பட்டதும் சுட்டதும்: தமிழின் சிறப்பு!: பெயர்ச் சிறப்பு  மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உ...

நடுதல் : "போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் ". கோமகன் - பிரான்ஸ் .

நடுதல் : "போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் ". கோமகன் - பிரான்ஸ் .

ஞானபீடம்: நட்ட நடூ...நெலம

ஞானபீடம்: நட்ட நடூ...நெலம

Sunday, August 21, 2016

Milking the holy cow

Milking the holy cow: There is no way of producing milk profitably in a commercial venture if unproductive cows are retained. If one is serious about not killing cows, one must stop consuming cow milk and cow milk products. By SESHADRI KUMAR

Tuesday, August 16, 2016

மாட்டுஇறைச்சி- பார்ப்பனர்,புத்தர்,பெரியார்,டாக்டர்.அம்பேத்கர்- எழுத்தாளர...

காந்தி கொலையும் கோட்சே சிலையும் -வே.மதிமாறன்

சமஸ்கிருத எதிர்ப்புக் கருத்தரங்கம் - வே.மதிமாறன்

திராவிடமா? தமிழ்த்தேசியமா? தோழர் மதிமாறன் உரை

MARXISM _ மார்க்சியம் என்றால் என்ன? _ தோழர் தியாகு

18 வயதுக்குக் குறைந்தவர்கள் பார்க்கவேண்டாம்

K Veeramani attacking speech against New National Education Policy !

Pazha Karuppaiah Thundering Speech against Sanskrit ! (Full Video)

Sunday, August 14, 2016

களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 327

களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 327: திருக்குறள் – சிறப்புரை : 327 கூற்றுவன் நெருங்கான் கொல்லாமையாகிய அறத்தை மேற்கொண்டொழுகுவானுக்கு , வரையப்பட்ட வாழ்நாள்வரை, அவன் உயிரைக் ...

Tuesday, August 9, 2016

வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் :    இவர்தாம் புரட்சிக் ...

வா. நேரு: அண்மையில் படித்த புத்தகம் :    இவர்தாம் புரட்சிக் ...: அண்மையில் படித்த புத்தகம் :    இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார் நூல் ஆசிரியர்                               :    சு.அறிவுக்கரசு வெளியீடு   ...

Saturday, August 6, 2016

மனசாட்சி: ஜெ மீதான பயத்தை உடைத்த சசிகலாபுஷ்பா.

மனசாட்சி: ஜெ மீதான பயத்தை உடைத்த சசிகலாபுஷ்பா.: அதிரடி ....... அதிரடி ......... என தலைப்பு கொடுத்து எது எதற்கோ செய்தி போடுகிறார்கள் என் சக தோழர்கள். உண்மையான அதிரடி இத...

Thursday, August 4, 2016

களம்: ஆண்மைத் திமிர்!

களம்: ஆண்மைத் திமிர்!: கடந்த ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் 23 வயதுடைய சோதி சிங் பாண்டே என்னும் மருத்துவக் கல்லூரி மாணவி, தில்லியில் ஓடும் பேருந்தில், அறுவர் கும்...

Thursday, July 28, 2016

sivamgi.blogspot.com: அர்த்த சாஸ்திரம்��1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்...

sivamgi.blogspot.com:

அர்த்த சாஸ்திரம்��1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்...
: அர்த்த சாஸ்திரம் �� 1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன...

லதாராணியின் சொற்சித்திரங்கள்: மூடக் கிறுக்கல்கள்

லதாராணியின் சொற்சித்திரங்கள்: மூடக் கிறுக்கல்கள்: ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ! ஹரே கிருஷ்ண  ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !  - இந்த மகா மந்திரத்தை எழுதியவர் 14ஆம் நூற்றாண்டில் (1486...

Monday, July 25, 2016

இழிவை ஒழிக்க வழி









இழிவை ஒழிக்க வழி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- தந்தை பெரியார்



இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது
இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும், அநீதிகளையும், பேத
முறைகளையும் ஒழித்து, ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும்
சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்குகிறது எனலாம். இந்தக்
கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம்.

ஏனெனில், இதுவரையில் நமக்குப்
பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமானது பழைய
காங்கிரசைப் போல எங்கள் உரிமை களை எங்களுக்கு வழங்குங்கள், எங்களுக்குப்
பட்டம், பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது.
இப்பொழுதோ அதே சங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர்களுடைய
உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம்.

நம்மையும்,
நம் இனத்தையும், நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம். அதன் பலன்தான் இன்றைய
தினம் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று
சொல்லுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கியதானது நம்நாட்டு முழுப் பங்கையும்
அடைந்து, மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப் படி வழங்குவதற்குப்
போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம். போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம்.
ஆனால், போராட்டம் நமக்குப் புதியதல்ல - யாராவது கூறட்டும் - இந்த நாடு
எக்காலத்திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல்
இன்றுவரை எதிலும் போராட்டந்தான்.

முதலில் உண்டானதாகக் கூறப்படும்
ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன? ஆரிய - திராவிடர் போராட்டம், தேவர் - அசுரர்
போராட்டம்தானே! இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக்
காரணங்கள்தான் என்ன? அவையும் ஆரிய - அரக்கர் போராட்டம் தானே! கந்த புராண
கந்தன் - சூரன் போராட்டமும் அதுபோல்தானே? அவை போகட்டும், இந்த நாட்டுச்
சரித்திரத்தின் நிலைதான் என்ன? அதுவும் அப்படியேதான்; அதாவது ஆரியமதம் -
புத்த மதம்; பிறகு இந்து - முஸ்லிம்தான். ஆகவே, மதத்தின் பேராலும் கடவுளின்
பேராலும், நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு. இன்று காண்பது
புதிதல்ல என்கிறோம். இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல்
நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும்.

சென்ற
காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக
நம்மவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ! இன்று மட்டும் அல்ல;
எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள். காங்கிரசு சபை
உண்டாக்கி சத்தியாக்கிரகமும் நடத்தினார்கள். வேளை தவறாது கோவிலுக்குச்
சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள். கவர்ன்மெண்டோ, கடவுளோ இன்று வரை
கவனித்ததாகத் தெரியவில்லை.

