தென்றல் (Thendral)

Thursday, February 13, 2014

எல்லா மதத்திற்கும் தாய்


மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும் அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது என்பது அறிவுடைமையாகும். அப்படி இல்லாமல் தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் அது வருணாச்சிரம தர்மத்தை மற்றொரு முறையில் பின்பற்றுவதேயாகும். பகுத்தறிவுவாதி என்ற சொல்வது எல்லா மதத்திற்கும் தாய் மதம் என்று சொல்லிக் கொள்வதை ஒப்பாகும்.

நீங்கள் திராவிடர்கள் என்பதை உணராவிட்டாலும் நீங்கள் ஆரியர்கள் அல்ல, ஆரிய சம்பிரதாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் அவை என்றும், ஆரியர்கள் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்த ஓர் அன்னிய இனத்தவர் என்றும் அவர்களுடைய ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட கடவுள், மத, சாத்திர, புராண, இதிகாசங்களைச் சுமந்து கொண்டிருப்பது பயனாகவே இந்த இழிநிலையில் இருக்கிறன்றீர்கள் என்றும் தெரிந்தால் அதுவே போதுமானதாகும்.

- பெரியார்,
('குடிஅரசு' 13.01.1945)

No comments:

Post a Comment

ThirukKuRaL