தென்றல் (Thendral)

Friday, January 31, 2014

Tamil Aggregators

Tamil Aggregators

கிருத்துவ மயக்கம்


கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிருத்தவ மதப் போதகர்களே.

1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது; நம்பினர்.

2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிருத்துவ மதப் போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.

3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் பேச்சுக்களால் கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம் (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல்களையும், கர்த்தரின் குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் சொல்லி கிருத்துவ மதத்தைப் பரப்பினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல் கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர்.

-பாணன்

Read more: http://www.viduthalai.in/e-paper/74413.html#ixzz2s2yJ0MPo

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் ......

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் வடதிசைப் பக்கமிருந்தே வந்துள்ளன.வேத கால ஆரியச் சூழல் இன்னும் அழிந்துவிடவில்லை.சமஸ்கிருதம் ஒருவேளை இந்தி மொழிக்கு மாறாக ஒருமைபாட்டிற் குகந்த மொழியென்று வடவாரிய அரசால் கொள்ளப்படினும் கொள்ள படலாம்.இந்திய தலைமையிடத்தை அடுத்தபடியாக ஒரு ஆரிய பார்ப்பனன் பெற்றாலும் நாம் வியப்பதற்கில்லை.கூட்டுனர்வோடு ஆரிய பார்ப்பனர்கள் ஆற்றுகின்ற இனப்போராட்டம் மீண்டும் வெற்றி பெருமானால் தமிழன் தன் இனத்தையே மறந்து போக வேண்டியதுதான்.ஏனெனில் தமிழனின் உள்ளத்தே இன்னும் இனவுணர்வும் மொழியுணர்வு இளைமைப் பருவத்திலேயே உள்ளன.

தமிழன் மூளையும் குல மத மயக்கங்களால் நன்றாக சிதைக்கப்பட்டு உள்ளது.அவன் மனத்தில் தூவப் பெற்ற வேற்றுமை வித்துகள் அங்கும் இங்கும் முளையிட்ட வண்ணமாகத் தான் உள்ளன.தமிழனிடத்து அவ்வப்பொழுது தலைதூக்கும் ஒற்றுமை உணர்ச்சிகளை ஊடுருவி அழிக்க இன்னும் பார்ப்பனர்கள் முனைந்து கொண்டுதான் உள்ளனர்.இந்நிலையில் தமிழன்தான் பார்ப்பானாகிக்கொண்டு வருகிறானேயன்றி ஒரே ஒரு பார்ப்பானோ பார்ப்பானத்தியோ தமிழுணர்ச்சி பெற்றுவிடவில்லை.பார்ப்பன வெறுப்பு குறைந்து போன தமிழனைப் பார்க்க முடிகின்றதே தவிரப் பார்ப்பனிய பற்றுக்குறைந்த ஒருவரையே காண முடியாத பொழுது தமிழ்ப்பற்று மிகுந்த ஒரு பார்ப்பன உயிரை பார்ப்பது மிகவும் அரிதாகின்றது.

எனவே தமிழர் இனவொற்றுமை பெறாமல் நாட்டுக்கோ,மொழிக்கோ,இனத்திற்கோ வந்து அல்லது வருகின்ற எத்துனைச் சிறிய தீமையையும் அகற்றிவிட முடியாது.தமிழர் இனவொற்றுமை பெற வேண்டுமாயின் அவர்கள் தம்மிடம் உள்ள குல வேற்றுமைகளை அடியோடு களைந்துதானாக வேண்டும்.மதச்சுவர்களையும் சாதிச்சுவர்களையும் அப்படியப்படியே வைத்துக்கொண்டு நாம் இன நலத்தை பேணிவிட முடியாது.நமக்குள் ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு நம் எதிராளியிடமிருந்து வரும் தீமைகளை போக்கிவிடுதல் என்பது அறியாமையாகும்.நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஏமாளிச்செயலாகும்.நம் சாதி சழக்குகளை வேரறக்
களைந்தாலன்றி நாம் வெற்றிபெற போவதில்லை.பார்ப்பனரின் இனவொற்றுமையையும் அவர்தம் அடிப்படைக் கொள்கைகளையும் பார்த்த பின்னாகிலும் நாம் நம் இழிவுகளைப போக்கிக் கொள்ளாமல் இருப்பது நம்மை எத்தனை காலமானாலும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டுக்கொள்ள முடியாமலேயே செய்யும் .இதனை உணர்ந்து தமிழர்கள் செயல் பட வேண்டும்.

- பெருஞ்சித்திரனார்.

- தென்மொழி.சுவடி 7,ஓலை 3.1969.
— with Paraneetharan Kaliyaperumal and 14 others.

‘வேகம், வெறி!


சாக்ரடீஸிடம் ஒருவர் வந்தார். ‘வேகம், வெறி என்கிறார்களே, அது எங்கே கிடைக்கும்..?’ என்றார். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த சாக்ரடீஸ், ஆத்தங்கரையில் கிடைக்கும். அங்கே வா!’ என்றார்.ஆற்று தண்ணீருக்குள் இருவரும் இறங்கினார்கள். இடுப்பளவு, மார்பளவு தண்ணீரின் அளவு ஏற... ‘மூச்சைப் பிடித்து உள்ளே மூழ்கி, தம் கட்டு! தெரியும்’ என்றார். ‘இது என்ன பெரிய வித்தை...’ என்று அந்த மனிதர் தண்ணீருக்குள் மூழ்க.... 15 செகண்ட் நேரம் கொடுத்த சாக்ரடீஸ், திடுமென, அவரது கழுத்தைப் பிடித்து, தண்ணீருக்குள் இருந்து எழ முடியாதபடி அழுத்தினார். அந்த நபர் ‘இதுவும் டிரீட்மென்ட்டே!’ என்பது போல் மூச்சுப் பிடித்து நின்றார். 30 செகண்ட், 45 செகண்ட்... அந்த நபரால் அதற்கு மேல் தம் கட்ட முடியவில்லை. நிமிர விரும்பினால், இரும்புப் பிடியாக சாக்ரடீஸின் கைகள் அழுத்திக்கொண்டிருந்தன.‘ஐயோ.... பதில் தெரியாத கேள்வி கேட்டதற்காக இந்த நபர் நம்மைக் கொல்லப் பார்க்கிறார்!’ என்று திமிறினார். சாக்ரடீஸ் முகத்தில் புன்னகையும் விரல்களில் கடுமையாக அவரை அழுத்திக்கொண்டேஇருந்தார். பெரிய போராட்டம்.... ஒரு கட்டத்தில், தன் வலு முழுவதையும் சேர்த்து சாக்ரடீஸைத் தாக்கி, அவரைத் தடுமாறவைத்து நீருக்கு மேலே வந்த அந்த நபரிடம் கொலை வெறி! எகிறிஅடிக்கப் போய்விட்டார். ‘சாதாரணமாக கிடைக்கிற காற்று, 2 நிமிடம் கிடைக்காமல் போனால் என்ன ஒரு எகிறு எகிறுகிறாய்... துள்ளித் துடிக்கிறாய்! தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் உனக்குத் தந்ததே அசுரபலம். இதுதான் வேகம், இதுதான் வெறி!’ என்று சொல்லிவிட்டு கரையேறினார் சாக்ரடீஸ். இந்த வெறி மட்டும் வந்துவிட்டால் 24 மணிநேரம் உழைத்தாலும் வேகம் அடங்காது. 
நன்றி: சிறுதொழில் முனைவோர்

