தென்றல் (Thendral)

Monday, April 21, 2014

பெரியாரியவாதியாக சொல்லிக்கொள்ளும் சூத்திர முண்டங்களுக்கே இந்த பதிவு.

நன்றி : எதிரொலி
பெரியார் பெயரைச்சொல்லிக்கொண்டு பிரபாகரனுக்கு வால் பிடிக்கும் சில "பகுத்தறிவு" (?) பொறுக்கிகளுக்கு எதிரொலியின் பதில் இதுவே!
பெரியார் திராவிடர் கழகத்தைச்சேர்ந்த முன்னணி செயற்பாட்டாளர் பரிமளராசன். அவர் இன்று தனது முகநூலில் எழுதியிருக்கும் பதிவின் முதல் இரண்டு வாசகங்கள் இவை.
''நளினி அவர்களை விடுவிக்க முடியாது என்பதற்கு இனத்துரோகி கருணாநிதி 2010ல் கூறிய காரணங்கள்''
இதற்கு எதிரொலி அங்கேயே எழுதிய பதில் இது.
கருணாநிதியை "இனத்துரோகி" என்று சொல்லும் முண்டமே உனக்கு பெரியார் பெயரை சொல்லும் யோக்கியதை இருக்குதா மூடனே? கருணாநிதியைப்பற்றி இன்னொரு முறை இனத்துரோகி என்று எழுதினால் எதிரொலியின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவாய். இல்லை நீயாக விலகிப்போ. ராஜீவ் கொலையில் நளினிக்கு பங்கு என்ன என்று எதிரொலியை எழுத வைக்காதே. எல்லாம் சரி ஊரான் பிள்ளையை பெற்றவர்கள் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பிடித்துப்போய் போரில் கொன்று குவித்தானே பிரபாகரன் அவனை பிள்ளை பிடி பிரபாகரன் என்று சொல்லலாமா? சொல்லுவாயா சோற்றால் அடித்த பிண்டமே? யாரை பார்த்து இனத்துரோகி என்றாய் ஈனப்பிறவியே!
இது பரிமளராசன் என்கிற ஒருவருக்கு சொன்னதல்ல. கருணாநிதியைப்பார்த்து "இனத்துரோகி" என்று சொல்லும் எல்லா எடுபட்ட பயல்களுக்கும் எதிரொலியின் பதில் இதுவே. குறிப்பாக பெரியாரியவாதியாக சொல்லிக்கொள்ளும் சூத்திர முண்டங்களுக்கே இந்த பதிவு.
அதென்னடா "இனத்துரோகி"? இதில் இருக்கும் இனம் என்கிற சொல் யாரைக்குறிக்கிறது என்று உங்களால் தெளிவாக சொல்ல முடியுமா? உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களா அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களும் அவர்களுக்கு ஏவல் செய்த ரவுடிகளும் மட்டுமே உங்கள் பார்வையின் தமிழ்இனமா?
இலங்கையில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தமிழனான மலையகத்தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு? அந்த மலையகத்தமிழன் என்றாவது பிரபாகரனை ஏற்றானா? 2009இல் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது பிரதான மலையகத்தமிழ்கட்சிகள் இலங்கை அரசில், அமைச்சரவையில் இருந்தன என்று உங்களுக்குத்தெரியுமா? இலங்கைக்குள் இருந்த அந்த மலையகத்தமிழ் கட்சிகள் கூட பிரபாகரனுக்கு ஆதரவாக ராஜபக்ஷே அரசில் இருந்து விலகவில்லை என்றாவது உங்களுக்குத் தெரியுமா? அதுதானடா பிரபாகரனின் உண்மையான "செல்வாக்கு" இலங்கையில் இருக்கும் மலையகத்தமிழனிடம். அந்த மலையகத் தமிழ்கட்சிகளைப் பார்த்து இனத்துரோகி என்று சொல்லிப்பாரேன். செறுப்பால் அடிப்பான். அதுவும் பிய்ந்த செறுப்பால் அடிப்பான். ஏனென்றால் பிரபாகரனின் பிள்ளைபிடி போராட்டம் பற்றி உன்னைவிட அவனுக்கு நன்கு தெரியும். புலிகளிடமிருந்து சொந்தப்பிள்ளைகளை பாதுகாக்க மலையகத்தமிழ் குடும்பங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதைவிட முக்கியமாக மலையகத்தமிழனை சக மனிதனாக கூட மதிக்காத யாழ்ப்பாணத்தமிழனின் அரசியல் அடியாள் தான் பிரபாகரன் என்பதை பட்டுத்தெளிந்தவன் மலையகத்தமிழன்.
