தென்றல் (Thendral)

Tuesday, March 11, 2014

ஜாதி! - தந்தை பெரியார்


கடவுள் மதம் பற்றி எழுதுவது போலவே ஜாதி பற்றியும் எழுதுகிறேன். ஜாதிகள் பார்ப்பனரால் (ஆரியர்களால்) ஏற்படுத்தப்பட்டவையேயாகும். ஆரியர் நம் நாட்டிற்கு வருவதற்கு முன் நம் நாட்டில் ஜாதி என்பதே கிடையாது.
ஜாதி என்ற சொல் தமிழ் அல்ல; ஆரிய மொழிச் சொல்லேயாகும். ஜாதிகளின் பெயர்களான பிராமணன் - க்ஷத்திரியன் - வைசியன் - சூத்திரன் என்ற சொற்களும் தமிழ் அல்ல; ஆரிய மொழிச் சொற்களே யாகும். ஜாதிகள் பற்றி ஏற்படுத்தப்பட்டி ருக்கிற ஆதாரங்களான சாஸ்திரம், மனுதர்மம், புராணம் முதலிய யாவும் ஆரிய மொழியில் ஆரியர்களால் ஏற்படுத் தப்பட்டவையே ஒழிய இவை எவையும் தமிழ் மூலம் அல்ல. ஜாதிக்கேற்ப உரைக்கப்பட்ட கடவுள்கள்யாவும் ஆரிய மொழிப் பெயர்களைக் கொண்டவையே ஒழிய தமிழ்ப் பெயரைக் கொண்ட கடவுள் எதுவுமே இல்லை.
ஜாதி இழிவை நிலைக்க வைக்க ஏற்படுத்திய கர்ப்ப க்ருகம் என்னும் சொல் லும், மூலஸ்தானம் என்னும் சொல்லும், ஆகமம் என்னும் சொல்லும், கும்பாபிஷே கம் என்னும் சொல்லும் யாவுமே ஆரிய மொழிச் சொற்களேயாகும். ஆகவே, ஜாதி சம்பந்தமான எந்தக் காரியம், கருத்தும் யாவும் தமிழனுக்கு தமிழுக்குச் சம்பந்தப்பட்டவை அல்லவே அல்ல. பார்ப்பான் ஆதிக்கத்திற்கு வந்தவு டன் அவன் நலத்திற்கு ஏற்ப எப்படி அரசியல் சட்டத்தை ஏற்படுத்திக் கொண் டான்!
இந்தியாவிற்குள் ஆரியர் நுழைந்து ஆதிக்கம் பெற்றவுடன் மனித தர்மம் என்னும் மனுதர்ம நூல் ஏற்படுத்திக் கொண்டு அதை மனித தர்மம் என்று சொல்லாமல் மனு என்கின்ற கடவுள் தன்மை கொண்டவரால் செய்யப்பட்டது என்று கருத்தைக் கொடுத்து மக்களை ஏமாற்றி மனித தர்மமாக ஆக்கி விட்டான். ஆரியர் இந்தியாவுக்கு வருகிற காலத்தில் அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்திருப்பார்கள்; ஒற்றுமையும் கூட்டு வாழ்வும் இல்லாமல் தனித்தனியாய்த் திரியும் மக்களாய் இருந்திருப்பார்கள்.
இந்த நிலை, யோக்கியமும் நாணய மும் நேர்மையும் அற்ற மற்றொரு காட்டு மிராண்டி மூர்க்கக் கூட்டமான ஆரியர்கள் தங்கள் மேன்மைக்கும் நமது இழிவுக்கும் ஏற்ற எல்லாக் காரியங்களையும் செய்து கொள்ளச் சாதகமாயிருந்தது.
மனுதர்ம சாத்திரத்தைப் படித்துப் பார்த்தாலே இந்த விஷயங்கள் நல்ல வண்ணம் யாருக்கும் புலப்படும். அக்கா லத்தில் நமது அரசர்கள் என்பவர்களும் காட்டுமிராண்டிகளாய்க் கொள்ளைக் கூட்டத்தார்போல் கையில் வலுத்தவன் ஆதிக்கமாய் இருந்தபடியால் அரசர் களைப் பல வழிகளில் அடக்கி ஆண்டு அவர்களைத் தங்களுக்கு அடிமையாக ஆக்கி அவர்களைக் கொண்டே தங்க ளுக்கு வேண்டிய எல்லாக் காரியங்களை யும் செய்து கொண்டார்கள். உதாரணமாக மனுதர்மத்தில் நமது பெண்கள் எல்லோ ருமே தங்களுக்கு போகப் பெண்களாக, வைப்பாட்டிகளாக இருக்கத்தக்கவர்கள் என்றும், நாம் எல்லோரும் அவர்களுக்கு அவர்களது தாசி மக்களாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்றும் எழுதி அமுல்படுத்தியதோடு நம்மையும் அதை ஒப்புக் கொள்ளும்படிச் செய்து நம்மில் கருதும்படிச் செய்து கொண்டார்கள் என்றால் அன்றைய நமது நிலை எப்படி இருந்தது என்பது தெளிவாய் விளங்கு கிறது. இல்லையா?