இந்து மதவெறி இராஜ்ஜியம்

தமிழருவி மணியனும்,வைகோவும் இதனை இன்று மறந்ததேன்?
‘இந்து ராஜ்யம்’ இந்து மதவெறி பாசிஸ்டுகளின் ஒரு பகற்கனவு: இந்த நாட்டைப் பீடித்திருக்கும் அனைத்துப் பிணிகளுக்கும் சர்வரோக நிவாரணி என பா.ஜ.க கூறும் ‘இந்து ராஜ்ஜியத்தை’ அமைத்தல் - இந்துத்துவம் என்பதின் இலட்சணங்கள் என்ன? இதுவரை பா.ஜ.க அதை எழுத்து பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ அறிவித்தது இல்லை. அது சொன்னவை சில, சொல்லாமல் செய்ய விரும்புகின்றவை சில. சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் அதன் உள்ளக்கிடக்கையை இந்துமதப் பண்டாரங்கள், பரதேசிகள், சாமியார்கள் (துறவிகள்) அமைப்பு - ஆகிய இந்திய சாதுக்கள் சந்நியாசிகள் பஞ்சாயத்து - ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் சுவாமி முக்தானந்தம், ஆசார்யவாமதேவ் ஆகிய இருவர், தற்போதுள்ள இந்திய அரசியல் சட்டம் எந்த அளவிற்கு இந்துக்களுக்கு விரோதமாக உள்ளது என விளக்கி 67 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை வெளியிட்டார்கள். இதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அகில இந்திய சந்நியாசிகள் பஞ்சாயத்தின் தீர்மானத்திற்குப் பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்து பண்பு நெறிகளின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்காக புதிய அரசியல் நிர்ணயசபையை நிறுவ வேண்டும் - யாரும் கேள்வி கேட்க முடியாத உயர்பதவியை பிராமணர்களுக்கு உறுதிசெய்யும் ஜாதி அமைப்பிற்கு அரசியல் சட்டத்தின் மூலம் அங்கீகாரம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினரைப் பாகுபடுத்திக் காட்டும் பிரிவுகளையும், சட்டங்களையும் நீக்குவோம். மேற்கூறப்பட்டிருப்பவை ஆர்.எஸ்.எஸ் தலைவரும் இந்தக் காவிச்சட்டை அமைப்புகளின் குருநாதருமான எம்.எஸ் கோல்வால்கர், 1939-இல் வெளியிட்ட ‘நாம் அல்லது நமது தேசியத் தன்மையின் விளக்கம்’ என்ற நூலில் இந்து ராஷ்டிரம் பற்றிய திட்டத்தைக் குறித்துக் கூறப்பட்டுள்ள கருத்தாக்கங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. கோல்வால்கரின் கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சியோ வேறு எந்தக் காவிச்சட்டை அமைப்போ விமர்சித்தது இல்லை. இந்தக் காவிச்சட்டை அமைப்புகள் இன்றுவரை அவற்றை வேதவாக்காக ஏற்றுச் செயல்படுத்தி வருகின்றன. ‘நாம் அல்லது நமது தேசியத்தன்மையின் விளக்கம்’ என்ற நூலில் கோல்வால்க்கர் கூறுவதைப் பாருங்கள்: ”இந்துக்களின் பூமியில் இருப்பது இந்து தேசம். இருக்கவேண்டியதும் அதுவே. அதன் இன்றைய உறக்க நிலையிலிருந்து அதற்கு விழிப்பூட்டி வலிமை பெறச்செய்வதை இலட்சியமாகக் கொண்ட இயக்கங்கள் மட்டுமே உண்மையான தேசிய இயக்கங்கங்களாகும். மற்றவை அனைத்தும் தேசிய இலட்சியத்துக்கு எதிரான துரோகிகள், விரோதிகள், கொஞ்சம் கருணையோடு சொல்வதானால் முட்டாள்கள்.” மேலும் கோல்வால்கர் தான் கனவு காணும் இந்து இராஜ்ஜியத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “பிறமதங்களைப் பின்பற்றும் இந்திய மக்கள் தங்களின் வேற்றுமையைக் கைவிட்டு, இந்து தேசத்தின் மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றை ஏற்று, அவர்கள் இந்து தேசிய இனத்தில் (National race) முற்றாக இணைந்து விட்டால் ஒழிய அவர்களுக்கு தேசவாழ்வில் இடங்கிடையாது. அவர்கள் தங்களின் இன, மத, பண்பாட்டு வேற்றுமைகளை வைத்துக் கொண்டிருக்கும் வரையில் அவர்கள் அன்னியர்களாக மட்டுமே இங்கே இருக்க முடியும்.” அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்; “இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனத்தவர், ஒன்று இந்து பண்பாட்டையும், மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிக்கவும் அதற்கு பயபக்தி செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் - அதாவது இந்து தேசத்துக்கு புகழ் பாடுவதைத் தவிர வேறு எந்த கருத்துக்கும் அவர்கள் இடம் தரக்கூடாது. இந்து இனத்துடன் கலந்துவிடும் பொருட்டுத் தங்களின் தனிவாழ்வை இழந்துவிட வேண்டும்; அல்லது இந்து தேசத்துக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக மட்டுமே அவர்கள் இந்த நாட்டில் தங்கியிருக்கலாம். எதற்கு உரிமை கொண்டாடக் கூடாது. குடியுரிமையைகூட அவர்கள் கோரக்கூடாது.” இதுதான் 1939-இல் கோல்வால்க்கர் பகற்கனவு கண்ட இந்து இராஜ்ஜியம் - இந்துத்துவம். இதுவே காவிச்சட்டைகளுக்கு வேதவாக்கு. இருப்பினும் பாரதீய ஜனதாக் கட்சி வெளிப்படையாகவும், ஒப்பனை செய்து கொள்ளாமலும் தனது உண்மையான பாசிச முகத்தைக் காட்டிக் கொள்வதில்லை. ஆயினும் பா.ஜ.க தனது கொள்கைகள், முழக்கங்கள், ராமன், ரொட்டி, இந்து இராஜ்ஜியம், இஸ்லாமியப் பகைமை, வர்ணாசிரம தர்மத்தைப் பேணுதல்; ஏகாதிபத்தியத்திற்கு தொண்டூழியம் செய்தல், தரகுப்பெருமுதலாளிகளுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் கரசேவை செய்தல், ஆகிய அனைத்தையும் கோல்வால்கரின் பகற்கனவை நனவாக்கும் நோக்கத்துடன்தான் வகுத்துக்கொள்கிறது. நாடாளுமன்ற அமைப்புகளின் மூலமே இந்துமதவெறி பாசிச இராஜ்ஜியத்தை இராம இராஜியத்தை நிறுவும் பொருட்டு, காவிச்சட்டை அமைப்புகளுக்கிடையில் வேலைப் பிரிவினை செய்யப்படுகின்றன

ஜெயலலிதா பிரதமரானால்…?