அதுமட்டுமல்ல, இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து குடியுரிமை பறித்து இலங்கையில் இருந்து விரட்டிவிட்ட லட்சக்கணக்கான மலையகத்தமிழனை வரவேற்று வாழவைத்தவன் கருணாநிதி என்கிற வரலாறு மற்றவனை விட நேரடியாக பாதிக்கப்பட்ட மலையகத்தமிழனுக்கு நன்றாகத்தெரியும். அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியுமாடா முண்டங்களே?
மலையகத்தை விடு. கிழக்கு இலங்கைத்தமிழனையாவது சேர்த்துக்கொண்டானா உன் பிரபாகரன்? இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்கிறீர்களே? இலங்கை வரலாற்றில் வடக்கும் கிழக்கும் என்றாவது ஒன்றாக இருந்தது உண்டாடா ஞானசூனியங்களே? இருந்ததே இல்லை. அப்படி ஒன்றாக இல்லாத வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்கியது இந்திய இலங்கை ஒப்பந்தம். அதை முட்டாள் தனமாக மூர்க்கமாக எதிர்த்து இந்திய படைகளோடு வலிந்துபோய் மோதி தானும் செத்து தன் இனத்தையும் சாகவிட்ட பொறுப்பற்ற கொலைகார கொடுங்கோலனை போற்றிக்கொண்டு பெரியாரை மறந்து, போயஸ் தோட்டத்தில் போய் புடவை துவைக்கும் பொறுக்கிகளா கருணாநிதியைப் பார்த்து "இனத்துரோகி" என்பது?
இவ்வளவு பேசுகிறீர்களே, இன்றுவரை ஜெயலலிதா ஒரே ஒருமுறையாவது ஈழத்தமிழர்களுக்காக எல்லாவற்றையும் இழந்து கடைசிவரை போராடிய போராளிகள் இயக்கம் என்று நீங்கள் சொல்லும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஜெயலலிதா ஒரே ஒரு வார்த்தை பேசியதுண்டா பொறம்போக்குகளே? தமிழ்நாட்டில் பிரபாகரன் படத்தை வைத்து கூட்டம் போட தடைவிதித்திருப்பவர் ஜெயலலிதா. இன்றுவரை ஈழம் என்கிற வார்த்தையையே பயன்படுத்த மறுப்பவர் ஜெயலலிதா. அவர் உங்களுக்கு "ஈழத்தாய்". ஈழத்தமிழனுக்காக ஒன்றுக்கு இரண்டு முறை ஆட்சியை இழந்த கருணாநிதி உங்களுக்கு இனத்துரோகியா?
அடி செருப்பால...
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னதத்தலைவர் பெரியாருக்கு ஈடாக ஊரான் பிள்ளைகளை பலவந்தமாக பிடித்துக்கொண்டுபோய் போரில் சாகவிட்ட பொறுக்கிப்போராளி பிரபாகரனை தூக்கிப்பிடித்த தறுதலைத்தனத்தை ஆரம்பத்திலேயே தடுக்கத்தவறியதன் விளைவு இன்று கருணாநிதியைப்பார்த்து வாய்கூசாமல் இனத்துரோகி என்று வசைபாடுவதில் வந்து நின்றிருக்கிறது.
பொறம்போக்கு பிரபாகரன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இதேபோல் தேர்தல் சமயம் தேடிவந்து தமிழ்நாட்டில் கொடூரமாக கொன்றபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப்பயல்களே. அதெல்லாம் யாரால்? பொறுக்கி பிரபாகரனால். ராஜீவ் கொலைக்கு கருணாநிதியும், திமுகவும் தான் காரணம் என்று போஸ்டர் அடித்து ஓட்டுக்கேட்டு முதல்வரானவர் ஜெயலலிதா.