இன்றைக்கும் சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் நம்மில் தாசிகள் என்று ஒரு கூட்டமும் அந்தக் கூட்டம் பார்ப்பனருக்கு எப்போதும் தயார் என்பது போன்ற போகப் பொருளாய் இருந்து வந்ததும் அப்பெண்களின் தந்தை சகோ தரர் ஆகியவர்களே அக்காரியத்திற்குத் தரகர்களாயிருந்ததும் நாம் நேரில் கண்ட காரியம் தானே! அது மாத்திரமா! இன் றைக்கும் மலையாள (கேரள) நாட்டில் பெருங்குடி மக்கள் பெரும்பாலோர் தாங்கள் யாரைக் காதலனாகக் கொண்டு போகித்துக் கொண்டு இருந்தாலும் தமது காதலன் பார்ப்பான் என்றுதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அரசர் குடும்பங்கள் பார்ப்பானைச் சம்பளம் கொடுத்துக் கணவனாகக் கொண்டிருக்கிறார்கள். கேரள அரசர்கள் இன்று வரை பார்ப்ப னனின் மக்களாகத்தாம் இருந்து வந்திருக் கிறார்கள். எனவே, தமிழ் மக்களின் இழி தன்மைக்கு இதைவிட வேறு உதாரணம் என்ன வேண்டும்! இதை ஏன் சொல்லு கிறேன் என்றால் பார்ப்பனரின் அட்டூழி யத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் காட் டவே சொல்லுகிறேன். இவ்வளவு மாத் திரமா! இன்றும் நம்மில் எத்தனை மடை யர்கள் மானமற்றவர்கள் பார்ப்பனர் களைச் சாமி என்றும், பார்ப்பனர் என்றும், கண்டதும் வணங்க வேண்டியவர்கள் என்றும் கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம்.
ஆகவே, ஜாதி என்பது அயோக்கியர் களால் மோசடிக் கருத்துடன் தோற்றுவிக் கப்பட்டது என்றும், அதற்கு விஞ்ஞான முறைப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதைத் தமிழ் மக்கள் ஆண் பெண் எல்லோருமே வெறுக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுகிறேன். ஜாதியை எந்த உருவில் எந்தக் கருத்தில் எங்குக் கண்டாலும் விஷ ஜந்துக்களை அழித்து ஒழிப்பது போல் ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியமாகும். இனியும் எத்தனை நாட்களுக்கு ஜாதி, ஜாதி முறை ஜாதித் தன்மை என்பவை இந்நாட்டில் இந்த நம் சமுதாயத்தில் இருந்து வருகின் றனவோ அத்தனை நாள்களுக்கும் நம் நாடு காட்டுமிராண்டி நாடு என்பதோடு நம் சமுதாயமும் மானமற்ற காட்டு மிராண்டிச் சமுதாயமேயாகும். எனவே, தோழர்கள் ஒவ்வொருவரும் இதை மனத்தில் கொண்டு ஆவன செய்ய வேண் டிக் கொள்ளுகிறேன்.
-------------------------- தந்தை பெரியார் "உண்மை" 14.2.1970

No comments:

Post a Comment

ThirukKuRaL