ஜெயலலிதா பிரதமரானால்…?

அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. ஒரு வேளை நடந்துச்சுனா..? அதாங்க, 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஜெயிச்சு, ஜெயலலிதா பிரதமர் ஆகிட்டா என்ன நடக்கும்னு பார்ப்போம்!
வட மாநிலங்கள் அனைத்துக்கும் இலவச, மன்னிக்கவும்… விலையில்லா ஸ்வெட்டர், குளிர்காலத்தில் குளிக்க ஹீட்டர், மற்றும் செம்மறியாடு, ஒட்டகம்னு கொடுத்திருப்பாங்க.
ரூபாய் நோட்டில் உள்ள காந்திக்குப் பதிலா எம்.ஜி.ஆர் சிரிக்கிற மாதிரி படத்தை மாத்தி, அசோகச் சக்கரத்துக்குப் பதிலா இரட்டை இலை சின்னத்தை வெச்சு இது இரட்டை இலை இல்லை… பறக்கும் சிங்கங்கள்னு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி இருப்பாங்க.
மெக்சிகோவில் புயல், சிரியா அமெரிக்கா பிரச்னை, செவ்வாய் கிரகத்துல தண்ணி இல்ல. இது எல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம்னு பார்லிமென்ட்ல பேசியிருப்பாங்க. வருகிற ஜூன் (அல்லது) ஆகஸ்ட்டில் இருந்து அந்தப் பிரச்னையெல்லாம் தீரும் என அமைச்சர் ஒருத்தரை விட்டு சொல்லச் சொல்வாங்க.
அம்மாவோட பிறந்த நாளுக்கு நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் அப்புறம் (மன்மோகனையும் மோடியையும் சேர்த்துக்கலாம்) எல்லாரும் சேர்ந்து ‘வாழ்த்த வயதில்லை தாயே… வணங்குகிறோம்’னு பேனர் வைப்பாங்க.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா சசிகலாவை நியமிச்சு எல்லோரையும் திகில் காட்டியிருப்பாங்க.

தமிழ்நாட்டில் இருக்கிற கொடநாட்டை டார்ஜிலிங்குக்கு மாத்தி குளிர்காலக் கூட்டத்தொடரை டார்ஜிலிங்கில் நடத்தி இருப்பாங்க.
ஒவ்வொரு ஆண்டு ஆட்சி முடிவின்போதும் ‘உலகம் போற்றும் ஓராண்டுச் சாதனைகள்’, ‘இந்தியா மகிழும் ஈராண்டுச் சாதனைகள்’னு ஃப்ளெக்ஸ் வெச்சுருப்பாங்க.
அமைச்சரவை மாற்றம் கொஞ்சம் மேலே போய் அடிக்கடி மாநில முதல்வரை மாத்தி இருப்பாங்க. உதாரணமா கேரளா முதல்வரை காஷ்மீருக்கும் காஷ்மீர் முதல்வரை கர்நாடகாவுக்கும் மாத்தி இருப்பாங்க.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் 12 ஏர்போர்ட், 24 ஹெலிபேட், 36 பேருந்து நிலையங்களை அமைப்பதோடு இந்தியாவின் அடுத்த தலைநகராக திருச்சியை அமைக்க உத்தரவு போடுவாங்க.
இந்திய சினிமா 100, உலக சினிமா 100 போன்ற விழாக்களை நடத்தி அந்தந்த மொழியில் இருக்கிற ‘அம்மா’ புகழ் பாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிகர்களை ஆடிப்பாடச் சொல்லியிருப்பாங்க. அமிதாப்பச்சன் அந்த விழாவில் ‘நான் அமிதாப் பச்சன் இல்லை, அம்மா பச்சன்’னு திக்கித் திணறி தமிழில் டயலாக் பேசுவார்.
காமெடிக்குக்கூட சினிமாவில் அரசியல் இருக்காது.
இந்தியா முழுக்க விமான சேவையைத் தொடங்கி, அதற்குப் பச்சை கலர் பெயின்ட் அடிச்சு, விமானங்கள் பசுமையாக இருந்தால் அழகாக இருக்கும்னு சொல்வாங்க.
வெளிநாட்டு அதிபர்கள் வீட்டுத் திருமணங்களுக்குப் போய் அங்கே இருக்கிற மக்களுக்குப் புரிகிற மாதிரி குட்டிக் கதைகள் சொல்லி அப்ளாஸ் வாங்குவாங்க.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலும், மோடி குஜராத்திலும் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்படும்!
-(உ.சிவராமன் http://www.vikatan.com)

Thursday, January 30, 2014

களம்: ஆம் ஆத்மி: யானையாய் மாறிய யானைப்பாகர்?

களம்: ஆம் ஆத்மி: யானையாய் மாறிய யானைப்பாகர்?: மேதா பட்கர் பல்வேறு சமுதாயச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து 2004 ஆம் ஆண்டில் மக்கள் அரசியல் முன்னணி ( People's Political Front ) என்னும...

தமிழர்களும் திராவிடனும் ஒரே இனம்


இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (), அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.
13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழங்குடியினர், பல் வகை ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம்.

தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.

‪#‎வட‬ இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்... இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.#

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.
இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.

தமிழில்: கிளர்ச்சி ஸ்விட்ச்

தமிழில்: கிளர்ச்சி ஸ்விட்ச்

ஆரியர் வருகைக்குமுன்!

இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம்[2] என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர். சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

காஞ்சி ''மடத் தலைவன் ''!...

பார்ப்பனர்களின் தலைமை பீடமாகிய காஞ்சி மடம் தமிழை எப்படி ஏசுகிறது. தமிழ் நீசபாசை என்று தானே சொல்லுகிறது. இதோ "இந்து மதம் எங்கே போகிறது" என்ற நூலில் ராமானுச தாத்தாச்சாரி என்ன சொல்லுகிறார் பாருங்கள்..

"அந்த நாளுக்கான மாலை நேர பூஜைக்கான மடம் தயாராகி கொண்டிருந்ததது. மகா பெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய் விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்..குளித்து முடித்துவிடிருந்தார் மகா பெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்..நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாச்சலம் என்ற பக்தர்..மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுதான் போவது என்ற உறுதியோடு இருந்தார்

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணா சலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகா பெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்' என்றேன்.