நாம் பாடுபடும் மக்கள்; நாம்
உழைப்பாளிகள்; நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன. நம்
பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன. இது மாத்திரமா! நம்மைப் படைத்ததாகக்
கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம்; செய்கிறோம்; அவைகளைக்
காப்பாற்றியும் வருகிறோம். அப்படியி ருந்தும் நம்முடைய நிலைமை என்ன?
நம்முடைய உரிமைகள் எங்கே? இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு? கொஞ்சமா?
இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார்கள் என்று நம்பியிருந்தோம்.
ஏமாந்தோம்.

ஆகவே இனி நாமே வழங்குவோம் என்று கிளம்புகிறோம் இந்த
நாட்டு கடவுள்களைப் போலவே. காங்கிரசும் பாமர மக்களிடையே செல் வாக்கும்,
மதிப்பும், பெருமையும், நம்பிக்கையும் பெற்றது. ஆயினும், இன்றைய வரையிலே
இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை  யோசிக்கும் பொழுதுதான் இந்த
நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும், ஒரு புரட்சி தேவை என்கிறோம். எதற்காகப்
புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக.
இவைகளுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும்.
உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். இவைகளைக் கூறினால் நம்
பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர், வகுப்புத்துவேஷி என்கிற
பட்டமளிக்கின்றனர். நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை.
உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்களைச் சூத்திரன்
என்றும், பார்ப்பனதாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும், அவர்கள்
கூப்பிடுவதுகூட  இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது.

எங்களுக்குப்
பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா? அல்லது கொடுமையா? உலகம் எவ்வளவு
விரைவாக முன்னேறி வருகிறது! மணிக்கு  நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு
மைல் வேகத்தில் பறக்கிறான், மணிக்கு 4 மைல் போன சேதி, மணிக்கு 4000 மைல்
பேசுகிறது, மற்றும் பேசும்படம், ரேடியோ முதலிய அதிசயங்கள், அற்புதங்கள்
எத்தனை இருக்கின்றன! நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே
காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம். இன்னும்
சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம். இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும்
ஒழித்தால்தானே முன்னேற முடியும்? இவ்வளவு அறிவும், ஆராய்ச்சியும் நிரம்பிய
காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு, சாம்பலைப் பூசி, எலும்பை அணிந்து,
கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு
காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா? இன்றைய நிலைமைக்கு 6000
மைலுக்கு அப் பாலுள்ள லண்டன், நியூயார்க், பெர்லின், பாரிஸ், டோக்கியோ
முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில்
கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா - அதைச் செய்வதனை யல்லவா கடவுளாகக் கும்பிட
வேண்டும்? அந்த அறிவைப் பெறவல்லவா முயல வேண்டும்.

காலத்திற்கேற்ப
நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? இதைக் கூறினால் தவறா? இந்த விஷயத்தில்
மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக்கூடாது; பெரிய
புராணம், ராமா யணம், கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும், இடத்துக்கும்
தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள்ளலாம் என்றால் என்ன நியாயம்? இதிகாச
புராணங்களைக்  குறைகூறியவுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம், கீதை
படிப்பது அதிகமாகி வருகிறது. டாக்டர் அம்பேத்கர் கூறிய படி, கீதையை ஒரு
மதநூல் என்பதை விட, ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம்.
ஒரு பக்கத்தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன்
என்றும், மற்றொரு பக்கத்தில், நானே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரென்ற
நால் வருணங்களை உண்டாக்கி, சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன். ஆகையால்
அவன் அடிமையாகவே இருக்கவேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை? இதைப் படிப்பது
பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால், அதை தவறு, பாவம் என்று சொன்னால்
அது என்ன நீதி என்று கேட்கிறோம்.

இந்த நாட்டு அறிவாளிகள்,
பக்தர்கள், புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்? என்பதற்கு என்ன
கூறினார்கள்? இவர்களால் என்ன கூற முடியும்? கடவுளைப் பற்றி எல்லாம்
அறிந்தவர் போலவும், அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும், பேச
வருகின்றனரே, கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா? இன்றைய தினம்
வரையில், உனது வருஷ வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, எந்த வகையிலே
செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா? தமிழ்நாட்டில் சுமார் 3000
கோவில் களின் வருஷ வருமானம் 2 கோடி ரூபாய். அதாவது, ஆண்டு ஒன்றுக்கு ரூ.250
முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில்
சுமார் 3000 என்றால், அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது
என்றால், இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா?
இதைச் சொன்னால் பொல்லாதவனா? கடவுள் என்றால் நமக்குப் புரியாத, ஆனால்
மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்று இதுவரையில்
நாங்கள் சொன்னதில்லை. எது கடவுள் என்கின்றோம். கடவுள் பெயரால் நடக்கின்ற
தீமைகள், அநியாயமான காரியங்கள், இவைகளைச் சரியா என்றும், இந்த அக்கிரமங்களை
கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம். இதுதான் நாத்திகமா? நாத்திகம்
என்றால் முதலில் உங்களுக்கே புரியுமா என்று கேட்கிறோம்.

உழைப்பாளி
மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை
முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றார். பிறர்
தயவி னால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன். நாளடைவில்
சாமியாகவும், ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார். காப்பிக் கடையில் கணேசர்
முதல் காந்தி, சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன. பிராமணாளுக்கு
மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது. பின்னர் அங்கே இரண்டு, மூன்று
பார்ப்பனப் பத்திரிகைகள், ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரச்சார
நிலையமாகவும், ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபனமாகவும் ஆகி விடுகிறது.
இப்படித்தானே இருக்கிறது இவர்கள் (ஆஸ்திகர்கள்) முன்னேற்றம்! இவர்களுக்குத்
துணை யாக உள்ளவைதானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப்
பத்திரிகைகளும், எப்படியாவது நம்மீது கெட்ட அபிப்பிராயத்தை உண்டாக்கி
ஒழிக்கப் பார்ப்பதுதானே, இவர்கள் வேலையாகி விட்டது.