இந்த தேர்தலில் அந்த ராஜீவ் கொலைக்காக தண்டிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதாக போக்கு காட்டி வாக்கு வேட்டையாடப் பார்க்கிறார். அந்த நாடகத்துக்கு உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியே அறிந்தோ அறியாமலோ துணை போகாமல், தன் தீர்ப்பை தேர்தல் முடிந்த மறுநாள் கொடுக்க வேண்டும் என்று ராஜீவ் கொலையால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட ஒரு கட்சி கோருவதில் என்னடா தவறு?
கொடுக்கும் தீர்ப்பை வெறும் 24 மணிநேரம் தள்ளிக்கொடுங்கள் அது அரசியலாகாமல் இருக்கும் என்று சொன்னால் உடனே கருணாநிதி "அரசியல் செய்கிறார்" என்று கூப்பாடு. ராஜீவ் கொலையை வைத்தும், கொலையாளிகளை வைத்தும் 23 ஆண்டுகளாக அரசியல் செய்தது; செய்வது யார்? ஜயலலிதாவா? கருணாநிதியா?
இதே நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக கருணாநிதி குறைத்தபோது அதை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் யார்? இதே ஜெயலலிதா தானே? கருணாநிதிக்கும் புலிகளுக்கும் தொடர்பு என்று சொல்லி திமுக ஆட்சியை தேசத்துரோக ஆட்சி என்று சதிராட்டம் போட்டவர் சாட்சாத் ஜெயலலிதா தானே?
எனவே எதிரொலி சொல்லும் எளிய செய்தி இது தான். இனிமேலும் ஈழத்தமிழனைக்காட்டி, கருணாநிதியைப்பார்த்து "இனத்துரோகி" என்று சொன்னால் அவனுக்கு எதிரொலியின் வார்த்தை செறுப்படி நிச்சயம் உண்டு. சொன்னவன் வயதோ, படிப்போ, மற்ற மற்ற தராதரங்கள் எதுவுமோ எதிரொலிக்கு ஒரு பொருட்டே அல்ல. அப்படி சொல்பவன் எந்தக்கொம்பனாக இருந்தாலும் அவன் "இனம்" என்று எதைச்சொல்கிறான் என்பதை முதலில் வரையறுக்கவேண்டும். அடுத்து அந்த "இனத்துக்கு" கருணாநிதி என்ன "துரோகம்" செய்தார் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்த "இனத்துக்கு" பிரபாகரன் செய்த நன்மைகள் என்ன என்றும் அவர்கள் பட்டியலிடவேண்டும்.
2009இல் இறுதி யுத்தத்தில் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து தப்ப முயன்ற சக தமிழர்களை சுட்டுக்கொன்ற கொலைகார கும்பல் தான் விடுதலைப்புலிகள் என்பதற்கும், அதன் தலைவன் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் எதிரொலியிடம் மட்டுமல்ல, ஐநா மன்றத்திடமே இருக்கிறது என்பதை மட்டும் எதிரொலி இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறது. எச்சரிக்கையாக அல்ல; தகவலாக!
பின் குறிப்பு: பரிமளராசனின் இந்த பதிவில் ஈழம் பேசும் எடுபட்ட பிறவியான
புகழ்ச் செல்வி பரணிப் பாவலன் என்பவர் இப்படி பின்னூட்டம் இட்டிருந்தார்:
"கருணாவின் அடிமைகள் இன்னும் உள்ளது.இனக்கொலை செய்து முடித்தும் இத்தாலி காலில் வீழ்ந்துக் கிடந்த இரண்டகனை எப்படி அழிப்பது"
அதற்கு எதிரொலி இப்படி பதில் எழுதியிருந்தது: புகழ்ச் செல்வி பரணிப் பாவலன் "இரண்டகனை எப்படி அழிப்பது" என்று அங்கலாய்த்திருந்தீர்கள். நல்லது! அவ்வளவு அவசரமென்றால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்லும் வைகோவிடம் இதை சொல்லுங்களேன். உடனே வைகோ பிரபாகரனிடம் பேசி இன்னொரு மனிதவெடிகுண்டை ஏற்பாடு செய்வார். நீங்கள் எல்லாம் சேர்ந்து "களமாடி" கருணாநிதியின் கதையை உடனடியாக முடிக்கலாம். எப்படி வசதி? இத்தனைக்குப்பிறகும் இன்னுமாடா நீங்களெல்லாம் திருந்தவில்லை? அடத்தூ.....