'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' - என்றார் பக்தர்

எங்கள் பேச்சு சத்தத்தை கேட்ட சிலர்..விஷயத்தை மகா பெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்

போனேன் கேட்டார்.சொன்னேன். 'இதோ பாரு தாத்தாச்சாரி அவரை பார்க்குறத்துக்கு நேக்கு ஒண்ணுமில்லை..பார்த்தால் எதாவது கேட்ப்பார், பதிலுக்கு நான் தமிழில் பேசவேண்டி வரும் நோக்குதான் தெரியுமே..தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமயிடுத்துல்லையோ..அதனால் நான் மௌனம் அனுச்டிக்கிறேன் என்று சொல்லி அனுப்பிச்சிடுங்கோ'

என என்னோடு சம்ஸ்கிருத சம்பாசனை நிகழ்த்தினார் "

-சங்கமித்திரன் -

புனித அக்னி குளத்தின் கதை!

நமக்கெல்லாம் மானமும் அறிவும் இருந்தால் இப்படியெல்லாம் செய்திகள் போட்டு தமிழில் பத்திரிகை நடத்துவார்களா ?

புனித அக்னி குளத்தின் கதை தெரியுமா உங்களுக்கு? அவாள் பத்திரிகை சொல்கிறது கேளுங்கோ

மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் பலருக்கும் இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் தெரிந்திருப்பதில்லை.

பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவ பெருமானுக்கு சரஸ்வதி தேவி கொடுக்கும் சாபத்தினால் கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொள்கிறது. இதனால் சிவனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது.இந்த கபாலம் சிவனுக்கு படைக்கும் உணவை உண்டு விடுவதால் பசியால் வாடிய சிவபெருமானுக்கு பித்து பிடித்து காடு மலைகளில் சுற்றி திரிந்தார். இதை பார்த்த பார்வதி தேவி மகாவிஷ்னுவின் உதவியை நாடுகிறார். மேல்மலையனூரில் நடக்கும் மயான கொள்ளையின் போது சிவபொருமானுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என மகா விஷ்னு கூறியதுடன் சாப விமோசனத்திறக்காக வழியையும் கூறுகிறார். இதன் படி பார்வதி தேவி மீனவ சமுதாயத்தை சேர்ந்த மலையரசன் மகளாக பிறந்து மேல்மலையனூரில் வளர்ந்து வருகிறார்.

பார்வதி தேவி திருமண வயதை அடைந்திருந்த நேரத்தில் காடுமலைகளில் சுற்றி திரியும் சிவபெருமளான் மாசி மாதம் மகா சிவராத்திரியன்று மேல்மலையனூர் மயானத்தில் வந்து தங்குகிறார். சிவபெருமான் வந்துருப்பதை அறிந்த கொள்ளும் பார்வதி தேவி மறுநாள் நடக்கும் மாயனக்கொள்ளையில் சிவனுக்கு படைக் சுவையான உணவை கொண்டு வருகிறார். கடும் பசியில் இருக்கும் சிவனுக்கு பார்வதி தேவி கொடுக்கும் உணவை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுள்ள பிரம்ம கபாலம் உண்டு விடுகிறது. உணவை எடுக்க சிவபெருமாணின் கரத்தில் இருந்த விடுபட்டு கீழே இறங்கும் பிரம்ம கபாலத்தை பார்வதி தெவி விஸ்வ ரூபம் எடுத்து தனது காலால் பூமியில் மிதித்து ஆட்கொள்கின்றார். இதன் பிறகு சிவபெருமானுக்கு சாப விமோச்சனம் ஏற்படுகிறது. கோபத்தினால் அக்னி பிழம்பாக மாறும் பார்வதி தேவி இங்குள்ள அக்னி குளத்தில் குளித்ததாக புராணம் கூறுகிறது. இதன் பிறகும் தனியாத பார்வதி தேவியின் கோபத்தை தனிக்க தேவர்கள் ஒன்று கூடி தேர் திருவிழா நடத்தினர். இதில் தேவர்களே தேரின் பாகங்களாக இருப்பது விழா எடுக்கின்றனர்.

இந்த விழாவே இன்றுவரை மேல்மலையனூரில் மாசி திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த பகுதி மக்கள் அக்னி குளத்தை புனிதமாக நினைத்து இதில் குளிப்பதை தவிர்த்தனர். மேலும் குளத்தின் நீரை குடி நீராக பயன்படுத்தி வந்தனர். பக்தர்கள் நீராட வேண்டும்மென்றால் குளத்தில் எடுத்து வந்து ஒதுக்கப்புறமாக குளித்தனர். தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் குளத்தின் மையப்பகுதிக்கே சென்று குளிக்கிறார்கள். மேலும் ஒரு படி மேலே சென்று அனிந்திருக்கும் துணிகளை குளத்தின் உள்ளே போட்டுவிடுகின்றனர். இதை அறியாத சில பக்தர்கள் குளத்தினுள் இறங்கும்போது துணிகளில் சிக்கி விபத்துகள் பல நேர்ந்திருக்கின்றன. இனியாவது பக்கதர்கள் குளத்தின் புனிதத்தை உணர்ந்து குளத்தினுள் இறங்கி குளிப்பதை தவிர்த்தாலே அம்மனின் பூர்ண அருள் கிடைக்கும்.


தை அமாவாசை!

நம் மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு முட்டாள்களாகவே இருப்பது.நாம் எதையும் சிந்தித்து பார்த்துவிடக்கூடாது என்பதில் எதிரி தெளிவாக இருக்கிறான் இல்லையெனில் இன்றைய அறிவியல் உலகத்தில் இதுமாதிரி முட்டாள்தனமான செய்திகளை போட்டு நம் மக்களை முட்டாள் ஆக்க அவாள் கூட்டம் நினைக்குமா ?
----------------
தை அமாவாசை அன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொரு வரும் வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். அனேகர் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனர்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர். அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம். அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.

புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். உற்றார், உறவினர் தொடர்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடி களையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக் கூடாது. பறிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். நாளை வியாழக்கிழமை(30-ந்தேதி) அமாவாசை தினம் அதிகாலையிலேயே தொடங்கி வருகிறது. எனவே காலையில் புனித நீராடி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யலாம். நாளை பித்ரு பூஜைக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் தான் வியாழக்கிழமை அதிகாலை முன்னோர் வழிபாட்டை தங்கு தடையின்றி சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்க முடியும்.
— with யுவான் சுவாங் and 14 others.

30.1.1948<> கோட்சே<>ஆர் எஸ் எஸ்<>காந்தி

30.1.1948
கோட்சே என்கிற ஒரு பக்கா ஆர் எஸ் எஸ்காரன் காந்தியை சுட்டு கொன்ற நாள்.

காந்தியாரைப் படு கொலை செய்த அந்த ஆர்.எஸ்.எஸ். பல முறை தடை செய்யப்பட்டும், இன் றும் காவு கேட்டுக் கொண்டுதான் திரிகிறது.

கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபைக்காரன் என்று சொல்லித் தப்பித்து ஓடப் பார்க்கிறது அந்த அமைப்பு! இப்படிச் சொல்லுவது கடைந்தெடுத்த கோழைத்தனம் என்று சொல்லுகிறான் - நாதுராம் கோட்சேயின் தம்பியும், காந்தியாரின் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றவனுமான கோபால் கோட்சே; தினமலரை ஆதாரமாகக் காட்டினால் தானே அவாளுக்குத் திருப்தியாக இருக்கும்? நமக்கு ஏன் அந்தக் குறை?

ஆர்.எஸ்.எஸ்.தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஹைதராபாத்தில் கொடுத்த பேட்டி யில் ஆர்.எஸ்.எஸ். தொண் டன் என்றால் தனது வாழ்நாள் முழுவதும் அதில் முழுமூச்சாக இருக்க வேண்டும்.

இதற்கு எனது அண்ணன் நாதுராம் கோட்சேவை உதாரணமாகக் கூறலாம் (தினமலர் 14.2.1988 திருச்சி பதிப்பு) என்று சொல்லி விட்ட பிறகு காந்தியாரைக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்கப் பொய் சொல்லுகிறது ஆர். எஸ்.எஸ். கும்பல். பொய் தான் அவர்களுக்குக் கற்கண்டுப் பொங்கலாயிற்றே!

கோபால் கோட்சே மட்டு மல்ல - நாதுராம் கோட் சேயின் மனைவியும் தன் கணவன் ஆர்.எஸ்.எஸ். தான் என்று சத்தியம் செய்கிறார்.அவன் ஆர்.எஸ்.எஸ். இல்லை; இந்து மகாசபைக்காரன் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்வதானாலும், இவையெல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே? மறுக்க முடியுமா?

இன்னொன்றும் மிக முக்கியம். நீதிமன்றத்தில் கொலை குற்றவாளி கோட்சே சொன்ன கீதையின் வாசகம்தான் அது.

"மதத்திற்கு ஆபத்து வரும்போது எதிரி சக்திகள் தலை தூக்கும்போது மதத்தினைப் புதுப்பித்து, நிறுவ நான் அவதாரம் எடுத்து வருவேன்" எனும் கடவுள் கிருஷ்ணனின் சத்தியத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று வாக்கு மூலம் கோட்சே கொடுத்ததன் மூலம் இந்து மதத்தின் அஸ்திவார நூலான கீதையின் கொலை வெறித்தனம் அம்பலமாகிடவில்லையா?

நீதிமன்றத்தில் கோட்சே கொடுத்த இந்த வாக்குமூலம் கூடப் பொய்யென்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்லுமோ!

-மயிலாடன்

Wednesday, January 29, 2014

தமிழனின் பெருமை!

கண்டிப்பாக பகிரவும் (Must Share) உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு ‪#‎கேவலமான‬ ‪#‎கட்டுமானத்திற்கு‬ ‪#‎எடுத்துக்காட்டான‬ ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372) நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை ! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் ! இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

மோடி பஜனை!

அதிகாலை வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப்பாருங்கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும். திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள். தமிழருவியொ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார்.

கருவாட்டுப் பானையை சுற்றி வரும் கபட பூனையைப் போல தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் நரேந்திர மோடி. ஏற்கனவே திருச்சிக்கு வந்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தில் முழங்கிவிட்டுப் போனார்.

வேதாரண்யத்திற்கு வ.உ.சி. உப்பு காய்ச்சப்போனார் என்பன உள்ளிட்ட தவறான தகவல்களை கூறி பலருக்கும் பீதியூட்டினார். பின்பு அருண்ஷோரி எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்தார். இப்போது மீண்டும் சென்னை வர இருக்கிறாராம். அவரை வரவேற்க வரவேற்புக்குழு ஒன்றை “புரட்சி புயல்” வைகோ அமைத்துள்ளாராம்.

பாஜக கூட இப்படியொரு வரவேற்புக்குழுவை அமைத்ததாக தகவல் இல்லை. ஆனால் இன்னமும் எத்தனை இடம் என்று கூட முடிவாகாத நிலையில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ வரவேற்புக் குழுவை அமைத்திருக்கிறார். விட்டால் இவரே கூட அன்றைக்கு புலி வேசம் போட்டு ஆடுவார் போலிருக்கிறது. பாஜக விரித்த வலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் மதிமுகவை தவிர வேறு எந்தக்கட்சியும் இதுவரை சிக்கவில்லை.

தாயகத்தில் ஒருமுறை, கமலாலயத்தில் ஒருமுறை என்று இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. எனினும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகளில் காந்திய மக்கள் இயக்க தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழருவி மணியனும் பங்கேற்றாராம், திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள்.

ஆனால் இவரோ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார். அந்தளவுக்கு காந்தியின்மீது `பாசம்’ பொங்கி வழிகிறது. நான் சென்னையில் கூட்டிய கூட்டத்தில்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் உறுதியளித்தார்.

என்னைத் தவிர இந்த திட்டத்திற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று முழங்குவார் வைகோ. ஆனால் பாஜக பக்கம் இவருடைய பாசப்பார்வை திரும்பியவுடனேயே சேது சமுத்திரத் திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனை இருப்பதாக பேசத் துவங்கிவிட்டார்.

இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு தெரியவந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். அண்மைக் காலமாக மோடியை நினைக்கும் பொழுதெல்லாம் வைகோவுக்கு, ஆவேசம் அதிகமாகி வியர்த்துக் கொட்டத் துவங்கி விடுகிறது.

நாடெங்கும் மோடி அலை, வீடெங்கும் மோடி அலை, டீக்கடைகள், காடுகள், கழனிகள், எங்கெங்கும் மோடி அலை வீசுகிறது என்று புல்லரித்து, போர்வையை எடுத்து போர்த்திக்கொள்கிறார். தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் உள்ளன. அதற்குள் இவ்வளவு புல்லரிப்பு என்றால் இன்னும் போகப்போக என்னாகுமோ தெரியவில்லை. டீக்கடை பாய்லரில் அடிக்கும் ஆவி கூட இவருக்கு மோடி அலையாகத் தெரிகிறது.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா என்பவர் தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம் முழங்கும் வைகோ பெரியாரை பழித்ததை, இழித்துரைத்ததை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? நாகரிகமான அரசியலுக்காகவே பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதாக கூறிக்கொள்ளும் தமிழருவியும் இதை கண்டு கொள்ளவில்லை.

இப்போதைக்கு இவர்களுக்கு பெரியாரால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதிகாலை வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப்பாருங்கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.

-மதுரை சொக்கன்

#நன்றி:தீக்கதிர், 29-1-2014

ஏமாற்றாதே!

பிஜேபியின் சமூகநீதி மாநாடு

எந்த சமூகத்திற்க்கு எதிராக
எந்த சமூகத்திற்க்கு ஆதரவாக...?

