தென்றல் (Thendral)

Thursday, January 30, 2014

30.1.1948<> கோட்சே<>ஆர் எஸ் எஸ்<>காந்தி

30.1.1948
கோட்சே என்கிற ஒரு பக்கா ஆர் எஸ் எஸ்காரன் காந்தியை சுட்டு கொன்ற நாள்.

காந்தியாரைப் படு கொலை செய்த அந்த ஆர்.எஸ்.எஸ். பல முறை தடை செய்யப்பட்டும், இன் றும் காவு கேட்டுக் கொண்டுதான் திரிகிறது.

கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபைக்காரன் என்று சொல்லித் தப்பித்து ஓடப் பார்க்கிறது அந்த அமைப்பு! இப்படிச் சொல்லுவது கடைந்தெடுத்த கோழைத்தனம் என்று சொல்லுகிறான் - நாதுராம் கோட்சேயின் தம்பியும், காந்தியாரின் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்றவனுமான கோபால் கோட்சே; தினமலரை ஆதாரமாகக் காட்டினால் தானே அவாளுக்குத் திருப்தியாக இருக்கும்? நமக்கு ஏன் அந்தக் குறை?

ஆர்.எஸ்.எஸ்.தொண்டன் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஹைதராபாத்தில் கொடுத்த பேட்டி யில் ஆர்.எஸ்.எஸ். தொண் டன் என்றால் தனது வாழ்நாள் முழுவதும் அதில் முழுமூச்சாக இருக்க வேண்டும்.

இதற்கு எனது அண்ணன் நாதுராம் கோட்சேவை உதாரணமாகக் கூறலாம் (தினமலர் 14.2.1988 திருச்சி பதிப்பு) என்று சொல்லி விட்ட பிறகு காந்தியாரைக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்கப் பொய் சொல்லுகிறது ஆர். எஸ்.எஸ். கும்பல். பொய் தான் அவர்களுக்குக் கற்கண்டுப் பொங்கலாயிற்றே!

கோபால் கோட்சே மட்டு மல்ல - நாதுராம் கோட் சேயின் மனைவியும் தன் கணவன் ஆர்.எஸ்.எஸ். தான் என்று சத்தியம் செய்கிறார்.அவன் ஆர்.எஸ்.எஸ். இல்லை; இந்து மகாசபைக்காரன் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்வதானாலும், இவையெல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே? மறுக்க முடியுமா?

இன்னொன்றும் மிக முக்கியம். நீதிமன்றத்தில் கொலை குற்றவாளி கோட்சே சொன்ன கீதையின் வாசகம்தான் அது.

"மதத்திற்கு ஆபத்து வரும்போது எதிரி சக்திகள் தலை தூக்கும்போது மதத்தினைப் புதுப்பித்து, நிறுவ நான் அவதாரம் எடுத்து வருவேன்" எனும் கடவுள் கிருஷ்ணனின் சத்தியத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று வாக்கு மூலம் கோட்சே கொடுத்ததன் மூலம் இந்து மதத்தின் அஸ்திவார நூலான கீதையின் கொலை வெறித்தனம் அம்பலமாகிடவில்லையா?

நீதிமன்றத்தில் கோட்சே கொடுத்த இந்த வாக்குமூலம் கூடப் பொய்யென்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்லுமோ!

-மயிலாடன்

No comments:

Post a Comment

ThirukKuRaL