ஆதலால்,
இம்மாதிரியான எதிர்ப்பிரச்சாரங் களாலும், போலிச் செய்திகளாலும் மக்கள்
ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை, நாட்டு முன்னேற்றத்துக்குச்
சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து
வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும், நான் அடிக்கடி கூறி
வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன், கொசுவலை போட்டுக் கொண்டால்
மட்டும் போதாது.
கொசு உண்டாவதற்கு மூலகாரணமான சாக்கடைகள்,
அழுக்குக் குட்டைகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச்
சுத்தமாக்கினால்தான் கொசுக்கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும்.
அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம், கீதை, புரோகிதம், கோவில்களாய்
இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள்.

(17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழக கிளைத் திறப்பு விழாவில்
தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)

‘குடிஅரசு’  - 23.12.1944

இழிவை ஒழிக்க வழி

இழிவை ஒழிக்க வழி

Saturday, July 23, 2016

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை Kabali pistol back fired.... எப்படி இதை விமர்சனம் செய்வது என்றே விளங்கவில்லை.உங்களுக்காக பார்த்தேன...

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை Kabali pistol back fired.... எப்படி இதை விமர்சனம் செய்வது என்றே விளங்கவில்லை.உங்களுக்காக பார்த்தேன...

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை Kabali pistol back fired.... எப்படி இதை விமர்சனம் செய்வது என்றே விளங்கவில்லை.உங்களுக்காக பார்த்தேன...

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும்: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை: கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை Kabali pistol back fired.... எப்படி இதை விமர்சனம் செய்வது என்றே விளங்கவில்லை.உங்களுக்காக பார்த்தேன...

Sunday, July 17, 2016

Ilango Arasiyal: கத்தோலிக்கப் பாதிரியாராக மாறினார் துரைமுருகன்!திம...

Ilango Arasiyal: கத்தோலிக்கப் பாதிரியாராக மாறினார் துரைமுருகன்!
திம...
: கத்தோலிக்கப் பாதிரியாராக மாறினார் துரைமுருகன்! திமுகவினர் அதிர்ச்சி! --------------------------------------------------------------------...

Saturday, July 2, 2016

தலைவர் கலைஞரின் குறளோவியம்...: குடியியல் - கயமை

தலைவர் கலைஞரின் குறளோவியம்...: குடியியல் - கயமை: குறள் 1071: மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். கலைஞர் உரை: குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் ...

சிவசங்கர்.எஸ்.எஸ்: மாமன்னன் இராஜேந்திர சோழன் - மேலாண்மை தலைவன் !

சிவசங்கர்.எஸ்.எஸ்: மாமன்னன் இராஜேந்திர சோழன் - மேலாண்மை தலைவன் !:                     மாமன்னன் இராசேந்திரனின் எழுச்சிமிகு வரலாறு குறித்த கருத்தரங்கில் இல.தியாகராசன் அவர்களை கடைசியாக பேச அழைத்தார்கள். எழு...

உங்கள் விஜய் பேசுகிறேன்......: "எது அழகு?" - ஒரு உளவியல் பார்வை....

உங்கள் விஜய் பேசுகிறேன்......: "எது அழகு?" - ஒரு உளவியல் பார்வை....:       அழகு என்றால் என்ன?... அழகுக்கான இலக்கணம் என்ன?.... அழகை வரையறுத்தது யார்?.... ஒருத்தரை நாம பார்த்த நொடியே, அவங்க அழகானவங்களா?னு...

அ.ராமசாமி எழுத்துகள்: சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற ந...

அ.ராமசாமி எழுத்துகள்: சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற ந...:                மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை.. அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலி...

Friday, July 1, 2016

இணையப் புத்தகம் : நம்ப முடியாத அதிசயங்கள்

இணையப் புத்தகம் : நம்ப முடியாத அதிசயங்கள்: நம்ப முடியாத அதிசயங்கள்

யுவகிருஷ்ணா: ஏக் தோசை ஹை!

யுவகிருஷ்ணா: ஏக் தோசை ஹை!: எஸ்.வி.சேகர் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர். சிறுவயதிலிருந்தே அவருக்கு ரசிகனாக இருக்கிறேன். எங்கள் ஊர் பிரின்ஸ் ஸ்கூலில் அவர் நடிப்ப...

Monday, June 27, 2016

இறுதி சுவாசம்: ஒரு நேர்காணல்

இறுதி சுவாசம்: ஒரு நேர்காணல்: கவிஞர் நண்பர் றியாஸ் குரானாவுடனான எனது உரையாடல். கொஞ்சம் விலாவாரியான கூடவே சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். அவரது வலைதளத்தில் தொடர்ந்து முக்க...

இறுதி சுவாசம்: வெயிலுக்கு சுமதி என்று பெயர்.

இறுதி சுவாசம்: வெயிலுக்கு சுமதி என்று பெயர்.:                        கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்...

Wednesday, June 22, 2016

தமிழ்காரன்: பாலியல் தொழில் “ஒரு இரவுக்கு நானூறு மட்டும்”

தமிழ்காரன்: பாலியல் தொழில் “ஒரு இரவுக்கு நானூறு மட்டும்”: ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் நைட் கிளப்புகள் மற்றும் விபச்சார விடுதி...

Friday, June 17, 2016

மின்தமிழ் மேடை: திரையிசையில் பாரதிதாசன்

மின்தமிழ் மேடை: திரையிசையில் பாரதிதாசன்: திரையிசையில் பாரதிதாசன் தேமொழி பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) மறைந்து ஐம்பது ஆண்டுகளாகிவிட்டன.  புரட...

Thursday, June 9, 2016

தமிழ் செல்வா : ஐரோப்பா முழுவதும் தமிழே

தமிழ் செல்வா : ஐரோப்பா முழுவதும் தமிழே: கீழ்க்கண்ட தலைப்புகளில் நம் ஆய்வுத் தேடலைக் காண்போம். 1. இத்தாலியும் தமிழே ; ரோம் நகரமும் தமிழே ;   டைப ர் ஆறும் தமிழே , 2 . இங...

Monday, June 6, 2016

Vilangidum: சென்னை அயனாவரத்தில் வேனை ஏற்றி இரண்டு சிறுவர்களை க...

Vilangidum: சென்னை அயனாவரத்தில் வேனை ஏற்றி இரண்டு சிறுவர்களை க...: .