97% இருக்கின்ற தமிழர்களுக்கு நீதிமன்ற துறையில்
எத்தனை % இடஒதுக்கீடு கிடைக்கும்...?

3% இருக்கின்ற பார்ப்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு வழங்கப்படும்...?

கிரிமிலேயரை நீக்க வலியுருத்துமா
காக்க வலியுருத்துமா...?

தனியார் துறையில் 97% தமிழனுக்கு எத்தனை
% இடஒதுக்கீடு...?

தனியார் துறையில் 3% பார்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு...?

இவை அனைத்திற்க்கும் பதில் கிடைக்குமா
அந்த மாநாட்டில்...?

அம்பேத்கார் படத்தை போட்டு சமூகநீதி மாநாடு
நடத்தினால் "தாழ்த்தப்படவர்களின்" ஓட்டுக்களை
எளிதில் பெற்றுவிடலாம் என்ற என்னமா....?

இந்த மண்ணில்

பார்ப்பான்{பிராமணன்}

சத்ரியன்

வைசியன்

சூத்திரன்

பஞ்சமன்

என்ற நிலை என்றைக்கு தலைகீழாக
மாறுமோ அப்போதுதான் இந்த நாட்டின்
சுதந்திரம் நிலை நிறுத்தப்படும்
என்ற அம்பேத்கரின் கொள்கையை
பிஜேபி எப்படி நிலைபடுத்தும்....?

யாரை ஏமாற்ற இந்த நாடகம்
காத்திருப்போம்.....


-ஈரோட்டு பூகம்பம்-

தவிர்க்க முடியாதவர்! ......... எதிரொலி

எல்லா விமர்சனங்களையும் தாண்டி எப்போதும் மதிப்பு வைத்திருக்கும் தலைவர் கலைஞர் தான்.. ஒரு ஆளுமையின் பலவீனமான தருணங்களை மட்டுமே வைத்து.. அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை, உழைப்பை, சாதனைகளை கேலி செய்வது எவ்வளவு அபத்தமானது.... நீங்கள் பொருட்படுத்தாத ஒருவரை... தமிழக சமூக நீதி வரலாற்றில் அவருக்கு பங்கு இல்லை என நீங்கள் நினைக்கும் பட்சத்தில்... (அப்படி நினைத்தால் உங்களை விட நன்றி கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது) விமர்சிக்காமல் கடந்து செல்வதே சரியாக இருக்க முடியும்.. மாறாக.. அவரை தினம் தினம் விமர்சிப்பதன் மூலம் அவர் தவிர்க்க முடியாதவர் என்பதையே நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.. அவரைத் தவிர பேசுவதற்கு தமிழகத்தில் உங்களுக்கு விஷயங்களே இல்லை போல!!!!!!

அழகிரி நீக்கம் தமிழ்ச்சமூகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் ரொம்ப நல்லது! அண்ணா காலத்து ஈவிகேசம்பத் தொடங்கி, கருணாநிதி காலத்து எம் ஜி ராமச்சந்திரன், வைகோ, சமீபத்தில் பிரிந்துபோன பரிதி இளம்வழுதி வரை திமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றிய எதிரொலியின் அணுகுமுறை, அளவுகோள் என்றும் ஒன்றே. இவர்கள் திமுகவிலிருந்து பிரிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் சிலபல நியாயங்களும் இருக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தக்காரணங்கள் மற்றும் நியாயங்களின் சரி தவறுகளை அளப்பதற்கு ஒரே ஒரு அளவுகோள் தான் சரியானதாக இருக்கும் என்று எதிரொலி கருதுகிறது. சமூக நன்மை என்பதே அந்த அளவுகோள். அந்த அளவுகோளின்படி பார்த்தால் எம் ஜி ராமச்சந்திரனின் பிளவு மட்டுமே தமிழ்ச் சமூகத்துக்கு குறைந்தபட்ச நன்மைகள் செய்திருக்கிறது. தமிழக அரசியலில் 46 ஆண்டுகளாக தேசியகட்சிகள் வேரூன்றாமல் செய்தது முதல், திமுகவில் விடுபட்டுப்போன தமிழ்ச் சமூகத்தின் சிலபல குழுக்களுக்கு அரசியல் அதிகாரத்தை பரவலாக்கியது வரை அதிமுக அறிந்தோ அறியாமலோ தமிழ்ச்சமூகத்திற்கு ஓரளவு பயன்பட்டிருக்கிறது. அதற்கு ஈடாக இந்துத்துவ சக்திகளை தமிழ்நாட்டில் வேரூன்றவிட்டது என்பதும், பள்ளிக்கல்வியை வேகமாக தனியார் மயமாக்கியது என்பதும், தமிழ்நாட்டின் உள்கட்டுமானத்தை 10 ஆண்டுகள் பின்போட்டது என்பதும், அரசு நிர்வாக ஊழலை பரவலாக்கி நிறுவனமயமாக்கியது என்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா என்கிற பார்ப்பண வெறிபிடித்த ஆணவமான அரசியல் தலைமையை தமிழனின் தலையில் கட்டியது என்பதுமான எதிரொலியின் அரசியல் ரீதியிலான விமர்சனங்களையும் தாண்டி அதிமுக மேலே சொன்ன சிலபல நன்மைகளை தமிழ்சமூகத்துக்கு செய்தே இருக்கிறது. எனவே எம் ஜி ராமச்சநிரனை தவிர்த்து, திமுகவிலிருந்து பிரிந்த மற்ற யாரும் தமிழ்ச்சமூகத்திற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அதேசமயம் இவர்களெல்லாம் போனபிறகும் திமுக இன்றுவரை தமிழ்ச்சமூகத்திற்கு பயன்பட்டே வந்திருக்கிறது. இனியும் பயன்படும் என்கிற நம்பிக்கையை அந்த கட்சியும் அதன் தற்போதைய தலைமையும் அதன் அடுத்த தலைமையும், இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட திமுக அரசியல் தலைமைகளும் ஏற்படுத்துகிறார்கள். இந்த கண்ணோட்டத்தில் திமுகவிலிருந்து வெளியேறியிருக்கும் மு க அழகிரி தமிழ்ச்சமூகத்துக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை. காரணம் ஆனானப்பட்ட திமுகவிலிருந்தபோதே அழகிரி பெரிதாக தமிழ்ச்சமூகத்துக்கு பயன்படவில்லை என்னும்போது தனியாகப்போய் அவர் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறார். எனவே அவரை அப்படியே விட்டுவிடுங்கள். தயவுசெய்து மீண்டும் கட்சிக்குள் சேர்த்து கட்சியை கெடுத்துவிடாதீர்கள் என்பதே திமுக ஆதரவாளர்களின் ஒரே வேண்டுகோள். அவர் தனியே போய் அவரது அப்பாவும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு தீராத தொல்லை கொடுப்பார், அவமானப்படுத்துவார் என்பவர்களுக்கு, மு க முத்து என்கிற கருணாநிதியின் மூத்த மகன் கருணாநிதிக்கு செய்யாத அவமானமா? ஜெயலலிதாவிடம் நிதி உதவி வாங்கிய மு க முத்துவின் செயலைவிடவா இன்னொரு வேதனையை அழகிரி இனி கருணாநிதிக்கு கொடுத்துவிட முடியும்? குறைந்தபட்சம் அழகிரி அப்படி நிதி உதவி வாங்கும் நிலையில் இல்லை. அழகிரியிடம் இருக்கும் நிதியில் ஆயிரம் பேருக்கு அவரால் முழுநேர சோறுபோடமுடியும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவர் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். எனவே அழகிரியை அப்படியே அவர் போக்கில் விடுங்கள். தயவுசெய்து திமுகவுக்குள் மீண்டும் சேர்த்து "அஞ்சா நெஞ்சனின்" அரசியல் வளர்ச்சியை (?) தடுத்து கெடுத்து விடாதீர்கள். அரசியலில் அழகிரியை விட வேகமாக இருக்கும் அவர் மகன் துரைதயாநிதியும், அட்டாக் பாண்டியும் "அஞ்சா நெஞ்சன்" தலைமையில் அரசியல் கட்சி ஆரம்பித்து தென் தமிழகத்தை முன்னேற்றட்டும். அதுவே அவருக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது!!

