தென்றல் (Thendral)

Friday, January 31, 2014

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் ......

தமிழர்க்கு நேர்ந்த எல்லாத் தீமைகளும் வடதிசைப் பக்கமிருந்தே வந்துள்ளன.வேத கால ஆரியச் சூழல் இன்னும் அழிந்துவிடவில்லை.சமஸ்கிருதம் ஒருவேளை இந்தி மொழிக்கு மாறாக ஒருமைபாட்டிற் குகந்த மொழியென்று வடவாரிய அரசால் கொள்ளப்படினும் கொள்ள படலாம்.இந்திய தலைமையிடத்தை அடுத்தபடியாக ஒரு ஆரிய பார்ப்பனன் பெற்றாலும் நாம் வியப்பதற்கில்லை.கூட்டுனர்வோடு ஆரிய பார்ப்பனர்கள் ஆற்றுகின்ற இனப்போராட்டம் மீண்டும் வெற்றி பெருமானால் தமிழன் தன் இனத்தையே மறந்து போக வேண்டியதுதான்.ஏனெனில் தமிழனின் உள்ளத்தே இன்னும் இனவுணர்வும் மொழியுணர்வு இளைமைப் பருவத்திலேயே உள்ளன.

தமிழன் மூளையும் குல மத மயக்கங்களால் நன்றாக சிதைக்கப்பட்டு உள்ளது.அவன் மனத்தில் தூவப் பெற்ற வேற்றுமை வித்துகள் அங்கும் இங்கும் முளையிட்ட வண்ணமாகத் தான் உள்ளன.தமிழனிடத்து அவ்வப்பொழுது தலைதூக்கும் ஒற்றுமை உணர்ச்சிகளை ஊடுருவி அழிக்க இன்னும் பார்ப்பனர்கள் முனைந்து கொண்டுதான் உள்ளனர்.இந்நிலையில் தமிழன்தான் பார்ப்பானாகிக்கொண்டு வருகிறானேயன்றி ஒரே ஒரு பார்ப்பானோ பார்ப்பானத்தியோ தமிழுணர்ச்சி பெற்றுவிடவில்லை.பார்ப்பன வெறுப்பு குறைந்து போன தமிழனைப் பார்க்க முடிகின்றதே தவிரப் பார்ப்பனிய பற்றுக்குறைந்த ஒருவரையே காண முடியாத பொழுது தமிழ்ப்பற்று மிகுந்த ஒரு பார்ப்பன உயிரை பார்ப்பது மிகவும் அரிதாகின்றது.

எனவே தமிழர் இனவொற்றுமை பெறாமல் நாட்டுக்கோ,மொழிக்கோ,இனத்திற்கோ வந்து அல்லது வருகின்ற எத்துனைச் சிறிய தீமையையும் அகற்றிவிட முடியாது.தமிழர் இனவொற்றுமை பெற வேண்டுமாயின் அவர்கள் தம்மிடம் உள்ள குல வேற்றுமைகளை அடியோடு களைந்துதானாக வேண்டும்.மதச்சுவர்களையும் சாதிச்சுவர்களையும் அப்படியப்படியே வைத்துக்கொண்டு நாம் இன நலத்தை பேணிவிட முடியாது.நமக்குள் ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு நம் எதிராளியிடமிருந்து வரும் தீமைகளை போக்கிவிடுதல் என்பது அறியாமையாகும்.நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஏமாளிச்செயலாகும்.நம் சாதி சழக்குகளை வேரறக்
களைந்தாலன்றி நாம் வெற்றிபெற போவதில்லை.பார்ப்பனரின் இனவொற்றுமையையும் அவர்தம் அடிப்படைக் கொள்கைகளையும் பார்த்த பின்னாகிலும் நாம் நம் இழிவுகளைப போக்கிக் கொள்ளாமல் இருப்பது நம்மை எத்தனை காலமானாலும் அழிவுப் பாதையிலிருந்து மீட்டுக்கொள்ள முடியாமலேயே செய்யும் .இதனை உணர்ந்து தமிழர்கள் செயல் பட வேண்டும்.

- பெருஞ்சித்திரனார்.

- தென்மொழி.சுவடி 7,ஓலை 3.1969.
— with Paraneetharan Kaliyaperumal and 14 others.

No comments:

Post a Comment

ThirukKuRaL