யுவகிருஷ்ணா: முன்கதை சுருக்கம்!

யுவகிருஷ்ணா: முன்கதை சுருக்கம்!

யுவகிருஷ்ணா: முன்கதை சுருக்கம்!

யுவகிருஷ்ணா: முன்கதை சுருக்கம்!: இவ்வளவு உற்சாகமாக இதற்கு முன்பாக இருந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. இன்று விடியற்காலை இரண்டு மணியிலிருந்து தன்னம்பிக்கை கொப்பளிக்கும் ஊற்ற...

Sunday, June 5, 2016

நாத்திகம்: இரத்தக்காட்டேரி

நாத்திகம்: இரத்தக்காட்டேரி: விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012 http://viduthalai.in/page3/32946.html

நாத்திகம்: தோழர் இரவிக்குமாருக்கு

நாத்திகம்: தோழர் இரவிக்குமாருக்கு: திராவிட இயக்கத்தின் மீது அவ தூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வெளிநாடுகளில் இருந்து கொண்டே ப...

நாத்திகம்: தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பே...

நாத்திகம்: தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பே...: தமிழர்களின் நலன்களை திராவிட அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே? இப்போது திராவிடம் என்ற க...

பூனைக்குட்டி: ஆல் இஸ் வெல்... காரணம், கால்டுவெல்!

பூனைக்குட்டி: ஆல் இஸ் வெல்... காரணம், கால்டுவெல்!: ‘‘வெ ளிநாட்டு அறிஞர்கள் ஏராளமானோர் நம்ம மொழிக்காக ஆற்றியிருக்கிற சேவையை படிக்கும் போதே புல்லரிக்குது அய்யா. அவர்கள் பின்பற்றின வழியை கச்ச...

TAMIL - ENGLISH - LITERATURE - PERSONALITY DEVELOPMENT - SELF DEVELOPMENT: UGC - NET / SET - TAMIL - LITERATURE – 1.2

TAMIL - ENGLISH - LITERATURE - PERSONALITY DEVELOPMENT - SELF DEVELOPMENT: UGC - NET / SET - TAMIL - LITERATURE – 1.2: UGC - NET / SET - TAMIL - LITERATURE – 1.2 1.2 மொழியின் தோற்றம் , மொழி இனங்கள் ,   திராவிட மொழிகள்   1.    சிந்து ச...

Tamil Android Tips: HOW TO OFFLINE WATCH LATEST MOVIE

Tamil Android Tips: HOW TO OFFLINE WATCH LATEST MOVIE: Offline  watch  latest movie DOWNLOADLING1 OR DOWNLOADLING2

Friday, June 3, 2016

vilangidum 3: தீப்பிடித்த வீட்டிலிருந்து தனது மனைவி மற்றும் இரண்...

vilangidum 3: தீப்பிடித்த வீட்டிலிருந்து தனது மனைவி மற்றும் இரண்...: .

மரப்பசு: பால்கட்டு

மரப்பசு: பால்கட்டு: பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று சகமாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக்...

AasifBlogs: ஒர் பாடலும் 99 பூக்களும்

AasifBlogs: ஒர் பாடலும் 99 பூக்களும்:                          ஒர் பாடலும் 99 பூக்களும் சங்க இலக்கியம் என்றாலே பத்துப் பாட்டும் , எட்டுத் தொகையும்தான். எட்டுத் தொகை என்பது...

Tuesday, May 31, 2016

பதிவுதொகுப்புக‌ள்: பெண்களை இழிவு படுத்தும் இந்து மதம்.

பதிவுதொகுப்புக‌ள்: பெண்களை இழிவு படுத்தும் இந்து மதம்.: பெண்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.   ஒரு பெண் தன் நோக...

தமிழன்: அண்ணாவின் நூல்கள்

தமிழன்: அண்ணாவின் நூல்கள்:          தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செ...

பூந்தோட்டம் : மிருகங்களின் பெண்பால் பெயர்கள்

பூந்தோட்டம் : மிருகங்களின் பெண்பால் பெயர்கள்:       மிருகங்களில் பெண்பால் மிருகங்களுக்குத் தனிப் பெயர்கள் இருக்கின்றன. அதையும் கவனிச்சு சரியாச் சொல்லிட்டோம்னா நாம நல்லாவே பேசுறோம்னு அர...

Monday, May 23, 2016

இறுதி சுவாசம்: வெயிலுக்கு சுமதி என்று பெயர்.

இறுதி சுவாசம்: வெயிலுக்கு சுமதி என்று பெயர்.:                        கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்...

Sunday, May 22, 2016

அ.ராமசாமி எழுத்துகள்: தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்...

அ.ராமசாமி எழுத்துகள்: தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்...: தமிழுக்கென்று தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கடைசியாக வந்து சேர இருந்தது உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம். கோவையில் செம...

Monday, May 16, 2016

சமஸ்: எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழ...

சமஸ்: எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழ...: நா ன் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்...

Sunday, May 8, 2016

அ.ராமசாமி எழுத்துகள்: இனாம்கள் : தருவதும் பெறுவதும்

தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதை விட, உழைக்காமல்
கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதில் யாருக்கும் பெரிய வருத்தம்
இருக்கப் போவதில்லை. முறையான உழைப்பின் வழியாக இல்லாமல்
, முறைப்படியான
கணக்குகளையும் காட்டாமல் சம்பாதிக்கும் வழிவகைகள் உள்ள இந்த நாட்டில்
இனாம்களைக் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும் என அரசியல்வாதிகள்
நினைக்கிறார்கள். பதவிக்காலத்தில் முறைப்படி சம்பாதிக்காத பணத்தைச்
சேர்த்து வைத்துத் தேர்தல் காலத்தில் இனாமாகக் கொடுக்கிறார்கள். அதைப்
புரிந்து கொள்ளாத வாக்காளர்கள் அதிகம் தருபவன் அதிகக் கருணை உள்ளம்
கொண்டவன் என நினைத்து வாக்களிக்கிறார்கள்.
இனாம்களைக் கொடுத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் ஜனநாயகத்தின் நல்ல அம்சங்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்பதையும், இருக்கிற
அமைப்புகளின் செயல்பாடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கூடுதலாகப்
பணம் சம்பாதித்துச் சேமித்துக் கொள்வார்கள் என்பதையும்
, அப்பணத்தையே
அடுத்த தேர்தலில் அதிக இனாமாகக் கொடுப்பார்கள் என்பதையும் வாக்காளர்கள்
எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. அது உணரப்படாதவரை தேர்தல் ஜனநாயகம்
சரியான அர்த்தம் கொண்டதாக இருக்கப் போவதில்லை.  

