தென்றல் (Thendral)

Thursday, January 30, 2014

தை அமாவாசை!

நம் மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு முட்டாள்களாகவே இருப்பது.நாம் எதையும் சிந்தித்து பார்த்துவிடக்கூடாது என்பதில் எதிரி தெளிவாக இருக்கிறான் இல்லையெனில் இன்றைய அறிவியல் உலகத்தில் இதுமாதிரி முட்டாள்தனமான செய்திகளை போட்டு நம் மக்களை முட்டாள் ஆக்க அவாள் கூட்டம் நினைக்குமா ?
----------------
தை அமாவாசை அன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொரு வரும் வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். அனேகர் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனர்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர். அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம். அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.

புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும். உற்றார், உறவினர் தொடர்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடி களையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக் கூடாது. பறிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும். எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை. முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். நாளை வியாழக்கிழமை(30-ந்தேதி) அமாவாசை தினம் அதிகாலையிலேயே தொடங்கி வருகிறது. எனவே காலையில் புனித நீராடி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யலாம். நாளை பித்ரு பூஜைக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் தான் வியாழக்கிழமை அதிகாலை முன்னோர் வழிபாட்டை தங்கு தடையின்றி சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்க முடியும்.
— with யுவான் சுவாங் and 14 others.

No comments:

Post a Comment

ThirukKuRaL