Monday, April 14, 2014

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! - Don Ashok

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? -
தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும் மிகத் தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.
அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய் இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.
மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! - Don Ashok

Friday, April 11, 2014

மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனமே.....

மக்கள் மடையர்களாக, மூடநம்பிக்கைக்காரர்களாக, சிந்தனா சக்தி இல்லாதவர்களாக உள்ளவரைதான் கடவுளுக்கும் அரசனுக்கும் மதிப்பு இருக்க முடியும்; அவர்களிடத்தில் மக்களுக்கு பயம் இருக்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு இயற்கையான சக்தி கிடையாது. இவர்களது ``சக்தி'' செயற்கைச் சக்திதான். அதாவது புருஷனுக்கு பெண்டாட்டி பயப்படுவதுபோல ஒரு கட்டுப்பாட்டினால் தேவையைப் பொறுத்து ஏற்படும், ஏற்படுத்திக் கொள்ளும் சக்திதான்.
உதாரணமாக கடவுள் பயம் மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து வந்து இன்று சம்பிரதாயத்துக்காக அல்லாமல் மற்றபடி எவருக்குமே இன்று கடவுள் பயமோ - நம்பிக்கையோ அடியோடு இல்லாமல் போய்விட்டதுடன் இன்று மடையர்களிடமும் அயோக்கியர்களிடமுமே தேவையைப் பொறுத்து இருந்து வருவதையே பார்க்கிறோம். அதாவது ஒரு பூசாரிக்கு அர்ச்சகனுக்கு இருந்து வருகிற நம்பிக்கைப்படி. அதுபோலவேதான் - அரசன் நிலைமையும் இன்று அடியோடு மறைந்துவிட்டது. உலகில் இன்று எங்குமே உண்மையான அரசன் இல்லை; உலகில் எங்குமே இன்று அரசனை மதிக்கும் மக்களும் இல்லை.
அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாக கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும் பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும் அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும் அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது. இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு ``அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை.
மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்'' என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனமேயாகும்.
இதன் பயன் என்னமாய் முடியுமென்றால் மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல் வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்காரகாலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடுவதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானதோ அவ்வளவு முட்டாள்தனமான கருத்தும் காரியமுமேயாகும் ஜனநாயகம் என்பதும், ஆனால், சில அயோக்கியர்களுக்கும், கீழ்த்தர மக்களுக்கும் இதில் பயன், சுயநலம் இருப்பதாக இவர்களால் எளிதில் மக்களை ஏமாற்றிப் பயன்பெற முடிகிறது.
இன்று உலகில் எந்த நாட்டில் ஜனநாயகம் ஒழுங்காக யோக்கியமாக நடைபெறுகிறது என்று சொல்ல முடியும்? அரசன் நாயகன், அரசன் ஆட்சி என்று சொல்லப்படுவதற்கு சக்தி இருப்பதற்குக் காரணம்,
1. அரசன் என்கின்ற மதிப்பு
2. அரசன் நடுநிலை உள்ளவன் என்கின்ற நம்பிக்கை
3. அரசனது அதிகார பலம், இவற்றோடு
4. பரம்பரையாக யார் தயவுமில்லாமல் பதவிக்கு வரும் இயற்கை உரிமை.