அ.ராமசாமி எழுத்துகள்: இனாம்கள் : தருவதும் பெறுவதும்: இந்த வருடத்துத் தீபாவளியை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கொண்டாடி முடித்தோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும...

Thursday, May 5, 2016

சமஸ்: தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!

சமஸ்: தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!: பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்...

Wednesday, May 4, 2016

ஊர் பெயர் காரணங்கள்: ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர் பெயர் காரணங்கள்: ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்: ஊர்களின் பழைய பெயர்கள் ஆருக் காடு - ஆற்காடு - ஆரைக்கல் - நாமக்கல் ஈரோடை - ஈரோடு - உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல் எருமையூர் -...

Friday, April 29, 2016

கருத்துகள் - views: அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்

கருத்துகள் - views: அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்: அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      14 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. ...

Saturday, April 23, 2016

சவுக்கு: சென்று வா மகளே... சென்று வா.

சவுக்கு: சென்று வா மகளே... சென்று வா.: 18 ஆண்டு கால சரித்திரத்தின் இறுதிப்பக்கங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 27 செப்டம்பர் 2014 ஜெயலலிதா மற்றும் தமிழகத்தின் தலையெழுத்தி ...

Monday, April 18, 2016

டான் அசோக்.: தமிழகத்தில் காரல் மார்க்ஸ் - தேர்தல் பரப்புரை சிறப...

டான் அசோக்.: தமிழகத்தில் காரல் மார்க்ஸ் - தேர்தல் பரப்புரை சிறப...: இந்த ஆண்டு எங்கே போவது?  சாக்ரடீஸ் கண்ணில் பட்டுவிடக் கூடாது. எப்போது பார்த்தாலும் க்ரேக்கம் போ என்பார். எனக்கு மிகவும் பிடித்தது ருஷ்யாத...

Willswords Tamil Twinkles: படைத்தோன் யார்? பொய்க்கு, போலிகட்கு விளம்பரம் எதற...

Willswords Tamil Twinkles: படைத்தோன் யார்? பொய்க்கு, போலிகட்கு விளம்பரம் எதற...: https://plus.google.com/u/0/photos/111281518996879701944/     Art photo:   Mermaids Page ஆழியுள் மூழ்கி அகிலத்தை மீட்டாயாம்; பா...

Sunday, April 17, 2016

திருத்தம் பொன்.சரவணன்: ஆதிபகவன் யார்?

திருத்தம் பொன்.சரவணன்: ஆதிபகவன் யார்?: குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.                                              - குறள் எண்: 1 தற்போதைய பொருள்: ப...

சுபவீ வலைப்பூ: அவர் கண்ணிமைப்பின் கதகதப்பில்...

சுபவீ வலைப்பூ: அவர் கண்ணிமைப்பின் கதகதப்பில்...: பத்து ஆண்டுகள் பறந்தோடி விட்டன. 2006 ஏப்ரல் 17 ஆம் தேதி, தலைவர் கலைஞர் அருகில் அமர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் மேலே உ...

Saturday, April 16, 2016

பதிவுதொகுப்புக‌ள்: பார்வதியின் மாத விலக்கு . யோனி மட்டுமே இங்கு வழிபட...

பதிவுதொகுப்புக‌ள்: பார்வதியின் மாத விலக்கு . யோனி மட்டுமே இங்கு வழிபட...: பெண் குறி வழி பாடு சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு நடக்கும் விழா. இப்படியெல்லாம் வணங்குபவன...

Monday, April 11, 2016

வன்னியர் வரலாறு: வன்னியர் வரலாறு - Real Vanniyar History vanniyar h...

வன்னியர் வரலாறு: வன்னியர் வரலாறு - Real Vanniyar History vanniyar h...: பள்ளி பசங்க ... வன்னியரா ?   க்ஷத்ரியரா ?   பள்ளியா ?? வன்னிய குல ...   சத்திரிய குல ....   அக்கினி குல .......   என்னதான் சொல்ல வ...

Saturday, April 2, 2016

எனது வெளி: பெண்களின் கடைக்கண் பார்வை யார் மீது?

எனது வெளி: பெண்களின் கடைக்கண் பார்வை யார் மீது?: தமிழகத்தில் பெண்களின் அமோக ஆதரவை பெற்ற கட்சி அதிமுக என்னும் ஒரு பொது பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. அவ்வாறு அத...

தமிழ்காரன்: FREE LIVE TAMIL TV - நேரலை தொலைக்காட்சி

தமிழ்காரன்: FREE LIVE TAMIL TV - நேரலை தொலைக்காட்சி: சன் டிவி கலைஞர் டிவி ஜெயா டிவி கேப்டன் டிவி மக்கள் தொலைக்காட்சி ராஜ் டிவி விஜய் டிவி ...

Thursday, March 31, 2016

Wednesday, March 23, 2016

Periyar speech about marriages

யுவகிருஷ்ணா: டிவி விவாதம்

யுவகிருஷ்ணா: டிவி விவாதம்

யுவகிருஷ்ணா: டிவி விவாதம்

யுவகிருஷ்ணா: டிவி விவாதம்: இந்த தேர்தலின் ஸ்பெஷல் காமெடியே டிவிக்களில் நடைபெறும் விவாதங்கள்தான். மிக சீரியஸான பாவனையில் நடத்தப்படும் இந்த காமெடிஷோக்களில் குறிப்பாக அ...

Tuesday, March 22, 2016

லியோ ஜோசப் : அண்ணலை கண்டு அஞ்சி நடுங்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம் - த...

லியோ ஜோசப் : அண்ணலை கண்டு அஞ்சி நடுங்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம் - த...: இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் சிலர் எழுதி திரிகிறார்கள்...

Monday, March 21, 2016

வா. நேரு: இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல

வா. நேரு: இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல: தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தியதுதான...

வா. நேரு: மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்.......