கண்ணகி ...


கண்ணால் நகைத்து தம்மை
மகிழ வைப்பாள் என்று
கண்ணகி என்று பெயர்
வைத்தார்களோ .....

கண்ணகி என்று பெயரிட்டதால்
தான் அந்தக் கண்கள்
அழுது கொண்டே இருந்தனவோ ??/

கோவலன் கண்ணகியிடம் இருந்து
முதலில் பறித்தது அவளது
கண் நகையையே...
கடைசியில் அவளாக கொடுத்தது
கால் நகையை..
மன்னன் பிடுங்கி எடுத்தான் அவளது
கழுத்து நகையை ...

தீமையை எரித்தழிக்கும் சிவனது
தீக் கண்
நெற்றியிலிருந்தது...
மதுரையை எரித்தழித்த மாதின்
தீக் கண்
மார்பில் இருந்தது ....

மதுரையை எரித்த நெருப்பு
சாதாரணமானதல்ல ...
கண்ணெண்ணெய் ஊற்றிக்
கண்ணகி வளர்த்தது ....

எம் தாயகத்திலும் எத்தனையோ
கண்மணிகள் ...கண்ணீர் மணிகளை
சிந்திய வண்ணம் ...என்றாவது
ஒருநாள் அழுதது போதும் என்று..

கண்களை... கண்ணகிகளாய்
திறந்தார்களானால்..

எரிவது...?????

^^^தமிழ்மகள் ^^^

விமா்சனம்!

Don Ashok. கேள்வி: ஊழல் புகார் என்றாலும் சரி, குடும்ப விவகாரம் என்றாலும் சரி, கூட்டணி என்றாலும் சரி, ஒரு விஷயமுமே இல்லையென்றாலும் சரி, திமுகவும், கலைஞரும் மட்டும் மிக மிக அதிகமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கப்படுகிறார்களே. காரணம் என்ன? பதில்: கலைஞர் ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்பதற்கு சில அறிவாளிகளும், விளம்பரக் கூலி வாங்கும் பத்திரிக்கையாளர்களும் பல காரணங்களை நீட்டி முழக்கிச் சொல்வார்கள். ஆனால், ட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மத்திய அரசில் பங்கு வகித்தாலும் வகிக்கவில்லையென்றாலும் கலைஞர் மட்டுமே பிரதானமாக விமர்சிக்கப்படுவதற்குக் காரணம், கலைஞர் தன்மீதான அவதூறு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகிறவர். மனதிற்குள் பூட்டிவைத்து, வன்மங்களை வளர்த்து, பதவி வந்ததும் பழி வாங்காதவர். செருப்பைக் கழட்டச் சொல்லி கடமையைச் செய்த மருத்துவரை சிறைக்கு அனுப்பும் ஈகோ நிரம்பிய மனம் இல்லாதவர். 'டைம் டு லீட்' என்ற வாசகத்திற்கே தடை போடுகிறவர்கள் மத்தியில், தன்னைச் சீண்டிப் பார்த்த, 'இருவர்' என்ற படம், தான் ஆட்சியில் இருக்கும்போதே வந்தாலும் தடை போடாதவர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கலைஞரை விமர்சிக்கும் போது மனதில் பயமே தேவையில்லை. எவ்வளவு அசிங்கமாக வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஜெயலலிதாவையோ, ஏன் கார்த்தி சிதம்பரத்தையோ நியாயமாக விமர்சிக்க வேண்டுமானால் கூட நெஞ்சு நிறைய நடுக்கத்தையும், மனம் நிறைய பயத்தையும் சுமந்துகொண்டே கல்லுக்கு நடுங்கும் தெருநாயைப் போல சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே தான் விமர்சிக்க வேண்டும்! ஏனென்றால் ஒன்று போலீஸ் வரும், குறைந்தபட்சம் அவதூறு வழக்காவது வரும். ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கலைஞர் மக்களுக்குத் தந்திருக்கும் கட்டற்ற கருத்து சுதந்திரம் தான் அவர் அவர்களாலேயே அளவுக்கதிகமாக விமர்சிக்கப்படுவதற்கு ஒரே காரணம். மற்றபடி எதோ சமூகத்தைக் காக்க வந்த வீரர்கள் போல "நாங்கள் ஏன் கலைஞரை விமர்சிக்கிறோம் என்றால்..........." என புருடா விடுவதெல்லாம் சும்மா... தங்கள் பயத்தை மூடி போட்டு மறைக்கும் வழிகள்! இதில் உள்ள உண்மை கலைஞரை மட்டுமே தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கும் போலி சமூக நல வீரர்கள் ஒவ்வொருவனின் மனசாட்சிக்கும் தெரியும

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

Man created gods

Thanks for sharing, Anthony.
I Believe Man does not require some god to be moral. Religion divides more than it unites. It's untrue that atheists "believe in nothing." It does not take more faith to be an atheist. Religion is incompatible with science. Scripture is man-made and demonstrably false. God did not create man in His image. Man created gods in his.

தமிழ் மொழியின் தோற்றம்

தமிழ் மொழியின் தோற்றம் குறித்து ஒரு சின்ன உதாரணம் ============================================ தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம். திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே. திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசி சங்கம். அந்த கடைசி சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்.?!?!? !? திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர். தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று. ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங ்கள். இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார ்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக் கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர். நான் நெஞ்சை நிமிர்த்து சொல்வேன் தமிழன் என்று. !!!

நன்றி---

 தமிழ் மகள் shared Tamil magalir - தமிழ் மகளிர்'s photo.

ஆற்றல்

அதிகாரி வீட்டு கோழி முட்டை கூட அம்மியை உடைக்கும் ஆற்றல் பெற்றது.

