தென்றல் (Thendral)

Tuesday, June 9, 2015

முதலில் வீழ்த்த வேண்டியவர்கள் தமிழ் தேசிய கயவர்களையே !!

தி.மு.க. வுக்குப் பெயர் வைத்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்றுதான் வைத்தார்களே அன்றி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க வில்லை.
1917ம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நீதிக் கட்சி தோற்றுவிக்கப் பட்டது. 1938 இல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் நீதி கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய பெரியார் தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்த்து சமூக புரட்சி இயக்கமாகவே தி.க.வை நடத்தினார்.
1949 ல் அண்ணா தி.மு.க. வை ஆரம்பித்தார். இதுவரை திராவிட இயக்கத்தின் தலைவர்களில் பெரும்பாலோர் தமிழரல்லாதவர்களாக இருந்தனர். அதனால் திராவிடர் கழகம் என்ற பெயர் இருந்ததில் தவறில்லை. அதாவது திராவிட இனத்தின் அனைத்துப் பிரிவையும் உள்ளடக்கியதாக அப்பெயர் விளங்கியது !
ஆனால் அண்ணா துவக்கிய தி.மு.க. தமிழர்களுக்கான ஒரு கட்சியாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் விரும்பியதால் தான் திராவிட என்று நிலவழி மற்றும் இனவழி பெயராக புரிந்து கொள்ளும் விதமாக கட்சிக்கு பெயர் சூட்டப் பட்டது.
திராவிட இயக்கத்தின் அடிநாதமாகிய சமூக நீதிக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க நினைத்த ஆரிய - பார்ப்பன சக்திகள் அ.தி.மு.க. வை உருவாக்கி தமிழர்களை வாக்கு வங்கி அடிப்படையில் பிரித்து போட்டனர்.
1972 லிருந்து 2012 வரை அ.தி.மு.கவை திராவிட கொள்கைகளை நீர்த்துப் போக வைக்கப் பயன் படுத்தியவர்கள் இப்போது பா.ஜ.க. வை முன்னிறுத்துகிறார்கள்.
தி.மு.க. மாற்று அ.தி.மு.க. என்று இருக்கும் நிலையை மாற்றி அ.தி.மு.க. மாற்று பா.ஜ.க. என்று வடிவமைத்து விட்டால் சமூக நீதிக்கு சமாதி கட்டிவிடலாம் என்று துடிக்கின்றனர் எதிரிகள் !
அவர்களின் அபிலாசைக்கு பலியாகி தமிழ் தேசியம் பேசும் பார்ப்பனக் கைகூலிகளும் தி.மு.க. வை மூர்க்கமாய் எதிர்ப்பதில் நியாமில்லை.
நமக்கான ஆயுதத்தை இவர்களே நம்மிடம் எடுத்துக் கொடுக்கிறார்கள். முதலில் வீழ்த்த வேண்டியவர்கள் தமிழ் தேசிய கயவர்களையே !!

No comments:

Post a Comment

ThirukKuRaL