வா. நேரு: மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்.......: மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான் ) ஏசுவானவர் பாவிகளை ரட்சிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று ...

வா. நேரு: உடுமலையில் பட்டப் பகலில்........

வா. நேரு: உடுமலையில் பட்டப் பகலில்........: உடுமலையில் பட்டப் பகலில்  அந்தோ கொடுமை! கொடுமை!! ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கொலை வெறித் தாக்குதல் வடக்கே‘லவ்ஜிகாத்';த...

Monday, March 14, 2016

Tuesday, March 8, 2016

சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 11

சுபவீ வலைப்பூ: அரசியல் மேடை - 11: நஞ்சு   "கலந்திருந்த"   பால்     திராவிட இயக்கத்தால்தான் தமிழகம் சீரழிந்து விட்டது என்று நெஞ்சில் நேர்மையற்றவர்கள் பேசிக...

Saturday, March 5, 2016

Sunday, February 14, 2016

டான் அசோக்.: ஒழுங்காக காதலிப்பது எப்படி? -டான் அசோக்

டான் அசோக்.: ஒழுங்காக காதலிப்பது எப்படி? -டான் அசோக்: நமது தமிழக ஆண் சமூகத்தின் 'லட்சணம்' முகநூலைப் பார்த்தாலே தெரியும். ஃபிகர் (அது போலி ஃபுரபைலாதான் 90% இருக்கும்) ஃபோட்டோக்கு க...

Thursday, February 11, 2016

கருத்துகள் - views: திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனா...

கருத்துகள் - views: திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனா...: திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனார் இலக்குவனார் திருவள்ளுவன்      07 பிப்பிரவரி 2016       கருத்திற்காக...

அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இதய வால்வு மாற்றம் 73 வயது முதியவருக்கு மறு வாழ்வு

அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இதய வால்வு மாற்றம் 73 வயது முதியவருக்கு மறு வாழ்வு

இங்கே இது சர்ச்சையாகுமா?

இங்கே இது சர்ச்சையாகுமா?

Tuesday, February 9, 2016

கருத்துகள் - views: இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!...

கருத்துகள் - views: இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்!...: இலக்குவனார் திருவள்ளுவன்      07 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்க...

கருத்துகள் - views: தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திரு...

கருத்துகள் - views: தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திரு...: இலக்குவனார் திருவள்ளுவன்      07 பிப்பிரவரி 2016       கருத்திற்காக.. தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக...

Thursday, February 4, 2016

சிந்திக்க உண்மைகள்.: யார் நாஸ்திகர்கள்? யார்? யார்? யார்?

சிந்திக்க உண்மைகள்.: யார் நாஸ்திகர்கள்? யார்? யார்? யார்?: "முன்னேற்றம்’’ பின்வருமாறு எழுதுகின்றது. நாம் 'குடிஅரசின்’ கொள்கையைக் கைக் கொண்டு நாஸ்திகப் பிரசாரம் செய்வதால் சிலர் தூற்றுவதாகத் ...

சிந்திக்க உண்மைகள்.: தந்தை பெரியார் அறிவுரை:- மதம்- வேதங்கள்

சிந்திக்க உண்மைகள்.: தந்தை பெரியார் அறிவுரை:- மதம்- வேதங்கள்: தந்தை பெரியார் அறிவுரை:- மதம்- வேதங்கள். 1.மதம் ``இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும்விட 1 ஆம் நம்பர் பித்தலாட்டம் கொண்ட மத...

சிந்திக்க உண்மைகள்.: குதிரையின் ஆண்குறி........................

சிந்திக்க உண்மைகள்.: குதிரையின் ஆண்குறி........................: குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்! अश्वमेध "horse sacrifice" ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான...

`அந்தரங்கம்’ எல்லாம் `அந்தரங்கன் அறிவான்’

சிந்திக்க உண்மைகள்.: நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது ................: திருமணம் முடித்த அன்பர்களே உங்களின் எத்தனை பேரின் திருமண சடஙகில் இந்த ம‌ந்திரம் ஓத‌ப்பட்டது? மண‌முடிக்க இருக்கும் அன்பர்களே இதெல்லாம் உங்கள...

சிந்திக்க உண்மைகள்.: ஆணுடைய உயிர்த்துளிகள் ( இந்திரியம் ) பெண்ணுடைய பா...

சிந்திக்க உண்மைகள்.: ஆணுடைய உயிர்த்துளிகள் ( இந்திரியம் ) பெண்ணுடைய பா...: சிவனின் மன்மத புயல்‍ - சக்தி விலகிக் கொள்ள... சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை..........முடிவு?? !! + முருகன...

சிந்திக்க உண்மைகள்.: ஆண்குறி மட்டும் வானத்தின் வழியாக விர்ர்...றென்று ...

சிந்திக்க உண்மைகள்.: ஆண்குறி மட்டும் வானத்தின் வழியாக விர்ர்...றென்று ...: பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிரு...

Wednesday, February 3, 2016

Proved: Atheists More Intelligent Than Religious People

Proved: Atheists More Intelligent Than Religious People: A lifelong study of gifted children that began in 1928 shows a continuous correlation between intelligence and atheism.

Thursday, January 14, 2016

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: துக்ளக்கில் சுதா சேஷய்யன்எழுதியதற்கு மறுப்பு

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan: துக்ளக்கில் சுதா சேஷய்யன்எழுதியதற்கு மறுப்பு: தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! - மஞ்சை வசந்தன் தமிழரின் பண்பாட்டுச் சிறப்புகளை அழிப்பதிலும் திரிப்பதிலும் ஆரியர்கள் தொடர்ந்த...

Tuesday, January 12, 2016

நிசப்தம்: ஜல்லிக்கட்டு

நிசப்தம்: ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு என்பதை இவ்வளவு அவசரமான வழக்காக எடுத்து ஒரே நாளில் விசாரணையை முடித்து தடை செய்கிறோம் என்று தீர்ப்பெழுத வேண்டிய அவசியம் என்னவென...

