தென்றல் (Thendral)

Sunday, February 16, 2014

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் கோயிலை தரிசிக்க செல்லும் மக்களிடம் கோயிலில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என கேட்டால் பலருக்கும் விடை தெரியாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ஒன்றா, இரண்டா எவ்வளவோ ரகசியங்கள் புதைந்து கிடைக்கின்றன. ஏதோ எனக்கு தெரிந்த ரகசியங்களை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜாரை தரிசிப்பதற்காக சென்றவர்களை கொன்ற சம்பவமே சிதம்பர ரகசியம் ஆகும். இதில் முதலில் கொலை செயப்படடவர் அப்பர் என்கின்ற திருநாவுக்கரசு ஆவார். முதலில் இவர் எப்படி கொலை செய்யப்பபட்டார் என்பதை பார்ப்போம்
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் ஆவார். அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார். பிறகு சைவ சமயத்திற்கு மாறிச் சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர். வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர் இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர். இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.
“என்றும் நாம் யாவருக்கு மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக் கெதிராய்எவருமில்லை
சென்று நாம் சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந் திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய புண்ணியத் துளமே”(அப்பர் தேவாரம்)
என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில்ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.
இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவதுஅப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்துதிட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறுதெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் ,நம்முடைய அறமல்ல. என்று கிராமம்கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டைஎன்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார்.அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்றுஅங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரைமுகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப்பரவச் செய்யினும், கொல்லாமையைபோதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்புஅளவிடாது என்று கூறினார்கள். இம்மொழியைகேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்துசமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன்தோன்றப் பெற்று, மிகவும் வருந்தி “அந்தோ!தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன்பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்தபார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர்வலையில் வீழ்ந்தொமே!” என்று கண்கலங்கினார். சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தைகண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன்உம்மை இன்று ஆட்கொண்டான் என்றுநினைக்கிறோம்‘ என்று முகமன் கூறினார்கள்.
அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம்நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவைஇடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப்பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டிஉற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப்போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்தஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார்.திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்தஅந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவுசெய்தனர். அப்பர் நடராசர் பேரில் பாடல்களைபாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள்நுழைந்தார். உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படிஅப்பர் உள்ளே நுழைந்ததும் கதவைமுடிவிட்டனர். வெளியே இருந்த மக்கள் ஏன்கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்குஅப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார்என்று கூறிவிட்டனர். உள்ளே நுழைந்த அப்பரைஅங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்றுபுதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடிசேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்துவிட்டனர். அப்பரின் இறுதி (முடிவு) பற்றிபெரியபுராணத்தில் சரியான விளக்கம்சொல்லாமல் மழுப்புகிறது.
நந்தனார் படுகொலை
நந்தனாரைப் பற்றி கேள்விப்படாதவர் தமிழகத்தில்எவரும் இல்லை. இவர் ஆதி திராவிடர் வகுப்பைசார்ந்தவர்.
மிகுந்த சிவபக்தி உடையவர். இவர் சிதம்பரம்நடராசரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல்கொண்டு ஒவ்வொரு
நாளும் முயன்று இருக்கிறார் முடியவில்லை.அதனாலே, இவர் “திருநாளைப் போவார்” எனப்பெயரும் பெற்றார். பிறப்பால் ‘பறையன்‘ என்றஒரே காரணத்தைக் கூறிக் கோயிலுக்குள்செல்லக்கூடாது என்று பார்ப்பனர்கள் தடுத்தனர்.நந்தனின் தொல்லை பொருக்ாத பார்ப்பன நரிகள்சதி திட்டம் தீட்டின. கோயிலுக்குள் செல்ல வேண்டுமானால் நாங்கள் வளர்த்து தருகின்றதீயில் மூழ்கியே உள்ளே செல்ல வேண்டும்என்றனர்.
நடராஜப் பெருமாள் மீது அசையாத நம்பிக்கைகொண்ட நந்தன் இதற்கு ஒத்துக்கொண்டான்.பார்ப்பனர்கள் மர கட்டைகளை கொண்டுதீவைத்தனர். நந்தா! இத்தீயில் மூழ்கி உன்இழிப்பிறவியை நீக்கிக்கொண்டு அந்தணவடிவொடு சென்று அம்பலக் கூத்தனை வாழ்த்திவணங்கு என்றனர். அனுமதி கிடைத்துவிட்டஆனந்தத்தில் நந்தன் தீயில் சிக்குண்டு வெந்துசம்பலானார். தீயில் மூழ்கிய நந்தன் சிவனோடுஇரண்டற கலந்து விட்டார் என்று கதை கட்டிபாமர மக்களை ஏமாற்றிவிட்டனர். சதி செய்துகொன்ற ரகசியம் பார்ப்பனர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. அப்படி என்றால்ஆண்டவனை அடைய பார்ப்பான் கோலம் தான்யூனிஃபாமா? நந்தன் கோயிலுக்கு நுழைந்ததெற்குப் புறவழி கூட இன்று வரைஅடைக்கப்பட்டு இருப்பதை இன்று கூட நீங்கள்நேரில் பார்க்கலாம். நந்தன் நுழைந்த வழி தீட்டுபட்டுவிட்டது என்று கூறி பார்ப்பனர்கள் அந்தவழியை முடிவிட்டனர். நந்திக்கும்,நடராசருக்கும் இடையில் உள்ள வாயிலில்கல்லும், சுண்ணாம்பும் வைத்து பூசப்பட்டு விட்டது.
ஆக, அப்பர் என்று அழைக்கப்படும்திருநாவுக்கரசு நாயனாரையும், திருநாளைப்போவார் என்று அழைக்கப்படும் நந்தனாரையும்பார்ப்பனர்கள் சதி செய்து கொன்ற இரகசியமேசிதம்பர ரகசியம்
ஆகும்.

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

No comments:

Post a Comment

ThirukKuRaL