வெள்ளைக்காரனா?


நாத்திகம் என்பது இந்தியர்களை,இந்துக்களை இழிவுப்படுத்த, ஆங்கிலேய கைக்கூலிகள் இந்தியாவுக்கு கொண்டுவந்த நடைமுறை - எச்சு ..ராஜா

இவ்வளவு நாளு இந்துக்களே இந்தியர்கள்னு சொல்லிக்கிட்டு இருந்த... இப்போ என்னாடா ஆச்சி

உன்கருத்துப்படி உலக அளவில் வரலாற்றில் வாழும் சாக்ரடிஸ் ,காரல் மார்க்ஸ் போன்ற நாத்திக அறிஞர்களும் மாமேதைகளும் ஆங்கில அரசின் கைக்கூலிகள் அப்படித்தானே

ஏண்டா எச்ச பாப்பார நாயே ஓடு கைபர் கணவாய் வழியாக.........வந்தேறி கூட்டம் மண்ணின் மைந்தனை விரட்ட நினைக்கிறதா இரன்டாந்தர குடிமக்களாகிய பார்ப்பன கூட்டமே ஓடு வந்த வழியே..

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

இந்துக்களை இழிவுபடுத்த வெள்ளைக்காரன் இந்தியர்களிடையே திணித்ததுதான் நாத்திகம்.- எச்.ராஜா.

சாதியைக் கண்டுபிடித்தது யாரு?

வர்ணாசிரமத்தை கண்டுபிடிச்சது யாரு?

உடன்கட்டை ஏறுதலைக் கண்டுபிடிச்சது யாரு?

தாலி அறுத்து பொட்டை அழித்து,வெள்ளைப்புடவை கட்டும் சடங்கைக் கண்டுபிடித்தது யாரு?

பொட்டுக்கட்டும் இழிவைக் கண்டுபிடித்தது யாரு?

ஊர்க்கோயில்,சேரிக்கோயில் இதையெல்லாம் உருவாக்கியது யாரு?

குறிப்பிட்ட சாதி மட்டும் அர்ச்சகராக இருக்கும் வழிமுறையை உருவாக்கி வெச்சது யாரு?

இதெல்லாம் வெள்ளைக்காரனா செஞ்சு வெச்சான்? இல்லை இதெல்லாம் சங்பரிவாரால் சமூகத்தில் இருந்து நீங்கியதா?


நன்றி---
யுவான் சுவாங்

!!! பட்டை நாமம்

அண்ணா(15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969)



அண்ணாதுரை(15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), 
தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். 

அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர்அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
பேச்சாற்றல்
தமிழிலும்,ஹிந்தியும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.
மொழிப்புலமை
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
“ "No sentence can begin with because because, because is a conjunction.
எந்த வாக்கியமும் ஏனென்றால் வார்த்தையை கொண்டு துவங்காது ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்." ”
என்று உடனே பதிலளித்தார்.
பெரியார் உடனான தொடர்புகள்
அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில்இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.
ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியானதிராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.
தமிழ்நாடு பெயர் மாற்றம்
1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
இறுதிக்காலம்
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.
ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுக விலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.
இளமைப் பருவம்
அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[1] அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்.[2] அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம்[2] வளர்ந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்[1] சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக[2] சிறிது காலம் பணிபுரிந்தார்.
கல்வி
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)[1] , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்[2] பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்[3] . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.[2]
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்தது[4]. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது[4], அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்[4]. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
தத்துவம்
அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்
“ "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" ”
என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.[5][6].
“ "கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்" ”
என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.[7]
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.[8]
கடமை கண்ணியம் கட்டுபாடு
அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை[9] ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் [9] என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.
அரசியலில் நுழைவு
அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 [10] இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக1917[11] இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.
பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் [11] கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937[12] இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்[13].
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக[2] பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)[2]தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்[14].
பெரியாருடன் கருத்து வேறுபாடு மற்றும் திமுக உருவாதல்


பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக[15] தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 1947அந்த நாளை கருப்பு தினமாக [16] எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று[15]. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல[10] என்பதை வலியுறுத்தினார்.
திராவிடர் கழகம் ஜனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிகூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்[10].
பெரியார் தேர்தலில் பங்குபெருவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களை தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்[17].
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30[17]) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத்[18]) மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக்க்டசி துவக்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம்[19]எனப் பெயர் சூட்டப்பெற்றது. அண்ணாதுரை செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்திருந்தாலும் கீழ்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார்.[10] அவர் தொடங்கிய திமுக வும் செல்வாக்கை பெற்றது.
திராவிட நாடு
திராவிடர் கழகத்தில் அணணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.
ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்
“ நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட, எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டு செயல்படவேண்டும்[20]

தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியவாதக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 [17]-ல் துவங்கினார். 1962-ல் அண்ணா மாநிலங்களைவையில்திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.....நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு என்று உரையாற்றினார்[21].
இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாகஉருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.
இந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம்இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தை அண்ணாதுரை பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது[22]. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்[23].
மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.
“ திராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளறிந்து கைவிட்டோம். அக்கட்சியே அவற்றிலிருந்து விலக்கிகொண்டபொழுது அக்கொள்கை பரவவோ மீண்டும் எழவோ வாய்ப்பில்லை. இதை முன்னிருத்தியே அக்கொள்கையை கைவிட்டோம்.[20]

1953 இல் கண்டனத் தீர்மானங்கள்
1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:[17]
• இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.
• மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் , எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.
• கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக மோத்திலால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரை செயதது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்[24].
1938 இன் இந்தி எதிர்ப்பு போராட்டம்
1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசிமுன்மொழிந்து, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் வெகுண்டு எழுந்தனர். முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது.
இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கானோரை இராசாசி அரசு கைது செய்தது; தடியடியில் ஈடுபட்டது. அவ்வாறு தமிழ் காக்க புறப்பட்டு சிறை சென்றோரில் ஒருத்தர் நடராசன். இளைஞர்; தாழ்த்தப்பட்டச் சமூகத்தவர். எதிர்ப்பைக் கைவிடாது 1939 ஆம் ஆண்டு, சனவரி 15 ஆம் நாள் தன் உயிரை நீத்தார். தமிழுக்காக உயிரை ஈகம் செய்தார்.
நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான தாளமுத்து என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.
நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விளகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.[25].
1965 மதராஸ் இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது[24]. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:
“ இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே[26]

“ தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது. ”
திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யபட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவெதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர்ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்பாட்டம் கைவிடப்பட்டது[17].
இந்த திருத்த சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கபோவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க[24]
சட்டமன்றத்தில் அண்ணா[
சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், அளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
1962 இல் அண்ணாதுரை மற்றும
— with Cumbum Sadhiq Dmk, Dargha Mubarak, Ips Ganesh,

ThirukKuRaL