Sunday, January 10, 2016

09-01-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1

09-01-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1

09-01-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 8

09-01-2016 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 8

10-01-2016 விடுதலை நாளிதழ் பக்கம் 1

10-01-2016 விடுதலை நாளிதழ் பக்கம் 1

10-01-2016 விடுதலை நாளிதழ் பக்கம் 8

10-01-2016 விடுதலை நாளிதழ் பக்கம் 8

‘இதுதான் தங்களின் நடுநிலைக் கண்ணோட்டமா?’

‘இதுதான் தங்களின் நடுநிலைக் கண்ணோட்டமா?’

பெரியாரின் இதயத்தில் வழியும் ரத்தம்

பெரியாரின் இதயத்தில் வழியும் ரத்தம் --- ராஜ்ப்ரியன் --- உச்சநீதிமன்றம் இன்னும் மேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது மீண்டும் நிருபனமாகியுள்ளது. இப்படி சொல்ல காரணம் கடந்த 3ஆண்டுகளாக ஒரு வழக்கு விசாரணைக்கு வராமல் இன்று போய் நாளை வா என்ற கதையாகவே உள்ளது. அந்த வழக்கு, தமிழகத்தில் இயற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்க்கு எதிரான வழக்கு. கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்ட பேரவையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகாரகவேண்டும் என்பது பெரியார் கண்ட கனவு. ஆனால் அந்த கனவு அவர் மறையும் வரை நிறைவேறவில்லை. அதுபற்றி அவர் மனம் வெதும்பி நிறைவேறாத ஆசையை என் நெஞ்சில் முள்ளொன்னு குத்தியுள்ளது என வெளிப்படுத்தினார். தந்தை பெரியாரின் இதயத்தில் குத்தப்பட்டிருந்த அந்த முள்ளை இன்று தான் நம்மால் எடுக்க முடிந்தது எனச்சொல்லி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய வேகத்தோடு பார்ப்பனர் அல்லாத பிற சாதியினர் சாஸ்திரங்களை கற்றுக்கொள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியை திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, சென்னை, திருச்சி, திருச்செந்தூர் ஆகிய ஆறு ஊர்களில் அமைத்தார். அங்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட கருவறைக்குள் செல்ல மறுக்கப்பட்ட எல்லா சாதியை சேர்ந்த இளைஞர்களும் சேர்ந்தனர். அவர்களுக்கான தங்கும் இடம், உணவு போன்றவற்றை இலவசமாகவே வழங்கியது அரசு. இதை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன சக்திகள் மாணவர்களுக்கு, பயிற்சி ஆசிரியர்களுக்கு தொந்தரவு, மிரட்டல்களை தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடிப்போயினர். திருவண்ணாமலையில் பயிற்சி ஆசிரியராகயிருந்த ராமகிருஷ்ணஜீவா என்கிற பிராமணரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதோடு மறைந்திருந்து தாக்கவும் செய்தனர். இதற்கெல்லாம் அசராத அவர் சாஸ்திரங்கள் இந்து சமுகத்தில் உள்ள எல்லா சாதியினம் கற்கும் உரிமை உடையது. பிராமணர்களுக்கு மட்டும் சாஸ்திரங்கள் உரியதல்ல. நான் மற்ற சாதியினருக்கும் கற்று தருவேன் என உறுதியுடன் கற்று தரும் பணியில் இருந்தார். தடைகளை தாண்டி இறுதியில் தமிழகத்தில் 206 மாணவர்கள் பல கட்ட தேர்வுகளை எழுதி அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர். இதை கண்டு வயிறு எரிந்த பிராமண சக்திகள் தங்கள் தொழில் பறிபோகிறதே என மதுரையை சேர்ந்த பட்டர்கள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள், சிவாச்சாரியார்கள் தவிர வேறு யாரும் சாமி சிலையை தொட்டு பூசை செய்ய அறுகதையற்றவர்கள். மற்ற சாதியினர் தொட்டால் கடவுள் கோவித்துக்கொள்வார். ஆகமவிதிப்படி கீழ்சாதியினர் கர்ப்ப கிரகத்தில் நுழைந்தால் கடவுள் கோவிலை விட்டு ஓடிப்போய்விடுவார் எனச்சொல்லி தடை கேட்டார்கள். தமிழக உயர்நீதிமன்றம் தடை தர மறுத்தது. டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தை நோக்கி ஓடினார்கள் கேட்டதும் இடைக்கால தடை தந்தது. இந்த தடையை காரணம் காட்டி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அரசு. தடையை உடைக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் மனு செய்தது. இந்த வழக்கில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பிரபல பார்ப்பன வழக்கறிஞர் பராசரன் வாதாடபோகிறார். தமிழக அரசின் சார்பில் எம்.என்.ராவ், மரியஅர்ப்புதம், நெடுமாறன் என 3 பேரை நியமித்துள்ளது. எல்லாம் தயார்; விசாரிக்க வேண்டியது தான் பாக்கி. ஆனால் வழக்கு தான் விசாரணைக்கு வரவிடமாட்டோம் என தடுக்கிறது சில பூணுல் சக்திகள். பொறுத்தது போதுமென கொதித்தெழுந்த அர்ச்சகர்க்கு படித்த மாணவர்கள் வேலை கிடைக்குமென்று சொன்னதை நம்பி படிச்சி தேர்வெழுதி வெற்றி பெற்றும் சான்றிதழ் தரமறுக்கிறார்களே என நியாயம் கேட்டு போராட்டங்கள் செய்தனர். தங்களது கோரிக்கைகள் வலுவாக வைக்க பயிற்சி முடித்த 206 மாணவர்கள் ஒன்றிணைந்து அர்ச்சக பயிற்சி மாணவர்கள் சங்கம் அமைத்தனர். அரசாங்க அதிகாரிகள் உச்சநீதிமன்ற வழக்கை சுட்டி காட்டினர். பாதிக்கப்படுவது நாங்களும் தான் என உச்சநீதிமன்றத்தின் கதவை தட்ட தயாராயினர். மாணவர்களுக்கு உதவ மனித உரிமை பாதுகாப்பு மையம் வந்தது. உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனித உரிமை போராளிகளான வழக்கறிஞர்கள் காளின், காந்தர்ன் வாதாட மனு செய்தனர். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தற்போது வழக்கில் வாதாட அரசு தரப்பும் தயார், மாணவர்கள் தரப்பும் தயார். விசாரிக்க நீதிபதிகளோ, வழக்கை தொடுத்த பிராமணர்களோ தயாரில்லை. அதனால் தான் 3 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு இன்றும் பரிதாபமாக உச்சநீதிமன்ற குப்பை கூடைக்கு அருகில் கிடக்கிறது. அந்த காகிதம் நீதிபதி முன் வரும் முன்பே அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, பாட்டி செத்து போய்ட்டாங்க, தாத்தா வழுக்கி விழுந்துட்டாரு என பள்ளி பிள்ளைகள் சொல்வதை போல காரணங்கள் சொல்லி வழக்கை தள்ளி வைத்துக்கொண்டே போகிறார்கள். கடைசியாக கடந்த ஏப்ரல் 15 தேதி விசாரணைக்கு வர வேண்டிய வழக்கை தலைமை நீதிபதி விடுமுறை என மே 6 ந்தேதிக்கு மாற்றிவிட்டார்கள். வரும் 6ந்தேதியும் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிபோகும் நிலைதான். காரணம் மே 11ந்தேதி தலைமை நீதிபதி ஒய்வு பெறுகிறார். அதனால் வழக்கு எடுக்க மாட்டார். அடுத்து வரும் தலைமை நீதிபதி எப்போது இந்த வழக்கில் கவனம் செலுத்துவார் என்பது தெரியாத நிலை தான். சங்கராச்சாரியார் வழக்கும் என்றதும் இரவிலும், விடுமுறை நாளிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் திறந்தது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு கல்விச்சாலையில் இட ஓதுக்கீடு தந்தபோது மேல் சாதியினர் எதிர்த்து வழக்கு தொடுக்க கால நேரம் பார்க்காமல் உச்சநீதி மன்ற கதவுகள் திறந்தன. இப்படி பல நேரங்களில் உயர் சாதியினருக்காக நடு இரவில் கூட மனுவை விசாரித்தது. பிராமணர்களை போல பிற சாதியினர் கருவரைக்குள் நுழைந்து கடவுளை தொடலாம், பூசைகள் செய்யலாம் என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை பூணுல் சக்திகள் பொறுக்க முடியாமல் பிராமணர்களை தவிர வேறு சாதியினர் கடவுளை தொட அறுகதையற்றவர்கள் எனச்சொல்லி தடை கேட்டார்கள். கடவுள் சாதி பார்ப்பதில்லை, மேல்சாதி, கீழ்சாதி எனச்சொல்லி தீண்ட தகாதவர்கள் என சொன்ன பூணுல் சக்திகளை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கலாம் அல்லது வழக்கு பதிவு செய்திருக்காலம். ஆனால் அப்படி எதையும் செய்யாமல் கேட்டதும் இடைக்கால தடை தருகிறது. இந்த இடைகாலதடை உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவும், விசாரணைக்கு வராமல் இருப்பதற்கும் பிராமணர்கள் மட்டுமல்ல தமிழக அரசும் ஒரு காரணம். 1970ல் தந்தை பெரியார் தமிழகத்தில் கோயில்களில் நடக்கும் சாதி ரீதியான கொடுமைகளை கண்டித்து கருவரை நுழைவு கிளர்ச்சி போராட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என அறிவித்தார். அப்போது முதல்வராகயிருந்த மு.கருணாநிதி, அய்யாவை எங்களது அரசு கைது செய்ய முடியாது. அதனால் அவரின் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றார். 1972ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வாரிசுரிமை அர்ச்சகர் முறையை ஒழித்தார். இந்து சமயத்தில் சாஸ்திரம் தெரிந்தவர்கள் கடவுளுக்கு பூசை செய்யலாம் என்றது அப்போதைய சட்டம். மறைமுகமாக எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றது. இதை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 12 பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்திற்க்கு போயினர். அங்கு தமிழக அரசு போட்ட சட்டம் செல்லும் என்றது 5 பேர் கொண்ட நீதிமன்ற பெஞ்ச். உச்சநீதிமன்ற வழக்கின் விவாதத்தில், சாஸ்திரங்கள் தெரிந்தவர்களையே கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிப்போம் என்றார் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கோவிந்தசாமி. உடனே பிராமணர்கள் சார்பிலான வழக்கறிஞர் சாஸ்திரம் தெரிந்தவர்ளையே நியமிப்போம் என்கிறார்கள். வைணவ கோயில்களில் சைவத்தை சேர்ந்தவர்களையும், சைவ கோயில்களில் வைணவத்தை சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்கள். உடனே அரசு வழக்கறிஞர் நாங்கள் ஆகமவிதிப்படி நடப்போம் என முரண்பாடான உறுதிமொழியை தந்தார். உச்சநீதிமன்றம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அர்ச்சகர்களின் வாரிசுரிமை முறைக்கு தடை விதித்து அரசின் சட்டத்திற்கு அங்கீகாரம் தந்தது. 38 ஆண்டுக்கு பின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றியபோது, ஆகம விதியை மீற மாட்டோம் என 1972ல் உத்தரவாதம் தந்த தமிழக அரசு இப்போது அதை மீறுகிறது எனச்சொல்லி இடைக்கால தடை வாங்கினார்கள். தடை வாங்கிய பின் பிராமண சக்திகள் இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் தடுத்துக்கொண்டுயிருப்பதை தமிழக அரசு நினைத்திருந்தால் ஸ்பெஷல் பெட்டிஷன் தாக்கல் செய்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்திருக்கலாம் ஆனால் அரசு கடந்த 3 ஆண்டுகளாக மவுனமாகயிருக்கிறது. இதனால் 206 மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை கேள்வி குறியோடு எதிர்நோக்குகிறார்கள். இது போன்ற தவறுகள் வாதத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் நல்லது. ஆதில் மாறி வேறு ஏதாவது உறுதிமொழி தந்தால் 100 ஆண்டுகளுக்கு பின்னும் பூணுல் சக்திகள் பிரச்சனை செய்யும். தந்தை பெரியாரின் இதயத்தில் குத்திய முள்ளை எடுத்ததாக பெருமை படுத்திக்கொண்ட கலைஞர், அந்த இதயத்தில் வழியும் ரத்தத்தை கவனிப்பாரா? thanks to : https://draft.blogger.com/blogger.g?blogID=515737550499503846#editor/target=post;postID=5663300476065472397

ThirukKuRaL