தென்றல் (Thendral)

Thursday, January 23, 2014

குழந்தை பிறக்க பாயாசம்

மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி கூறும் இந்த செய்தி எனக்கு புதுசு...உங்களுக்கு?

நம்ம இதிகாசங்கள்ல பாத்தீங்கன்னா குழந்தை எப்படி பொறக்கணும்னு வெட்ட வெளிச்சமா சொல்றதில்ல இராமாயணத்துல உதாரணம் எடுத்துக்கிட்டோம்னா, பாயாசம் கொடுத்தாங்க, அந்த பாயாசத்தை உட்-கொண்டதுனால குழந்தை பொறந்ததுன்னு சொல்றாங்க. அவங்க பாயாசம்னு சொல்றது எதைங்கறத அறிவியல் தெரிஞ்சவங்களால புரிஞ்சிக்க முடியும். ஏன்? லட்டுன்னு சொல்லலே. ஏன்? பாயாசம்னு சொன்னாங்க? பாயாசம்ங்கிறது இன்னொரு விதமான மாற்று உபயோகமுள்ள வார்த்தைங்கிறது நமக்கு புரியுது. ஆனா, சாதாரண மனிதர்கள் என்ன நினைப்பாங்க. உண்மையிலேயே சாமியார் பாயாசம் கொடுத்ததுனாலதான் குழந்தை பொறந்திச்சுன்னு நினைப்பாங்க.

இந்த மாதிரி நம்ம கலாச்சாரத்துல நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கறதுனால, இது அதிகமாக பெருகிகிட்டு இருக்கு. அதுமட்டுமல்ல, குழந்தை இல்லாத பெண்ணை இந்த சமுதாயம் பார்க்கிற விதமும் அவங்கள டெஸ்பரோட்டாக்கி, எப்படியாவது குழந்தை பொறந்தா போதுங்கிற சூழ்நிலைக்கு தூண்டப்பட்டு, சரி, சாமியார் தவறாக நடந்து கொண்டாலும் பரவாயில்ல - இப்படியாவது குழந்தை பொறந்தா போதுமுங்கிற எண்ணமும் பெண்களுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. குழந்தை இல்லாத பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் அவங்களுக்கும் வாழறதுக்கு எல்லா உரிமைகளும் இருக்கு. எந்த தகுதியும் குறைஞ்சு போயிடலேங்கிற பரந்த மனப்பான்மை நமக்குள்ள இருந்ததுன்னா, குழந்தை இல்லாத பெண்களை நல்ல விதமா இன்னும் மரியாதையோட நாம நடத்துனும்னா இந்த மாதிரி ஒரு அவசர கதியில போயி எப்படியாவது குழந்தை பெத்துக்கணும்ங்கிற எண்ணம் இல்லாம போயிடும்.

‪#‎மனநல‬ மருத்துவர் டாக்டர் ஷாலினி அவர்கள் பெரியார் வெப் விசனுக்கு அளித்த பேட்டியில் இருந்து.

No comments:

Post a Comment

ThirukKuRaL