இந்த காரணங்களால் அரசனது ஆட்சியை குடிகள் யாரும் எதிர்க்கவும் குறை கூறவும் முடியாமல் இருக்க முடிந்தது.
ஜனநாயக ஆட்சியாளருக்கு இவ்வித தகுதி ஏதாவது உண்டோ? மக்களுக்காவது இதற்கேற்ற பண்பாடு ஏதாவது உண்டோ? கடவுளுக்கு சோறு போட்டு கல்யாணம் செய்து வைத்து கடவுள் பெண்டாட்டியின் தலையையும், சேலையையும் திருட்டுக் கொடுத்துவிட்டு வந்த ஒருவன் மற்றவனைப் பார்த்து, ``அடே, கடவுள் கெடுத்து விடுவாரடா'' என்று சொல்லி மிரட்டுகிறதைப் போல்தானே இருக்கிறது நமது ஜனநாயக அமைப்பு!
1. காசு கொடுத்து ஓட்டுப் பெறுகிறான்.
2. காசு பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறான்.
3. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகிறான்.
4. ஓட்டின் பலன் என்ன, அதை எப்படி, எதற்கு பயன்படுத்துவது என்ற அறிவே இல்லாமல் ஓட்டுப் போடுகிறான். இவ்வளவுதானா?
ஜாதிப் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறான்; (தன்) ஜாதியான் என்பதற்காக ஓட்டுப் போடுகிறான். இவை ஜனநாயக பிரதிநிதித்துவ நிலைமை என்றால் நாட்டின் நிலைமையோ மக்கள் ஒருவனை ஒருவன் தொட முடியாத நான்கு ஜாதி, ஒருவருக்கொருவர் உண்ணல் கொடுக்கல் வாங்கல் இல்லாத 400 உள்பிரிவு, ஒருவருக்கொருவர் வெறுப்புக் கொண்ட பல மதம், கடவுள்கள், பல வேதங்கள், பல தர்மங்கள், இவற்றுள் பல ஜாதித் தொழில்கள், அவற்றின் படி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள பல இலட்சியங்கள், சூழ்ச்சிகள் இவை மாத்திரமேயல்லாமல் பெரிதும் கொள்கையே இல்லாத பல பதவி வேட்டைக் கட்சிகள்; இவற்றிற்கு ஏற்ற பத்திரிகைகள்; சாக்கடை கழுவுகிறவன் முதல் அய்க்கோர்ட் ஜட்ஜ், சீப் செகரட்டரி வரை ஜாதி உணர்ச்சி, ஜாதி அகம்பாவம், மற்ற ஜாதியை ஆள வேண்டுமென்கிற உணர்ச்சியை மூச்சாகக் கொண்ட சிப்பந்திகள், பதவியாளர்கள், பதவியையும் சம்பளத்தையும் வருவாயையுமே முக்கிய இலட்சியமாகக் கொண்ட மந்திரிகள், பிரசிடென்ட்கள், சட்டசபை, பார்லிமென்ட் மெம்பர்கள். இந்த நிலையில் ஜனநாயகம் என்றால் இதற்குப் பொருள் கடவுள் என்பதற்கு உண்டான பொருள் அல்லாமல் ஜனநாயகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புவது போன்றவர்கள் என்பது அல்லாமல் வேறு என்ன? ஆகவே ஜனநாயகம் ஒழிந்து கொடுமையான சர்வாதிகாரம் ஏற்பட்டாலும் குடிமக்களுக்கு ஒருவனுடைய தொல்லைதான், ஒருவனுடைய நலத்திற்கு ஏற்ற கேடுதான் இருக்கலாமே ஒழிய ஜனநாயகப்படியான முள்ளுப் பீப்பாயில் போட்டு உருட்டுவது போன்ற தொல்லைகள் குடிமக்களுக்கு இருக்க முடியாது.
----------------------------- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் `"விடுதலை", 3.11.1968
Like · ·

Tuesday, April 1, 2014

வாழாமலே சாகிறான்.

மனித இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்று 'தலாய் லாமா' அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:-
#### என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன்தான்...! காரணம், அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெறுவதற்காக சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான். பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழமுடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லையென்று இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான். ###

ThirukKuRaL